Jump to content

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)


Recommended Posts

மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான்.
 

அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின.    

 

2007 செப்டெம்பர் 08
அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள்

அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின்

20வது பிறந்தநாள் அன்றுதான். அவனது வாழ்த்துக்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பாள்.

 

தனது பிறந்தநாளிற்கு "முதன் முதலில் அவன்தான் வாழ்த்த வேண்டும்" என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு என்பதனைவிட... அது அவளது செல்ல உத்தரவாகவும் இருந்தது. அவன் வாழ்த்தும் வரைக்கும் எவருடைய அழைப்புக்களையும் அவள் எடுக்கமாட்டாள். அது யாராக இருந்தாலும் சரி.

 

அஞ்சலிக்கு அழைப்பை எடுத்து செல்போனை காதில் வைத்துக்கொண்டான். மறுமுனையில்... "ஹலோ செல்லம்...." என செல்லமாக இழுத்தபடியே அஞ்சலியின் இனிமையான குரல். குழந்தைத்தனமான அவளது குரலில் கொஞ்சம் குறும்புத்தனமும் கலந்திருக்கும். அதனை இவன் எப்பொழுதும் ரசிப்பான்.

 

"ஹலோ செல்லம்.... என்ன செய்யுறீங்கள்..?" என செல்லக்குரலில் தொடர்ந்தவளிடம், "Wish you a Happy Birthday and Many More Happy Returns of the Day" என வழக்கமான ஆங்கில வார்த்தைகளால் வாழ்த்துக்களைக் கூறினாலும் மனதார வாழ்த்திய அந்த வார்த்தைகளில் காதலும் பாசமும் நிரம்பியிருந்தது. வாழ்த்துக்களைக்கூறி அவன் முடித்த கையோடு,
அதுசரி செல்லம்! வாழ்த்தெல்லாம் இருக்கட்டும், பெண்டாட்டிக்கு பிறந்தநாள் பரிசெல்லாம் இல்லையா? எனக் குறும்பாகக் கேட்டாள் அஞ்சலி.

 

அவள் வேண்டுமென்றே குறும்பாகக் கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தாலும்...

அவள் அப்படிக் கேட்டது அவனைக் கொஞ்சம் சங்கடப்பட வைத்தது.
அஞ்சலியும் அவனும் கொழும்பில் இருந்த காலத்தில் எப்பவுமே தவறாமல் பிறந்தநாள் பரிசு கொடுப்பான்.

ஆனால்.... முதற்தடவையாக அதுவும் கணவன்-மனைவி என்ற நிலையை அடைந்த பின்னரான முதல் பிறந்த நாளிற்கு பரிசு எதையும் இவன் அனுப்பி வைத்திருக்கவில்லை.

அனுப்பி வைக்கவேண்டும் என்ற நினைப்பு அவனுக்குள் இருந்திருந்தாலும், அதற்கு முந்தைய சில நாட்களாக ஏற்பட்ட குழப்பங்களும் அவனது பயணங்களும் அதனை மறக்கடித்திருந்தன.

தன்னைத் தானே நொந்துகொண்டான்.

 

ச்சீ.... Sorry ma பயணத்தில இருந்தபடியால் அனுப்ப முடியேல. இண்டைக்கே அனுப்பிவிடுறன். என்ன வேணும் செல்லத்துக்கு? என ஆயிரெத்தெட்டு Sorry கேட்டபடி கேட்டவனிடம்....,

 

"செல்லம்...! " என  செல்லமாகக் கோபித்தபடி "நான் சும்மா கேட்டனான் . எனக்கு பிறந்தநாள் பரிசா முக்கியம்? செல்லத்தின்ர அன்பே போதும்! நீங்கள் வாழ்த்தினதே எனக்கு சந்தோசந்தான்! ஆனால்...." என இழுத்தவளிடம்
"ஆனால்.... என்ன?" என ஆர்வமாகக் கேட்டான் அவன்.
 

