Jump to content

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )


Recommended Posts

மனசில்லாத காசும் காசில்லாத மனசும் !

உறவுகளே... இது ஒரு யதார்த்தமான காதல்கதை. பலருடைய வாழ்க்கையில் இது நடந்திருக்கலாம். ஆனால் "காதல்" என்றால் என்ன? என்பதனை விளக்க இந்தக் கதை!

கொஞ்சம் நீளமான கதையாக இருக்கும் என்பதனால் 2 அல்லது 3 பாகங்களாக எழுதலாம் என நினைத்து எழுதுகின்றேன்.

காதல் ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியமைக்கின்றது என்பதும்.... உண்மையான காதல் என்றால் என்ன என்பதற்குமான..... ஒரு கதை.

(யாவும் கற்பனையல்ல...)

[01]

ல்ல நித்திரையில் இருந்தவனுக்கு லைற் வெளிச்சம் கண்ணில அடிக்க... "என்னடி இந்த நேரத்தில.... வந்து படு! குளிருதடி.... ஏசியைக் கொஞ்சம் குறையன்! என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?" என்று

அரைக்கண்ணால பார்த்து.... நித்திரை முறியாமல் சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு,

அவள் சாறிகட்டி வெளிக்கிட்டுக்கொண்டிருந்தது தெரியவேயில்லை!

வழமையாக அவள் ஆறரைக்குத்தான் எழும்புவாள். எழும்பவிடாமல் இன்னும் அரை மணித்தியாலம் மினக்கெடுத்திப்போட்டுத்தான் விடுதலை குடுக்கிறவன் இவன். இன்றைக்கு அவள் முன்னதாகவே எழும்ப ஒரு காரணம் இருந்தது. அவளின் நண்பி ஒருத்தியின் திருமணம் அன்றைக்கு. நல்ல நேரம் காலை 8.09 மணிக்கு என்று கலியாணா கார்ட்டிலயே அடிச்சிருந்தவையள் என்று அவளுக்கு நல்ல ஞாபகம்!.எந்த சாறியை உடுக்கோணும் என்று ஒரு கிழமைக்கு முன்னரே யோசிச்சு வச்சிருந்தவள்... இப்ப அந்த சாறியைத்தான் உடுத்திக்கொண்டிருந்தாள்.

பொம்பிளையள் விஷேசத்துக்கு வெளிக்கிட்டால் விடியும் என்று ஒரு கதைக்கு சொல்வார்கள். இங்கும் அதுதான் நடந்தது. அவள் சாறியை சுத்தி முடியுறதுக்குள் விடிஞ்சு போய் அவன் வழமையாக எழும்பும் நேரம் ஆகிவிட்டது.

அவனுக்கு எழும்பின உடனேயே தேத்தண்ணி வேணும். பல்லுத்தீட்டாமல் தன்ர மனிசி போட்டுக்குடுத்த தேத்தண்ணியைக் குடிச்சாப் பிறகுதான் அவனுக்கு மற்ற வேலையெல்லாம் ஓடும்!

தன்னிரண்டு கைவிரல்களைக் கோர்த்து... நெட்டி முறிச்சு கொட்டாவி விட்டு முடிஞ்ச கையோட.... அவளின்ர பெயரைத்தான் முனகினபடியே உச்சரிப்பான்! "அம்மு... தேத்தண்ணி!" என்று முனகவும் அவள் சாறி பிளிற்ஸ் பிடிச்சு உள்ளுக்குள் செருகவும் சரியாக இருந்தது.

அவன் அவளை "அம்முக்குட்டி" என்றுதான் கூப்பிடுவான். அமுதினிக்கும் அவனுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் நடந்திருந்தது. அவர்களது ஆரம்பம் ஆரம்பத்தில் அப்பிடி இப்படி இருந்தாலும்... இப்போது நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது!

கலியாணத்துக்கு சாறி உடுத்திக் கொண்டிருந்தவளுக்கு.... அவன் "தேத்தண்ணி"" என்று சிணுங்கி மெத்தையில் அவள் படுத்திருந்த இடத்தினை தடவிக்கொண்டிருந்தபோதுதான்.... பதறத் தொடங்கினாள்.

"இஞ்சருங்கோ... உங்களுக்கு நேற்றைக்கே சொன்னனானல்லோ.... எழும்புங்கோ!" அவனின் கைகளைப் பிடிச்சிழுத்து எழுப்பிவிட்டாள் அமுதினி.

எழும்பியவனுக்கு அன்றைய காலை விடிஞ்சமாதிரியே இருக்கவில்லை. எழும்பும்போது பக்கத்தில மனிசியும் இல்ல... சூடான தேத்தண்ணியும் இல்ல!

கண்ணை முழுசா முளிச்சுப் பார்த்தவனுக்கு அவள் சாறி உடுத்தி நின்றதை பார்த்ததுந்தான்... அவள் நேற்றுச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

"இஞ்சருங்கோ...பிளிற்ஸ் எல்லாத்தயும் ஒருக்காப் பாருங்கோ! சரியா இருக்கே?" என்றவளை ஏற இறங்கப் பார்த்தவன்... "முதல்ல குடு!" என்றான்.

"என்னத்தைக் கேக்கிறியள்... " என்று இழுத்தபடியே...... "நேரம் போச்சுது விளையாடுறியளே!?" என்று கேட்டாள் அமுதினி!

"சூடா ஒரு தேத்தண்ணியையாவது போட்டுக் குடு ராசாத்தி! இப்பவே உன்ர ஃபிரண்டை வாழ்த்த ஆரம்பிக்கிறன்" என்று சொல்ல..... அவனின்ர கடுப்பு என்ன? என அவளுக்கு விளங்கவும், தேத்தண்ணி போட்டுக் குடுக்கிற சாட்டில சமையலறைப் பக்கம் போனாள். போனவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

நல்ல சூடா அவன் விரும்பிக் குடிக்கிறமாதி லைற்றா மைலோ கலந்து கொண்டுவந்து கொடுத்தவள்... "இஞ்சருங்கோ! இந்த பிளிற்ஸ் எல்லாம் ஓகேதானே...? ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோவன்" என்றாள்.

எப்பவுமே அவள் சாறி உடுக்கும்போது... அழகா பிளிற்ஸ் பிடிச்சுவிட்டு விடுறது இவன்தான். உண்மையிலேயே அழகாக பிடிச்சு விடுவான். இன்றைக்கு அவள் அழகாக உடுத்தியிருந்தாலும்.... ஏனோ, வழமைபோல அவனிடமே கேட்டாள். அவன் தேத்தண்ணியை பக்கத்தில இருந்த மேசையில வைச்சிட்டு, பிளிற்ஸ் பிடிக்க ஆரம்பிச்சான்... ஏதோ ஒரு காரணத்தோடு! :)

தொடரும்....

[02]

சாறி பிளிற்ஸ் பிடிச்சுக் கொண்டிருந்தவன் அதனை சட்டென்று நிப்பாட்டி... "அம்முக்குட்டி...! இந்த சாறி நல்லாவே இல்லம்மா. கழட்டிட்டு வேற கட்டு" என்று சொல்லவும் அவளுக்கு கோபம்தான் வந்தது.

"ஏனப்பா இது நல்லாத்தானே இருக்கு! இதுக்கு என்ன குறைச்சல்? போன தீபாவளிக்கு நீங்கள்தானே எடுத்துத் தந்தனீங்கள். இப்ப இது நல்லா இல்லையோ? நீங்கள் ஏன் சொல்லுறியள் எண்டு எனக்குத் தெரியும்.... போய் குளிச்சு வெளிக்கிடுங்கோ!" என்றாள்... செல்லமான அதட்டலுடன்!

"இல்லம்மா... நான் அதுக்கு சொல்லல ... இந்தா இதைக் கட்டு" என்று சொல்லிக்கொண்டே, அவளுக்கு பிடிச்ச 'பீச் 'கலரில் நேற்றே அவன் வாங்கி வைத்திருந்த ஒரு அழகான புதுப் புடைவையை அவளிடம் நீட்டினான்.

அவளுக்கு அது இன்ப அதிர்ச்சியாய் இருந்தாலும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல்... "அடேய் புருஷா...! சாறி மட்டும் இருந்தால் பத்தாது, சாறி பிளெவ்ஸ் எல்லாம் வேணும். இப்ப அதை தைச்சுக்கொண்டு இருக்கேலுமே....?" என்று சொல்லிக்கொண்டே அந்த புடவைப் பெட்டியை திறந்தவளுக்கு தைத்தபடி இருந்த சாறி பிளெவ்ஸைக் கண்டதும்.... அளவு எல்லாம் எப்படி....? என்ற ஆச்சரியத்தோடு அவனைப் பார்க்க,

"ஏன்டிமா! எனக்குத் தெரியாதா என் செல்லப் பெண்டாட்டியோட அளவெல்லாம்..." என சிரிச்சுக்கொண்டே சொன்னபடி.... அவளை அப்படியே தன்பக்கம் இழுத்து அணைத்தான்.

de.jpg

அவனது அணைப்பில் அவள் தன்னை மறந்தவளாய்... தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவள் கைகளில் இருந்த புடைவை கைதவறி கீழே விழ.... சுயநினைவுக்கு வந்தவள். "டேய் என் செல்லப் புருஷா... நேரம் போகுதடா! அச்சாப் பிள்ளையாய் குளிச்சிட்டு வெளிக்கிடுங்கோ!" என்று கொஞ்சும் குரலில் செல்லமாய் சொன்னவளின் செவ்விதழில் ஒரு கடி கடிச்சிட்டு.... குளித்து வெளிக்கிடப் போனான்.

