12-31-2003, 02:15 PM
உதயனில் வந்த கட்டுரை ஒன்று.கடடுரையாளார் சொல்ல வந்த கருத்தை விட்டு காது வழிச்செய்தியை பரப்புவதால் புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல் வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.
இந்தக் கட்டுரை இங்கு....
இது உன் நெஞ்சை தொடுமா? சுடுமா?
முதியோர்கள் - காலச்சக்கரத்தின் கடமைகளை முடித்துவிட்டு காலதேவ னுக்காய் காத்திருக்கும் கட்டைகள்.
சிறுவர்கள் - என்னவென்று தெரியாத உலகில் எதையோ சாதிப்பதற் காய் முகிழ்த்திருக்கின்ற மொட்டுகள்.
இன்று இவர்களின் நாள். அடிக்கடி உலகம் மறந்து போகின்ற மானிடர் களை நினைந்து கொள்வ தற்காகத்தானே இந்த மானுடத் தினங்கள். இவர்கள் விடயத்தில் உலகம் என்ன மறந்தது என்று நீங்கள் கேட்கக ;கூடும். இவர்களும் மனிதர்கள் என்பதை உலகம் மறந்து விட்டதுதான் உண்மையாகும்.
சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்படுவது குறித்தும், இன்று அதிகம் பேர் கதைக்கத் தொ டங்கிவிட்டார்கள்.
எனவே, இந்தக் கட்டுரையில் நான் அவர்களைப் பற்றி அதிகம் தொடா மல் சிந்திக்கப்படாத சில ஜீவன் களைப் பற்றி உங்கள் நெஞ்சோடு பேச விழைகின்றேன்.
முதிய மனிதர்கள், உலக ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்ட சடப் பொருள்கள். இப்படித்தான் நாம் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு கணக்குப்போட்டு வைத்திருக்கிறோம். எந்தத் தேவையும் அற்றவர்களாய், எதற்கும் தேவையற்றவர்களாய் அவர் களுக்கு ஒருகோடு கிழித்து வைத்திருக் கிறோம். நாளெல்லாம் எம்மைத் தோள் மீது சுமந்தவரின் உடைமைகளை ஒரு தோல்பைக்குள் முடக்கி வைத்துள்ளோம். வீட்டுப்படி யேறி விறாந்தை தாண்டி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வரும் நாலறைதாண்டி வரும் ஐந்தாவது அறையில் ஒரு மூலையில் ஒரு மூச்சுச் சத்தம் கேட்கும். முனகல் கேட்கும். உற்று நோக்கினால் ஓர் உருவம் தெரியும். உலர்ந்த தோல் ஒட்டிய உடலுடன் கண்களைச் சுருக்கி கனதியாய் நோக்கிவிட்டு சோர்ந்த உடல் சரிந்து அவ்வுருவம் உறக்கம் கொள்ளப் பார்க்கும்.
என்ன வர்ணனையாய் போகிறதே என்று எண்ணுகிறீர்களா? இல்லை. முதியவர்களைக் கொண்ட நம் தமிழ்த் தேசிய குடிகளின் ஒவ் வொரு நு}று வீட்டிலும் எழுபது வீடு களில் இதுதான் நிலைமை. தம் இள மைக்காலத்து இரத்தத்தை வியர் வையாய் சிந்தி தன் சந்ததி சக தியை மிதிக்காது வாழவைத்த பெற் றோருக்கு அவர்கள் வயது முதிர்ந் ததும் அவர்கள் தம் சிறகுகளால் காத்து வளர்த்த பிள்ளைகள் கொடுக் கும் பரிசு இதுதான். உலகின் கண் களுக்குத் தெரியாமல், ஏன் உறவினர் களின் கண்களுக்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் உங்களோடு கதைக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இந்த மனிதர் களின் நிலை என்ன?
பிள்ளை படித்து பெரியவனாகி பட்டம் வாங்கி பரதேசம் போவான். அகதி என்ற பெயரில் அப்பா கொடுத்த பணத்தில் அரச வாழ்க்கை வாழ்வான்.
