என் பார்வையில் சிக்கிய உராய்வு
நீண்ட கால ஆவல் இன்றுதான் தணிந்தது.
உராய்வு அழகான அட்டையில் வித்தியாசமான எழுத்தில் உராய்வு என தலைப்பிட்ட ஓர் அழகான இதழ். என் கையில் கிடைத்ததும் ஒவ்வோர் பக்கத்தையும் மென்மையாக புரட்டினேன். (புது புத்தகம் எல்லோ அதுதான்)
"அன்புடன்" கி பி அரவிந்தன் எழுதியதையும் "உராய்வுடன்" கவிஞன் சஞ்சீவ்காந்த் தன்னை அறிமுகப்படுத்திய விதமும் "நன்றியுடன்" அனைவருக்கும் நன்றி செப்பிய விதமும் என்னை வியப்பில் மூழ்க வைத்தது. தனிமையில் யாருடைய தொந்தரவும் இன்றி வாசிப்பதற்காக மாமர நிழல் தேடி சென்று மரத்தடியில் அமர்ந்தேன். இளந்தென்றல் எனை வருடிச்செல்ல உராய்வுடன் ஐக்கியமானேன்.
1) வருக 2004
இரண்டாயிரத்து மூன்றின்
எதிர்காலமே...
இரண்டாயிரத்து ஐந்தின்
இறந்தகாலமே...
வருமாண்டில் நீ என்ன செய்வாய்?
கல்லறைகள் காணும்
பதுங்குகுழிகள் மூடு
ஆயுதங்களை உறங்க வை
இப்படியான பல வரிகளை உள்ளடக்கிய முதல் கவிதை அருமையோ அருமை.
2) தமிழழகு
அழகாக சிலேடைச் சொற்களை பொருத்தி தமிழுக்கு அழகு சேர்த்து கவிதைக்கு தமிழழகு என தலைப்பிமிட்டு அழகான மூனாவின் படமுமிட்டு அழகாக வடித்த கவிதையே தமிழழகு. இக்கவியை நான் வாசித்தேன் என பெருமை கொள்வதை விட வாசிக்காதோருக்காக கவலைப்படுறேன்.
3) கடிதம்.
கடிதம் என தலைப்பிட்டு எழுதிய கவிதை நன்று.
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
நான் இங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
வாசிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர்.இக்கவிதையில் உள்ள கவிஜனின் சிந்தனையை சொல்லி புரிய வைக்க முடியாது. இதையும் வாசித்தால் தான் புரியலாம். மூனாவின் ஓவியம் இன்னும் கவிதைக்கு மெருகூட்டுகின்றது.
4) விடுதலையின் பங்குதாரர்
இதுவும் ஓர் சிலேடையுடன் கூடிய அழகான கவிதை. தமிழீழ கவிதை.
சுட்டெரிக்கும் சூரிய வீரர்
துட்டர் படை கொன்ற வீரர்
விட்டெறியும் வேலாய் வீரர்
எட்டிப்பகை வென்ற வீரர்
இப்படியான தொனியில் அமைந்த இக்கவிதையும் அருமை. நன்றி கவிஞனே.
5) அரிச்சுவடி , பெரியார், சிற்பி, திலீபன் ., காந்தி , பூமிப்பந்து
இத்தலைப்பில் அமைந்த் ஹைக்கூ கவி வரிகளும் இனிதே.
6) கடவுள்
நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்
சோறுமே இல்லையடா
நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு
பூசைகள் ஏதுக்கடா?
ஆகா தினமும் கடவுளை மனதார பூஜிக்கும் எனக்கே கடவுள் கவிதையை வாசித்ததும் சிந்தனை வந்தது. ஆமா ஏன் தான் நான் கடவுளை வணங்குறேன் என்று.
7) கவிதை
இளைஞன் தனது கவிதையின் பிறப்பை இக்கவிதையில் இனிமையாக வடித்திருக்கிறார்.
நல்லதை எடுத்துப் பதமாக்கி
இனிப்பிட்டு இளக வைத்து
மென்றுண்டு சுவைத்தால்
கக்கி விடுவேன்.
வாவ் அருமை. நன்றி கவிஞனே.
8) விருப்பு வெறுப்பு
இக்கவி வாசிப்போரை வெறுக்காமல் விருப்பம் கொள்ளக்கூடிய மாதிரி எழுதி இருக்கிறார்
புலியை வெறுப்பவள் புலியை விரும்புபவனை அணைப்பது போல ஒரு கவிதை. வாசித்தால் விருப்பம் வரும் இக்கவி மீதும் கவிஞனின் சிந்தனை மீதும்.
9) இவள் யாரோ
இக்கவி வாசித்ததும் நட்பை சுவாசிகும் எனக்கு அழுகையே வந்தது. காமத்திலான இப்பிரபஞ்சத்தில் நட்பை தூய்மையாக வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவானதே. ஆனால் இக்கவிஞனோ மின் வழியில் சந்தித்து அன்பு கொண்ட வார்த்தைகளை பரிமாறி அவளே தன் தோழி என அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்க உங்கள் நட்பு. நட்பை கொச்சைப்படுத்தும் :evil:
இவ்வுலகில் உங்களது நட்பாவது தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
10) வர்ணிக்க தோன்றுதே
பதினெட்டு வயது
பவனி வரும் அழகு....
வர்ணிக்க தோன்றும்
வஞ்சியிவள் மேனி
வள்ளல் மொழி எதுவோ
வார்த்தைகள் தாரும்
இக்கவிஞனுக்கே வஞ்சிவள் மேனியை வர்ணிக்க வார்த்தைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதே. அடடடா வஞ்சியவளின் சிற்றிடை போல பெண்ணவளின் வர்ணிப்புக்கான கவிதையையும் சிறிதாக்கி அருமையாக வர்ணித்திருகிறார் கவிஞன். நன்றி
11)பிறந்தநாள் பரிசு
முதல் கவியில் வர்ணிக்க சொல் இலை என பஞ்சம்கொட்டிய கவிஞன் இத்தலைப்பின் கீழ் அமைந்த கவிதையில் பெண்ணவளை ஆழமாக வர்ணனை செய்துள்ளார்.
உன் சின்னக் கழுத்து
புதிய தொழில்நுட்பத்தின் படைப்பு
உன் விரிந்த மூக்கு
யூப்பிட்டரில் பூத்த மொட்டு
இப்படியாக தொடர்கிறது இனிமையான வர்ணனை.
ஆகா அருமைஅருமை.
நேரம் போதாமையினால் தொடர்ந்து எழுதமுடியாமைக்கு வருந்துகிறேன். ஏனைய கவிதைகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வெண்ணிலா................. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->