அவன் குடித்து மீதம் வைத்திருந்த தேநீரை கொஞ்சம் குடித்தவள் தன் கணவனின் அன்பினைப்போல் அதுவும் இனிப்பதாய் மனதுக்குள் நினைத்தபடி... அந்த புதுப் புடைவையை உடுத்திகொண்டு அவளும் தயாரானாள் தன் சிநேகிதியின் திருமணத்திற்கு செல்வதற்கு.

அவளை இறக்கி உள்ளுக்குள் போகச் சொல்லிவிட்டு தன் காரினை பார்க் பண்ணிவிட்டு திருமண மண்டபத்தை நோக்கி நடந்தபடியே அவனது திருமணம் நடந்த விதத்தை நினைத்துப் பார்த்தான்.

தன் முழுமனத்தோடு தான் அன்று அந்த இடத்தில் இருக்கவில்லை என்பதும் தன் அம்மாவின், உறவுகளின் வற்புறுத்தல்களினாலேயே தன் திருமணம் நடந்தது என்பதனையும் இப்பொழுது நினைக்கும் பொழுதும்... மறக்க நினைக்கும் பழைய நினைவுகளால் அவனது மனது கனத்தது.

அதற்குள் அவன் மண்டபத்தினை நெருங்கிவிடவும் மேளதாள வாத்தியங்களின் சத்தத்தில் அவனது சிந்தனைகள் கலைந்துவிட மண்ணடபத்தினுள் நுழைந்து அமுதினியைத் தேடினான் .

தேடியவன் கண்களுக்கு அவள் தென்படவில்லை. அப்பொழுது ஒரு அழகான சின்னப் பொண்ணு துள்ளிக்கொண்டு ஓடி அவனருகில் வர அந்த சின்னப் பெண்ணை அழைத்து தன் பர்ஸை திறந்து அதனுள் இருந்த அமுதினியின் போட்டோவைக் காட்டி "இந்த அக்காவை பாத்தனீங்களா?" எனக் கேட்க அந்த சுட்டிப்பெண் 'ஆமா' என்பதற்கு அடையாளமாக மேலுங்கீழும் தலையை ஆட்டி தன் கையை மண்டபத்திற்குள் இருந்த ஒரு அறையை நோக்கி காட்டிவிட்டு துள்ளியபடியே ஓடிப்போனாள்.

அறையின் வாசலில் 'மணப்பெண் அலங்கரிக்கும் அறை' என்பது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இவள் தன் சிநேகிதியோட சங்கமமாயிட்டாள். இனி அவளுக்கு தாலிகட்டி மாப்பிள்ளையிட்ட தாரைவார்த்துக் குடுத்திட்டுதான் வருவாள்.... என நினைத்தபடியே மீண்டும் மண்டபத்துக்கு வெளியே வந்தவனுக்கு ஒரு சிகரெட் குடிக்க வேணும்போல் இருந்திச்சு.

பற்றவைத்துவிட்டு புகையை ஊதிக்கொண்டிருந்தவன்... "எக்ஸ்சியூஸ் மீ....ப்ளீஸ் லைற்றர் கிடைக்குமா?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பியவனுக்கு.... ஓர் ஆச்சரியம் காத்திருந்தது!

அவன் முன்னால் நின்றது... அவனுடைய உற்ற நண்பனாக இருந்த விமல். "அடேய் நீயோடா?" என்று சொல்லிக்கொண்டே அவனை கட்டிப்பிடித்து தன் சந்தோசத்தை பகிர்ந்துகொண்டான்.

அவன் விமலைப் பார்த்து கதைத்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. விமல் கனடாவிலை இருக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தான். ஆனால் விமலோடு மீண்டும் தொடர்பு எடுக்க வேண்டும் என விரும்பினாலும் அவன் அதற்கு முயற்சிக்காமல் இருந்தான். அதற்கும் ஏதோ ஒரு காரணம் இருந்தது

"எப்பிடியடா இருக்கிறாய்? கலியாணம் ஆச்சுதாம் என்று கேள்விப்பட்டன்...ஏன்டா எனக்கெல்லாம் சொல்லவே இல்லை???" என்று விமல் தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கும்போது... இஞ்சருங்கோ என்ற குரல்வர அவர்களைநோக்கி நடந்து வந்த அமுதினியின் பக்கம் இருவரும் பார்த்தார்கள்.

பக்கத்தில் வந்தவள்... "அந்த ஜுவெல் பொக்ஸைக் கொஞ்சம் குடுங்கோ!" எனக் கேட்க... தன் பையிலிருந்து அதை எடுத்து அவளிடம் நீட்டினான். "ஏன் வெளியில நிக்கிறியள்? உள்ளுக்க வந்து இருங்கோவன்" என்றவளிடம்... "கொஞ்ச நேரத்தில வாறன்மா...நீங்கள் போங்கோ" என்றான் அவன்.

அவள் அங்கிருந்து விலகவும்.... "யார் மச்சான் இது?" என விமல் கேட்க... அவன் தன்னுடைய மனைவி என்பதனை சொல்லவும்... விமலின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

அப்ப.... அஞ்சலி???? என்ன நடந்தது??? என அதிர்ச்சியுடன் கேட்டான் விமல்.

விமலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே.... இன்னொரு சிகரெட்டை மீண்டும் பற்றவைத்துக்கொண்டான்.

அவனுடைய பதிலுக்காய் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் விமல்.....

srk-smoking.jpg

தொடரும்....

[03]

"அதெல்லாம் கிடக்கட்டும்... கனடாவிலயிருந்து இங்க ஏன் வந்தனீ ?! ஹொலிடேயோடா?" என தொடங்கினான் அவன்.

அவன் இப்படிக் கதைக்கத் தொடங்கியதும்... விமலுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"டேய் லூசா... நான் உன்னை என்ன கேக்கிறன்? நீ என்ன சொல்லுறாய்?

விசர்க்கதை கதைச்சு.... மனுசனுக்கு விசர் ஏத்தாமல்.... விசயத்தை சொல்லு " என்றான் விமல் கோபமாக.

"என்னத்தை சொல்லச் சொல்லுறாய் இப்ப...??? நான் சாகக்கிடந்ததை சொல்லவா? இல்லாட்டி...நாலு காசுக்கு வக்கில்லாதவன் எண்டு கேவலப்பட்டதை சொல்லவா? எதையடா சொல்லச் சொல்லுறாய்? நான் அஞ்சலியை உண்மையா காதலிச்சதை தவிர, எந்தத் தப்பையும் பண்ணலைடா....!".

அதை சொல்லும்போதே அவனது கண்கள் கலங்கியதை கவனித்த விமல்.... இவனோடு ஆறுதலாய்த்தான் பேசவேண்டும் என முடிவெடுத்தவனாய்....

"இட்ஸ் ஓகே மச்சான்.... என்ர தம்பி ஒருத்தன்தான் இந்தக் கலியாணத்தோட மாப்பிள்ளை. அதுதான் நான் இங்க வந்தன். ஆனா அதைவிட நான் உன்ன இங்க சந்திச்சது பெரிய விஷயம். சந்தோசமா இருக்கு மச்சான்! இண்டைக்கு இரவு நான் உன்னோட ஆறுதலாய்க் கதைக்கோணும். ரைம் இருக்குமா?" என்று கேட்டான் விமல்.

"ஓகே மச்சான்... நானும் உன்னோட நிறையக் கதைக்கோணும்! வா உள்ளுக்க போவம். உன்னைத் தேடப் போறாங்கள்!" என சொல்லியபடியே விமலின் தோளில் உரிமையுடன் தன் கையைப் போட்டபடி மண்டபத்துக்குள் நடந்தான் அவன்.

விமல்.............. அவனின் உற்ற நண்பன் என்று சொல்வதைவிட உயிருக்குயிரான நண்பன் என்று சொல்லலாம். இற்றைக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் விமலும் அவனும் எப்பவுமே ஒன்றாய்த்தான் இருப்பார்கள். விமல் அவனின் ஊர்ப் பெடியன் என்றாலும்... விமலுடன் அவன் மிக நெருக்கமான நண்பனானது கொழும்பில்தான்.

அவனுக்கும் விமலுக்குமான சிந்தனைகளும் செயல்களும் எப்பவுமே ஒரேமாதிரியே இருக்கும். அதனை தங்களுக்குள் அவர்களே பலதடவைகள் உணர்ந்திருக்கின்றார்கள்.

2002 இல் யாழில் இருந்து கொழும்புக்குள் முதன்முறையாக நுழைகின்றான் அவன். முகமாலை,ஓமந்தை, வவுனியா, அனுராதபுரம்,புத்தளம்,சிலாபம்,நீர்கொழும்பு,கட்டுநாயக்கா,கொழும்பு என அவன் வாழ்வில் புதுசு புதுசான ஊரெல்லாத்தையும் பார்க்கத்தொடங்கிய கொழும்புப் பயணம் அது. அந்தப் பயணம் தன் வாழக்கையையே மாற்றி எழுதும் என்று... அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

63734-interesting-architecture-colombo-s

அவன் ஒரு சராசரிக் குடும்பத்தில் பிறந்தவன். வீட்டுக்கு மூத்த பிள்ளை. ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. நல்லா படிச்சுக்கொண்டிருந்தவன்தான். இன்ஜினியர் ஆகோணும் என்ற இலக்கில் இருந்தவனுக்கு அதை எட்ட முடியவில்லை. அந்தக் கவலையிலேயே அவனது தந்தை ஹார்ட் அட்டாக்கில் அவசரமாக பொய்ச் சேர அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கிடைத்த யாழ் பல்கலைக்கழக அனுமதியையும் உதறிவிட்டு வேற்று வழியை யோசித்தான்.