"வாழ்த்துச் சொன்னால் மட்டும் போதாது! இன்னொரு விஷயம் கேப்பன் தருவியளோ? என வெட்கத்துடன் அவள் கேட்டபோதும், அவள்கேட்க வந்தது என்னவென்று அவனுக்கு சட்டென்று புரியவில்லை.

"என்னவேணும் அஞ்சலி ?" என அப்பாவித்தனமாக அவன் திரும்பக் கேட்கவும்,
அஞ்சலி வெட்கத்தில் குழைந்தபடியே.... "ஒண்டும் வேணாம். நான் சும்மா கேட்டனான்" என்றபோதுதான் அவனது 'ரியூப்லைற்' மண்டைக்கு அவள் எதைக் கேட்க வந்தாள் என விளங்கியது.
 

தன் கொடுப்புக்குள் சிரித்தபடியே.... "அதுக்கென்ன தந்தாப் போச்சு!" எனக் கூறியவன்...  அவள் பதிலுக்குக் காத்திராமல் சடுதியாக  தன் அன்பான முத்தங்களை கொடுக்க ஆரம்பித்தான். "காணும்! காணும்!" என அஞ்சலி சொல்லும் வரைக்கும் அந்த "உச் உச்" சத்தங்களில் நனைந்துபோனது அவனது செல்போன்.

 

இருக்கும் இடங்களால் பிரிந்திருந்தாலும் அந்த இரு காதல் உள்ளங்களும்  நன்கு நெருக்கமாயிருந்த 

அத்தகைய பொழுதுகள் மிக இனிமையானதாகவே அமைந்தன.

அஞ்சலியின் அடுத்த பிறந்தநாளிற்கு அவளுடன் கூடவே இருக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான். அஞ்சலியின் விருப்பமும் எதிர்பார்ப்பும் நிச்சயமாக அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

 

              - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

 

இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் நான்காம் மாடி உபசரிப்பின் பின்னர்....

சிங்கப்பூர் வந்து பின்னர் மலேசியாவிற்குள் நுழைந்த பொழுதில் அவனது மனதில் எந்தவொரு திட்டமும் இருந்திருக்கவில்லை. நாட்டைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அவை.
 

இப்போது... பாதுகாப்பாக  மலேசியா வந்தாயிற்று. 'இனிமேல் என்ன செய்வது?' என்ற எண்ணங்கள் தானாகவே

அவனது மனதிற்குள் எழ ஆரம்பித்தன. புதிய இடம், புதிய மொழி, புதிய மனிதர்கள் என  அவனுக்கு எல்லாமே புதிதாய் இருந்தன. அவன் தங்கியிருந்த இடம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். அதுவும்  இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதனால் மொழிப் பிரச்சினை என்பது பெரிதாக இல்லை. சில இடங்களில் ஆங்கிலத்தில் சமாளித்துக் கொண்டான்.
இன்னும் சில மாதங்களுக்கு மலேசியாவில் தங்கிவிட்டு அடுத்து அஞ்சலியிடம் போய்ச் சேரவேண்டிய வழியைப் பார்க்கவேண்டும் என  மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

 

இப்படியே சில நாட்கள் நகர்கையில்....
அவனது நண்பர் ஒருவர் மூலமாக அவனுக்கு வேலையொன்று தேடிவருகின்றது. வேலை எதுவும் செய்யும் எண்ணத்தில் அப்பொழுது அவன் இல்லாவிட்டாலும், அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சலிப்புத் தன்மையைப் போக்கவும் நண்பரின் அன்பான வற்புறுத்தலுக்கு இணங்கவும் மலேசியாவைவிட்டு வெளியாகும்வரைக்கும் அந்த வேலையைச் செய்வதற்கு ஒத்துக் கொள்கின்றான். அதற்கான விஸாவையும் ஒரு ஏஜென்ட்டின் உதவியுடன் பெற்றுக்கொண்டான். இப்படித்தான் ஆரம்பித்தது அவனுடைய மலேசிய வாழ்க்கை.
 