இங்கே இந்த கிழடுகள் பிள்ளைக் காய் கட்டிய வீட்டை கட்டிக்காத்துக் கொண்டு காவல்காக்கும் நாய்களாய், புதையல் பேணும் பேய்களாய் ஆவி பிரியும் முன்னம் ஆஸ்தியை பிள் ளையிற்ற குடுத்திட வேணும் என்ற கனவுகளோடு.......
பத்திரிகைகளில் செய்தி வரும். ~~தனிமையில் இருந்த மூதாட்டி கொலை, நகைகள் அபகரிப்பு.||
~~வயோதிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.|| கொள்ளிவைக்கக்கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை.
வலிகாமம் பகுதியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தகப்பன் இறந்து போனார். ஜேர்மனியிலுள்ள மகனுக்கு அறிவித்தார்கள். அப்பா இறந்துவிட்டார். கொள்ளிவைக்க ஒரு பிள்ளையும் இங்கு இல்லை. நீங் கள் வாருங்கள் என்று. மகன் டெலி போனில் பதில் சொன்னார்.
ஷஷயாழ்ப்பாணம் இன்னும் முன்னேற வி;ல்லையே இன்னும் கொள்ளிவைச் சுக் கொண்டிருக்கிறியள். காசனுப்பி விடுகிறன் பொடியை கொழும்புக்கு கொண்டுவந்து மெசினில குடுத்து எரி யுங்கோ. வடிவா எல்லாத்தையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ.|| இது கதையில்லை உண்மை. தன் இரத்தத்தால் உயிர் கொடுத்த தந்தையை, தன் இரத்தத்தை ஊனாக்கி உடல் வளர்த்த அன்னையை, அருகிருந்து பார்த்து, அவர் தம் உயிர் பிரியும்வேளை உடனிருந்து உருகாத மனமுடைய மனிதன் ஒரு நல்ல மகளாக அல் லது மகனாக இருக்கமுடியுமா?
மல்லாகம் பகுதியில் ஒரு சம்ப வம் 18 வருடம் வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த ஒரு மகனை தாய் கேட் டாள். ஷஷஎன்ர பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசையாய் கிடக்கு கூட்டிக் கொண்டு போவன் மேனை.||
அவர் சொன்னார். ~~இனி இவவுக்கு இந்த வயதில அங்கென்ன வேலை?||
இந்த மனிதர்களின் சிந்தனை களைப்பாருங்கள். முதியவர்களுக்கு எதுவும் தேவையில்லை. எந்த உணர்வுக்கும் அவசியமில்லை என்று நினைக்கிறார் கள். ஆனால், அவர்களுக் கும் ஆசைகள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. தாம் புறக்கணிக்கப்படு வதைக் கண்டு அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். உள்ளத்தால் அழு கிறார்கள். தமது கருத்துகளை நம் பிள்ளை கேட்க வேண்டும், குடும்ப நடவடிக்கைகளில் தம்மையும் பங் கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும், தம்மை தமது அடுத்த தலைமுறை மதிக்க வேண்டும் என்ற எண்ணங் கள் அவர்களிடமுண்டு. இவைகள் ஈடேறாதபோது அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். இதனால் பலர் முடங்கிப் போகிறார்கள். சிலர் முரண்படுகிறார்கள். இதற்கு நம் மவர் கொடுக்கும் விளக்கம் ஷஅறளை பெயர்ந்து போச்சுது அதுதான் இப்படி||.
இன்றைய பிள்ளைகள் தம்மைச் சுமந்தவரை நாம் சுமப்பது பாரமென நினைக்கிறார்கள். அவர்களில் பலர் நம் முதிர்ந்த பெற்றோரை விடுதி களிலும் சிலர் வீதிகளிலும் தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலானோர் மூலையில் இருத்தி மூன்று நேரமும் உணவளிக்கிறார்கள்.