இனி உழைச்சுத்தான் ஆகோணும். இனி படிக்க எல்லாம் ஏலாது! காசும் இருந்து... நேரம் கிடைச்சால் சீமா கீமா என்று எதையாவது செய்வம் என நினைத்திருந்தான். அதுக்குள்ள சொந்தக்காரர்களின் பெண்பார்க்கும் படலங்களும் வெளிநாட்டிலிருந்து வர ஆரம்பித்தன. வெறும் இருபது வயசு. அவனுக்கு அது பிடிக்கவில்லை என்ற காரணம்கூட இன்றும் அவர்களுடன் உறவில்லாத நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொந்தங்களும் அவனை அப்பொழுதே கைவிட்டு விட்டனர்.

'கொழும்பு' அவனை வாட்டியெடுத்தது. நிறையவே கஷ்டப்பட்டான். ஒரு ஒபிஸில வேலை..... மீதி நேரத்தில ரியூசன் குடுக்கிறது. இப்பிடியே போன காலங்களில் அவனோடு கூடவே தங்கியிருந்தது விமல்தான். ஒவ்வொருநாள் இரவும் ஒரேயொரு பார்சல் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டுவந்து ரெண்டு பேருமாக சாப்பிடுவார்கள். சந்தோஷம் என்றாலும் சரி.... கவலை என்றாலும் சரி அவர்கள் தங்களுக்குள் முழுமையாக பங்குபோட்டுக் கொண்டார்கள்.

தங்களுக்கு சம்பளமோ... அல்லது வேறு காசோ வந்தால் தங்களது அறையில் பொதுவான ஒரு இடத்தில் வைப்பார்கள். யாருக்கு எப்ப வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற புரிந்துணர்வுடன் அந்த பழக்கம் தொடர்ந்தது. சாப்பிடக்கூட காசு இல்லை என்ற பிரச்சினை வராமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களின் நட்பு.... பணம் என்பதனையும் தாண்டிய புரிதலுடன் கூடியதாக இருந்தது. சாப்பிடக் காசில்லாட்டியும் என்னதான் இல்லாவிட்டாலும் இரண்டுபேரும் பம்பலடித்தபடியே சந்தோசமாகவே தூங்குவார்கள் தினமும்!

இப்படியாக கடந்த ஒரு நாளின் இராப்பொழுதில்தான் 'அஞ்சலி' என்ற ஒரு தேவதையின் கதையை முதன்முறையாக விமலுக்கு சொல்ல ஆரம்பித்தான்.

அவன் ரியூசன் கொடுக்கப் போகின்ற இடத்தில் அவனிடம் பயின்ற மாணவியாகத்தான் அஞ்சலி அறிமுகமானாள் அவனுக்கு. 16 வயதுதான் அவளுக்கு. அப்போது இவனுக்கு 21.

அவள் பார்ப்பதற்கு தேவதை போலத்தான் இருப்பாள்.இல்லையில்லை.... அவள் தேவதையேதான்! அவளின் முகத்தைப் பார்த்தால்... கோபமோ,கவலையோ அல்லது களைப்போ இருந்தால் அத்தனையும் சட்டென்று மறைந்துபோகும்.ரொம்பவும் மென்மையானவள்.

Tamil-Actress-Anjali-Stills.jpg

தான் ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் இருக்கின்றேன் என்பதுவும் தனக்குரிய பல கடமைகள் இருக்கின்றது என்பதுவும் அறிந்தவனாய் அவன் எதையுமே மனதில் நினைத்துக்கொள்ளவில்லை. அவனது சுபாவம் கொஞ்சம் கண்டிப்பானதாகவே தன் மாணவர்களிடம் காட்டிக்கொண்டான்.

அப்படி அவன் நடந்தபோதும் அஞ்சலியின் நடவடிக்கைகள்,பார்வைகள் தன்மேல் வித்தியாசமாக விழுவதை கவனித்தவனுக்கு அவளின் அந்த பார்வைகளுக்கும் புன்னகைக்கும் முன்னால்.... தான் ஒரு ஆசிரியன் என்பதனையும் மறந்து... தன் மனதினை பறிகொடுக்க ஆரம்பித்தான் அவளிடம்.

அவன் விட்ட முதலாவது தவறு அங்கிருந்துதான் ஆரம்பித்தது....!

அவன் அவளைக் காதலிக்கிறான் என்று உணர்ந்த அந்தநாட்களின் ஒரு நாட்பொழுதுதான்...

விமலும் அவனும் முதன்முறையாக அஞ்சலி பற்றி பேசிகொண்டிருந்த அந்த இராப்பொழுது!

"டேய் விமல்...!" என்றவனிடம் "என்னடா சொல்லு மச்சி!" என்றான் விமல்.

"நான் அஞ்சலி என்ற பிள்ளையை விரும்பிறன்டா..." என்று சட்டென சொன்னவனை வினோதமாக பார்த்தான் விமல்.

"என்ன லவ்வோ.... உனக்கோ ...? ஜோக்கடிக்காத மச்சி...." விமல் சிரித்தான்.

"டேய் நான் சீரியஸா சொல்லுறன் ... நீ சிரிக்கிறியே????" என்று விமலை ஒரு மாதிரி கவலையுடன் பார்த்தான் .

"சரி... அத விடு...! யார் பிள்ளை....?

அஞ்செலியோ ஆறெலியோ..... என்ன பெயர் சொன்னனீ...?" என்று கொஞ்சம் நக்கலடித்தபடியே விமல் கேட்க...

"அஞ்சலி மச்சான்....அது என்னிட்ட ரியூசன் படிக்கிற பிள்ளை. என்னை அவளும் விரும்பிற மாதிரி இருக்குது. அதுதான்....." என்று இழுத்தான் அவன்.

"என்ன.... உன்னிட்ட ரியூசன் படிக்கிற பிள்ளையோ???? கிழிஞ்சுது கிருஸ்ணகிரி!!! " விமலுக்கு அஞ்சலி கதையைக் கேட்ட உடனயே அஞ்சுங்கெட்டு அறிவுங்கெட்டுப் போச்சுது.

எழும்பி உட்கார்ந்த விமல்......" டேய் ஏன்டா இந்த வேண்டாத வேலை. வந்தமா... வேலையைப் பார்த்தமா...? என்று இல்லாமல் ....... என்ர கடவுளே!

சரி... ஒண்டுக்கும் யோசிக்காதை...! நான் நாளைக்கு கதைக்கிறன். இப்ப பேசாமல் படுடா!" என்று சொல்லிவிட்டு அவன் படுத்திட்டான்.

இவனுக்கு தூக்கமே வரவில்லை. தான் செய்வது சரியா? தவறா?? என்று ஒரு வினா இவனுக்குள். அதனை விட அவன் கடமைகள் பல இருந்தன.

அவனது வயசும் மனசும் அது சரி என்று சொன்னாலும் ... அவனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

சரி முதலில, அந்தப் பிள்ளையும் என்னை முழுசா விரும்புதா? இல்லையா? என்று பார்ப்பம். அதுக்குப் பிறகுதானே மிச்சப்பிரச்சினை... என்று தன்னைத்தானே ஆறுதற்படுத்திக் கொண்டவன், தன் கண்களை மூடி தூங்க முயன்றான்.

அவனது அன்றைய அலுப்பும், உடல் களைப்பும் அவனை அறியாமலேயே தூக்கத்தை வரவழைக்க.... அப்படியே அயர்ந்து போனவனின் கனாக் கண்களுக்கு முதன்முதலாய் கலர்க் கனவுகள் வரத்தொடங்கின...!

அவனை அறியாமலேயே தன் வாழ்வை மாற்றப்போகும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தான் அவன்.

தொடரும்....

[04]

அடுத்த நாள் காலை... வழமைபோலவே விடிந்தது வேலைக்குப் போகும் அவசரங்களோடு.

தன் சேர்ட் பட்டன்களை மாட்டியபடியே கேட்டான் விமல்....

"டேய்! அந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் என்டனீ...? அஞ்சலிதானே...? விசாரிக்கிறன்...!

பின்னேரம் எத்தினை மணிக்கு உன்ர ரியூசன் இருக்கு? நான் வேலை முடிஞ்ச கையோட அந்தப்பக்கம் வாறன் .

அந்தப் பிள்ளையை ஒருக்காப் பாக்கோணும். ஓகேதானே.. ? என்ன பேச்சு மூச்சையே காணேல.. !?"

"சரி ஓகேடா ....!!! ஆறு மணிக்குத்தான் கிளாஸ் இருக்கு. முடிஞ்சளவுக்கும் வெள்ளனைக்கு வா.

இல்லாட்டில்.... கிளாஸ் முடியப் பார். சிலவேளை அந்தப் பிள்ளையின்ர அம்மா காரில வந்து கூட்டிக்கொண்டு போவா. எதுக்கும் ஒரு போன் பண்ணு எனக்கு. அடையாளம் காட்ட நான் வேணுமல்லோ... " என்று கொஞ்சம் உரிமையோடு அவன் சொல்ல...

"ம்ம்ம்ம்.... சரி சரி வாறன்.....!" என்று சொல்லிக்கொண்டே விமலும் வேலைக்கு கிளம்பினான்.

அன்று பின்னேரம்...

கிளாஸ் முடிஞ்ச கையோட, விமலுக்கு தன் தேவதையைக் காட்டிய ஆறுதலோடு அவனது அபிப்பிராயம் என்ன எனக் கேட்க ஆவலாய்...

"என்ன மச்சான்... என்ன சொல்லுறாய்? ஓகேதானே...?" என்று வினவினான் விமலிடம்.

"எல்லாம் சரிடா! ஆனால்.......... நான் சொல்லுறதை நீ கேப்பியோ தெரியாது...!?"

பேசாம இந்த எண்ணங்களை விடு!!!

அதுதான் உனக்கு நல்லது !" என்று சொன்ன விமலைப் பார்த்து ...

"ஏன்டா என்ன விசயம்....???" என்று பதைபதைத்த மனதோடு கேட்டான்.

"நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டன். அந்தப்பிள்ளை வசதியா வாழுற பிள்ளை. இப்பதான் அது O/L படிக்குது. அதுக்கு என்ன யோசிக்கத் தெரியும்?

