Jump to content
  • entries
    27
  • comments
    0
  • views
    47946

இட ஒதுக்கீடும் இனவெறியும்


PSIVARAJAKSM

571 views

இட ஒதுக்கீடும் இனவெறியும் இதயமுள்ளவர்களுக்கே புரியும்.

ஒன்று போலவே தெரியும்

ஒன்றில் ஒன்று மாறுபடும்

உணர்வுள்ளோருக்கே அது புரியும்

உடன்பிறந்தோர் பிள்ளைகள்தான்

ஒன்று மனைவியாகும்!

ஒன்று மகள் ஆகும்!

ஒத்துக் கொள்ளாதவர்கள் ஒழுக்கமுடையவரா?

மகளின் பிள்ளைகள்

மறுபடியும் மனைவியாவர் மகனுக்கு

மானமுள்ளோர் வகுத்த விதி இது!

நடந்தால் மகனின் மகனுக்கு தாய்

நடக்காவிட்டால் மகனின் மகனுக்கு தாரம்!

முன்னது நடந்தால் பின்னதை நடக்கவிடார்

பின்னது நடந்தால் முன்னதை நடக்கவிடார்

மானமுள்ளோர்! நாணமுள்ளோர்!

கட்டுபடுவார்கள் கண்ணியவான்கள்!

கட்டுபடாதவர்கள் காமுகர்கள்! -அவர்

பிரிவினைவாதம் என்பார், பிரித்தாழும் சூழ்ச்சி என்பார்!

மீன் என்பார் மீனவர் என்பார் எறும்பென்பார்!

பிதற்றித் திரியும் பித்தர் அவர்

பேச்செல்லாம் வெறும் பேச்சு!

கல்யாணத்திற்கும் கற்பழிப்பிற்கும் வேறுபாடு

காமுகருக்கு தெரியாது! கயவருக்கும் தெரியாது!

மானமுள்ளவர்களுக்கே தெரியும்! மறுப்பது யார்?

இடஒதுக்கீட்டிற்க்கும் இனவெறிக்கும்

இடையிலான வேறுபாடும்

இதயமுள்ளவர்களுக்கே தெரியும்!

இதயமற்றோர் ஏர்பரோ? ஏளனம் செய்வர்!

இட ஒதுக்கீடு சமூக நீதிக்கான நுழைவாயில்!

இனவெறி சமர்களத்திற்க்கான நுழைவாயில்!

இனவெறியில் வீழ்சியில் தொடங்கும்

இட ஒதுக்கீடு இயல்பாய் மாற்றங்களை கொணரும்!

இலங்கை இனவெறிக்கு இலக்கணம்

இருவேறு இனங்களில் ஒன்று ஒன்றை அழித்தது!

இனவெறியால் அழிந்துபோன இனங்கள்

இவ்வுலகில் எத்தனை! எத்தனை!

இவையறியா போதையர்

இயம்பிடுவர் இதுவும் அதுவும் ஒன்றென்றே!

வேடிக்கை மனிதருக்கு வேறுபாடு புரியாதோ!

அல்ல! அல்ல! புரிந்தும் புரியாதவர் போல் நடிப்பார்!

வேடிக்கை நிகழ்சி என்பார்

வேடிக்கை என்பார் - பின்னர்

வேதனையில் தள்ளிடுவார் நம்மை!

விழிப்புடன் இருப்பாய் தமிழா!

இங்குள்ள வேறுபாடுகள்

இதயமற்றவரின் சூழ்ச்சியால்

இனத்திற்குள்ளேயே பிரிவினையானது!

இருவரை மோதவிட்டே

இருந்தனை ஏய்த்து பிழைத்து சிலர்

இறைவன் பெயரால் இன்னல்கள் பல தந்து

இறவனின் விதி இதுவே என்று

இவர் சோடித்த கதைகளை

பரப்பி விட்டு பாழ்படுத்தினர் மானுடத்தை!

இன்றும் தொடர்கின்றார்! தொடரட்டும்!

விழித்திருந்தால் விரட்டிடலாம்!

இங்கு இனவெறி தலை தூக்கியிருந்தால்

இக்கயவர்கள் இல்லாமல் போயிருப்பர்

இயல்பாய் தமிழருக்கு இரக்ககுணம்

இருந்ததனால் இருக்கின்றார் இன்னும்

இன்றும் அவரை அழிக்காமல்! இருப்பதுவும்

இட ஒதுக்கீடு இருப்பதுவும் - அவர்

ஆதிக்கம் தகர்பதற்கே! அழிப்பதற்கல்ல!

அனைவரையும் சமண்படுத்துவதற்க்கே!

அங்கேயும் அது தொடங்கும்!

அது இனவெறியின் வீழ்சியில் தொடங்கும்!

பொது எதிரியை வீழ்த்தும் வரை

பொருத்திரு தமிழா! புயலென எழு தமிழா!

பொது எதிரியை வீழ்த்த!

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.