விதி வலியது வெறென்ன சொல்ல?
உதவிக்கு சென்று ஆங்கே
உரிமை பறித்து உடைமை சிதைப்பது
ஆதரவு நீக்கி அடிமை கொள்வது
அமைதிக் கான்பதின் மான்போ!
உதவிக்கு சென்றவரே உயிர் பறித்த
உண்மையை உணர்ந்ததால் தானே
திராவிட தலைவர்களி திரும்பியும் பார்க்கவில்லை
தீங்கிழைத்து திரும்பியவரை அன்று
அவனும் பொருப்பானா? தம் மனைவி
மகளை கரகரவென தான் இழுத்து
கற்பழித்த கொடுமைதனை! கமுகரின் செய்கையினை!
கனவிலும் மறப்பானா! கலங்கியது கண்கள்!
விம்மியழுதாலும் வேகம் குறைந்திடுமோ!
"என்ன கொடுமை அது" எப்படி பொருத்திருப்பான்?
மறத்துபோய் மரமாக சிலையாக நிற்ப்பானா?
தன்னை அழித்து தரணியில் தழ்த்தியவனை
ஏவியது யார்? எப்படிப் பொருப்பான் அவன்!
நெட்டை மரங்களன நின்று புலம்புவானா?
வேங்கையவன் வீருகொண்டெழுவானா?
வெகுண்டெழுந்தான்! வீழ்த்திவிட்டான்!
விதி வலியது வெறென்ன சொல்ல?
விதியால் நிகழ்ந்த ஒன்றை
விரும்பியே மனதில் கொண்டு
தவறிய தம்பியை தள்ளுவதும் முறையோ!
மாறாத எதிரியவன் மனந்துனிந்தே
தள்ளுகின்றான் பசிப்பிணியில்! பாழ் கிணற்றில்!
கூறாத துன்ப கொடுங்கிணற்றில்!
ஆறாது அரற்றி அழுகின்றான் தம்பி!
புண்ணாக புழுங்காதோ எம் நெஞ்சம்!
தம்பி தவித்திருக்க ஆறுதல் கொடுக்கா
அண்னன் வளம்பெற வாழ்ந்தென் பயண்?
ஆனாலும் அந்தோ தூரேகியாக கருணா!
நிதி பணம் பதவி பகட்டுக்காக?
நாமும் இருப்பதுவோ அவ்வாறு?
நவிழுங்கள் தோழர்களே?
0 Comments
Recommended Comments
There are no comments to display.