06-10-2003, 04:24 AM
பத்திரிகைகளில் எழுதுபவர்கள் பொறுப்பில்லாமல் எதையும் எழுதக்கூடாது. அப்படிப் பொறுப்பில்லாமல் சமூதாயத்திற்குக் கெடுதி விளைவிக்கக்கூடிய விசயங்களை எழுதுபவர்களின் எழுத்துக்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் போடக்கூடாது. உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் உண்மை உண்டாகும் என்று பாரதி சொன்னார். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு செயல்பட பத்திரிகைகள் முயல வேண்டும். வெறும் வியாபார நோக்கத்துடன், பத்திரிகைகளில் எழுதுபவர்களோ, பத்திரிகை வெளியிடுபவர்களோ செயல்படக்கூடாது. விவாதங்கள் என்ற போர்வையில் பட்டிமன்றங்களுக்கும் கீழேபோய்விடுகிற விசயங்களைக் கிளறிவிடப் பத்திரிகைகள் முயலக்கூடாது. பத்திரிகைகள் நல்ல எழுத்தைத் தேடிப் பரிசுரிக்கவும், நல்ல எழுத்தைத் தேடிக் கண்டு கொள்ள வாசகர்களுக்கு உதவவும் வேண்டும். எழுத்தில் நல்ல தரத்தை எட்டாத விசயங்களை எந்தப் பத்திரிகையும் வெளியிடக்கூடாது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
க.நா. சுப்பிரமணியம்
வெளிச்சம் ஆனி 93
க.நா. சுப்பிரமணியம்
வெளிச்சம் ஆனி 93