Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்......... நன்றி கி.பி
#1
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
கம்பவாரிதி அருளும் உபதேசம்

ஈழத்தின் இலக்கிய சஞ்சிகைகளில் ஒன்றான மல்லிகையில்தான் இந்தக் கம்பவாரிதி nஐயராஐ; என்பவரின் வாராதே! வுரவல்லாய்;.. என்ற புலம்பெயர்ந்தோருக்கான அறிவுரைக் கட்டுரை முதலில் வெளிவந்திருக்கின்றது. (மல்லிகை ஐPவா கம்பவாரிதியுடன் இணையும் இந்தப்புள்ளி ஆச்சரியம் தருகின்றது. தற்போதைய சந்திரிகா-வீரவன்ச கூட்டுப்போல்) பின்னர் 2004ஐன.04-10 என திகதியிடப்பட்ட சுடர் ஒளி என்னும் வார இதழ் அதனை மறுபிரசுரம் செய்துள்ளது. மறு பிரசுரத்தின் நோக்கம் எதுவானாலும் அனுமானின் வால்போல் இரண்டு பக்கம் வரையில் நீண்டு செல்லும் இக்கட்டுரை தாயகத்திற்கு வெளியே 1980களின் பின் வாழத்தலைப்பட்ட ஈழத்தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் கோலங்களை இகழ்ந்து பேச முற்பட்டுள்ளது என்பது மட்டும் அதில் துலக்கமாகத் தெரிகின்றது. (சத்தியமாய் சொல்கிறேன் உங்களை இழிவுபடுத்த நான் இக்கட்டுரையைத் எழுதவில்லை என்ற வாக்குமூலத்தையும் மறக்காமல் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளமை அவரது உள்நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றது)
தன்னை ஆத்மீகவாதி என்றும், இலண்டன் கனடாவுக்கு சென்றுவந்தவரென்றும், (இந்த நாடுகளுக்குச் சென்றுமீள உதவியவர்களுக்கு தேசம்கடந்தும் நேசங்கடவா நெஞ்சங்கள் என்ற தொப்பியும் அவரால் வழங்கப்பட்டுள்ளது) ஆன்றவிந்தடங்கிய கொள்கைப் பெரியோன் என்றும் தன்னிலை விளக்கம் கூறி, புலம்பெயர்ந்து வாழும் அற்பர்களுக்கான அறிவுரைகளை மன்னிக்க வேண்டும் அருள்வாக்குகளை கட்டுரை முழுவதும் அருளியுள்ளார் கம்பவாரிதி nஐயராஐ;. கம்பவாரிதி என்பது கம்பராமாயணம் என்னும் இலக்கியத் தடாகத்தில் மூழ்கித் திளைத்தவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். மேலும் அதனைச் சுருக்கமாக, கம்பவாரிசு என்றும் எடுத்துக் கொள்ளலாம். (இதனால் அவரது மனம் மகிழ்ந்தால் அடியேன் பாக்கியசாலிதான். சாது ஒருவரைத் திருப்திப்படுத்திய, சாந்தப்படுத்திய பேறு எனக்குக் கிட்டட்டும்) இந்தக் கம்பவாரிசு என்ற முன்னொட்டுத்தான் அவருக்குப் பொருத்தம் என்பது என் தாழ்மையான கருத்து. ஏன் என்பதைப் பின்னர் கூ,றுவேன். (உண்மையில் சங்க இலக்கியம் தொட்டு நிற்கும் தமிழிலக்கியப் பரப்பை பெருங்கடலெனெக் கொண்டால் இராமாயணம் ஒரு குளம் குட்டை அளவே இருக்கக் கூடும். அதற்காக, கம்பராமாயணத்தை மட்டுமே உருப்போடும் கம்பவாரிதியை ஓரு குட்டையில் ஊறிய மட்டை எனக் கூறுவது அபச்சாரமாகும்)
வுடமொழியில் வான்மீகியால் எழுதப்பட்டதான இராமகாதையைத் தழுவி தமிழில் கம்பனால் எழுதப்பட்டதுதான் கம்பராமாயாணம் என்பதை நாம் அறிவோம். ஏறத்தாழ பத்தாம் நு}ற்றாண்டின் பின்னால் தமிழில் எழுதப்பட்டதான இக்காப்பியம் இலங்கை மன்னனான வெற்றியை உடைய இராவணனை வெற்றி கொண்ட திருமாலாகிய இராமனது வீரத்தை விளக்கிச் சொல்கின்றது என்பதைப் படித்தவர்கள் அறிவர். ஆனால் இந்த இராமாயணம் தமிழ் மக்களை அரக்கரென இழிவுபடுத்துகிறது அவமானப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் விளக்கமும் அறிஞர்களால், சமூக சிந்தனையாளர்களால் முன்வைக்கபடுவதையும் நாம் மறந்துவிடுதல் கூடாது. அதனால் இதற்கு மறுப்பாக, புலவர் குழந்தை அவர்களால் இராவணகாவியம் எழுதப்பட்டதும் சமூக விரோத இலக்கியமாக அடையாளம் காணப்பட்ட இராமாயணம் தீயிட்டு கொளுத்தப்படவேண்டுமமென்ற முழக்கங்கள் முன்வைக்கப்ட்டதும் ஒரு அரை நு}ற்றாண்டுக்கு உட்பட்ட நிகழ்வுகளாகும். இராமாயணத்தின் உள்ளடக்கம் தமிழர் விரோதம் அல்லது சமூக விரோதம் கொண்டதாக இருக்கும் அதேவேளையில் இராமாயணத்தைத் தழுவி, தமிழில் கம்பனால் எழுதப்பட்டதான கம்பராமாயணம் காமரசம் ததும்பியது பாலியல் கிளர்ச்சி ஊட்டுவது என்ற குற்றச்சாட்டும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதிலும் தனது காவிய நாயகியான சீதையின் உறுப்புகளான அல்குல்(பெண்குறி), கொங்கை, தொடை பற்றியெல்லாம் காமரசம் சொட்டச் சொட்ட கம்பன் வர்ணனை செய்துள்ளான். இதனால் கம்பன் ஒரு வம்பன் என்ற வழக்காறும் தமிழில் புழக்கத்தில் உள்ளதை நாம் நினைவில் கொள்ளலாம். காவிய நாயகியான சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்த வண்ணம் துயருற்று அழுத கண்ணீர் எவ்வகையாக வடிந்து செல்கின்றது என்பதைக் கம்பன் வர்ணிப்பதிலும், காட்டுக்கு அனுப்பப்பட்ட இராமனும் குழுவினரும் குகனின் உதவியுடன் படகில் ஆற்றைக் கடக்கையில் தண்ணீhத் திவலைகளால் ஆடை நனைந்த பெண்களை வர்ணிப்பதிலும், சீதையின் அல்குலின் அளவை பாம்பின் படத்துடன் ஒப்பிடுகையிலும் (இன்னும் பல கட்டங்களைச் சுட்டிக்காட்டலாம்) கம்பன் ஒரு வம்பன் என்பது நிரூபணமாகும். இப்படிக் கம்பன் ஒரு வம்பன் என்னும்போது கம்பவாரிதி வம்பவாரியாவதும் அல்லது கம்பவாரிசு வம்பவாரிசாவதும் ஆச்சரியமில்லை. அதிலும் கட்டுக்குடும்பியும் காவியும் தரித்த nஐயராஐ; வாராதே வரவல்லாய் கட்டுரையில் தன்னை வம்பவாரிசு என நிறுவிக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
