Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14881
  • Joined

  • Days Won

    166

நிழலி last won the day on December 1 2023

நிழலி had the most liked content!

About நிழலி

  • Birthday 12/15/1974

Profile Information

  • Gender
    Male
  • Location
    பனி வனம்
  • Interests
    காமமும் கலவியும்

Recent Profile Visitors

நிழலி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

7.6k

Reputation

  1. 2019 இல் கர் நாடகாவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபி, 2023 இல் அங்கு காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்தது. அதாவது பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது இடம்பெற்ற தேர்தலில் கூட, பிஜேபி தோற்றது என் ஞாபகம்.
  2. இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
  3. என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.
  4. வைகோ வின் கேடுகெட்ட அரசியலால் உயிரிழந்த இன்னுமொரு உயிர். அஞ்சலிகள்!
  5. ஆனால் தாம் பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு கொள்கையை கைக்கொள்கின்றவர்கள் என்பர்!
  6. நல்ல நேர்மறையான, காய்தல் உவத்தல் இன்றிய ஒரு பயணக் கட்டுரை. உள்ளதை உள்ளபடி சொல்லுகின்றீர்கள். இலங்கை இப்போதைக்கு நல்லா உள்ளது என்பதுவும், யாழ்ப்பாணம் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறுகின்றது என்பதுவும் சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய தகவல்களாக இங்கு இருக்கும் என நினைக்கின்றேன். மிகவும் சரியான கூற்று(கள்)! சிங்கள பெளத்தம் ஒரு போதும் தன் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. ஆனால், இன்றைய உலக போக்கினாலும், பொருளாதார நிலையாலும் அதனால் முன்னரைப் போல தீவிர நிலையை அடைய முடியாமல் தேங்கி நிற்கின்றது.
  7. வணக்கம், தாரளமாக தமிழக அரசியல் , தேர்தல் செய்திகளை பகிருங்கள். ஆனால், அரசியல் கட்சி ஒன்றின், அது எந்தக் கட்சியாயினும், அதன் பிரச்சார காணொளிகள், படங்கள், பிரச்சார மீம்ஸ்கள் போன்றனவற்றை இணைக்காதீர்கள். யாழின் விதிகளில் இவை தொடர்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நன்றி
  8. மிக மகிழ்ச்சியான செய்தி. இனியாவது அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெற வேண்டும். முருகனுக்கு லண்டன் வீசா கிடைக்குமா என்பது சந்தேகமே. பொதுவாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள், கொலைக் குற்றம் ஒன்றில் குற்றவாளியா நீதிமன்றத்தால் தீர்க்கப்பளிக்கப்பட்டவர்களுக்கு வீசா வழங்குவது கிடையாது. அவர் ஒரு அரசின் ராஜதந்திரியாக / அமைச்சராக இருப்பினும் கூட, வீசா வழங்க தயக்கம் காட்டுவன.
  9. ஓம். சின்ன வயதில் இதனை புனில் / புணில் என்றே அழைத்த ஞாபகம். இவை நடக்கும் போது, தத்தித் தத்தித் தான் நடக்கும். சிறு வயதில் இருக்கும் போது அம்மா இதற்கு ஒரு கதை சொல்லுவா. இராமர் பாலம் கட்டும் போது, இந்தக் குருவி தான் அதிகம் வேலை செய்ததாம். , அணில் ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருந்ததாம். இராமர் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க வரும் போது, அணில் தானே தான் எல்லா வேலையும் செய்தது என்றும், இந்தக் குருவி வேலை ஒன்றும் செய்யாமல் மண்ணுக்குள் புரண்டு விளையாடினது என்றும் பொய் சொல்லிச்சாம். எனவே, இராமர் அணிலின் முதுகில் "நீ நல்ல பிள்ளை" என்று சொல்லி, தன் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தாராம். அதனால் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாம். இந்தக் குருவியைப் பார்த்து, "நீ வேலை ஒன்றும் செய்யாததால் ஒழுங்காக நடக்க முடியாமல் தத்தித் தத்தி தான் நடப்பாய்" என்று சாபம் கொடுத்தாராம். அதனால் தான் தத்தி தத்தி நடக்குதாம். 😀
  10. தமிழ அரசியலில் இருக்கும் மோசமான பிறவிகளுக்குள் வைகோ வும் ஒருவர். திமுக வில் இருந்து வைகோ பிரிந்த தருணம் பல தொண்டர்கள் தீக்குளித்தனர். அவர்களின் அந்த தியாகத்தில் மலர்ந்தது மதிமுக. பின், அத்தனை தியாகங்களையும் குழி தோண்டிப் புதைத்து விட்டே மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார். எந்த வாரிசு அரசியலை வெறுத்து வெளியேறினாரா, அதே அரசியலை தன் மகனை முன் நிறுத்தியதன் மூலம் அவரே செய்தார். இன்று இன்னொருவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு இருக்கின்றார். இறுதி யுத்த காலத்தில், போராளிகளுக்கு மருத்துவ வசதி தொடர்பாக தொடர்பு கொள்ளும் போது, நாட் கணக்கில் வழக்கத்தில் இருந்த தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்தவர் இந்த போலி ஈழ ஆதரவாளர். தற்கொலைகளின் மூலம் அரசியல் நடாத்தும் ஒரு மோசமான அரசியல்வாதி வைகோ.
  11. புணில் என்ற குருவியையா பிலினி என்று அழைக்கின்றீர்கள்? புணில் தத்தித் தத்தி நடக்கும் குருவி...
  12. சுண்டிக்குளி மகளிர் பாடசாலையும், வேம்படி மகளீர் பாடசாலையும் இருக்கும் வரைக்கும் வடக்கில் சிட்டுக் குருவிகள் அழியாது என்று சுவாமி நிழலியானந்தா அவர்கள் அருளியுள்ளார்.
  13. பின்வரும்பின்னூட்டம் ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் கண்டேன். "திருகோணமலை மக்கள் எங்க போனாலும் கோணேசரைத் தூக்கிக் கொண்டு போவது போல், யாழ்ப்பாணத்தார் முருகனை தூக்கித் திரிவினமாம். " வீடியோ முழுதும், முருகனின் கோயில்கள்! இதை உருவாக்கிய அருளானந்தம் ஜீவதர்சன், என் அப்பாவின் தங்கை மகன்.
  14. இவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தந்தையைப் போல், ஏழைகளின் மனதில் நிலைக்க கூடிய வழிகளில் வாழ்ந்தாராயின் சாதிப்பார்.
  15. இதில் கனிமொழி, ஆ.ராசா, செல்வ கணபதி ஆகியோருக்கு தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மிகுதி பேரில் யார் டெபாசிட் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவலாம். ... விஜயகாந்தின் மகனைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.