மூன்று வேளை கிடைக்கும் உணவு அவர்கள் மூச்சுவிட போது மானதாக இருக்கலாம். அவர் தம் உணர்வுகளுக்கு வடிகாலாக அமை யாது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுவிட்டு மாதா மாதம் பணம் கொடுக்கும் பிள்ளை களுமுண்டு,. ஷஷவடிவா காசு குடுத்து கவனிக்கிறம் தானே|| என்பது அவர் கள் கணக்கு. ஆனால், பிணக்கு இது வல்ல. அவர்களின் உள்ளத்தின் ஓசைகள் கேட்கப்படுகிறதா? தள் ளாத வயதில் எழும் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதுதான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் வாழ்க்கை அல்ல இவர்கள் வாழ்வு. காலச் சுழற்சியில் கடைசி மணித் துளிக்காய் காத்திருக்கும் கணங்கள் இவர்களுடைய வாழ்வு. இன்றிவர் நோவுக்கு மருந்திடாது மறைந்த பின்பு அழுது புலம்பியென்ன? ஆண்டுத் துவசம் செய்தென்ன?
இலங்கைத் தீவிலே எண்ணிக்கை அடிப்படையில் நோக்காது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் படித்த சமூகம் என தம்மை மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில் தான் முதியவர்கள் அதிகளவில் அல்லற் படுத்தப்படுகிறார்கள். அடக்குமுறைக் குட்படுத்தப்படுகிறார்கள்.
முதியவர்கள் பற்றி ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறும் கருத்து என்னவெனில், ஒரு குறிப் பிட்ட வயதைக் கடந்து முதிய கோல மடைந்த மனிதன் மீண்டும் குழந்தை களின் நிலைக்கே திரும்புகிறான். அங்கே அவன் எண்ணங்கள் சிந்தனைகள் ஒரு குழந்தையிடமுள்ள தைப்போல பிடிவாதமுடையதாய் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டு மென்பதற்காக செயல்களைச் செய்வதாகவே இருக்கும்.
இவர்கள் உடலால் முதிர்ந்தவர்களாயினும் உள்ளத்தால் குழந்தைகளைப் போலிருப்பர். எனவே, அவர் களை உங்கள் பிள்ளைகளில் ஒரு வராகவே நோக்குங்கள். கருதுங்கள் என்கிறார்கள்.
ஆனால், நடப்பது என்ன?
பிள்ளைகளைப் போல பேண வேண்டியவர்களைத் தொல்லை களாவே கருதுகிறார்கள். பல்லாண்டுகளாகத் தம்மைப் பேணியவரை சில ஆண்டுகள் பேணுவதற்கு சினக்கிறார்கள். இத்தகைய நடத்தைகள் மனித நேயமற்ற செயல்களாகவே கருதப்படவேண்டும். இதை சட்டமும் ஏற்றுக்கொண ;டுள்ளது.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 9 ஆம் இலக்க சட்டத்தின்படி முதியோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத் தின் பிரகாரம் அறுபது வயதைக் கடந்த ஒரு நபர் முதியவராக கருதப் படுவார். அத்தகைய ஒரு முதியவர் தம் பிள்ளைகளால் தமக்கு போதிய பராமரிப்பு கிடைக்கவில்லை என உணர்ந்தால் தமக்குப் பிள்ளைகளி டமிருந்து போதிய பராமரிப்பைப் பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக் கல் செய்யமுடியும். இத்தகைய வழக்குகளை முதியவர்கள் சார்பில் இலவசமாக நடத்துவதற்கு ~வயது வந்தவர்களுக்கான தேசியச் செயல கம்| எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவரும் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் இதற்கான விண்ணப் பப்படிவத்தைப் பெற்று மேற்படி செய லகத்திற்கு விண்ணப்பத்தினு}டாக வழக்குகளை மேற்கொண்டு தமக்குரிய பராமரிப்புக்கான செலவுகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு பிள்ளைகள் எனும் போது சட்டாPதியான பிள்ளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு வயதான பெற்றோரும் தமக்கு பிறந்த சட்ட hPதியற்ற பிள்ளைகள் மறுமணம் மூல மாகப் பிறந்த பிள்ளைகள், வளர்ப்பு பிள்ளைகள் போன்றோரிடமிருந்தும் பராரிப்பைக் கோரும் உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே, மேற் குறித்த எந்தப் பிள்ளையாயினும் தமது வயதான பெற்றோரைப் பரா மரிப்பது கட்டாயமாகிறது.