தான் எழுதும் கட்டுரையைப் படிப்பதற்கான ஆர்வத்தை து}ண்டுகின்றேன் என்று ஒருவகை கண்ணாம்புூச்சி ஆட்டத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கும் nஐயராஐ; முதலில் புலம்பெயர்ந்தோர் தமது தமிழ்மொழியை மறந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டை 'தமிழ் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றதா?" எனக்கேட்டு இளக்காரமாக முன்வைக்க முயல்கின்றார். அதற்கு உதாரணமாக அவர்கூறியுள்ள கதையை கேளுங்கள்.
'அண்மையில் சுவிஸிலிருந்து வந்திருந்த என் அக்காவின் பேரன் தன் மாமனைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி. ஊரே சிரித்துவிட்டது போங்கள். தன் அன்புப் பேரனுக்கு என் அக்கா ஆசையாசையாய் ஆனை வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க அவன் அதைத் தின்னும் அவதியில், குளிக்கத் தயாராய் துண்டோடு கிணற்றடியில் நின்ற தன் மாமனிடம் கொண்டோடிப்போய் பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித்தாங்கோ என்று கேட்க எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமன் அக்கேள்வியால் பதறியடித்து இடுப்பில் இருந்து துண்டை இறுகப் பொத்திய காட்சி கண்டு எங்கள் ஊரே சிரித்தது. வாழைப்பழத்தை உரித்து தாருங்கள் என்பதற்கு பதிலாக கழட்டித்தாருங்கள் என்கிறது ஈழத்தமிழினத்தின் பொறின் வாரிசு"
குழந்தையின் மழலைக் கூற்றிலும் வம்பு எண்ணந்தான் மேலெழுகின்றது கம்பவாரிசுக்கு. தனது மனவக்கிரத்தை மற்றவர்களிலும் தொற்ற வைக்கின்றார் ஆத்மீகவாதியான வம்பவாரிசு. அவர் கூறிய உதாரணத்திற்கும் புலம்பெயர்ந்த சமுகக் குழந்தையின் தமிழ் அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. புhவம் அவர் மழலை மொழியை கேட்டதில்லைப்போலும். அந்தப் பேரக்குழந்தைக்கு கழட்டித்தாருங்கள் என்ற ஓரு தமிழ் வினைச்சொல் தெரிந்திருக்கின்றது. சிரிக்கவும் சுவைக்கவும் கூடியதான குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் ஏராளம் உண்டு. பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் குழந்தைகளின் மழலைபற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதெல்லாம் கட்டுரையாளர் அறிந்திருக்க மாட்டார். ஆகக் குறைந்தது வள்ளுவனின் குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறளைத் தன்னும் அவர் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்கார். அதனைவிட உலக அறிவிலும் கிணற்றுத் தவளைதான் (இராமாயணம் குட்டை என்பதால் குட்டைத் தவளை என்பதும் அவருக்கு பொருந்தலாம்) என்பதை கட்டுரை முழுவதிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இக் கட்டுரையைத் தொடந்து படிக்கையில் அதனைப் புரிந்து கொள்வீர்கள். அதற்கு முன் மழலைமொழி புரியாமல் nஐயராஐ; கூறிய கதையில் சுவிசில் இருந்து வந்த அந்தக் குழந்தை பிளீஸ் அங்கிள் என்று ஆங்கிலம் பேசியதாம். சுவிசில் வழக்கில் உள்ள மூன்று மொழிகளில் ஆங்கிலம் உட்படவில்லை என்பதுடன் அக்குழந்தை சுவிசின் எந்தப் பகுதியில் வாழ்ந்ததோ அந்த மொழிச்சொற்களைத்தான் தமிழுடன் கலந்திருக்கும் அதுதான் இயல்பாக இருந்திருக்கும் என்பதோ அவருக்கு புரிந்திருக்காது. அந்தக் குழந்தையும் கதையும் கம்பவாரிதியினால் வம்புத்தனத்திற்காக காமரசத்திற்காக இட்டுக்கட்டியது என்றே துணிந்து கூறலாம்.
இவருடைய வம்புத்தனத்திற்கு மேலும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டலாம். அவரின் கூற்றுக்களைப் படியுங்கள்.
'கூலி வேலை செய்யும் இடத்தில் வெள்ளைக்கார எஐமான்களிடம் நல்ல பெயர் வாங்க தலைமயிரை மட்டுமன்றி கால்மயிரையும் மழித்துக் கொள்கின்றனர் நம்காரிகையர்"
'பதின்மூன்று வயதான பருவ எல்லையில் நிற்கும் உங்கள் பாலகியின் பட்டராலும் சீசாலும் கொழுத்துக் கிடக்கும் தொடையின் முக்கால் பாகம் தெரியும் காற்சட்டை போட்டாகிவிட்டதா?"
கம்பவாரிதியின் காமப்பார்வை மன்னிக்க வேண்டும் அருள்பார்வை எவ்விடங்களைத் துழாவுகின்றது, மேய்கின்றது என்று தெரிகின்றதல்லவா? இப்போது nஐயராiஐ நான் ஏன் வம்பவாரிசு என விளிக்க முனைந்தேன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
nஐயராஐpன் கட்டுரையில் எள்ளல் மொழியில் இகழப்படும் விடயங்கள் என்னவென்றால் புலம்பெயாந்த தமிழர் மொழியை, பண்பாட்டை, மரபை மறந்து செல்கின்றனர் என்பதும், அவர்கள் போலியான பணப்பகட்டு காட்டுகிறார்கள் என்பதும்தான். 'சும்மா சொல்லக் கூடாதையா, அங்கிருந்து நீங்கள் ஆடின ஆட்டத்தில் இங்க எங்கட ஆணிவேரே ஆடிப்போனது உண்மையிலும் உண்மை" என்னும் அவருடைய கண்ணோட்டத்தில் நியாயம் இருக்கக்கூடும். ஆனால் அவரது சொல்லல் முறையும், பயன்படுத்திய மொழியும், தகவல் தரவுகளும், அவருடைய ஆலோசனைகளும் மிகவும் நயவஞ்ககமானது நஞ்சுூட்டப்பட்டது. புலம்பெயர்ந்த சமூகம் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் சமூக ஆர்வலர்களால் ஆய்வாளர்களால் தொடர்ந்தும் இங்கே ஊடகங்களில் ஆரோக்கியமான முறையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நோய்க்கு வைத்தியம் செய்ய மருத்துவ படிப்பு வேண்டும். அனுபவப் பயிற்சி வேண்டும். அதேபோல்தான் சமூக நோய்க்கு ஆலோசனை சொல்ல சமூகப் அக்கறை வேண்டும் அனுபவப் பயிற்சி வேண்டும். நோய்க்கூறு கொண்ட நோயாளியை மருத்துவர் இகழ்ச்சியுடன் அருவருப்புடன் அணுகமுடியாது. இது தொழில்சார் விழுமியம் சார்ந்தது. அறம் சார்ந்தது. கட்டுரையாளர் கம்பவாரிதிக்கு சமூகம், சமூகவியல் பற்றியோ வரலாறு பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. அறமும் அவரிடமில்லை (இத்தனைககும் அவர் ஆத்மீகவாதியாம்?). அதனால்தான் தனது இராமாயணக் குட்டையின் எல்லைதாண்டி, வரம்புமீறி வம்பும் வக்கணையுமாக சொற்களை உதிர்க்க முடிந்திருக்கின்றது. சமூகத்தை எள்ளி நகையாட முடிந்திருக்கின்றது.
இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நு}ற்றாண்டுக்கும் முற்;பட்டது. பத்தொன்பதாம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் (கம்பவாரிதியின் மொழியில் செம்பாட்டு மண்ணில் பிறந்து..) கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். (செம்பாட்டுமண் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மூன்றிலொரு பங்கும் இல்லாதது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்) அதற்கடுத்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகக் சென்று இலண்டன் கனவை உருவாக்கிய பயணமாகும். இதற்குப்பின் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகள் நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக 1980களில் நிகழ்ந்த தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. முன்னைய புலப்பெயர்வுகள் (மலேசியா, இங்கிலாந்து, மத்தியகிழக்கு) தனியே பொருளாதாரக் காரணியை கொண்டவை. பின்னையதான புலப்பெயர்வுதான் கம்பவாரிதி nஐயராஐpக்கு உறுத்தலாக இருக்கின்றது. ஏனெனில் இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் ஆம் சுூத்திரர்கள். (கட்டுரையாளரின் மொழியில் பிளேன் hP க்கும் வழியற்றவர்கள் உ-ம்: 'பிளேள் hPக்கும் வழியில்லாமல் காய்ந்து திரிந்த உங்கள் தோற்றத்தில் கோர்ட்டாலும், சுூட்டாலும், ரையாலும் ராஐகளையே வந்துவிட்டது")
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதாரத்தை முன்னரே மணியோடர் பொருளாதாரமென கம்யுூனிஸ்ட் கட்சியினர் (மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஐPவா உட்பட) அரசியல் நையாண்டி செய்வதுண்டு. இதற்குக் காரணம் கடல் கடந்தவர்களும், குடாநாட்டுக்கு வெளியே அரச உத்தியோகங்களுக்குச் சென்றவர்களும் அனுப்புகின்ற பணவரத்தால்தான் யாழ்பாணம் உயிர் வாழ்கின்றது என்பதையும், அதற்கு வேறெந்த அடிப்படைப் பொருளாதார வளமும் இல்லை என்பதையும் சுட்டடிக்காட்டத்தான். இதில் உண்மையும் இருக்கக் கூடும். எனது பிரச்சனை அதுவல்ல. அவ்வேளையில் குடாநாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்கள் மணியோடர் அனுப்பியதுடன் மட்டுமல்லாது ஊர்வருகையில் காட்டிய பணப்பவிசுசையும் போலிப் பெருமையையும் கலாச்சாரச் சீரழிவையும் கம்பவாரிதிக்கு சுட்டிக்காட்டத்தான். அறுபதுகளில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்த சுந்தரின் புகழ்பெற்ற கேலிச்சிந்திரங்களான சவாரித்தம்பர், மைனர் மச்சான், மிஸ்;டர் அன்ட மிஸிஸ் டாமோடரன் போன்றதான தொடர்களை பார்த்திருந்தால் - படித்திருந்தால் கம்பவாரிதி கருதும் மொழி, பண்பாட்டு சீரழிவுகள் எப்போது தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவந்திருக்கும். அத்துடன் அக்காலத்தில் நித்திகனகரெத்தினத்தினால் பாடப்பட்ட துள்ளலிசைப் (பொப்பிசை) பாடல்களைத்தன்னும் கம்பவாரிதி கேட்டிருப்பாரானால் இன்றைய புலம்பெயர்வையும் புலம்பெயாந்தோரையும் பற்றி இவ்வகை அழுக்கான கட்டுரையை அவர் எழுதியிருக்க மாட்டார். கடந்த கால்நு}ற்றாண்டுக் காலத்துக்குள் புலம்பெயர்ந்தோரின் தமிழ்மொழிப் பரிச்சயம் பற்றிக் கவலைகொண்டவருக்கு கொழும்பு ரமிலர் பற்றியோ கறுவாக்காட்டு ரமிலர் பற்றியோ அறியாமல் போனதும் ஆச்சரியம்தான் (அதற்குள் அவர் சங்கமித்து விட்டது காரணமாகலாம்). 1977ம் ஆண்டு இனக்கலவரத்தில் அடிபட்டு கொழும்பில் இருந்து லங்காராணி கப்பலில் பார்மேனியன் நாய்களுடன் வந்திறங்கிய கொழும்புவாழ் பெருங்குடி ரமிலர்களின் ரமில் கேட்டு ரமில் ராய் வடித்த கண்ணீர் கம்பவாரிதி கண்டதில்லைப் போலும்.
மலேசியப் புலப்பெயர்வினால் யாழ்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் சாட்சியத்தை காரைபெயர்ந்து கிடக்கும் நாற்சார் வீடுகளில் இன்றைக்கும் காணலாம். தெல்லிப்பளை, மல்லாகம், உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை, உரும்பியராய் பகுதிகளில் அப்போது பணப்பவிசுடன் கட்டிய உருக்குலைந்து கிடக்கும் வீடுகள் அந்தக்கதையைச் சொல்லும். இலண்டன் சீமைக்குச் சென்றவர்கள் இலண்டன் மாப்பிளை தேடி விரதமிருந்த குமர்களை கைப்பிடித்து செல்வதற்கு வந்துசென்ற வேளைகளில் அவர்கள் காட்டிய பவிசுகள் கொஞ்சமா?. அவர்கள் வீட்டுக் கொண்டாட்டங்கள், அவர்கள் அணிந்து காட்டிய கையில்லாத பிளவுசுகள், தொப்புள் காட்ட கட்டிய சேலைகள், அலங்காரங்கள் கொஞ்சமா? அன்றைக்கு அந்தச் சாதாரணர்கள் வாய்பிளந்து, இந்த பணக்கொழுப்புகளின் ஆட்டங்களைக் கண்டு முகஞ்சுழித்து நின்றதெல்லாம் அவர் அறிந்ததில்லைப் போலும். அவ்வேளைகளில் கம்பவாரிதி கம்பனடிப்பொடி கணேசனின் செருப்பைத் தலையில் சுமந்து திரிவதில் சுகம் கண்டிருப்பார் (இராமனின் பாதரட்சையை பரதன் சுமந்தானல்லவா அந்த நினைப்பு). சிலவேளை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் காலில் சாஸ்டாங்கமாய் விழுந்து கம்பராமாயண கலாச்சாரத்தை அல்லது கந்தபுராணக் கலாச்சாரத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்.