தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர்
உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!
பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று
கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று.
தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று,
கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ!
அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு,
உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம்,
வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி,
இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர்.
தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர்.
மாவீரரே..! ஈழத்தமிழர் வீரத்தின் சின்னங்களே...!
நிகரற்ற தியாகிகளே...! உமை என்றும் நினைவு கூர்வோம்.
ஈழத்தமிழர் விடுதலைக்காய் நீர் வீறுடன் செய்த பயணம்,
உம் வழிவந்த வேங்கைகளால் தீரத்துடன் தொடரப்படும்.
தமிழீழம் எனும் ஒரு நாடு உருவாகும் வேளையிலே,
தேசிய வீரர்களாய் உமது பெயர் பொறிக்கப்படும்.
புவியெங்கும் பரந்து வாழும் தமிழினமே பெருமை கொள்ளும்.
இவ்வுலகில் உயிர்கள் வாழுமட்டும் உமது தியாகம் பேசப்படும்!
தமிழினத்தின் விடிவிற்காக, தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு, எமது சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.
(27/11/2004)
0 Comments
Recommended Comments
There are no comments to display.