அந்தப்பிள்ளை O/L பெயில் விட்டாலும்.... டொக்டர்,இஞ்ஜினியர் மாப்பிள்ளையைத்தான் பார்க்கக்கூடிய குடும்பம் அது.

அதோட... நீ படிப்பிக்கிற பிள்ளை. இதெல்லாம் உனக்கு சரிவராது என்று படுது. இதுக்கு மேல உன்ர இஷ்டம் மச்சான்! முடிஞ்சவரைக்கும் இந்த கிளாஸை கெதியில நிப்பாட்டு...!" என்று

கொஞ்சம் கண்டிப்புடனேயே சொன்னான் விமல்.

இவனுக்கோ அவன் சொன்னதையெல்லாம் கேட்டு.... தூக்கிவாரிப் போட்டது.

இப்ப என்ன பண்ணுறது? என்று யோசித்தவாறே ... "சரிடா! நான் பார்க்கிறன்...." என்று அரை மனத்துடன் சொன்னவன்

"வாடா போய் ஒரு இஞ்சிப் பிளேன்ரி குடிப்பம்..." என்று சொல்லிக்கொண்டே ஒரு தேத்தண்ணிக் கடைக்குள் நுழைந்தார்கள்.

4239503-two-tea-cups-on-a-saucer-with-su

எப்பவுமே தன் நண்பனின் அறிவுரையை இவன் கேட்பான். அதேபோல, இவனது அறிவுரையை அவனும் கேட்பான். அந்தவகையில் விமலின் இந்த அறிவுரையையும் அரைமனதோடேனும் ஏற்றுக்கொண்டவன்.... தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தான்.

வாற மாசம் O/L எக்ஸாம் . இன்னும் ஒரு கிழமைக்குள்ள மீதமுள்ள விசயங்களை முடிச்சிட்டு அந்த கிளாஸுக்கு முற்றுப்புள்ளி வைச்சிடவேணும் என்று நினைத்தவனுக்கு.... அஞ்சலியின் பார்வைகளும் புன்னகைகளும் இடையிடையே வந்து போயின. தடுமாறித் தயங்கினான்!

ஆனாலும் திடமான முடிவெடுத்தவன்போல தன்னை தயார் படுத்திக்கொண்டான்... பெயரளவில்!

அடுத்த நாள் வகுப்பு முடியும்பொழுதில்...

அவன் தான் சொல்லவந்ததை சொல்லத் தொடங்கினான்.

classroom.jpg?w=500&h=375

"பிள்ளையள்....! வாற மாசம் உங்களுக்கு 'எக்ஸாம்' ... அதுக்கு முதல் நீங்கள் மற்ற பாடங்களிலும் றிவிஷன் செய்யவேண்டி இருக்கும். அதனால... வாற கிழமையோட என்னுடைய கிளாஸை முடிப்பம் எண்டு நினைக்கிறன். உங்களுக்கு முடிக்க வேண்டியதெல்லாமே அதுக்குள்ள முடிச்சிடுவன்...என சொல்லி முடிச்சிட்டு ... அஞ்சலி இருந்த பக்கமாக தன் பார்வையை திருப்பினான்.

எப்பவுமே முழுமதிபோல் சிரிக்கும் அந்த முகத்தை வேறு பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள்.

அவன் தடுமாறித் தளுதளுத்த குரலில் அப்போது சொன்ன விஷயத்தின் அர்த்தங்கள் அவளுக்கு புரிந்திருக்க வேண்டும் என்பதுபோல அவளது முகத்திலும் ஏதோ ஒரு வாட்டம் தெரிந்தது.

அன்றைய வகுப்பு முடிஞ்சதும்.... தன் மனதினைக் கட்டுப்படுத்தியவாறு அங்கிருந்து விலகினான்.

அன்றிரவு அவனால் தூங்க முடியவில்லை. அவன் மனதில் பெரிய பாறாங்கல் ஒன்றை வைத்ததைப்போன்று உணர்ந்தான்.

அவள் மனதில் என்ன உள்ளது? என்பதை அறியக்கூட முடியவில்லையே....? என்ற ஏக்கம் அவனுக்குள். ஆனாலும் விமல் சொன்ன விடயங்கள் அவனை அதற்குமேல் போகாமல் தடுத்துக்கொண்டிருந்தன.

அவனிடம் ஒரு பழக்கம்.... சந்தோசமாக இருந்தாலும்சரி... கவலையாக இருந்தாலும்சரி, எதையாவது ஒரு கடதாசியில் எழுதித் தீர்த்துவிடுவான். அன்றும் அதுதான் அவனுக்கு தேவைப்பட்டது.

ஒரு பேப்பரை எடுத்தவன்... கவிதை மாதிரி ஏதோ ஒன்றை எழுத ஆரம்பித்தான். "நீ ஒரு பொய்க்காரி" என்று தலைப்பிட்டவன்... அவளை எப்பிடியெல்லாம் வரிகளால் திட்டித்தீர்க்க முடியுமோ.. அந்தளவுக்கு எழுதிவிட்டு, பக்கத்தில் இருந்த புத்தகத்தினுள் வைத்துவிட்டு ஏதோவொரு திருப்தியுடன் தூங்கிவிட்டான்.

இறுதிநாள் வகுப்பு.... (26 நவம்பர் 2003)

அன்று அஞ்சலியின் கண்கள் சிவந்தே இருந்தன. இவன் தான் படிப்பித்தலில் கவனமாயிருப்பதாய் 'நடித்துக்கொண்டிருந்தான்'. அவன் செய்ய வேண்டிய எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தபின் ... பிள்ளையள் உங்களுக்கு என் பாடத்தில ஏதாவது டவுட் இருந்தால் என்ன நேரமென்றாலும் போன் பண்ணுங்கோ! நான் எக்ஸ்பிளைன் பண்ணுறன்.

பரீட்சையில் சித்தியடைய எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்... ஓல் த பெஸ்ட்! குட் லக்! என்று ஒரு போமாலிற்றிக்கு சொன்னவன்... உங்களில யாருக்காவது இன்னும் நான் படிப்பிச்சதில ஏதாவது கிளியர் பண்ணவேணும் என்றால் நில்லுங்கோ.... நான் கையோட விளங்கப்படுத்திறன் என்று சொல்லிவிட்டு...

இதுதான் கடைசி கிளாஸ்! றிசல்ட் வந்தாப்பிறகு சொல்ல நினைக்கிற ஆக்கள் சொல்லுங்கோ என்றுவிட்டு .... அவன் அதுவரை நேரமும் கிறுக்கிக்கொண்டிருந்த வெள்ளைப்பலகையை துடைத்தபின் திரும்பி, தான் கையில் கொண்டுவந்த புத்தகத்தினை தேடியவனுக்கு...

எல்லோரும் சென்றபின்னரும் அங்கு உட்கார்ந்திருந்த இருவரைப் பார்த்ததும் அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

அங்கு அவன் கொண்டுவந்திருந்த புத்தகத்தினை கைகளால் புரட்டியபடி சிவந்த கண்களுடன் அஞ்சலி. அவளுக்குப் பக்கத்தில் அவளது அன்பான தோழி றிஷானா. அவனுக்கு விமல் எப்படி நல்ல நண்பனோ அப்படியே அஞ்சலிக்கும் அந்த முஸ்லிம் நண்பி றிஷானா.

அவர்களை உற்றுப் பார்த்தவனுக்கு அதைவிட அதிர்ச்சி... அவன் அன்றிரவு எழுதிய "நீ ஒரு பொய்க்காரி" என்ற கவிதைத்தாள் அஞ்சலியின் கைகளில் இருந்தது.

அவனுக்கு அன்றைக்கு இருந்த மனக்குழப்பம் அவனுக்குள் தடுமாற்றத்தினை உண்டுபண்ணி அந்த கவிதை இருந்த புத்தகத்தினையும் அவள் பக்கமாய் மறந்துபோய் வைக்க வைத்துவிட்டதே என நொந்தபடியே...

இது விதியா இல்லை சதியா? என்று தெரியாமல் முழித்தபடி... அவர்களை நெருங்கினான்.

அஞ்சலி, றிஷானா என்ன விஷயம்? ஏதாவது டவுட்டோ?

எனக்கு இல்லை சேர்... இவளுக்குத்தான் என்னவோ டவுட்டாம்!..... என்று அஞ்சலி பக்கமாக கையைக் காட்டினாள் றிஷானா.

அஞ்சலி.... என்னமா? என்ன டவுட்..? சொல்லுங்கோ...! என்று அவன் சொன்னதுதான் தாமதம்.....

அஞ்சலி விம்மி விம்மி அழத் தொடங்கினாள்......

தொடரும்...

[05]

அவள் விம்மியழத் தொடங்கியதும் இவனுக்கு என்ன செய்வதென்று ஒன்றுமே புரியவில்லை. ஏன் அழுகிறாள்....? என்ற மனவோட்டத்தோடு றிஷானாவை பார்த்தான்.

"சேர்.... அவள் நேத்தையில இருந்தே அழுதுகொண்டுதான் இருக்கிறாள். நீங்கள் இண்டைக்குத்தான் கடைசிக் கிளாஸ் எண்டு சொன்னதும் அவளுக்கு............." அதற்குமேல் றிஷானா பேசவில்லை.

றிஷானா சொன்னதிலிருந்து அவனுக்கு புரிந்தாலும் அவனது அந்தக் கவிதையும் அவளை ரொம்பவும் பாதித்திருக்கின்றது என்பதனை உணர்ந்தவன்,

"என்னாச்சு அஞ்சலி...? ஏன் அழுறீங்கள்...???" ரொம்ப மென்மையாக ஆதரவுடன் அவன் கேட்க,

தலையைக் குனிந்து அழுதுகொண்டிருந்தவள்... நிமிர்ந்து அவனைப் பார்த்து,

விம்மியபடியே அந்த கவிதைத்தாளைக் காட்டி....