(1981ம் ஆண்டில் nஐயராஐ; மதுரையில் ஒரு அரசியல்வாதியின் காலில் விழுந்த அசிங்கம் பற்றி அப்போதைய தினபதி ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் கட்டுரையை படித்தவர்கள் ஞாபகம் வைத்திருக்கலாம்).
வாடிய பயிர் கண்டு வாடினேன் என்ற வள்ளலாரையும் விஞ்சிவிடும் தனது நோக்கத்தையும் வம்பவாரிசு கச்சிதமாகக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். 'எற்புத்துளைதொறும் லண்டன் குளிரில் பரமசிவனுக்கு பச்சைத்தண்ணீரில் அபிஷேகம் நடக்கிறது" என்ற கவலையையும், 'வெறும்மேலை, பனிக்குளிரும், பச்சைத்தண்ணீர்க் குளிரும் சேர்ந்து தாக்க நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் பரமன்" என்;ற பச்சாதாபத்தையும் வெளியிட்டு குணம்குறியற்ற பரமனுக்கு குணம் வழங்கிய பாங்கில் சும்மா சொல்லக்கூடாது வள்ளலாரை ஓரங்கட்டி விட்டார் கம்பவாரிதி அடிகளார். சிறியோனாகிய எனது கருத்து என்னவெனில் கடையெழு வள்ளகளில் ஒருவராகிய பேகனையும் மிஞ்சக்கூடிய வாய்ப்பைக் கம்பவாரிதி தவறவிட்டுவிட்டார் என்பதே. பேகன் குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன்போர்வையை வழங்கி இலக்கியத்தில் இடம் பெற்றான். கம்பவாரிதி குளிரில் நடுங்கிய பரமனைக் கல்லில் கண்டதும் தனது குளிராடையை வழங்கியிருப்பாரென்றால் இன்று தமிழ்கூறு நல்லுலகமும் பக்தகோடி உலகமும் கையேத்தித் தொழுதிருக்கும் தவறவிட்டுவிட்டார்.(கம்பவாரிதியும் குளிரின் குணத்தை அறிந்திருப்பார்) இதைவிட இன்னுமொரு பெருங்கவலையும் அவருக்கிருக்கின்றது. அதாவது இந்த புலம்பெயார்ந்த அற்பர்கள் அல்லது சுூத்திரர்கள் 'வேதம் வழங்காத நாடுகளுக்கு வரமாட்டேன் என்றிருந்த அவரையும் கட்டாயம் அங்கு கொண்டுபோய் படுத்தும் பாடு.. பாவம் சிவனார்! அவரைப்பார்க்க அழுகையாய் வந்ததது" என்று அங்கலாய்த்துள்ளார்(கம்பவாரிதிக்கு கோயில் கட்டி வழிபட வேண்டிய நிலையில் இருக்கின்றார் என்பதை இத்தால் அறிவிக்கின்றேன். ஏனெனில் கல்லில் பரமனை அதுவும் குளிரில் நடுங்கும் பரமனை கண்டவரென்றால் சும்மாவா). இதற்கு முன்னர் அதாவது சில நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் எந்தக் கம்பவாரிதியின் அனுமதிபெற்று இந்தோசீனா, தாய்லாந்து, வியட்னாம், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், மார்ட்னிக், ரியுூனியோன், குதலோப் போன்றதான நாடுகளுக்கு பரமன் சென்றாரோ தெரியவில்லை. அதெல்லாம் வேதம் வழங்கும் நாடுகள். 1980களுக்கு பின் புலம்பெயர்ந்து வதியும் நாடுகள்தான் வேதம் வழங்காநாடுகளா? கம்பவாரிதியாருக்குத்தான் வெளிச்சம். வம்பவாரிசின் அறிவுக்கொழுந்து எப்படியெல்லாம் ஒளிர்கின்றது பாருங்கள். ஒரு சமூகம் புலம்பெயர்ந்தால் அது புூமிப்பந்தின் எந்த முனையாக இருந்தாலும் கூடவே கடவுள், கல்லு, கத்தரிக்காய் எல்லாம்தான் புலம்பெயரும். இது மானிட இயல்பு. இலண்டனுக்கு ஆனைமுகத்தோனும், வள்ளிமணாளனும் புலம்பெயர்ந்ததும் கோயில் கொண்டெழுந்ததும் 1960களில் என இலண்டன் தலபுராணங்கள் கூறுகின்றன. புலம்பெயர்ந்த பக்த கோடிகளே உங்கள் கவனத்திற்கு: 'தங்கள் குளிர்தீர கோர்ட்டோடும் சுூட்டோடும் நின்று கொண்டு பக்கதர்கள் அபிஷேகம் செய்விக்கிறார்கள்" என்கிறார் nஐயராஐ;. இதனை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அவருக்கான அபஷேகத்தை வழங்குங்கள்.
இவ்வளவு நேரமும் அவர் வழங்கிய ஒருகுடம் பாலில் கலந்திருந்த செறிவற்ற நஞ்சுத் துளிகளையே பிரித்துக்காட்டினேன். தற்போது உருகி உருகி அவர் சொல்ல விரும்பிய, பாலெனக் காட்ட முயற்சித்த செறிவு மிக்க நஞ்சுத்துளி எதுவென்றால் 'வரமுடிந்தாலும் இனி இங்கு வராதீர்கள்" என்பதுதான். அவர் கம்பவாரிசல்லவா அதனால் கம்பனில் கவிக்கருத்தில் 'வாரதே!வரவல்லாய்" என்னும் சொற்தொடருக்கு அவர் நஞ்சு தடவியுள்ளார். இங்கேதான் அவருடைய கபடம், கள்ளத்தனம், போலி ஆன்மீகம் எல்லாம் வெளிப்படுகின்றன. ஏனெனில் இவருடை இந்த உபதேசம் அரசியல் சார்ந்தது, ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டது.
