Jump to content

அம்மா.



28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யுமாறு தமிழர் ஒன்றுகூட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. இதுவரை பொறுத்தது போதும். இனியும் பொறுப்பதற்கில்லை என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தமிழ் மக்களால் இதுவும் முடியும். தமிழ் மக்களால் மட்டுமே இப்படி முடியும் என்று காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. வந்தாரையே வாழ வைக்கும் தமிழக மக்கள் தம்மை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்களா என்ன? தம்மை நம்பியவர்களை தமிழினம் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. நேற்று அற்புதம்மாளின் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள். தன் கைத் தொலைபேசியை திருடு போய்விட்டதே என்றாலும் தன்னைவிட யாரோ வறுமை நிலையில் இருக்கிறாரே என்றுதான் அவர் பரிதாபப்பட்டிருக்கிறார். அந்த தொலைபேசியில் தன் மகன் படத்தை போட்டு வைத்திருந்ததாகவும் விரக்தி வரும்போதெல்லாம் மகன் படத்தை பார்த்து உற்சாகம் பெற்று வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். போதும். அந்த அற்புதமான தாய் இதவரை அடைந்த துயரம் போதும். இனி நேரிலேயே தன் மகன் முகத்தை இறக்கும்வரை பார்த்து ஆறுதல் பெறட்டும். தமிழர்களே! ஒன்று சேருங்கள் ஒருமித்து குரல் கொடுங்கள் ஏழு தமிழர் விடுதலை பெறட்டும். இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!

  • Like 1

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.