Jump to content
  • entries
    27
  • comments
    0
  • views
    47953

யாராச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளிஸ்


PSIVARAJAKSM

647 views

வணக்கம் நண்பர்களே,

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். யாரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைச்சுகிட்டிருந்தேன். இந்த பக்கத்தை பார்த்த பிறகுதான் எனக்குள் தோன்றியது இங்கிருக்கும் நண்பர்களால் என் சந்தேகத்தை போக்க முடியும்னு? என்ன செய்வீங்களா?

எங்க தாத்தாவுக்கு பல பையங்க அவங்க எல்லோரும் ஒன்னாத்தான் குடியிருந்தாங்க யார் கண்ணு பட்டுச்சோ தெரியல இயற்க்கை சீற்றத்தால எங்க ஊர் இரண்டு பகுதியாயிடுச்சு. காலம் போய்கிட்டிருந்தது. எங்க காலத்துல அந்த பக்கம் இருந்த எங்கள் சகோதரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால ஒரே பிரச்சனை அவன் எங்கள் சகோதரனை அழிச்சுட்டுதான் மறு வேலை பார்பது நின்னுகிட்டுருந்தான். போக்கத்த எம் தம்பி என்னுகிட்ட உதவி கேட்டான். என்னால எந்த உதவியும் செய்யமுடியாத நிலையில நான் இருந்ததால, எங்க பக்கத்து வீட்டு பணக்காரங்கிட்ட என் தம்பி நிலைய சொல்லி உதவி கேட்டேன் அவனும் சரி செய்ரன்னு என் தம்பி ஊருக்கு ஆள் அனுப்பினான் அப்புரம் தான் தெரிந்தது என் பக்கத்து வீட்டு பணக்காரனும், என் தம்பிக்கு பக்கத்து வீட்டுக்காரனும் தூரத்து சொந்தம்னு. என் தம்பி ஊருக்கு போன எங்க பக்கத்து வீட்டுகரனில் ஆட்கள் எம் தம்பி குடும்பத்தையும் சின்ன பின்ன படுத்திட்டாங்க, சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளான என் தம்பி வீட்டிலிருந்து ஒரு முன்கோபி எல்லாத்துக்கும் கரணம் எங்க பக்கத்து வீட்டுக்காரன்னு நினைச்சு அவனை கொன்னுட்டு அதுக்கு தண்டனையும் அனுபவிச்சுட்டான்.

இப்பவும் என் தம்பிக்கு பெரிய பிரச்சனைதான் பக்கத்து வீட்டு காரணால அவனுக்கு எங்களை விட்டா யாரும் கிடையாது, எனவே நாங்க மீண்டும் எங்க பக்கத்து வீட்டு காரங்கட்ட உதவி கேட்டோம் அவங்க செய்யாட்டியும் பரவால்ல எங்க தம்பி பக்கத்து வீட்டுக்காரனுக்கு உதவி செய்யாமல் இருந்தாலே போதும் என் தம்பியே பாத்துக்குவான் சொல்றோம் ஆனாலும் அவங்க என் தம்பிய அழிக்கிற அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு திருப்பாச்சி அருவாவ தீட்டி அனுப்புராங்க! என்னையும் என் தம்பியோட பேசக்கூடாதுன்னு தடுத்து எந்த உதவியும் செய்யக்கூடாது என்று சொல்றாங்க!

இப்ப நான் என்ன செய்வது? என் மனசு ஓங்கி சொல்லுது என்ன இருந்தாலும் அவன் ஒந்தம்பி அவனுக்கு உதவாம அவன் எதிரிக்கு உதவி விபிடனாக இருக்க போரியா? ஒந்தம்பிய கைவிட்டு எட்டப்பனா இருக்க போறியா? உனக்கு உதவுதாக சொல்லி உன் தம்பியின் பக்கத்துவீட்டுக்காரனுக்கு அன்னைக்கும் இன்னைக்கும் உதவிய உன் குலத் துரோகிய நம்பி உன் குடும்பத்தை அழிக்க போறியான்னு என் மனசு கிடந்து அடிச்சுக்குது!

யாராச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளிஸ்......

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.