1980களில் இலங்கைத் தீவைவிட்டு தமிழர்கள் பெருமளவில் வெளியேறத் தலைப்பட்டபோது இலங்கையின் குடியகல்வுத் திணைக்களம் இறுக்கங்களை தளர்த்தியிருந்தது. கண்டும் காணாமல் விட்டது. இது சிறிலங்கா பேரினவாத அரசின் தந்திர மிக்க அழிப்புத் திட்டத்தைச் சார்ந்தது. Nஐஆர் என்னும் குள்ளநரியின் அரசியல் திட்டமது. தமிழர்களின் வெளியேற்றம் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் என அவர் நம்பினார். ஆனால் விளைவு எதிராகவே அமைந்தது. அது தமிழ்தேசியத்தை வீறுகொள்ளச் செய்தது பலமுறச் செய்தது. இது சிறிலங்கா பேரினவாதம் எதிர்பாராதது. இப்போது அவர்கள் நேரடியாகத் திரும்பி வருவது சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் பிடிக்கவில்லை. தென்கிழக்காசியாவின் சுூத்திரதாரியாக மாறவிரும்பும் இந்தியாவுக்கும் பிடிக்கவில்லை. ஈழத்தமிழர்களை அழிக்கும் நோக்குடன் சந்திரிகாவுக்கும்-வீரவன்சவுக்கும் கூட்டினை ஏற்படுத்திய சுூத்திரதாரி யார் என்பதை அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கூட கூறுவர்.
புலம்பெயாந்த ஒருவரால் அண்ணளவாக தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்துப்பேரை தன் தோள்களில் சுமக்க முடிந்தது. இது தாயகத்தின் போர் நெருக்கடியைப் பொருளாதார நெருக்கடியைத் தாங்கித்தரிக்க, முகங்கொள்ளச் செய்தது. புலம்பெயர்தோர் பெரும்பாலானோர் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் குளிரில் முள்ளெலும்பு தேய உழைத்தனர். தம் தேவைகளை குறைத்து வாயைவயிற்றைக் கட்டி பணத்தை சேமித்தனர். இவற்றால் புலம்பெயர் நாடுகளில் நம் சமூத்தினரிடையே நிகழும் இளவயது மரணங்களின் விழுக்காடு வம்பவாரிசுகள் அறியாதது. ஈழத்தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க ஊடகங்களை (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி), புதிய தொழில்சார் துறைகளை அவர்களால் நிறுவமுடிந்திருக்கின்றது.
இருமொழி மும்மொழி மட்டுமே தெரிந்திருந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு தற்போது ஆகக்குறைந்தது பத்து மொழிகள் தெரிந்திருக்கின்றது. சர்வதேச தரமிக்க அறிவுத்துறைகளில் எல்லாம் கால்பதிக்க முடிந்திருக்கின்றது. இந்தியாவின் தென்கோடியிலும் இலங்கை மலேசியாவிலும் முடங்கிக்கிடந்த தமிழ் சர்வதேச மொழியாக மாறி நிற்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழ்ப் பரப்பிற்கு சர்வதேச முகவரியைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இன்னும் இன்னும் நான் அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் தென்கிழக்காசியாவின் சுூத்திரதாரிகளுக்கும் சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் மட்டுந்தான் சங்கடத்தையும் சிக்கலையும் தோற்றுவிப்பது. இங்கேதான் கம்பவாரிதியின் அரசியல் அம்பலமாகின்றது. சுூத்திரதாரியினதும், பேரினவாதியினதும் அரசியல் ஆதங்கத்தையே கம்பவாரிதியும் வெளிப்படுத்தியுள்ளார். அயோத்தியில் இராமர் கோயில் கட்டவும், இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அகண்ட பாரதத்தை அமைக்கவும் கூடியதான காவிமயமான அரசிற்கு சேவை செய்வது வம்பவாரிதி போன்றோரின் விருப்பதிற்குரியதாய் இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை.
கம்பவாரிதி எள்ளி நகையாடும் புலம்பெயர்ந்தோரின் சிறுமைத்தனங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டும் உரியவையல்ல. இவை உலகளாவியவை, சமூக உளவியல் சார்ந்தவை. முன்னைய உயர்குடியினர் ஆடிய ஆட்டங்களை வாய்பிளக்க பார்த்த சாதாரணர் தங்கள் வசதியின் போது ஒருதடவை அப்படிப் பாவனை செய்யத்தான் முயற்சிப்பார்கள். இப்பிரச்சனைகளை நேசத்துடன்தான் அணுகமுடியும், ஆலோசனை கூறமுடியும். அதைவிட தாயகத்தாருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையேயான முறுகல்கள், மனக்குமுறல்கள் தாய்பிள்ளைகளுக்கு இடையேயான கோபதாபங்கள் போன்றதே. நமது மொழியில் சொல்வார்கள் கோழி மிதித்து குஞ்சுகள் சாவதில்லை. அரசியல் மொழியில் கூறுவதானால் இவை அகமுரண்பாடே தவிர பகைமுரண்பாடல்ல. (கம்பவாரிதிக்கு இதுபற்றிய விளக்கம் குறைவாக இருக்கும். மேலதிக விளக்கத்திற்கு மல்லிகை ஐPவாவை அணுகலாம்)
புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், வேறுநாடுகளில் குடியேறியோர் தாயகம் திரும்புதல் அவர்களது ஆதார உரிமை சார்ந்தது. மனித உரிமை சார்ந்தது. இதனை மறுத்துக் கருத்துக் கூற ஆலோசனை வழங்க கம்பவாரிதி முயற்சித்திருப்பது நச்சுத்தனமானது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பாவத்திற்கு இணையானது.
இந்தப் பாவத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் என்னால் வழங்கக் கூடியதான ஆலோசனை இதுதான். தமிழில் முறைசார் கல்;வியையோ முறைசாராக் கல்வியையோ மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழையாயினும் (உங்களிடம் தமிழ் அறிவு இருக்குமாயின் ஏனெனில் தமிழ் மொழி என்பது கம்பராமாயணத்திற்கும் அப்பாற்பட்டது) கற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அதனைவிட போர்ச் சுூழலால் மனப்பிறழ்வுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்போருக்கு ஆன்மீக வழியில் நம்பிக்கை அளிக்க முடியுமா என யோசியுங்கள்;. அதையும் விட ஆகக்குறைந்தது முகாம்களில் தங்கியுள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு நேர உணவாவது வழங்க முடியுமாயின் வழங்குங்கள். உங்களுக்குப் போகுமிடத்தில் புண்ணிமாவது மிஞ்சும்.
'வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா" - கம்பன்

