Jump to content
  • entries
    27
  • comments
    0
  • views
    47956

ஏனிந்த போராட்டம்?


PSIVARAJAKSM

543 views

ஏனிந்த போராட்டம்?

ஏதோச்சதிகாரத்தை எதிர்த்தே சாவதேன்?

இனவெறிக்கு இணங்கிப் போங்கள்

இலங்கையில் இருநாடெதற்க்கு - என்றே

இயல்பாய் கேட்போரே! சொல்வோரே!

இனவெறியின் இன்னல்களை இதயத்தால் சொல்கின்றேன்!

கருத்தூன்றிக் கோளுங்கள்; கர்பனையல்ல அவைகள்

கண்டோறும் கேட்டோறும் கலங்கிய நிகழ்வுகள்

கணத்திடும் இதயம்! கலங்கிடும் கண்கள்!

உங்கள் இதயம் உங்களுடன் பேசிடும் போதே

உறக்க சொல்வீர்கள் இங்கிருந்தே! - இனியும்

இணைந்திருப்பதில் பயணில்லை!

இப்போதே பிரித்திடுங்கள் என்றே!

1996 ஜூலை தொடங்கி 1998 செப்டம்பர்

ஆகக்கூடி இருபத்து ஆறு மாதங்கள்

இனவெறி இலங்கை இராணுவத்தின்

இயந்திர துப்பாக்கிகளும், அகிலத்து அனைத்துவித ஆயுதங்களும்

இயங்கின! இடிவிழுந்தது கிளிநொச்சியில்!

இறங்கியது இனவெறி இராணுவம்! இயங்கியது

இரங்கவில்லையே! இதயமில்லையா சிங்களவர்க்கு!

ஆமைபூந்த வீடுபோல் கிளிநொச்சி!

அடுக்கடுக்காய் வெளியேறியது மகிழ்சி

வெளியேறியது மகிழ்சி மட்டுமல்ல மக்களும்தான்!

விரைந்து துரத்தினர்! வீடுபுகுந்தடித்தனர்

விளைவு வீதியில் மக்கள்!

கணத்த இதயத்துடன் கலங்கிய கண்களுடன்!

கரணமாய் கயவர்களின் இனவெறி! காமுகர்களின் காமவெறி!

இதுதான் விதிபோலும் என்றிடலாம் நீங்கள்!

இல்லை! இல்லை! வீணர்களின் சதி என்போம் நாங்கள்!

பசித்த வயிற்றுடன்! பயபயந்து நடுங்கி

பறிதவித்து சென்றனர் தமிழர்கள் பச்சிளம்குழந்தைகளும்தான்

பாதை எங்கும் மிதிவெடிகள்!

பாதக இனவெறியின் பரிசோ அது?

எப்போதும் இப்படித்தான் இனவெறி சிங்களவர்

என்ன செய்வார்கள் ஏன் இந்த கொடுமை?

ஏங்கி நடந்தனர்! எங்கெங்கோ சென்றனர்

நிராதரவாய் நிர்கதியாய் சென்றவரையும்

நிறுத்தி நிறுத்தி சுட்டது இனவெறி சிங்களம்!

அப்போது இறந்தவர்கள் எட்டு பேர்!

அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது 184 பேர்!

அபோது கானாமல் போனவர்கள் 234 பேர்!

கைது செய்ததோ இராணுவம்! கண்டெடுக்கப்பட்டார்கள்

கைது சொய்யப்பட்டவர்கள் சாக்கடையில்! மலக்குழியில்!

சவமாகக்கூட அல்ல எலும்புகளாக, எலும்புக்கூடுகளாக

கட்டபட்ட கைகளுடன்! கால்களுடந் தமிழர்கள்

கணக்கில்லாமல் சாகடிக்கப்பட்டவர் எத்தனை எத்தனையோ!

உயிருடன் கிணறுகளில் போடபட்டவர்கள் எத்தனை எத்தனையோ!

உயிருடன் எரியூட்டப்பட்டவர்கள் எத்தனை எத்தனையோ!

இவர்கள் ஏன் எதற்க்காக கொல்லப்பட்டனர்?

இரக்கமில்லா இனவெறியால்! சிந்தையில்லா சிங்களத்தால்

இதற்க்கெல்லாம் காரனம் அவர்கள் தமிழர்கள்

இணைந்த இலங்கையிலேயே இறுதித்தீர்வு- என்றே

இங்கிருந்து குரல் கொடுப்பவர்கள்

இதயத்திடம் கேளுங்கள்! இரைந்து பேசும் இதயம்

இதயத்தின் பேச்சை கேட்டுவிட்டு இங்குவந்து பேசுங்கள்!

இல்லையெனில் இதயமற்றவரென்றே ஏளனம் செய்யும் உலகம் நாளை

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.