~~பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது|| ~~பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது|| என்ற கவிவரிகள் எம் மூரின் தெருக்களில் நிதர்சனமாகத் தெரிவது வேதனைக்குரியது.
~நாய் வளர்த்து பாலை வார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நன்றிகெட்ட பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும்|| எனும் வரிகள் ஒவ்வொரு வயதான பெற்றோரின் மனதிலும் ஆழப்பதியும் நிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. தென்னையை வைத்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று அவர்கள் கண்ணீர்விடும் காலம் இன்று.
இந்த நிலை மாறவேண்டும்.
தன் தகப்பனுக்கு ஒருவன் உடைந்த தட்டிலே உணவு கொடுத்தானாம். அதைக் கண்ட அவன் பிள்ளை அத்தட்டை எடுத்து ஒளித்து வைத்தானாம். ஏனடா ஒளித்தாய் என்று கேட்டதற்கு அப்பா நீ உன் அப்பாவுக்கு உடைந்த தட்டிலே உணவு கொடுக்கிறாய். எதிர்காலத்தில் நான் உனக்கு உணவு கொடுக்க ஓர் உடைந்த தட்டு வேண்டுமே அதற்கா கவே எடுத்து வைத்தேன் என்றானாம்.
இந்தக் கதையிலுள்ள தத்துவம் ஒவ்வொரு பிள்ளைக்கும் உறைக்க வேண்டும். உனக்கு உயிர் தந்த வரை உன் உயிர் இருக்கும்வரை கவனி. காலம் உனக்கு பரிசு தரும். உன் கடைசி காலம் கண்ணீர் இன்றி கழியும்.
இந்தக் கட்டுரை இங்கு....
இது உன் நெஞ்சை தொடுமா? சுடுமா?
முதியோர்கள் - காலச்சக்கரத்தின் கடமைகளை முடித்துவிட்டு காலதேவ னுக்காய் காத்திருக்கும் கட்டைகள்.
சிறுவர்கள் - என்னவென்று தெரியாத உலகில் எதையோ சாதிப்பதற் காய் முகிழ்த்திருக்கின்ற மொட்டுகள்.
இன்று இவர்களின் நாள். அடிக்கடி உலகம் மறந்து போகின்ற மானிடர் களை நினைந்து கொள்வ தற்காகத்தானே இந்த மானுடத் தினங்கள். இவர்கள் விடயத்தில் உலகம் என்ன மறந்தது என்று நீங்கள் கேட்கக ;கூடும். இவர்களும் மனிதர்கள் என்பதை உலகம் மறந்து விட்டதுதான் உண்மையாகும்.
சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்படுவது குறித்தும், இன்று அதிகம் பேர் கதைக்கத் தொ டங்கிவிட்டார்கள்.
எனவே, இந்தக் கட்டுரையில் நான் அவர்களைப் பற்றி அதிகம் தொடா மல் சிந்திக்கப்படாத சில ஜீவன் களைப் பற்றி உங்கள் நெஞ்சோடு பேச விழைகின்றேன்.