கி.பி.அரவிந்தன் - பிரான்ஸ்
நெறியாளர் அப்பால் தமிழ்
மipயைn@hழவஅயடை.உழஅ

(இக்கட்டுரை மல்லிகை, மற்றும் சுடர்ஒளி ஆகிய இதழ்களுக்கு அனுப்பப்படுகின்றது.
தேவை கருதி புலம்பெயர்ந்தோர் ஊடகங்களுக்கும் அனுப்படுகின்றது.)
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
கம்பன் வம்பன் ஆகி வாரிதியும் வம்பனானான்...OK....இரண்டையும் படிச்ச இவர் அதைவிட வம்பர் ஆகிட்டார்....எங்களையும்......???! இது தேவையா...??! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஜெயராஜ் அவர் கருத்தை சொல்லும்போது அதுக்கு மற்றவங்க பதில் கருத்தை சொல்றதுல தப்பில்லை. அதிலை இருந்து எதிர்கருத்தில இருக்கிற நியாய அநியாயங்களை தெரிஞ்சுக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
அப்பாடா?
கம்பனும் வம்பன்தான்
அவன் வாரிசும் ???????????
சொல்லவா வேணும்
[b] ?
Reply
#5
கி பி அரவிந்தனின் பதிலில் உள்ள கோபம், ஜெயராஜாவின் 'வராதே வரவல்லாய்' வெளிவந்து கிட்டத்தட்ட அரை ஆண்டுகள் கடந்தபின் வந்திருப்பினும் இன்னும் விவாதிக்க அதற்குள் பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன என்கின்றது.

ஒரு சாதாரண தமிழ் சினிமா போல் வாசிப்பவனுக்கு கிளுகிளுப்பூட்டும் நடையில் சொல்லிச் செல்லும் ஜெயராஜாவின் நகைசுவை உணர்வு சராசரியானது அல்லது அதை விட குறைவானது என்பதற்கு யாழ் களமாடிகள் ஒரு பட்டி மன்றம் நடத்துவது அரவிந்தனுக்கோ அல்லது அதை களத்தில் விரித்த நளாயினிக்கோ நோக்கம் அல்ல என்பதுடன் தான் நான் இங்கு முரண்படவேண்டி வருகின்றது.

அரவிந்தனின் 'வராதே வரவல்லாய்' பற்றி கீறிக்கிழித்து செய்யும் 'Post mortem' முட்டையில் மயிர் புடுங்கும் வேலையாக போய்விடக்கூடிய ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாக எனக்குப்படுகிறது. ஏனெனில் ஜெயராஜாவின் பேச்சுகளும் எழுத்துகளும் யாழ்பாண சைவ வேளாளர் சமூகத்தின் அந்தரங்க ஆசைகளிக்கு தீனி போட கொழும்பில் வியாபார மையம் கொண்டுள்ளதே அன்றி அரவிந்தன் எழுதிச் செல்வதுபோல் 'Hidden Agenda' உள்ள அரசியல் சித்துவிளையாட்டு அல்ல. போதாததற்கு வால்மீயையும் கம்பனையும் இராவணனையும் சீதையையும் ராமனையும் இந்திய உப கண்ட விஸ்தரிப்பையும் ஒரு நோர் கோட்டில் வைத்து தனது சமன் பாட்டை நிறுவ முயல்வது சமூக பொருளாதார அரசியல் கலாச்சாரத்தின் நான்கு பரிமாணங்களையும் அரவிந்தன் உள்வாங்கியதில் ஏதோ குழறுபடி உள்ளதென்பதே தொக்கி நிற்கிறது.

விமர்சனத்திற்கு அப்பால் எதுவும் இருக்க முடியாதுதான்.
அதற்காக சர்வலோக நிவாரண விமர்சனம் என்ற கோதாவில் மல்லுகட்டவும் கூடாது.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
#6
ஜெயராஜ் சொன்னதில் உள்ள நாகரிகம் கூட இதில் இல்லை....! அதையும் தெரிஞ்சுகோங்க....!

