Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
இலங்கை தமிழ் மக்களின் உணவு பழக்கங்களும் கேரள மக்களினது ஒரேமாதிரியானவை. அதே போல் கல்வி அறிவு திரவியம் தேடும் முறை ஒத்துபோகிறது கேரளாவை சேரநாடு எனறு கூறுவார்கள். அத்துடன் அவர்களின் கண்ணகி வழிபாடு தாய் வழி பரம்பரை சொத்துமுறை அப்படி பல வாழ்க்கை முறைகள் அவர்களுடன் ஒத்துபோவதை ஈழத்தமிழர்களிடம் காணலாம்.எனது கேள்வி என்னெவெனில் தமிழ்நாட்டு மக்களை விட எப்படி கேரளாவுடன் ஒத்துபோகிறது
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
பல பழக்கங்கள் ஒத்துப்போகும் இலங்கைத்தமிழரகள் இந்தியா அல்லது மலேசியா போனால் இந்தியதமிழர்கள் கேட்பார்கள் உங்களுடைய பேச்சு மலையாளம் போல் இருக்கிறது என்பார்கள்.
அதுபோல ஈழத்தில் பாவனையில் உள்ள சொற்கள் மலையாளத்தில் இருக்கின்றன்.
உதாரணம். பறையடா - சொல்லடா
அம்மாவாணை - அம்மா மேல் சத்தியம்
இவை நான் ஒரு மலையாள படத்தில் பார்த்தேன்.
நல்ல விடயம் ஸ்ராலின்அண்ணா பாராட்டுகள்.
.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இதை பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் அவ்வாறான ஓரு எண்ணப்பாடு இருக்கிறது.
அதிகளவில் தேங்காய் பாவிப்பது
சோறு கறி எனும் சொற்பிரயோகம்-தமிழ் நாட்டில் சாதம் என்பர்
வீடுகளை சூழ வேலியடைக்கும் பழக்கம்
தமிழின் ழ உச்சரிப்பை அவ்வறே உச்சரிப்பது. நாம் சரியாக உச்சரிப்பதில்லை
ஈழத்தில் காணப்படும் மருத்துவிச்சியின் நாட்டர் பாடலான
மிளகு பொதியோடும் வந்தீரோ தம்பி மிளகு மலை நாடும் கண்டிரோ தம்பி ....................
போன்றவற்றை கூறுவர்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
தமிழில் இருந்து தானே மலையாளம் பிறந்ததாக கூறுகிறார்கள்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
இருந்தும் ஈழத்தமிழர்களுக்கும் மலையாழத்தமிழர்களுக்கும் ஒற்றுமை அதிகம்போலத்தான் தோன்றுகின்றது. எனென்றால் அவர்களின் தொழில் முறைக்கும் ஈழத்தமிழர்களின் தொழில்முறைக்கும் சரியான ஒற்றுமை உண்டு. அதே போன்று ஈழத்தில் பாவிக்கபடும் சொல்லாம பறைதல் என்னும் சொல் தமிழ் நாட்டில் பாவனையில் இல்லாததை போன்று உணருகின்றேன். இவற்றினை கொஞ்சம் ஆழமாக ஆராய்தல் வேண்டும்.
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
ஈழ கேரள மக்களிடம் ஒத்து போகும் தன்மையை எமது விடுதலை போரட்டத்துக்கு எதிரான கருத்துக்கொணட பிராமணிய அரசியல்வாதிகளான சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தப்பா பயன்படுத்தியதுணடு. ஒருமுறை சோ துக்ளக் கேள்வி பதிலில் கேரளத்தில் இருக்கும் ஈழவர் எனற தொழில் முறை பிரிப்பில் இருக்கும் இனத்துடன் இணைத்து கேலி செய்ததுணடு
பாம்பையோ பார்ப்பனீயத்தையோ முதலில் அடிக்க வேண்டுமென்றால் பார்ப்பனியத்தைத்தான் முதலில் அடக்கவேண்டும்----பெரியார்
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
ஈழப்பிரியன் தமிழிலிருந்து தான் மலையாளம் பிறந்தது தமிழ் மொழி தொன்மையானது. மலையாளம் புதிதாக உருவான மொழி . வடநாட்டு பிராமணரர்களின் ஆதி்க்கத்தின் பின் எழுத்து வடிவம் மாற்றப்பட்டது. இன்றும் கேரளாவில் சேர காலத்து கல்வெட்டுக்களில் பழைய காலத்து தமிழ் எழுத்து வடிவங்களை காணலாம்