முதிய மனிதர்கள், உலக ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்ட சடப் பொருள்கள். இப்படித்தான் நாம் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு கணக்குப்போட்டு வைத்திருக்கிறோம். எந்தத் தேவையும் அற்றவர்களாய், எதற்கும் தேவையற்றவர்களாய் அவர் களுக்கு ஒருகோடு கிழித்து வைத்திருக் கிறோம். நாளெல்லாம் எம்மைத் தோள் மீது சுமந்தவரின் உடைமைகளை ஒரு தோல்பைக்குள் முடக்கி வைத்துள்ளோம். வீட்டுப்படி யேறி விறாந்தை தாண்டி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வரும் நாலறைதாண்டி வரும் ஐந்தாவது அறையில் ஒரு மூலையில் ஒரு மூச்சுச் சத்தம் கேட்கும். முனகல் கேட்கும். உற்று நோக்கினால் ஓர் உருவம் தெரியும். உலர்ந்த தோல் ஒட்டிய உடலுடன் கண்களைச் சுருக்கி கனதியாய் நோக்கிவிட்டு சோர்ந்த உடல் சரிந்து அவ்வுருவம் உறக்கம் கொள்ளப் பார்க்கும்.
என்ன வர்ணனையாய் போகிறதே என்று எண்ணுகிறீர்களா? இல்லை. முதியவர்களைக் கொண்ட நம் தமிழ்த் தேசிய குடிகளின் ஒவ் வொரு நு}று வீட்டிலும் எழுபது வீடு களில் இதுதான் நிலைமை. தம் இள மைக்காலத்து இரத்தத்தை வியர் வையாய் சிந்தி தன் சந்ததி சக தியை மிதிக்காது வாழவைத்த பெற் றோருக்கு அவர்கள் வயது முதிர்ந் ததும் அவர்கள் தம் சிறகுகளால் காத்து வளர்த்த பிள்ளைகள் கொடுக் கும் பரிசு இதுதான். உலகின் கண் களுக்குத் தெரியாமல், ஏன் உறவினர் களின் கண்களுக்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் உங்களோடு கதைக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இந்த மனிதர் களின் நிலை என்ன?
பிள்ளை படித்து பெரியவனாகி பட்டம் வாங்கி பரதேசம் போவான். அகதி என்ற பெயரில் அப்பா கொடுத்த பணத்தில் அரச வாழ்க்கை வாழ்வான்.
இங்கே இந்த கிழடுகள் பிள்ளைக் காய் கட்டிய வீட்டை கட்டிக்காத்துக் கொண்டு காவல்காக்கும் நாய்களாய், புதையல் பேணும் பேய்களாய் ஆவி பிரியும் முன்னம் ஆஸ்தியை பிள் ளையிற்ற குடுத்திட வேணும் என்ற கனவுகளோடு.......
பத்திரிகைகளில் செய்தி வரும். ~~தனிமையில் இருந்த மூதாட்டி கொலை, நகைகள் அபகரிப்பு.||
~~வயோதிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.|| கொள்ளிவைக்கக்கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை.
வலிகாமம் பகுதியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தகப்பன் இறந்து போனார். ஜேர்மனியிலுள்ள மகனுக்கு அறிவித்தார்கள். அப்பா இறந்துவிட்டார். கொள்ளிவைக்க ஒரு பிள்ளையும் இங்கு இல்லை. நீங் கள் வாருங்கள் என்று. மகன் டெலி போனில் பதில் சொன்னார்.
ஷஷயாழ்ப்பாணம் இன்னும் முன்னேற வி;ல்லையே இன்னும் கொள்ளிவைச் சுக் கொண்டிருக்கிறியள். காசனுப்பி விடுகிறன் பொடியை கொழும்புக்கு கொண்டுவந்து மெசினில குடுத்து எரி யுங்கோ. வடிவா எல்லாத்தையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ.|| இது கதையில்லை உண்மை. தன் இரத்தத்தால் உயிர் கொடுத்த தந்தையை, தன் இரத்தத்தை ஊனாக்கி உடல் வளர்த்த அன்னையை, அருகிருந்து பார்த்து, அவர் தம் உயிர் பிரியும்வேளை உடனிருந்து உருகாத மனமுடைய மனிதன் ஒரு நல்ல மகளாக அல் லது மகனாக இருக்கமுடியுமா?