இலக்கியங்கள் ஒன்றும் இலட்சிய மனிதர்களுக்காக படைக்கப்படவில்லை....இலக்கியங்கள் மக்களுக்காக படைக்கப்பட்டவை....மக்களில் பலரும் பலவற்றை விரும்புவர்...அவரவர்களுக்கு ஏற்றமாதிரி இலக்கியத்தில் பல சுவை சேர்த்து படைக்க வேண்டியது படைப்பாளியின் கடமை....அதற்காக படைப்பாளியை ஒரேயடியாக கெட்டவன் என்று சொல்ல முடியுமா...????!
கண்ணதாசன் ஒரு உதவாக்கரை...ஆனால் அவருடைய படைப்புக்களை ஆளுக்கொருமாதிரி நுகர்கிறீர்களே...அதெப்படி.....???!

கம்பவாரிதியிடம் விளக்கம் கேட்டால் வாரிதி தான் எழுதியதற்கு நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது மேலே எழுதிய கட்டுரையாளர் எதிர்பார்க்கும் நாகரிகமான பதிலைத் தரக்கூடும்...உண்மையில் ஒரு கருத்தின் மீதான தனிப்பட்ட ஒவ்வொருவரின் பார்வைகளும் மாறலாம்....அதற்காக கம்பராமாயணம் எழுதிய கம்பரோ....நளவெண்பா எழுதிய புகழேந்தியோ...காமத்துப்பால் எழுதிய வள்ளுவனே...வம்பர்கள் என்று நாம் தீர்மானிக்க முடியாது...! அவர்கள் வம்பர்களாக மனிதரில் இப்படிச் சிந்திக்கும் வம்புப் பிறவிகளும் இருப்பதுதான் காரணமோ என்னவோ....???! :wink:

என்னதான் சொன்னாலும்... வாரிதி எழுதியது பலரை சிந்திக்கத் தூண்டும் ஒரு குரலாகக் கொள்ளத்தக்கதே...! அதில் பல யதார்த்த நிலைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன...அதை நாமே தரிசிக்கும் பொழுது அதில் கோபப்பட என்ன இருக்கிறது....! கோபத்துக்குமேலால் கொஞ்சம் சொல்லப்பட்ட கருத்தின் நோக்கத்தைச் சிந்திப்பது கூடிய பயனளிக்கும் என்றே நாம் நம்புகிறோம்....! :!:

வாருதி
நீ எமக்கு வம்பனல்ல
அதற்காய்
நாம் உனக்கு வாலுமல்ல....!
நாம் கருத்தை ஆதரிக்கிறோம்
காரணம்
அதுவே நிஜமாயும் உள்ளதால்...!
நீ நிஜத்தைத் தொட்டதால்
சீற்றம் பொங்குகிறது.....!
வம்பர்கள் கண்ணில் காண்பதெல்லாம்
வம்பே...!
காலம் சொல்லும் பதில்...!
நீ அடங்கிவிடாதே
துணிந்து நில்
தொடர்ந்து சொல் உன் நியாயங்களை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
கம்பனால் எழுதப்பட்ட கற்பனைகளுக்கு 'கம்பவாரிதி' மேலும் கவிதாரசம் புூசி இன்னொரு காவியம் ஆக்கினால் கூட நாம் அதனைக் கண்டு கொள்ளத்தேவையில்லை. ஆனால் இப்போது அவர் தனது கற்பனை நயத்தை அகதித் தமிழனிலும் பிரயோகிக்க முனைந்திருக்கின்றார்.

உண்மையில் ஒருஇனத்தில் அக்கறை கொண்டு அதற்காக உழைத்து ஒருவர் அந்தமக்கள் கூட்டம் சரியான பாதையைவிட்டு விலகி செல்லும்போது அதற்கு ஆலோசனை சொல்வதும் அந்த மக்களை நல்வழிப்படுத்த முயல்வதும் நிச்சயமாக போற்றுதலுக்குரிய விடயமே. ஆனால் ஒரு இனம் பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து கதறித்துடித்தபோதோ அந்த மக்கள் கூட்டமே முழுதுமாக துடைத்தெறியப்படுகின்ற நிலைதோன்றி அவர்கள் தங்கள் இருப்புக்காக நெருப்பினுள் குழித்தபோதோ அந்த மக்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்கள் கரத்தை, கருத்தை பலப்படுத்த வல்லமையிருந்தும் அதனைப் பயன்படுத்தாது எங்கோ ஓடி ஒழித்தவர் இன்று அவர்களின் நலன்பற்றி 'அக்கறை' கொள்வது விசித்திரமே.
கருத்துக்களை யாரும் சொல்லிவிட்டுப்போகலாம். ஆனால் அதைச் சொல்பவர் நிச்சயமாக அதற்கு தகுதியுடையவராயிருக்க வேண்டும். அந்த தகுதி ஜெயராச்சிற்கு இருப்பதாக நான் நிச்சயமாக நம்பவில்லை.
Reply
#8
[quote=manimaran]கம்பனால் எழுதப்பட்ட கற்பனைகளுக்கு 'கம்பவாரிதி' மேலும் கவிதாரசம் புூசி இன்னொரு காவியம் ஆக்கினால் கூட நாம் அதனைக் கண்டு கொள்ளத்தேவையில்லை. ஆனால் இப்போது அவர் தனது கற்பனை நயத்தை அகதித் தமிழனிலும் பிரயோகிக்க முனைந்திருக்கின்றார்.

உண்மையில் ஒருஇனத்தில் அக்கறை கொண்டு அதற்காக உழைத்து ஒருவர் அந்தமக்கள் கூட்டம் சரியான பாதையைவிட்டு விலகி செல்லும்போது அதற்கு ஆலோசனை சொல்வதும் அந்த மக்களை நல்வழிப்படுத்த முயல்வதும் நிச்சயமாக போற்றுதலுக்குரிய விடயமே. ஆனால் ஒரு இனம் பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து கதறித்துடித்தபோதோ அந்த மக்கள் கூட்டமே முழுதுமாக துடைத்தெறியப்படுகின்ற நிலைதோன்றி அவர்கள் தங்கள் இருப்புக்காக நெருப்பினுள் குழித்தபோதோ அந்த மக்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்கள் கரத்தை, கருத்தை பலப்படுத்த வல்லமையிருந்தும் அதனைப் பயன்படுத்தாது எங்கோ ஓடி ஒழித்தவர் இன்று அவர்களின் நலன்பற்றி 'அக்கறை' கொள்வது விசித்திரமே.