"என்ன சேர் இது....? நான் உங்களை அவ்வளவு கஷ்டப்படுத்திட்டனா? நான் உங்களை விரும்பிறது தப்பா....?? வார்த்தைகள் குழைய கேட்டுவிட்டு .... தொடர்ந்து அழுதாள்.

"அஞ்சலி...! நான் உங்களுக்கு படிப்பிக்கிற ரீச்சர். எப்பிடி.......??? இது எல்லாத்தையும் மறந்திட்டு... படிப்பில கவனம் செலுத்துங்கோ. எக்ஸாம் வேற வருது....!" என்று தொடர்ந்தவன்...... என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தான்.

"முதலில, எக்ஸாமை நல்லபடியா எழுதுங்கோ... அதுக்குப் பிறகு இதப்பற்றி கதைப்பம். முதலில் அழுவதை நிப்பாட்டுங்கோ!" என்று அவன் சொல்ல....

அவள் தன் கண்களை துப்பட்டாவால் துடைத்தவள்... அந்த கவிதைத் தாளை தன் கொப்பிக்குள் வைத்தபின்....

அவனது முகத்தை ஒரு முறை அமைதியாகப் பார்த்து விட்டு, எழுந்து நடந்து சென்றவளின் பின்னால் றிஷானாவும் தொடர்ந்தாள்.

வெளியேறும் வாசலிற்குப் போனவள்... மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவளின்

ஆழமான பார்வைக்கு முன்னால்.... அவனாலும் திருப்பி புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

23774291kajal-agarwal-awesome-stills-009

ஒரு கோடித்தரம் "ஐ லவ் யு" என்று சொல்லிவிட்டுச் சென்றதைப் போல இருந்தது... அவளது பார்வையும் புன்னகையும்.

மீண்டும் ஒருமுறை தன்னோடு புன்னகைத்துக் கொண்டான்.

அவன் வாழ்நாளில்... இறுதியாக எடுத்த வகுப்பு அன்றைய வகுப்புத்தான் என்று முடிவெடுத்தான்.

(அதற்குப் பிறகு அவன் ரியூசன் குடுக்கிறதையே முற்றாக விட்டுவிட்டான் )

அன்று, தானொரு வித்தியாசமான, அழகான உலகத்தில் இருப்பதுபோல,

காதல் வந்தால்... லட்சக்கணக்கில பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும் என்பார்களே... அதைப்போல, மனதுக்குள் சந்தோசமாக உணர்ந்தாலும்....

விமலிடம் போய் எப்பிடிச் சொல்லுறது இந்த விஷயத்தை என்று, கொஞ்சம் தயங்கி நின்றான்.

தன்னுடைய செல்போனை ஜீன்ஸ் பொக்கற்றிலிருந்து எடுத்தவன் விமலுக்கு கோல் பண்ணி...

"எங்கையடா நிக்கிறாய்? ........... சரி சரி... அப்பிடியே வெள்ளவத்தை பீச் சைட்டுக்கு வா! நானும் வந்து கொண்டிருக்கிறன்" என்றான்

5441322299_b813d03935_z.jpg

வெள்ளைவத்தை கடற்கரை, அந்த தாளைமரங்கள், மாலைச் சூரியனின் பொன்னிற வெளிச்சம்... இதமான கடற்காற்று .... அழகான ரம்மியமான சூழ்நிலையை குலைப்பதாய்... அடிக்கடி வந்து போற புகையிரதங்களின் சட சட சத்தம்... அவர்களின் கொழும்பு வாழ்க்கையின் அதிகப்படியான மாலை நேரங்கள் .... இந்தக் கடற்கரையில்தான் களிந்திருந்தன.

எப்பவுமே வழமையாக உட்காரும் இடத்தடியில்.... ஆளுக்கொரு 'லயன் லாகர்' போத்தலும் இறால் வடையும் கையுமாக வந்து உட்கார்ந்தனர்.

எப்பிடி தொடங்கிறது என்று யோசிச்சவன்... முடக் முடக் என்று பியரை வாயில விட...

"என்னடா... லவ் சக்சஸ் ஆயிட்டுது போல...? " என விமல் பட்டென்று கேட்டதும்..... அவனுக்கு வாய்க்குள்ளால போன பியர் மூக்கால வாற அளவுக்கு பிரக்கடிச்சுது.

வாய் மூக்கால வடிஞ்ச பியரை தன் செர்ட் கொலரால துடைச்சுக்கொண்டு.... "எப்பிடி உனக்குத் தெரியும் மச்சான்...??? என ஆச்சரியத்தோடு விமலைப் பார்த்துக் கேட்க,.

"இதுக்கெல்லம் வெத்திலையில மைபோட்டே பாப்பாங்கள்...? நீ போத்தல் வாங்கும்போதே.... பிடிச்சிட்டன் ,

சேருக்கு ஏதோ ஸ்பெஷல் எண்டு... " என சிரித்தபடியே சொன்னான் விமல்.

"ஓமடா மச்சான்..." என்று, அங்கு நடந்தது அனைத்தையும் விமலிடம் சொன்னான்.

"அவள் அழுததை பார்க்க பாவமா இருந்திச்சுதடா..." என பீலிங்கோட சொல்லிக்கொண்டே திருப்பியும்

முடக் முடக் கென்று பியரை வாய்க்குள் விட...

"என்ன மச்சான்... இப்பதான் ஆரம்பிச்சிருக்கு..... அதுக்குள்ள எல்லா பீலிங் சீனையும் ஓட்டி முடிச்சிடாதை!

இனி அடிக்கடி பியர் வாங்கித் தருவாய். என்ர பாடு ஓகேதான் என நக்கலடித்தான் விமல்.

சிரிச்சுக்கொண்டிருந்தவன்... கொஞ்சம் சீரியஸாகி, "மச்சான் நான் சொல்லச்சொல்ல கேட்காமல்...

'நான் லவ் பண்ணித்தான் தீருவன்' என்று வெளிக்கிட்டாய்."

"இனிமேல் உன்ர இஷ்டம். இந்த இழவு விழுந்த லவ்வுகளாலதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

கவனமா நட. அதுக்காண்டி ரொம்ப யோசிக்காத!

என்ர தங்கச்சியை நானும் சுகம் கேட்டதா சொல்லி விடு... "என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

"ஓகே மச்சான்... எல்லாம் நல்லபடியா பாத்துக்கொள்ளுறன். இப்பதானே ஆரம்பிச்சிருக்கிறம்.

பிறகுவாற சிக்கலுகளை பிறகு பாப்பம்டா...! " என்று நம்பிக்கையோடு சொன்னவன்.... பியர்ப் போத்தலில ஒரு வாய் வைச்சிட்டு கையிலிருந்த இறால் வடையை ஒரு கடி கடித்தான்.

Possibly-the-best-Isso-Vade-in-the-islan

"அதுசரி... லவ்பண்ண ஆரம்பிச்சிட்டியள் எண்டுறாய்... உன்ர 'கான்ட் போன்' இன்னும் றிங் பண்ணுறதைக் காணல...!!!" என விமல் திரும்பவும் தன் நக்கல் கதையை தொடங்க,

"என்ர நம்பர் அவளிட்ட இருக்கும் எண்டு நினைக்கிறன்.எல்லா ரியூசன் பிள்ளையளுக்கும் தெரியும்.

ஆனா அஞ்சலின்ர நம்பர் எனக்கு இன்னும் தெரியாது மச்சான்.

கோல் வரும்தானே பாப்பம்....! " என சீரியஸாகவே பதில் சொன்னான் அவன்.

"அதுதான்... வாத்தியார் வேலைக்கு இண்டையோட முழுக்குப் போட்டிட்டாய்தானே....

இனிமேல், சேர் கீர் என்டுற எண்ணத்தை விட்டிட்டு... புதுசா வந்திருக்கிற வேலையை ஒழுங்காப் பார்!" என

இரட்டை அர்த்தத்தோடு விமல் சொன்னது அவனுக்கு புரியவில்லை.

"புது வேலையோ... ?என்ன வேலை மச்சான்..?" என அப்பாவித்தனமாகக் கேட்டான்.

"அதுதான் ஆள் வந்திட்டுதல்லோ... லவ் உத்தியோகத்தைத்தான் பாக்கச் சொன்னனடா...!"

என விமல் சொல்லிச் சிரிக்க...

"உனக்கு எப்ப பாத்தாலும் நக்கல்தான்..."என்று சொல்லியபடி பியரை கொஞ்சம் கையிலெடுத்து விமல்மேல் தெளித்தான்.

அன்று இருவரும் ரொம்ப சந்தோசமாக இருந்தார்கள்.

"கொஞ்சம் இருடா...! நான் போய் இன்னும் ரெண்டு போத்தல் வாங்கிக்கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு

விமல் தண்டவாளத்தைத் தாண்டி பாருக்குள் நுழையவும்...

இங்கிருந்த இவனின் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள்ளிருந்து... மொபைல் போன் சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தான்... புது நம்பர்!

யாராக இருக்கும்...? என்று நினைத்தபடி, ஆன்சர் பட்டினை அமத்திக் காதில் வைத்து... "ஹலோ" என்றவனின் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.

மறுமுனையில் ..... அவனது தேவதை அஞ்சலி,

கொஞ்சும் குரலில் "ஹலோ... நான் அஞ்சலி கதைக்கிறன்" என்றாள்.

Naan-Mahan-Alla-Movie-Stills_tamikey-12.

தொடரும்...

[06]

"ஆ... சொல்லுங்கோ அஞ்சலி...!" என்றுவிட்டு... தொண்டைக்குழிக்குள் எச்சிலை விழுங்கினான்.