மல்லாகம் பகுதியில் ஒரு சம்ப வம் 18 வருடம் வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த ஒரு மகனை தாய் கேட் டாள். ஷஷஎன்ர பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசையாய் கிடக்கு கூட்டிக் கொண்டு போவன் மேனை.||
அவர் சொன்னார். ~~இனி இவவுக்கு இந்த வயதில அங்கென்ன வேலை?||
இந்த மனிதர்களின் சிந்தனை களைப்பாருங்கள். முதியவர்களுக்கு எதுவும் தேவையில்லை. எந்த உணர்வுக்கும் அவசியமில்லை என்று நினைக்கிறார் கள். ஆனால், அவர்களுக் கும் ஆசைகள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. தாம் புறக்கணிக்கப்படு வதைக் கண்டு அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். உள்ளத்தால் அழு கிறார்கள். தமது கருத்துகளை நம் பிள்ளை கேட்க வேண்டும், குடும்ப நடவடிக்கைகளில் தம்மையும் பங் கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும், தம்மை தமது அடுத்த தலைமுறை மதிக்க வேண்டும் என்ற எண்ணங் கள் அவர்களிடமுண்டு. இவைகள் ஈடேறாதபோது அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். இதனால் பலர் முடங்கிப் போகிறார்கள். சிலர் முரண்படுகிறார்கள். இதற்கு நம் மவர் கொடுக்கும் விளக்கம் ஷஅறளை பெயர்ந்து போச்சுது அதுதான் இப்படி||.
இன்றைய பிள்ளைகள் தம்மைச் சுமந்தவரை நாம் சுமப்பது பாரமென நினைக்கிறார்கள். அவர்களில் பலர் நம் முதிர்ந்த பெற்றோரை விடுதி களிலும் சிலர் வீதிகளிலும் தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலானோர் மூலையில் இருத்தி மூன்று நேரமும் உணவளிக்கிறார்கள்.
மூன்று வேளை கிடைக்கும் உணவு அவர்கள் மூச்சுவிட போது மானதாக இருக்கலாம். அவர் தம் உணர்வுகளுக்கு வடிகாலாக அமை யாது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுவிட்டு மாதா மாதம் பணம் கொடுக்கும் பிள்ளை களுமுண்டு,. ஷஷவடிவா காசு குடுத்து கவனிக்கிறம் தானே|| என்பது அவர் கள் கணக்கு. ஆனால், பிணக்கு இது வல்ல. அவர்களின் உள்ளத்தின் ஓசைகள் கேட்கப்படுகிறதா? தள் ளாத வயதில் எழும் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதுதான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் வாழ்க்கை அல்ல இவர்கள் வாழ்வு. காலச் சுழற்சியில் கடைசி மணித் துளிக்காய் காத்திருக்கும் கணங்கள் இவர்களுடைய வாழ்வு. இன்றிவர் நோவுக்கு மருந்திடாது மறைந்த பின்பு அழுது புலம்பியென்ன? ஆண்டுத் துவசம் செய்தென்ன?
இலங்கைத் தீவிலே எண்ணிக்கை அடிப்படையில் நோக்காது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் படித்த சமூகம் என தம்மை மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில் தான் முதியவர்கள் அதிகளவில் அல்லற் படுத்தப்படுகிறார்கள். அடக்குமுறைக் குட்படுத்தப்படுகிறார்கள்.
முதியவர்கள் பற்றி ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறும் கருத்து என்னவெனில், ஒரு குறிப் பிட்ட வயதைக் கடந்து முதிய கோல மடைந்த மனிதன் மீண்டும் குழந்தை களின் நிலைக்கே திரும்புகிறான். அங்கே அவன் எண்ணங்கள் சிந்தனைகள் ஒரு குழந்தையிடமுள்ள தைப்போல பிடிவாதமுடையதாய் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டு மென்பதற்காக செயல்களைச் செய்வதாகவே இருக்கும்.
