Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கிரிக்கட் தொடரின் போது சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???
அல்லது புலம் பெயர் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது நல்லதா!!!!!!!!!!!
உங்கள் கருத்தை ஆவலாக காத்திருக்கிறேண்??
[size=7]தலைப்பில் இருந்த எழுத்து பிழையை திருத்தியுள்ளேன் - மதன்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ரொம்ப ஆளமா எங்க மனசில சிறிலங்காவுடன் உள்ள உறவு பச்சையா இன்னும் இருக்கிறது. அது போகப்போக மறைஞ்சு போயிடும். எங்களுக்கென்று ஒரு கிரிக்கெட் அணி இருந்தால் நிச்சயமா எவரும் அவர்கள் கொடியைத்தூக்க மாட்டார்கள்.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
[quote=putthan]<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கிரிக்கட் தொடரின் போது சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???</b>
அல்லது புலம் பெயர் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது நல்லதா!!!!!!!!!!!
உங்கள் கருத்தை ஆவலாக காத்திருக்கிறேண்??
[size=7]தலைப்பில் இருந்த எழுத்து பிழையை திருத்தியுள்ளேன் - மதன்
உங்களின் முதலாவது கேள்வி விளங்குகிறது-!
-பொதுவாய்தான் சொல்கிறேன் -
விளையாட்டுக்கு பேதம் இல்லை - யாரும் ரசிக்கலாம்-!
ஆனால் பகை நாட்டின்(சிறிலங்கா) கொடியை ஏந்திப்பிடிப்பவர்கள்- கொஞ்சம் அந்த கொடியை நிமிர்ந்து பார்க்க சொல்லுங்கள்- அதிலுள்ள சிங்கத்தின் கையிலுள்ள வாள்- எங்களின் கழுத்தைதான் குறிவைக்கிறது என்று உணர சொல்லுங்கள்-!
இரண்டாவது கேள்வி - புலம்பெயர்ந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்பதென்று வருமா-?
இல்லை- தாயகத்துக்கு விசுவாசமாய் இருப்பதென்று வருமா?
என்ன அர்த்ததில் கருத்தை எதிர்பார்க்கிறீர்களென்பதில்-
குழப்பம்-! 8)
-!
!
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
தயகத்திற்கு (தமீழிழம்) இதில் விசுவாசமாக இருப்பதில் எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை.
நான் கேட்டிருப்பதோ நாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டிற்கு(அவுஸ்திரேலியா).
"To think freely is great
To think correctly is greater"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விளையாட்டை விளையாட்டா ரசிக்க...கொடி தூக்க வேண்டிய அவசியமில்லை..! சிங்கமும் தேவையில்லை..அசோகமும் தேவையில்லை..பிறையும் தேவையில்லை..! ரசிக்கப் போவது வீரர்களின் ஆட்டத்திறமைகளை மட்டுமே..! அது எவரிடம் எந்த அணியில் இருந்து வந்தாலும் ரசிக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
இது அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கிறது அதில் நான் எப்பிடி கருத்து கூறுவது பொதுவாகக் கேட்டிருந்தால் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் நான் அவர்களுக்குத்தான் சப்போட் பண்ணுவேன் ஒருநாளும் அவுஸ்ரேலியாவின் கொடியை பிடிக்கமாட்டேன்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்
. .
.
Posts: 28
Threads: 11
Joined: Dec 2005
Reputation:
0
இங்கு கனடவில் கூடஓரு சிலர் எந்த நிகழ்வுகளுக்குப்போனாலும் சிறீலங்கா பெயர் பொறித்த சட்டைதாங்களும் போட்டு தமது சிறுகுழந்தைகளுக்கும் போட்டிருப்பர்கள். ஏன் இவர்கள் இப்படிச்செய்கின்ரனர் எனத்தெரயவில்லை. இப்போதுகோட சிலர் தாங்கள் யார் என்று புரியவில்லையா? புரிங்துகொள்ள விரும்பவில்லையா? தயவுசெய்து மாறுங்கள். தாயகத்தை வெறுப்பது தாயை வெறுப்பதுக்குச் சமம்...
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
சரியா சொன்னிங்க நித்தியா.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
.இங்கு கனடவில் கூடஓரு சிலர் எந்த நிகழ்வுகளுக்குப்போனாலும் சிறீலங்கா பெயர் பொறித்த சட்டைதாங்களும் போட்டு தமது சிறுகுழந்தைகளுக்கும் போட்டிருப்பர்கள். ஏன் இவர்கள் இப்படிச்செய்கின்ரனர் எனத்தெரயவில்லை. இப்போதுகோட சிலர் தாங்கள் யார் என்று புரியவில்லையா? புரிங்துகொள்ள விரும்பவில்லையா? தயவுசெய்து மாறுங்கள். தாயகத்தை வெறுப்பது தாயை வெறுப்பதுக்குச் சமம்...