காதலை பார்வைகளால் வெளிப்படுத்தியபின் முதற்தடவையாக அவள் கதைக்கிறாள். அதுவும் போனில்.

இவனுக்கு கொஞ்சம் ரென்ஷனாகவே இருந்தது.

stock-photo-happy-smiling-young-man-talk

" நான் கிளாஸ்ல இருந்து வெளியாலை வந்த உடனயே போன் பண்ணவேணும் எண்டு நினைச்சனான்.

உங்கட நம்பர் றிஷானாட்ட இருந்திச்சு. ஆனா, வெளியால நான் வரைக்குள்ள... அம்மா வந்திட்டா கூட்டிக்கொண்டு போக."

"இப்பதான் அம்மா ஃபூட் சிட்டிக்கு சாமான் வாங்கப் போனவ. அப்பா பிஸ்னெஸ் விஷயமா பாங்ஹொக் போயிருக்கிறார்.

வர ஒரு கிழமை ஆகும். ரெண்டு தம்பி மாரும் இன்னும் ஈவ்னிங் கிளாஸ் முடிச்சு வரேல."

"றிஷானாவுக்கு போன் பண்ணி உங்கட நம்பரை வாங்கலாம் எண்டு நினைச்சா...

அவளின்ர போன் சுவிட்ச் ஓஃப் இல இருக்கு.

அதுக்குப் பிறகு, அம்மாவின்ர டயறியில "மற்ஸ் மாஸ்டர்" என்று கிடந்த உங்கட நம்பரை தேடிக் கண்டுபிடிச்சுத்தான் உங்களுக்கு அடிக்கிறன். அதுதான் லேட்டாய்ப் போச்சுது.....குறை நினைக்காதையுங்கோ என்ன...... " என்று

ஒரு சின்னக் குழந்தைபோல தன் செல்லக் குரலால் ஒரேயடியாக சொல்லி முடிச்சாள்.!

"அது பரவாயில்லை அஞ்சலி...! நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை.உங்களுக்கு பதினாறு வயதுதான் இப்ப. அதோட வீட்டில செல்லமா வளர்ற பிள்ளை. நான் உங்களோட ஆறுதலா நிறைய விஷயம் கதைக்கவேணும். எக்ஸாம் முடிய நேரில கதைக்கிறன்" என்று சொல்ல...

"அதுக்கு முதல் , நாளைக்கு நான் உங்களை நேரில பாக்க முடியுமா?" என்று பட்டென்று கேட்டாள் அஞ்சலி.

அவள் அப்படிக் கேட்டது... அவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும்... அவனுக்கும் அவளை நேரில் பார்க்க உள்ளூர ஆசை இருந்தது.

அதனால் அவனும் ஏன் எதற்கென்று கேட்காமல்...

"சரி அஞ்சலி...பாக்கிறன். ஆனா எங்க... எப்ப... சந்திக்கிறது?" என்று கேட்டான்.

"நானும் றிஷானாவும் வருவம். எங்க எத்தினை மணிக்கு எண்டிற விஷயத்தை றிஷானாவோட கதைச்சிட்டு உங்களுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிவிடுறன். வரும்போது மறக்காமல் உங்கட போட்டோ ஒண்டு கொண்டுவாங்கோ பிளீஸ்.... " என்று கெஞ்சினாள்.

"சரி எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்கோ... பாப்பம்" என்றவன், தூரத்தில் விமல் கையில் ரெண்டு பியர்போத்தலோட வாறத கவனிச்சிட்டு, "இந்த சந்தோசத்தைக் கொண்டாடுறதுக்கு இன்னும் ரெண்டு போத்தல் வாங்கோணும் போல இருக்கு" என்று மனதுக்குள் யோசிச்சுகொண்டிருக்க,

மறுமுனையில் அஞ்சலி... "அம்மா வந்திட்டா போல கிடக்கு. கார்ச் சத்தம் கேக்குது. நான் பிறகு எஸ்.எம்.எஸ் பண்ணுறன். வைக்கிறன். ரேக் கேர், பை!" என்று அவசரஅவசரமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

விமல் பக்கத்தில் வர.... இவன் சிரித்தபடி நிக்க...

"என்னப்பு...! மூஞ்சேல சந்தோசம் நிரம்பி வழியுது..!

போன் வந்திட்டுது போல... என்னவாம் உன்ர தேவதை?" என்று கேட்டுக்கொண்டே ஒரு போத்தலை அவனிடம் நீட்டினான்.

அவன் தானும் அஞ்சலியும் பேசிய விடயங்களை சொல்ல... "அப்ப இண்டைக்கு எஸ்.எம்.எஸ் வாற வரைக்கும் நித்திரைகொள்ள மாட்டாய் எண்டு சொல்லு.. " என சொல்லிச்சிரித்தான் விமல்.

"டேய் நாளைக்கு நீயும் வாவன்டா... " என விமலைப் பார்த்துக் கேட்டான் அவன்.

"ஏன்டா தனியப்போக பயமா இருக்கோ...?

சரி சரி... நேரம் கிடைச்சால் வாறன். நாளைக்கு சனிக்கிழமை, எனக்கும் லீவுதான். தங்கச்சியோட கதைச்ச மாதிரியும் இருக்கும்" என்றான் விமல்.

இருவரும் சந்தோசமாக அப்படியே பேசியபடி... பியரை குடித்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

அவனுக்கு பியர் தந்த போதையைவிட ... காதல் மயக்கமே மனதில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது.

இரவு 10 மணி...

இன்னும் எஸ்.எம்.எஸ் வரவில்லையே!!! என்ற ஏக்கத்தில் இவனுக்கு நித்திரையே வரவில்லை.

நித்திரைச் சாமியார் விமல் ஆழ்ந்த ஆனந்த சயனத்தில் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

இவன் போனை எடுத்துப் பார்ப்பதும் திருப்பி வைப்பதுமாக...

தவித்த மனதுடன் அந்த எஸ்.எம்.எஸ் வரும்... வரும்... என்று போன் மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.

l.jpg

நேரத்தைப் பார்த்தான் இரவு 10.48, ஏன் இன்னும் அனுப்பவில்லை. சிலவேளை அவளின்ர அம்மா பக்கத்தில இருப்பாவோ? படிச்சுக்கொண்டிருக்கிறாளோ..... ?

இப்பிடி ஆயிரத்தெட்டுக் காரணங்களை தனக்குத்தானே மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

"நான் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிப் பார்த்தால் என்ன?" என யோசிச்சவன்... அய்யய்யோ வேணாம்..!!! அவளின்ர அம்மா பக்கத்தில இருந்தால், மாட்டுப்பட்டு ஏதாவது பிரச்சினை ஆயிடும்... எதுக்கு வம்பு?" என்று மனதில் யோசிச்சவன் அந்த எண்ணத்தையும் கைவிட்டான்.

அவன் வாழ்நாளில் முதற்தடவையாக ஒரு எஸ்.எம்.எஸ் இன் வரவுக்காக தவமாய்த் தவமிருந்தான்.

விமல் மட்டும் தூங்காமல் விழித்திருந்தான் என்றால்.... இவனின்ர தவிப்பை பார்த்துவிட்டு நாலைஞ்சு நக்கல் கதை சொல்லியிருப்பான்.

"சரி பாப்பம்... எப்படியும் அனுப்புவாள்!வெயிட் பண்ணுவம்!" என்று முடிவெடுத்தவன், தன்ர நோக்கியா போனில் றேடியோவை ஓன் பண்ணினான்.

"தூங்காத நெஞ்சங்களை தாலாட்டும் கீதங்கள்" நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது."மலரே மெளனமா..... என்ற இனிமையான 'கர்ணா' திரைப்படப் பாடல் அவன் மனதையும் மென்மையாக வருடிக்கொண்டிருந்த பொழுது அவனது தேவதையும் தன் மெளனத்தினை கலைத்திருந்தாள்.

கைகளில் அதிர்ந்த செல்போனை ஆர்வமுடன் பார்த்தவனுக்குள் அவ்வளவு பரவசம்.

"Omega Inn -Spice & Ice, Evening 4 O'clock" என்று இருந்த அஞ்சலியின் எஸ்.எம்.எஸ் அவர்களின் நாளைய சந்திப்பினை உறுதிப்படுத்தியது.

hotel-omega-inn.jpg

அந்த சந்தோசத்துடன்...

"விமலைத் தட்டியெழுப்பி விஷயத்தை சொல்லுவம்" எண்டு நினைச்சு அவனை எழுப்ப வெளிக்கிட்டவன்...

அவன் குறட்டைவிட்டு தூங்குவதைப் பார்த்ததும், "காலையில் சொல்லுவம்" என்று நினைத்துக்கொண்டான்

எப்படா விடியும்....??? என்று காத்திருக்கத் தொடங்கியவன்...

ஒரு கட்டத்தில் தன்னை அறியாமலேயே தூங்கிப்போனான்.

வண்ண வண்ணக் கனவுகள் அவனைச் சுற்றி வட்டமிடத் தொடங்கின.

யாருமே இல்லாத ஒரு உலகத்தில் அவனும் அவனது தேவதையும் மட்டுமென...

அவனது இனிய காதல் கனவுகள் நீண்டுகொண்டு போக...

அவனதும் அஞ்சலியினதும் "காதல் பயணம்" இனிதாகவே ஆரம்பமாகின்றது.

57D12CE5631CE01576EDD41EE7F8.jpg

தொடரும்...

[07]

அவன் எதிர்பார்த்திருந்த அழகான காலை விடிகின்றது...! அன்று வழமையைவிட முன்னதாகவே எழும்பிவிட்டான். நேரத்தைப்பார்த்தான்... ஆறு மணிதான் ஆகியிருந்தது. "இன்னும் பத்து மணித்தியாலம் இருக்கே நாலு மணி ஆகுறதுக்கு" என மனதுக்குள் சலித்துக்கொண்டே... விமலுக்கும் தனக்குமாய் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தவன்...

