12-30-2005, 04:26 AM
ஈழத் தமிழர்களைச் சாகடிக்க வேண்டும் என்று சொல்லுகிறபோது மற்ற தமிழர்கள் அதைப் பார்த்து கல்லாகி இருக்க வேண்டுமா? ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். நாட்டால் வேறுபட்டு இருக்கலாம். வீட்டால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். யாருக்கெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகிறதோ, யாரெல்லாம் தமிழன் என்று சொல்லுகிறார்களோ அவர்கள் தமிழ் அபிமானத்தோடு ஈழத் தமிழர்களைப் பார்க்க வேண்டாமா? காலிலே அடிபட்டால் தலையிலே வலிக்க வேண்டாமா? ஈழத் தமிழருக்கு எதிரான கொடுமைகள் தொடரக் கூடாது. இந்தியாவிலே இதுவரை இல்லாத நல்ல அரசு அமைந்துள்ளது. அந்த இந்திய அரசை வலியுறுத்துகிற தீர்மானம் இங்கே முன்மொழியப்படுகிறது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த உடனே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் சேர்க்கிறார்கள் என்று பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன.
ஈழத் தமிழர்களுக்குப் பதுகாப்பு என்றால் அந்த ஈழத் தமிழர்கள் யாரை நம்பி வாழ்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதைவிட ஏமாற்றுக்கொள்கை எதுவும் இருக்க முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக இலங்கை அரசு யாரை அழைத்துப் பேசுகிறதோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதைவிட பொறுப்பற்ற தனம் எதுவும் இருக்க முடியாது.
விடுதலைப் புலிகளை இனிமேல் நாம் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் (பலத்த கைதட்டல்). 30 மைல் கல் தொலைவிலே உள்ள என் சகோதரன் இனப்படுகொலைக்கு ஆளாகிறபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மைவிட சோற்றாலடித்த பிண்டங்கள் யாரும் இல்லை என்றார் கி.வீரமணி.
<b>¾¢Ã¡Å¢¼ ¾¢Ã¡Å¸õ ¿£÷òÐô§À¡¸¡Ð</b>
ஈழத் தமிழர்களுக்குப் பதுகாப்பு என்றால் அந்த ஈழத் தமிழர்கள் யாரை நம்பி வாழ்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதைவிட ஏமாற்றுக்கொள்கை எதுவும் இருக்க முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக இலங்கை அரசு யாரை அழைத்துப் பேசுகிறதோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதைவிட பொறுப்பற்ற தனம் எதுவும் இருக்க முடியாது.
விடுதலைப் புலிகளை இனிமேல் நாம் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் (பலத்த கைதட்டல்). 30 மைல் கல் தொலைவிலே உள்ள என் சகோதரன் இனப்படுகொலைக்கு ஆளாகிறபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மைவிட சோற்றாலடித்த பிண்டங்கள் யாரும் இல்லை என்றார் கி.வீரமணி.
<b>¾¢Ã¡Å¢¼ ¾¢Ã¡Å¸õ ¿£÷òÐô§À¡¸¡Ð</b>
!
-
-