இவர்கள் உடலால் முதிர்ந்தவர்களாயினும் உள்ளத்தால் குழந்தைகளைப் போலிருப்பர். எனவே, அவர் களை உங்கள் பிள்ளைகளில் ஒரு வராகவே நோக்குங்கள். கருதுங்கள் என்கிறார்கள்.
ஆனால், நடப்பது என்ன?
பிள்ளைகளைப் போல பேண வேண்டியவர்களைத் தொல்லை களாவே கருதுகிறார்கள். பல்லாண்டுகளாகத் தம்மைப் பேணியவரை சில ஆண்டுகள் பேணுவதற்கு சினக்கிறார்கள். இத்தகைய நடத்தைகள் மனித நேயமற்ற செயல்களாகவே கருதப்படவேண்டும். இதை சட்டமும் ஏற்றுக்கொண ;டுள்ளது.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 9 ஆம் இலக்க சட்டத்தின்படி முதியோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத் தின் பிரகாரம் அறுபது வயதைக் கடந்த ஒரு நபர் முதியவராக கருதப் படுவார். அத்தகைய ஒரு முதியவர் தம் பிள்ளைகளால் தமக்கு போதிய பராமரிப்பு கிடைக்கவில்லை என உணர்ந்தால் தமக்குப் பிள்ளைகளி டமிருந்து போதிய பராமரிப்பைப் பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக் கல் செய்யமுடியும். இத்தகைய வழக்குகளை முதியவர்கள் சார்பில் இலவசமாக நடத்துவதற்கு ~வயது வந்தவர்களுக்கான தேசியச் செயல கம்| எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவரும் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் இதற்கான விண்ணப் பப்படிவத்தைப் பெற்று மேற்படி செய லகத்திற்கு விண்ணப்பத்தினு}டாக வழக்குகளை மேற்கொண்டு தமக்குரிய பராமரிப்புக்கான செலவுகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு பிள்ளைகள் எனும் போது சட்டாPதியான பிள்ளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு வயதான பெற்றோரும் தமக்கு பிறந்த சட்ட hPதியற்ற பிள்ளைகள் மறுமணம் மூல மாகப் பிறந்த பிள்ளைகள், வளர்ப்பு பிள்ளைகள் போன்றோரிடமிருந்தும் பராரிப்பைக் கோரும் உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே, மேற் குறித்த எந்தப் பிள்ளையாயினும் தமது வயதான பெற்றோரைப் பரா மரிப்பது கட்டாயமாகிறது.
~~பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது|| ~~பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது|| என்ற கவிவரிகள் எம் மூரின் தெருக்களில் நிதர்சனமாகத் தெரிவது வேதனைக்குரியது.
~நாய் வளர்த்து பாலை வார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நன்றிகெட்ட பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும்|| எனும் வரிகள் ஒவ்வொரு வயதான பெற்றோரின் மனதிலும் ஆழப்பதியும் நிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. தென்னையை வைத்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று அவர்கள் கண்ணீர்விடும் காலம் இன்று.
இந்த நிலை மாறவேண்டும்.
தன் தகப்பனுக்கு ஒருவன் உடைந்த தட்டிலே உணவு கொடுத்தானாம். அதைக் கண்ட அவன் பிள்ளை அத்தட்டை எடுத்து ஒளித்து வைத்தானாம். ஏனடா ஒளித்தாய் என்று கேட்டதற்கு அப்பா நீ உன் அப்பாவுக்கு உடைந்த தட்டிலே உணவு கொடுக்கிறாய். எதிர்காலத்தில் நான் உனக்கு உணவு கொடுக்க ஓர் உடைந்த தட்டு வேண்டுமே அதற்கா கவே எடுத்து வைத்தேன் என்றானாம்.
இந்தக் கதையிலுள்ள தத்துவம் ஒவ்வொரு பிள்ளைக்கும் உறைக்க வேண்டும். உனக்கு உயிர் தந்த வரை உன் உயிர் இருக்கும்வரை கவனி. காலம் உனக்கு பரிசு தரும். உன் கடைசி காலம் கண்ணீர் இன்றி கழியும்.