வழமையாக விமல்தான் இவனை எழுப்புவான்... ஆனால், இன்று அதிசயமாக,

"அடேய் விமல்...! எழும்படா...!! என்று அவனது தோளில் தட்டினான்.

sleeping-man101.jpg

போர்வையை முகத்தில் இருந்து இறக்கிப் பார்த்த விமல்...

"சனிக்கிழமையடா இண்டைக்கு. நித்திரைகொள்ள விடடா!" என்று சொல்லிவிட்டு, போர்வையை இழுத்து...

மீண்டும் முகத்தை மூடவும்,

"இப்ப எழும்பப் போறியோ இல்லையோ...? இல்லாட்டில் இந்த சுடு தேத்தண்ணியை மூஞ்சீல ஊத்திடுவன்.

எழும்படா....!" என அவனை தட்டின தட்டுத் தாங்க முடியாமல் எழும்பி உட்கார்ந்த விமல்...

"டேய் உனக்குத்தான்டா நித்திரை வருகுதில்ல எண்டால்... அதுக்கு, என்ர நித்திரையை ஏன்டா குழப்பிறா..?

எல்லாம் காதல் படுத்திற பாடு!!!

சனிக்கிழமை நாளில உனக்கு சனி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு எண்டு நினைக்கிறன்."

"அதுசரி... உன்ர ஆளிட்ட இருந்து மேசேஜ் வந்திட்டுதோ ?" என்று ஆர்வமுடன் கேட்டான் விமல்.

"ஓமடா... நைட் பதினொரு மணியளவிலதான் மெசேஜ் வந்தது. சரியா நாலு மணிக்கு Omega Inn க்கு கீழ உள்ள Coffee Shop இற்கு வரச்சொல்லி இருக்கிறாள்."

"நீயும் வரவேணும்... மறந்திடாதை! சொல்லிட்டன்...!! " என்றான் சற்று கண்டிப்பான தொனியில்.

"ம்ம்ம்ம் வாறன். வரமாட்டன் எண்டு சொன்னா... விட்டிருவியோ சும்மா!

யாரிட்டையும் அடிகிடி வாங்கித் தராமல் இருந்தால் சரிடா!" என சிரித்துக்கொண்டே விமல் சொன்னான்.

"டேய் விமல்... ரீயைக் குடிச்சிட்டு வெளிக்கிடு...! இப்ப ஒரு முக்கியமான வேலை இருக்கு!" என அவன் சொன்னதும்,

என்ன முக்கியமான வேலை என்பதுமாதிரி விமல் அவனைப் பார்க்க...

"முதன்முதலா அவளை உரிமையோட பாக்கப்போறன்... வெறுங்கையோடையோ போறது...மச்சான்????

ஏதாவது 'கிப்ற்' வாங்கோணும்.... நீதான் செலக்ட் பண்ண வேணும்.

வெளிக்கிடு மச்சான் கெதியா..." என அவன் சொல்ல,

இந்தக் கறுமம் வேற இருக்கோ...?! உருப்பட்ட மாதிரித்தான்...! என முணுமுணுத்த படி,

இன்னும் ஒரு கடையும் திறந்திருக்க மாட்டாங்கள். விழுந்தடிக்காத... ஒரு சிகரெட் பத்தவச்சுக் குடு... நான் ரொயிலெற்ருக்குள்ள போயிருந்து என்ன 'கிப்ற்' வாங்கலாமெண்டு ஆறுதலா திங் பண்ணுறன்... என்று சொல்லிக்கொண்டிருந்த விமலின் மடியில் "கோல்ட் லீஃப்" பெட்டி வந்துவிழுந்த விதத்தைப் பார்த்தே...

விமலுக்கு விளங்கியது... அவனுக்கு கடுப்பாயிட்டுது என்று.

மனதுக்குள் சிரித்துக்கொண்டே... ஒன்றும் பேசாமல் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி துவாயை கழுத்தில் சுற்றிப் போட்டுகொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் விமல்.

காலை 9 மணி...

இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி காலி வீதியில் ஏறுகின்றார்கள். அவர்கள் இருந்த ஒழுங்கைக்கு நேரேதிரே வெள்ளவத்தை காலி வீதியிலுள்ள "ரன்வன் லங்கா" ஹொட்டல். அந்த ஹொட்டலுக்கு முன்னால் லான்ட்சைட் பக்கமாக நின்றவர்கள், அப்படியே வலதுபக்கம் திரும்பி சற்றுத்தூரம் நடந்து சென்று ஒவ்வொரு கடையாக ஏறியிறங்க ஆரம்பித்தார்கள்.

விமல் முதலில் அவனைக் கூட்டிக்கொண்டு சென்றது ஒரு பொம்மைக் கடைக்கு.

உள்ளுக்குள் போன உடனேயே... ஒரு பெரிய கரடிப்பொம்மையை கையிலெடுத்த விமல்,

"மச்சான்... இஞ்ச பார்! எப்பிடி என்ர செலக்சன்...? இதைக் குடு... அவள் இதை நீ எண்டு நினைச்சு கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுப்பாள்டா!! என்று சொல்லவும்,

விமலை ஒரு மாதிரிப் பார்த்தவன், "லூசா....! இதை அவள் வீட்டுக்குக் கொண்டுபோனா... அஞ்சலியின்ர அம்மாவுக்கு விளங்காதே... இந்தமாதிரி கரடிப்பொம்மை எல்லாம் எங்கை இருந்து வந்ததெண்டு...?!"

"இதையே.... அவ்வளவு நேரம் பாத்றூமுக்குள்ள இருந்து யோசிச்சனி... ??? என கொஞ்சம் கடுப்புடன் சொல்லி விட்டு... வேற கடைக்குப் போவம் வா!" என்றான்.

அப்படியே நடந்து செல்லும்போது ஒரு புத்தகக் கடை ஒன்று வர... விமல் சட்டென்று சொன்னான்,

"மச்சான்..! இன்னொரு ஐடியா...!! அவள் படிக்கிற பிள்ளை. நல்ல அழகான பேனை ஒண்டு வாங்கிக் குடு. O/L எக்ஸாமும் வருது. நீ குடுத்த பேனையால அவள் ஆசையா எக்ஸாம் எழுதட்டும்" என்றவுடன்...

இவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல், ஒரு புன்முறுவலுடன்...

"உனக்கு அப்ப ஒருக்கா சொன்னனானல்லோ...மறந்து போச்சுதோ???

நான் ஆருக்கும் பேனையை கிப்ற்ரா குடுக்கிறேல. அதோட யாரிட்ட இருந்தும் பேனையை வாங்கிறதில்லை. அது என்னிட்ட உள்ள பலவருசப் பழக்கம். பேனை குடுத்தால்,வாங்கினால் அதின்ர மை முடிஞ்ச கையோட அவையளுக்குள்ள இருந்த உறவும் முறிஞ்சிருமாம் எண்டுவினம்."

"பேனை வேணாம்...! வேறை எதையாவது பாப்பம் வா!" என்றான் அவன்.

இன்னும் பல கடைகள் ஏறி இறங்கினார்கள். ஊகூம்...! விமலுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது.

"நீ இண்டைக்கு 'கிப்ற்' வாங்குறதுக்குள்ள திருப்பி விடிஞ்சிடும்.

கொஞ்சம் பொறுடா...! கால் வலிக்குது" வீதியோரமாக புதிதாக கட்டடவேலைகள் நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு சுவர்க்கட்டில் உட்கார்ந்தான் விமல்.

0.jpg

விமலுக்குப் பக்கத்தில் அவனும் உட்கார்ந்தவன்... "ஒழுங்கா ஏதாவது ஒரு ஐடியா சொல்லன்டா" என கொஞ்சம் கவலைதோய்ந்த முகத்துடன் கேட்க,

ஆளை விடுப்பா... உன்ர ஆளுக்கு என்னத்தை வாங்கிக் குடுக்கிறதெண்டு நீயே யோசி .

கடைசியா ஒரு பிலான் சொல்லுறன்.

மச்சான்... இப்ப பஸ் எடுக்கிறம். பம்பலப்பிட்டி MCக்கு ( Majestic City) போறம். அங்க நிறைய கிப்ற் சொப்ஸ் இருக்கு. அங்கையும் உன்ரை ஆளுக்கு குடுக்கிறமாதிரி கிப்ற் இல்லையெண்டால்.... இனிச் சொல்லித்தான் செய்விக்கோணும்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் கூறினான் விமல்.

12.jpg

உடனேயே பஸ் ஏறினார்கள். ஐந்து நிமிடத்தில Majestic City வந்தது. உள்ளுக்குள் நுழைந்தவுடனேயே சில்லென்று ஏசிக் காற்றும், என்னவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வித்தியாசமான ஒரு நறுமணமும் அவர்களைச் சுற்றி ஆட்கொண்டது.

அப்படியே ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வந்தவன்... ஒரு கடையில் இருந்த கண்ணாடிப் பெட்டியில்

தன் கண்களை நிலைகுத்தி நின்றான்.

அதற்குள் அழகான ஜோடிப்புறாக்களின் சிலையொன்று...!!

அவனுக்கு புறா என்றால் ரொம்பவும் பிடிக்கும். சின்ன வயதில் புறா வளர்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு விசயமாக இருந்தது. ஜோடிப்புறாக்கள் தமக்குள் எவ்வளவு இனிமையாய்க் காதல் பண்ணும் என அவன் பார்த்திருக்கிறான். அவன் வளர்த்த ஜோடிப்புறாவில் பெண்புறா இறந்துவிட தனியே இருந்த மற்றைய ஆண்புறா எதுவுமே சாப்பிடாமல் அடுத்த சில நாட்களில் இறந்துவிட்டது. அன்றிலிருந்து புறா வளர்ப்பதை விட்டுவிடும் அளவுக்கு அவனை அந்த விடயம் பாதித்திருந்தது.

