04-29-2006, 02:14 PM
அமெரிக்க==> மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு.
அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்கியபோதும் சிறீலங்காவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு சான்றுகளும் காணப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி உதவிகளை உள்ளுர் வரிமூலமாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் நன்கொடைகள் மூலம் நிதி கிடைக்கப் பெறுவதாகவும் அமெரிக்கா இராஜாங்க செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயமாக ஆயுதப் பயிற்சிகளைப் பெறும் விடுதலைப் புலிகள் அனைத்துலகச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையும் சிறீலங்கா படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சு பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முற்படுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு அங்கிகள், வெடிபொருள் உள்ளாடைகள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தந்திரோபாயங்களை ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள் களவாடியுள்ளதாகவும் அமெரிக் இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதல்கள் அணியினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகின்ற வேளை கருணா அணியினராலும் சிறீலங்கா உளவாளிகளினாலும் 48 போரைக் கொன்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.pathivu.com
அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்கியபோதும் சிறீலங்காவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு சான்றுகளும் காணப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி உதவிகளை உள்ளுர் வரிமூலமாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் நன்கொடைகள் மூலம் நிதி கிடைக்கப் பெறுவதாகவும் அமெரிக்கா இராஜாங்க செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயமாக ஆயுதப் பயிற்சிகளைப் பெறும் விடுதலைப் புலிகள் அனைத்துலகச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையும் சிறீலங்கா படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சு பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முற்படுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு அங்கிகள், வெடிபொருள் உள்ளாடைகள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தந்திரோபாயங்களை ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள் களவாடியுள்ளதாகவும் அமெரிக் இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதல்கள் அணியினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகின்ற வேளை கருணா அணியினராலும் சிறீலங்கா உளவாளிகளினாலும் 48 போரைக் கொன்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.pathivu.com
I Don't Know!