இதே கோலம் தான் சிட்னியிலும் குலொத்.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 114
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது.
<b>
...</b>
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
ஈழத்தமிழர்கள் பலர் இலங்கை அணி வெல்லவேண்டும் என நினைக்கிறார்கள். சிலர் இந்தியா வெல்லவேண்டும் எனவும், பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் இங்கிலாந்து அணிக்கும், ஒஸ்ரேலியாவில் வாழும் சிலர் ஒஸ்ரேலியாவுக்கும் ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் சிங்கக்கொடி பிடித்துக்கொண்டு, இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து பலர் சிட்னியில் கிறிக்கேட் பார்க்கப்போயிருந்தார்கள். இவர்களில் பலர் ஈழத்தமிழர்கள். அதில் என்னவேடிக்கை என்றால் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக மேடைகளில் கலந்து கொள்பவர்களில் சிலரும் சிங்கக்கொடி பொறுத்திய உடை அணிந்திருந்தார்கள். விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது என்று பலர் சொல்வதுண்டு. விளையாட்டினைப்பார்க்க விரும்பினால் சாதாரண உடையில் சென்றிருக்கலாமே?
அண்மையில் ஒஸ்ரேலியா தினத்தில்(ஜனவரி 26) சிட்னிவாழ் தமிழர்கள் நடத்திய தமிழர் திருனாலுக்கு சிறுவர்கள் சிலர் இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார்கள். அந்த மைதானத்தில் அன்னியசதியினால் இறந்த கிட்டுவினது படம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. இச்சிறுவர்களின் பெற்றோர்களில் சிலர் ஈழவிடுதலைக்கு ஆதரவான முக்கிய தமிழ் அமைப்புக்களினைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் இது பற்றி சிந்திப்பதில்லையா?
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மேற்கோள்:
<b>தமிழ் நாட்டில் பிறந்து வள்ர்ந்த எனக்கு அங்கு கோமாளிகள் யார் என்பதை உம்ம விட நன்றாகவே தெரியும்.</b> உம் சட்டம் எல்லாம் உங்களிடையே வைத்து கொள்ளவும். அது எனக்கு தேவை இல்லாதது.
ஓ அந்த கோமாளிகளில நீங்களும் ஒன்றா?
அதை பற்றி அறிந்து கொள்ள நிறைய தெரியவேணுமா?
ஏன் உங்கள பார்த்தே அறிந்து கொள்ள முடியவில்லையா-என்று சொல்லுறீங்களா? அதுவும் சரிதான் -!
அட போங்க நீங்க குறும்பு-! 8)
-!
!
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
தம்பி வர்ணா.இதே கருத்தை தான் அவுஸ்திரேலியாவில் பல ஆட்கள் கொண்டுள்ளனர்
தாய் நிலத்தில் எமது நிலையை நாம் விமானம் ஏரியவுடன் ஏன் மறந்து விடுகிறோம்.எப்படி எமது அன்றாட வாழ்வு பாதிக்கபட்டது என்று சிந்தித்து பாருங்கள்,உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
சைக்கிளில் டபிள் போட்டு கொண்டு,திருவிழாவுக்கு போய்,சனசமூகநிலையத்தில்(நூலகம்) (ஓசி) பத்திரிகைகள் படித்தல் இதை தான் அங்கு மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருந்தோம் இதை ஒழுங்காக அனுப்பிக்கவிட்டார்களா?சிறு சுதந்திர காற்று கேட்டோம் அது பிழையா?????
உயிரை காப்பாற்ற எல்லாத்தையும் விட்டுட்டு தலையை,காலை மாத்தி,புத்தகத்தை கிழித்து வந்து சேர்ந்தோம்(இப்ப கேட்டால் செல்வ் மைக்கிறேசன் என்று தான் நானும் சொல்லுறனான்)
எங்களூடைய விசுவாத்தை அவன் கணக்கில் கொண்டால் தான் என்ன கொள்ளாவிட்டால் தான் என்ன????
எங்களை பற்றி அவனுக்கு 500,600 வருடத்துக்கு முன்பு அடிமை ஆக்கும் போதே தெரியும்.........
விசுவாசமாக இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் எதிரிகளின் கொடியையாவது தூக்காமல் இருக்கலாம் தானே????
சகோதரா நாம விபரிதமான ஆளுங்கள் என்று அவர்கள் சொல்லி தான் தெரிய வேண்டுமா!!!!!!!
"To think freely is great
To think correctly is greater"