தான் வளர்த்த அந்த ஜோடிப் புறாக்களின் காதலை மனதினுள் நினைவுகளாய் அசைபோட்டவன்...

கடைக்குள் நுழைந்து அதனை பொதி செய்து தருமாறு கேட்டான்.

30280.jpg

பின்னால் வந்த விமல்... அந்த சிலையின் விலையைப் பார்த்துவிட்டு...

"என்ன மச்சான்.... இந்த சின்னச் சிலைக்கு இத்தனை ஆயிரம் ரூபா விலை போட்டு வச்சிருக்குறாங்கள்...!!!

வேறை கடையில பாத்திட்டு வருவம்... மலிவா நல்லது கிடைக்கும்" என விமல் சொல்லவும்,

"இல்ல மச்சி... இது பளிங்குக் கல்லால செய்தது. அதுதான் இந்த விலை.

நல்லா இருக்கு. விடு...!. வாங்குவம்!" என்றவன், காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்ததும்...

"இந்த மாசம் சாப்பாட்டுக்கு சிங்கியடிக்க வேண்டி வரும்போல..." என வாயில் முணுமுணுக்க... அது கேட்டும் கேட்காததுபோல இருந்தான் அவன்.

மீண்டும் வெள்ளவத்தைக்கு வந்த இருவரும்....

மத்தியானச் சாப்பாட்டை முடிக்கும் போது மணி மூன்றரை ஆகியிருந்தது.

உண்மையைச் சொல்லப்போனால், அவனுக்கு சாப்பாடு இறங்கவேயில்லை. சாப்பிடுவதற்கு வந்ததே... விமல் "பசிக்குது..! பசிக்குது..!" என்று நச்சரித்துக்கொண்டிருந்த படியால்தான்.

காதல் அவனை தொட்ட கணம் முதலே.... தன் பசி, தூக்கம் எல்லாவற்றையும் மறந்துபோனவனாய் மாறிக்கொண்டிருந்தான் அவன்!

அவனது காதல்..... அவனை மாற்ற ஆரம்பித்திருந்தது..........!!!

இன்னும் அரைமணி நேரத்தில் தன் வாழ்க்கை முழுவதையும் காதல் வசந்தமாக்கப் போகின்றவளை... தன் காதலியை... சந்திக்கப் போகின்றோம் என்ற சந்தோசத்தினால் மட்டுமே அவனது எண்ணங்கள் அத்தனையும் நிறைந்திருந்தது.

அவர்கள் இருவரும் நின்ற இடத்திலிருந்து அஞ்சலி வரச்சொன்ன கொஃபி சொப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

நடந்து வந்துகொண்டிருக்கும்போதே... அவனது செல்போன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தான்... அழைத்தது அஞ்சலி.

"ஹலோ... நான் அஞ்சலி. எங்கை நிக்கிறீங்கள்? நான் வந்திட்டன், உள்ளுக்கைதான் இருக்கிறன்..." என்று அஞ்சலி சொல்லவும்...... "இந்தா நான் பக்கத்தில வந்திட்டன் "என்று சொல்லிக்கொண்டே தனது இடதுகை மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான்.... நேரம் 3.59pm.

தொடரும்...

குறிப்பு: 

தொடர்ந்து வாசிப்பதற்கு இலகுவாக பகுதி 07 ம் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான படங்களை மேலதிகமாக இணைக்க முடியாத காரணத்தினால்,

இந்தக் கதையின் தொடர்ச்சி தனியான பிறிதொரு திரியில் தொடர்கின்றது.

இக்கதையின் அடுத்த பகுதிகளினை (பகுதி 08 இல் இருந்து) வாசிப்பதற்கு... கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

http://www.yarl.com/...t=0#entry756294

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

நல்லாயிருக்கு தொடருங்கள் ஆனால் தொடங்கின மாதிரி முடிச்சிட வேணும் சொல்லிப் போட்டன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையள்ளையும் , கற்பனையள்ளையும் ,வாழ்க்கை நல்லாத்தான் போகுது!

ம்!!!

இப்படியே உங்களுக்கும், அமைய வேண்டும், கவிதை!

Link to comment
Share on other sites

கதையின் பகுதி [02] உம் பகுதி [01] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

இது கவிதையின் அனுபவமோ? கதை நல்லாய் இருக்குத் தொடருங்கள்! :)

அலை அக்கா... இது பலரது வாழ்க்கையில் நடந்த,நடக்கின்ற கதைதான். அவர்களில் ஒருவனுடைய கதைதான் இது.

ஆனால் பல உண்மைச் சம்பவங்களை தழுவியது.

காதலின் சில பரிமாணங்களை சொல்ல முயலும் கதை.

நன்றி அக்கா! :)

நல்லாயிருக்கு தொடருங்கள் ஆனால் தொடங்கின மாதிரி முடிச்சிட வேணும் சொல்லிப் போட்டன் :lol:

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ முடிச்சிடுவன் அண்ணை! இது கொஞ்சம் நீளமான கதை என்றபடியால்தான் இப்பிடி. :rolleyes: எழுதித் தள்ளவும் வேணுமல்லோ அண்ணை. அதுதான். :D

நன்றி சாத்ஸ்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் படிக்கும் ஆவலைத் தூ ண்டுகிறது சீக்கிரம் தொடர்க :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் தொடர்க :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை....கொஞ்ச நாளா கதை,கவிதை எண்டு எல்லாமும் ஒருமார்க்கமாப் போகுது :D ...கதை நன்றாக இருக்கிறது...பாராட்டுக்கள்....முதலிரவில கொண்டுவந்து கட்டில்ல இருந்து எங்களை தள்ளி விழுத்திப்போட்டு ஓடாமல் முழுவதும் எழுதிப் போடவேணும்... :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: :rolleyes: :rolleyes:

சரி..சரி.. ஏதோ நடக்கட்டும்.. நடக்கட்டும்..

முழுசா வாசிச்சிட்டு இருக்கு அண்ணைக்கு கச்சேரி.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

எப்பவுமே அவள் சாறி உடுக்கும்போது... அழகா பிளிற்ஸ் பிடிச்சுவிட்டு விடுறது இவன்தான். உண்மையிலேயே அழகாக பிடிச்சு விடுவான். இன்றைக்கு அவள் அழகாக உடுத்தியிருந்தாலும்.... ஏனோ, வழமைபோல அவனிடமே கேட்டாள். அவன் தேத்தண்ணியை பக்கத்தில இருந்த மேசையில வைச்சிட்டு, பிளிற்ஸ் பிடிக்க ஆரம்பிச்சான்... ஏதோ ஒரு காரணத்தோடு!

ம்............................. என்னத்தைச் சொல்ல தொடருங்கோ ராசா .

Link to comment
Share on other sites

விமலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே.... இன்னொரு சிகரெட்டை மீண்டும் பற்றவைத்துக்கொண்டான்.

அவனுடைய பதிலுக்காய் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் விமல்.....

srk-smoking.jpg

தொடரும்.....

nosmoking.png

no-smoking.gif

Link to comment
Share on other sites

கதையின் பகுதி[03] உம்..... பகுதி [01],[02] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. யதார்த்தமாகவும் இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது. அதனோடு இணைந்து படங்களும் பரவசம் தருகின்றன. காதலின் தன்மை யாதர்த்த வாழ்க்கையோடு இயைந்து போன நிஜத்தை அறிய மிக ஆவலாக உள்ளேன். பாராட்டுக்கள்.. தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடை நிறுத்தாமல் தொடருங்கள் கவிதை வித்தியாசமான பாணியில் கதை நன்றாக போகின்றது

Link to comment
Share on other sites

கதையள்ளையும் , கற்பனையள்ளையும் ,வாழ்க்கை நல்லாத்தான் போகுது!

ம்!!!

இப்படியே உங்களுக்கும், அமைய வேண்டும், கவிதை!

கருத்துக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரன்...!

வாழ்க்கை என்றால் சந்தோசங்கள், கவலைகள், வலிகள் என எல்லாம் கலந்ததுதான்.

இந்தக் கதையை முழுசா படித்தால்.... அது புரியும்.

நன்றிகள் பல :)

Link to comment
Share on other sites

" அஞ்சலி.... என்னமா? என்ன டவுட்..? சொல்லுங்கோ...! என்று அவன் சொன்னதுதான் தாமதம்.....

அஞ்சலி விம்மி விம்மி அழத் தொடங்கினாள்...... "

இது நல்லாயில்லை.............. போனமா பிடிப்பிச்சமா எண்டு இருக்கவேணும் .

Link to comment
Share on other sites

கதையின் பகுதி[04] உம்..... பகுதி [01],[02],[03] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

மேலும் படிக்கும் ஆவலைத் தூ ண்டுகிறது சீக்கிரம் தொடர்க :D

நன்றி நிலா அக்கா!

தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

சீக்கிரம் தொடர்க :icon_idea:

10 வருஷக் கதை... சீக்கிரம் தொடர வேணும் அண்ணை!

தொடருகின்றேன்...!

Link to comment
Share on other sites

கதையின் பகுதி[05] உம்..... பகுதி [01],[02],[03],[04] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

இந்தக் கதையினை கொஞ்சம் சுருக்கமாக 'சிறுகதை' என்ற வகையில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால்... பல உண்மைச் சம்பவங்களை தழுவி எழுதிக்கொண்டு வருகையில் கதையின் அமைப்பு 'குறுநாவல்' என்பதுபோல நீண்டு செல்கின்றது. கிரமமாக தொடர்ந்தும் இணைப்பேன்.

தங்கள் அனைவரினதும் ஆதரவுக்கும் கருத்தூக்கத்தும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வையுங்கள்.

காதல் பயணங்கள் இடைவிடாமல் தொடரும்..... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.