நெடுந்தீவு குதிரைகள்.
நெடுந்தீவு குதிரைகள்.
ஐரோப்பிய காலனித்துவ காலத்தின் சான்றுகளை முன்வைக்கும் ஓர் இயற்கை மரபுரிமை எச்சங்களாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட இவை மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன. இது அக்காலகட்டத்தில் குதிரைகள் ஏராளமாக இருந்ததற்கு சான்று பகர்கின்றன.
இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு மட்டக்குதிரைகள் , கோவேறுகழுதைகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன.
நெடுந்தீவு நிலத்தின் கடந்தகாலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்கும் இக்குதிரைகள் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இங்கே இருக்கும் மூத்த பிரஜைகள் தங்களுடைய தீவு பற்றிய ஞாபகங்களில் குதிரைகள் பற்றிய ஏராளம் கதைகளைப்பகிர்கின்றனர்.
தீவில் குதிரைகளை அடைத்து வைப்பதற்கான லாயங்களும் , குதிரைகளை பராமரிக்கும் மூலிகை தொட்டிகளும் இன்னும் காணப்படுகின்றன. இங்கிருக்கும் பெருக்க மரம் குதிரைகளின் உணவு , மூலிகைத்தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். சிலர் வெடியரசன் காலத்தில் இங்கே சுதேசிகளும் குதிரைகளை பயன்படுத்தினார்கள் என்றும் , குதிரைகள் வர்த்தகம் , பொதி சுமத்தல் , போர் என்பவற்றுக்கு பயன்படுத்த பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பியருக்கு பிறகு நிலச்சுவாந்தார்கள் , சில குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்காக குதிரைகளை பராமரித்து பயன்படுத்தி வந்ததாக அறிகின்றோம்.அத்தோடு அரசாங்கம் இக்குதிரைகள் திரியும் தரவைகள் , காடுகள் , மேய்சல் நிலங்களை அடையாளப்படுத்தி அவற்றை “விலங்குகள் சரணாலயமாக ” அறிவித்துள்ளது . அத்தோடு பிரதேச சபை , கடற்படை , மற்றும் மக்கள் இணைந்து தொட்டிகள் நீர் நிலைகளை அமைத்து இக்குதிரைகள் பசி தாகத்தால் இறப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்கின்றனர். குதிரைகளை பிடிப்பத் வளர்ப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது எனினும் பரம்பரையாக குதிரைகளை கொண்டவர்கள் அவற்றை பராமரிக்கின்றனர்.
நெடுந்தீவின் மரபுக்கதைகளை ஞாபகமூட்டும் உயிரினங்களாகவும் தங்களுடைய அடையாளமாகவும் மக்கள் இவற்றை பார்க்கின்றனர் . ஆதாலால் நெடுந்தீவின் தொன்மங்களுகுள் இவற்றையும் தொன்ம யாத்திரை பதிவு செய்கின்றது.
போதிய பராமரிப்பும் விழிப்புணர்வும் இன்மையால் இவை இப்போது அழியும் அபாயத்தில் உள்ளன. இனப்பெருக்கம் செய்ய முடியாதவையாக இஅவை இருப்பதனால் இவற்றிகு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றது .
- 1