அப்படியானால்...புலத்தில் உள்ள எத்தனை பேர் அதைச் செய்தனர்...????! அப்போ அவர்களுக்கு எப்படி இலங்கையிலேயே இருந்து (அதுவும் பல இடர்களைச் சந்தித்து...கம்பன்கழகக் கட்டடம் புலிகளின் மாளிகை என்று அரச தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதுகளில் இருந்தும் அக்கழகம் அநேகம் இளைஞர்களை உள்வாங்கி இயங்கிக் கொண்டிருந்ததாலும்) இயங்கும் வாரிதியைவிட அதிகம் மக்களைப் பற்றி அக்கறை காட்ட முடியும்....?????!

அப்படி ஒரு கேள்வியை நாமெழுப்பும் போது எமது நிலை அக்கேள்வியை எழுப்பத் தகுந்ததா என்று சிந்திப்பதற்கே....!

இது ஒன்றும் கம்பவாரிதி என்ற தனிமனிதனுக்கான வக்காளத்தல்ல...அதற்கான எந்தத் தேவையும் எமக்கில்லை....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அடடா குருவிகாள் என்ன ஒரு அக்கறை கம்பன் கழகத்தின் மீது
நானே கம்பன் கழகம் தேவையா என்று கருத்தெழுதுவதற்காக தரவுகளை சேகரித்து வந்த வேளையில் இந்தக் கட்டுரை யாழில் பிரசுரம் பண்ணப்படுகிறது
முற்போக்கு வாத சிந்தனைகளை அள்ளிவிடும் குருவிகாள் கம்பனுக்குக்காக கவிபாடுகிறார்

ஜெயராஜ் சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன அவர் பொதுவாக ஒட்டுமொத்த புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி விரலை நீட்டினாலும் அதில் குத்துப்படுவதற்கு நாம் நிறையத் தவறுகளைச் செய்து விட்டோம்
அது நிற்க
இவற்றை சுட்டிக் காட்டுவதற்கு ஜெயராஜ் இற்கு உரிமை உண்டா என்றால் உண்டு ஏனென்றால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு தவறே செய்யாத ஒருவர் தான் வரவேண்டும் என்றில்லை

ஆனால் ஐயா ஜெயராஜ் செய்த தவறு எல்லம் கண்ணாடி வீட்டுகுள் இருந்து கல்லெறிந்ததுதான் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நோக்கி விரல் நீட்டும் போது மிகுதி 4 விரலில் 3 விரல்கள் தன்னை நோக்கி மடிவதை கவனிக்கத் தவறி விட்டார்

சாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டு வந்த காலகட்டத்தில் சாதி பற்றி பொது மேடைகளில் வருணம் பேசியதற்காக எச்சரிக்கப் பட்டார் அத்தோடு கொழும்பு ஓடியவர் தான் பின்னர் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் யாழ் வந்து சென்றதான சேதி தான் எம் காதில் விழுந்தது அதற்கு பிரதியுபகாரமாக கவிக்கோவும் தனது நரம்பு அறுந்த யாழ் தொடரில் ஆங்காங்கே அவரைப் பற்றியும் குறிப்பிட்டு படங்களையும் பிரசுரித்தார்

இப்போது குருவிகளாரின் கூற்றுக்கு வருவோம்
எத்தனையோ இடர்கள் மத்தியில் யாழ் மக்களுக்குச் சேவை செய்த கம்பன்கழகத்தினர் இல்லம் பிரபாகரன் வீடு என்று கருதப்பட்டதற்கும் காட்டப்பட்டதற்கும் காரணம் இல்லாமலில்லை வீடு அமைந்திருந்த விதமும் வசதிகளும் பகட்டுமே அவ்வாறு நினைக்கத் தூண்டின மக்களுக்கு சேவை செய்யும் மகேசன் அடியவருக்கு ஏன் இத்தனை பகட்டு
கம்பரசத்தில் தாம் திளைத்தது மட்டுமன்றி பிறரையும் திளைக்கவைத்த பெருமை தவிர இந்த பெரியவர் செய்த சேவையை சொல்ல முடியுமா?
கொழும்பு ஓடியவர் அங்கிருக்கும் சில பெரிய மனிதர்கள் தயவால் வீடு ஒன்றை வாங்கி அலுவலகம் அமைத்தார்களே அந்த வீட்டின் பெறுமதி அந்த நேரத்தில் 40 லட்சம் அந்தப்பணம் இவர் சொந்தமாக உழைத்ததா ?கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி வெளிநாட்டினரிடம் இருந்து பெற்ற பணத்தில் இவர் சமூகத்திற்கு செய்த சேவை எதையாவது உம்மால் பட்டியலிட முடியுமா
பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கிய இளையவர்களை வைத்து இவர்கள் செய்த சேவையை கூறமுடியுமா?

வெளிநாட்டுக்குப் போய்வந்தபின் புலம் பெயர்ந்தோர்களிடம் இருந்து கழகப் பெயரால் பெருமளவு அன்பளிப்புகளையும் பெற்றபின் இவர் இதனைக் கூறுவதிலும் பார்க்க தமிழர் கலாச்சாரம் வெளிநாட்டில் சீரழிக்கப் படுகிறது எனவே நான் அங்கு வரமாட்டேன் எனக் கூறி போகாமல் விட்டிருந்தால் இதனைச் சொல்வதற்கு முழுத் தகுதியும் கம்பவாரிதிக்கு இருந்திருக்கும்

இந்தப் பெரிய மனிதரின் சாதனையாக தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்களை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் அதனைப் பார்த்தால் தெரியும் இவர் சமூகத்தில் யாரைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றார் என்று
குருவிகாள் நீர் கம்ப வாரிதிக்கு வக்காலத்து வாங்கவில்லையெனில் உமது பதில் மூலம் யாருக்கு வக்காலத்து வாங்க விரும்பினீர் சொல்லமுடியுமா?
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)