இந்த ஆரம்பம்  அவனது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என அவன் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை. நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே....... !
 

(தொடரும்....)

 

***எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன ***


                 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்காலாமே. தொடருங்கள் விரைவில் எங்களை அதிக நாட்கள் காக்க வைக்காது.

Link to comment
Share on other sites

இந்த ஆரம்பம்  அவனது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என அவன் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை.

 

நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!

 

என்ன............. உங்களிட்டை இருந்து லவட்டினதுதான் :lol: .  ஆறுதலாய் பொறுமையாய் எழுத்துப்பிழை விடாமல் காதலை விற்றுத் தீருங்கோ . உங்கள் சோகத்தில் வாழ்த்துச் சொல்ல விரும்பவில்லை :( :( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கதை யுடன் காண்பதில் மகிழ்ச்சி. தை பிறந்தால் நல்ல வழி பிறக்குமாம்.

Link to comment
Share on other sites

தொடருங்கள் கவிதை ..... பொறுத்திருந்து பார்ப்போம் .. கால தேவதை உங்களை எப்படியெல்லாம் சோதிக்கிறாள் என்று..
அதை அறிய மிக ஆவல் ....
Link to comment
Share on other sites

கருத்துத் தெரிவித்து தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இணையம் பாவிக்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு.

அதனால்தான் கொஞ்சம் சிரமமாக உள்ளது. இயன்றவரை அதிகம் எழுத முயற்சி செய்கின்றேன்.

 

'மாற்றங்கள் அனைத்தையும் மாற்றும்'.

நல்மாற்றங்கள் வரவேண்டும் என்பதே என் விருப்பமும். மிக்க நன்றி உறவுகளே! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதை கதைக்க .

 

.  யாழில் .(கவி) .விதைக்க வேண்டும் . மனதில் பாரம் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை தொய்ய விடாமல் முடிந்தவரைக்கு தொடர்ந்து எழுதுக்கொண்டு போங்கள்...

 

Link to comment
Share on other sites

கவிதை,
இடையில்  தொடர்பற்றுப் போனதோடு இனி யாழ் பக்கம் வரமாட்டீங்களெண்டே நினைச்சேன். திரும்பியும் கதையை தொடர்கிறீர்கள். எழுதி முடியுங்கோ. நடந்தவையும் கடந்தவையும் தந்த படிப்பினைகளிலிருந்து புதிய வழிகள் பிறக்கும் உங்களுக்கும் அத்தகையதொரு வழி வர இறவைனை பிரார்த்திக்கிறேன்.

ஒரு பழைய பாடல் இது எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது கேளுங்கோ:-

https://www.youtube.com/watch?v=mpKL2F52S5g
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்


 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கவிதை,

இடையில்  தொடர்பற்றுப் போனதோடு இனி யாழ் பக்கம் வரமாட்டீங்களெண்டே நினைச்சேன். திரும்பியும் கதையை தொடர்கிறீர்கள். எழுதி முடியுங்கோ. நடந்தவையும் கடந்தவையும் தந்த படிப்பினைகளிலிருந்து புதிய வழிகள் பிறக்கும் உங்களுக்கும் அத்தகையதொரு வழி வர இறவைனை பிரார்த்திக்கிறேன்.

ஒரு பழைய பாடல் இது எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது கேளுங்கோ:-

https://www.youtube.com/watch?v=mpKL2F52S5g

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

 

பாடல் இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா. மீண்டும் யாழுக்குள் வர வாய்ப்புக் கிடைத்ததே தெய்வம் தந்த வரந்தான் என நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இவ்வளவு ஆபத்துக்களையும் தாண்டி மீண்டும் யாழுக்குள் வர வாய்ப்புக் கிடைத்திருக்காது.

 

இனிவரும் காலங்கள் நல்லபடி அமையும் என எண்ணுகின்றேன். புதிய இடம், புதிய சூழல் புதிய மாற்றங்களையும் எனக்குள் கொண்டுவரலாம்.

பார்க்கலாம்...... :) நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.