Jump to content
  • entries
    18
  • comments
    0
  • views
    36511

வா..வா!!


Rasikai

518 views

வா..வா!!

---------------

கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே

2005 போய்வா தோழா!

சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை

கொன்று தொலைத்தாய்!

என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி?

இருந்தாலும் போய்வா!

2006 ஏ வா வா !

வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா?

வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை..

பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா?

கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை

எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!

வாய் மூடிபோன பீரங்கி வாய்களை

ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்!

அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும்

எரித்திடாதே.. அணைத்திடாதே!

தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்..

ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்!

தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்?

போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த

மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்!

சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..

செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..

வா வா 2006 ஆண்டே!!

0 Comments


Recommended Comments

There are no comments to display.

Guest
This blog entry is now closed to further comments.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.