All Activity
- Past hour
-
புலவர் started following மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
-
வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
-
தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?- 83 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம். பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
-
ஊழல் மோசடி கைத்து வழக்குக்கு பயந்து தான் வீஜேப்பி கூட பலர் கூட்டனி வைச்சு இருக்கினம்.............அது மெகா கூட்டனி கிடையாது மானம் கெட்ட கூட்டனிகள் ரீடிவி தினகரன் சில வருடங்களுக்கு முதல் வீஜேப்பிய பற்றி பேசினதை யாரும் எளிதில் மறந்து இருக்க மாட்டினம்..............மானஸ்தன் சரத்துகுமார் வீஜேப்பி கூட்டனி வைக்கிற கட்சியுடன் சமத்துவ கட்சி ஒரு போதும் கூட்டனி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்டனிக்கு போன கோழை சீமானிடம் இருக்கும் துணிவும் கொண்ட கொள்கையும் தமிழ் நாட்டில் வேறு எந்த அரசியல் வாதிகளிடம் இருக்கு🙏🙏🙏...............இதுவரை அண்ணன் சீமானை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய கட்சிகளும் கூட்டனிக்கு கூப்பிட்டதை ஞாபக படுத்தனும் சிலருக்கு புலவர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்பவும் தனித்து தான் போட்டி............அவர் முதலமைச்சர் ஆகலாம் ஆகாம போகலாம் ஆனால் ஒரு தமிழன் கட்சி ஆரம்பிச்சு ஒருதர் கூடவும் கூட்டனி வைக்காம அரசியல் செய்தார் என்று வரலாறு சொல்லும்🥰................அந்த கட்சியில் இருக்கும் திறமையான நபர்கள் அண்ணன் சீமானுக்கு பிறக்கு அதே வழியில் அதே நேர்மையோடு கட்சியை வழி நடத்துவுனம் அதற்க்கு இன்னும் நீண்ட வருடம் இருக்கு................................... 200ரூபாய் கொத்தடிமைகளை விட யாழில் அண்ணன் சீமான் விடையத்தில் குரங்கு சேட்டை செய்ய சிலர் இருக்கினம் ஹா ஹா அவைய பார்க்க எனக்கு பரிதாகமாய் இருக்கு😁😜....................
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
nedukkalapoovan replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார். தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு. அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது. பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல. கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை. ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல. அண்ணரும் சாட்சி. மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம். உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட. இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம். இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ.- 83 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
அந்தத் தும்புத் தடியின் சின்னத்தை எதற்கு பாஜக முடக்கியது எதற்கு திமுக அதற்கு வாகன வசதி கொடுத்து ஊக்குவித்தது.சீமானினின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில்7வீதம். ஏனைய கட்சிகளின் துல்லியமான வாக்கு சதவுpதம் என்று கூற முடியுமா?திமுகவின் வாக்கு வங்கி என்ன? அதேபோல் காங்கிரஸ்>விசிக>மதிமுக>ஒருகாலத்தில் எதிர்க்கட்சியாக விருந்த கம்மினியூஸ்ட்டுகளின் துல்லியாமான வாக்கு சதவீதம் என்ன? யாராலும் கூற முடியுமா?
-
எல்லாரும் மூன்று கூட்டணியில் இருந்தால், தனியே ஒரு தும்புதடி நிண்டாலும் அதுதான் நாலாவது பெரிய கட்சி. கட்சி ஆரம்பித்து இரெண்டு தசாப்தம் ஆக போகுது. ஒரு பிள்ளை பிறந்திருந்தா…இப்ப யூனி செகண்ட் இயர்ல இருக்கும்🤣. ஒரு உள்ளாட்ட்சி சபை சீட் கூட இல்லை என நினைக்கிறேன். அண்ணனின் சொத்து மதிப்பை தவிர வேறு ஏதும் வளரவில்லை என்பதே உண்மை. இதே இயந்திரத்தை பாவித்துத்தான் காங்கிரசை அகற்றி பிஜெபி ஆட்சிக்கும் வந்தது.
-
இதுக்கேன் மன்னிப்பு 😀
-
தவறுக்கு மன்னிக்கனுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால கட்டத்தில் சொன்னது என்று......................
-
அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும்.
-
நான் அண்ணன் சீமானை ஆதரிக்க முழு காரணம் எம் தேசிய தலைவர் மேல் இருந்த பற்றின் காரணமாய்............2009க்குபிறக்கு பல தடைகளை தாண்டி இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தலைவர பற்றி எவளவோ சொல்லி இருக்கிறார் இவர் மட்டும் இல்லை என்றால் கலைஞர் செய்த வேதனைகளை கொடுமைகளை சாதனை என்று மாற்றி சொல்லி இருப்பினம் திராவிட கும்பல்............காலமும் நேரமும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வருடம் கழித்து இந்த உலகில் என்னனென்ன மாற்றம் வரும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..................சீனன் பாதி இலங்கையை வாங்கி விட்டான் மீதி இலங்கையை தன் வசப் படுத்தினால் அதுயாருக்கு ஆவத்து..............இதோ பிரபாகரனின் மகள் வந்து விட்டா ஈழத்து இளவரசியின் தோட்ட சிங்கள இராணுவத்தின் மீது பாயும் என்று சொன்ன காசி ஆனந்தனை ஏன் இன்னும் மத்திய அரசு அவரை கைது செய்ய வில்லை.................இப்படி பல சொல்லிட்டு போகலாம் கால நீர் ஓட்டத்தில் மாற்றங்கள் மாறி கொண்டே இருக்கும்...............
-
2013 மார்ச் மாதத்தில் திமுக விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இணையவன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஒருபுறம் பெலாருஸ் அதிபர் புடினுக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்க மறுபுறம் பெலாருஸ் டெலிகிராம் தளமான NEXTA இந்தத் தாக்குதல் தொடர்பான இன்னொரு தலையிடியை புடினுக்குக் கொடுக்கின்றது. மேலதிக செய்திகள் வரட்டும் பார்க்கலாம். 🙂 -
மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள். தமிழ்நாடு அரசு ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும் செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும் இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும் இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும் இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும் தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும் ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு. மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா சீமான் மத்திய அரசையும் வாக்கு எண்ணும் மெசினையும் குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது
-
இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.