02-14-2005, 12:23 PM
Mathuran Wrote:காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.
எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.
ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம் அதுதான்...யதார்த்தமானது...உண்மையானது...!
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
மிச்சமெல்லாம் வேசம்...வேசத்துக்கு களம் அமைப்பதற்குத்தான் காதலர் தினம்...அது காதலைக் கொச்சைப்படுத்தும் தினமே அன்றி..நன்னாளாக வெளிப்படுத்தப்படும் முறை கொண்டு தெரியவில்லை...!
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
உண்மையான காதலன் காதலிக்கு இது அவசியமும் இல்லை...அவர்களுக்கு உள்ளுணர்வே சொல்லும் அவர்களின் காதலின் அன்பின் பாசத்தின் அளவை...அதை அவர்கள் தினந்தோறும் பரிமாறி மகிழ்ந்தே கொள்வர்...! இது வெளிவேசக்காரர்களை... காதல் முக்காட்டிட்டு களமிறக்கும் திருநாள்...<b>காதல் கோமாளிகள் திருநாள்</b>...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>