நவீனன் 0 Posted May 2, 2018 பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் May 2, 2018 பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் முன்னிரவு வேளையில் ‘உதயன்’ செய்தி நிறுவனத்தில் தலைமையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். முன்னாள் விற்பனை முகாமையாளர் ஜோர்ஜ் சாகாயதாஸ், விநியோகப் பகுதிப் பணியாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவருமே அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பணியாளர்கள் படுகாயமடைந்தனர். உதயனின் சொத்துக்கள் பலவும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு இரையாக்கப்பட்டு பெரும் பொருள் சேதம் கொடுக்கப்பட்டது. http://newuthayan.com/story/89649.html Link to comment