காலத்தின் கட்டாயமகிறது.
வணக்கம் தோழர்களே,
நண்பர்கள் சிலர் இங்கு ஈழப்பிரச்சனை தொடர்பான தாங்களது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர் அவற்றில் சிலவற்றுக்கு எம்மால் ஆன சில பதில்களை தர விழைகிறேன்.
1) தமிழ் ஈழத்தை நோக்கிய போராட்டத்தில் சிலர் ஓரங்கட்டப்படுகின்றனர் அல்லது ஒழித்து கட்டப்படுகின்றனர்.
எமது கருத்து
ஆண்டாண்டு காலமாக சிங்கள பேரினவாதத்தால் சொல்லொனா கொடுமைகளுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளான இரு இனம் அதிலிருந்து விடுபட நிமிரும்போது பல குழுக்களாக இருப்பது அவர்களை பலவீனப்படுத்தும் என்பது மறுக்க முடியாத எதார்த்தமான உண்மை அதை நன்குணர்ந்த சிங்கள பேரினினவாதம் தமிழர்களிடையே போட்டியாளர்களையும் குழுக்களையும் வளர்க்கிறது அதற்க்கு அவர்கள் பல பல வழிகளை கையாள்கின்றனர். எனவேதான் சுயநல நோக்கோடு தலைத்தூக்கும் தீய சக்திகள் ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுகிறார்கள். நோக்கம் நிறைவேறும் வரை அது காலத்தின் கட்டாயமகிறது.
ஏன் அவரே தலைவராக இருக்கிறார்? அவர் சொகுசாக வாழ்ந்துகொண்டு மற்றவர்களை ஏன் முன்னனில் நிறுத்துகிறார்? அவர்கள் பிள்ளைகள் அயல் நாட்டில் படிக்கிறார்கள்?
பதில்
இது அங்குள்ள பிரச்சனைகள் அதன் நிவர்த்திக்கான தேவைகள் மற்றும் அதை நோக்கி பயணிப்பவர்களின் மீது போதுமான தகவல் அல்லது அவர்கள் தொடர்பான அறிவு அல்லது ஞானம் இல்லாதவர்களின் குற்றச்சாட்டு.
முதன் முதலில் சிங்கள பேரினவதிகளால் தமிழ் குழந்தைகள் கொதிக்கும் தார்ச்சட்டியில் போட்டு கொல்லப்பட்டபோது தனியொருவராகதான் அவர் ஆயுதம் ஏந்தினார் அதனால் தான் இன்று தமிழர்களுக்கு தமிழனத்திற்க்கு ஒரு நாடு அமைவதற்க்கான அரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒரு நோக்கத்திற்க்காக போராடும் இனத்தில் இயக்கத்தில் தலைமை குறித்து முடிவு செய்ய வேண்டியது நாமோ, கருத்துக்கள நண்பர்களோ, இந்திய அரசோ சிங்கள அரசோ அல்ல அங்குள்ள மக்களின் விடியலுக்காக தமது உயிரை தத்தம் செய்யும் போராளிகள் அதை முடிவு செய்வார்கள். துரோகம் தலைத்தூக்கினால் அதையும் துடைத்தெரிவார்கள்.
அவர் குழந்தைகள் அயல் நாட்டில் படித்தார்கள், ஆம் படித்தார்கள் அவர்கள்தான் இன்று வான் படையை வழிநடத்துகிறார்கள். அவர் பிள்ளைகள் மட்டுமல்ல தமிழ் ஈழத்திற்க்கான போராட்ட வேள்வித்தீயில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் குழந்தைகளுக்கும் அங்கு அறிவுச்சோலைகளும் செஞ்சோலைகளும் அதிகம் ஆகவேதான் அயோக்கிய சிங்கள வெறியர்களின் விமான குண்டு வீச்சில் அடிக்கடி ஆளகின்றன செஞ்சோலைகள். செஞ்சோலையில் ஓடிய செங்குருதியை பார்த்த பிறகும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவது வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது.
அங்கு போரில் காயம் படும் வீரர்களுக்கும் அவர்தம் குழந்தைகளும் உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு கவனிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு உலகின் சிறப்பான அனைத்தும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களுடன் மனிதபிமானமுள்ள வீரம் செரிந்த நடைமுறை அரசு அங்கு நடக்கிறது.
அங்கு மக்கள் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிரமாக உள்ளது? அகதிகளாக மக்கள் உள்ளனர்.
பதில்:
ஆம் அவர்கள் வாழ்க்கை நடத்த சிரமப்படுகிறார்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வாழ்கிறார்கள் அதற்க்கு காரணம் தனது சொந்த நாட்டிலேயே விமானங்களின் வழியாக குண்டு வீசும் கொண்றொழிக்கும் சிங்கள பேரினவாதம். போய் அரசாண்டால் பினம் தின்னாதா சாத்திரங்கள்? இது போன்ற எத்தனை எத்தனையோ சிக்கல்களை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் சமாளித்தும் இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்காக அவர்களின் சகோதரர்கள் போராளிகள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதற்க்கு வேண்டிய ஆதரவையும் பங்களிப்பையும் அவர்கள் செய்கிறார்கள் அதற்க்கு நிதர்சனமான சான்றுதான் மக்கள் படை கட்டுமாணம்.
இன்று கஷ்டப் பட்டாலும் மீண்டும் சிங்கள பேரினவாதத்தில் சிக்காமல் சிக்கி சீரழியாமல் சிறிது கஷ்டங்களை சகித்துக் கொண்டால் வரும் காலம் வளமானதாக இருக்கும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்! அறிந்திருப்பதுதான் அவர்களுக்கும் நல்லது
0 Comments
Recommended Comments
There are no comments to display.