அன்பே நினைப்பிருக்கா? (கவிதை)
அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம்
அமைதியான அழகு கடற்கரை ஓரம்
அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து
ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா?
'விரிந்த அந்த வான வெளியினிலே
பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை
மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று
உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா?
'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய்
ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது
ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே
உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா?
கடலின் கரை சேரா அந்த படகு போல - உன்
காதலி நானிங்கே உனை சேர ஏங்குகிறேன்.
கசக்கி எறிந்த ஓவியம் போல் என்னை நீயும் எறிந்தாலும் - நம்
காதலை நான் மறக்க மாட்டேன் என்னுயிர் வாழுமட்டும்.
3 Comments
Recommended Comments