Jump to content

ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை..(2) .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109

 

பகுதி-2

 

Ayers1.jpg

 

பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவதனால், நானும் போக வேண்டும் என்பது போலத் தான் அவர்களது வருகை இருக்கும்!

 

ஆனால், மாயா, அந்த மலையின் வெளி அழகை ரசிக்கவில்லை. அதன் பிரமாண்டத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்கின்றாள். அகல விரிந்த இரவு வானத்தின் நட்சத்திரச் சிதறல்களிலும்,  அடர்ந்த காடுகளின் நடுவில் காணப்படும் ‘மயான அமைதியிலும் ' அவள் இதே ‘உணர்வை' அடைவதுண்டு. ஒரு வேளை, தனது மூதாதையர்களின் ‘ கனவுக்காலங்கள்' என்பது இதுவாகத் தான் இருக்கவேண்டும் என அவள் பலமுறை சிந்தித்ததும் உண்டு. எல்லோருக்கும் எதுவுமேயில்லாத பாலை நிலமாகத் தெரிவது, அவளுக்கு மட்டும் எல்லாமே நிறைந்த ஒரு ‘வளமான பூமியாகத்' தோன்றுகின்றது.தனது உடலும், பிரபஞ்சமும் ஒன்றோடு ஒன்று ‘பின்னிப் பிணைந்தது’  போன்ற ஒரு விதமான ‘உணர்வு' அவளுக்கு இங்கு வரும்போது ஏற்படும்.

 

நினைவுகளின் நகர்வுகளுக்குக் கடிவாளம் போட்டவள், உரத்த குரலில்’பின்டி' என்று கத்தினாள். அப்போது அந்த மலைப்பிளவும். உரத்த குரலில், திருப்பிக் கத்தியது. பின்னர் தனது கணவனின் பெயரைச் சொல்லிக் ‘குலன்' என்று கத்தவும், மலைப்பிளவும் உரத்த குரலில் மீண்டும் திரும்பக் கத்தியது.    

 

இந்த இடத்தில், மாயாவின் கணவன் ‘குலனைப்' பற்றிக் கொஞ்சம் சொல்வது பொருத்தமென நினைக்கிறேன்! அவுஸ்திரேலியாவின் கரையோரம் தவிர்ந்து, மத்திய பகுதிகளில் பொதுவாக 'பூர்வீகக் குடிகளே' அதிகமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதனால், குலனும், ஒரு மந்தை நிலையத்தில் ‘மாடுகளை மேய்ப்பவனாக' வேலை செய்தான். பகல் முழுவதும் குதிரைகள் மீதிருந்தபடி, மாடுகளை வழிநடத்துவது தான் அவனது வேலையாக இருந்தது. 'டிங்கோ' (Dingo) என அழைக்கப்படும் காட்டு நாய்களிடமிருந்தும், மற்றும் திருடர்களிடமிருந்தும் ‘மந்தைகளைக் கவனமாகப்' பாது காப்பது தான் அவனது தொழிலாக இருந்தது. அத்துடன், பூர்வீகக் குடிகளுக்கே தனித்துவமான ‘ தடம் பார்த்துத் தேடுதல்' (Tracking Skills) ஐ உபயோகித்துத் தப்பியோடி மறைந்து வாழும், சிறைக்கைதிகள், தேடப்படும் குற்றவாளிகள், போன்றவர்களைத் தேடிப்பிடிக்க, போலீசார் அவனது உதவியை நாடுவதுமுண்டு.

 

553655-180611-raparapa.jpg

 

அப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கு, மதுசாரம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஆதலால், அவர்கள் ‘யாராவது ஒரு வெள்ளைக்காரனின் காலில் விழுந்து தான் ‘அதிக பணத்தைக் கொடுத்து' அவர்கள் மூலம் 'மதுபானங்களை' வாங்கியாக வேண்டும்! இப்படி ஒரு நாள், மதுவருந்தி விட்டு நடந்து வரும்போது, ‘கைது' செய்யப்பட்ட குலனுக்கு, இரண்டு வாரங்கள் தனிமைச் சிறைத்தண்டனை கிடைத்தது.  ஒரு திறந்த வெளியில், வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவன், தனிமைச் சிறையில் போடப்பட்டால், இரண்டு நாட்கள் கூட அவர்களில் சிலரால் உயிர் வாழ முடியாது. அவர்களது ‘குடும்பப்  பிணைப்புகள்' அவ்வளவு தூரம் இறுக்கமானவை! அத்துடன் , இயற்கையுடனான அவர்களது தொடுகையும் மிகவும் நெருக்கமானது. நீரிலிருந்து வெளியே, தூக்கிப்போடப்பட்ட ஒரு மீனின் நிலையில் தான், இவர்கள் சிறைகளில் இருப்பார்கள். சிறையில் போடப்பட்ட இரண்டாவது நாளே குலன், சிறைக்கூட்டினுள் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

 

Cat+Cages+Old+LA+zoo+2010.jpg

 

இப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கெனச் சிறைச்சாலைக்குள்ளேயே ‘ தனியான திறந்த சிறைகள்' அமைக்கப்பட்டுள்ளன!

 

அவளுக்கும், குலனுக்கும் இடையேயான காதலின் காரணமாகவே ‘மாயா' இப்போதெல்லாம் இங்கு வருகிறாள். அவளுக்குள்ளே, வெளியே சொல்ல இயலாத ஒரு ‘ரகசியம்' ஒன்று புதைந்து கிடக்கின்றது. அவளது, அம்மம்மாவுக்குக் கூடத் தெரியாத ‘இரகசியமாக' அவள் அதைத் தனக்குள் மிகவும் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறாள். குலனின் தற்கொலைக்குப் பின்னர் மாயா, அவளது அம்மாவுடன் வசிக்கவில்லை. இன்னுமொரு ‘காம்பில்' உள்ள சில நண்பிகளுடன் சேர்ந்து வசித்து வந்தாள். அதற்கான முக்கிய தேவையும் அவளுக்கிருந்தது. குலன் இறந்த சில வாரங்களிலேயே, அவனது  குழந்தை தனது வயிற்றில் வளர்வது மாயாவுக்குத் தெரியவந்தது.

 

பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி, எல்லா அன்னையர்களும் சுமக்கின்ற கனவுகளையே மாயாவும் சுமந்தாள். அந்தக்குழந்தை அவளுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டது போலவும் அவள் உணர்ந்தாள்.

 

வயிற்றில் நோவு, ஏற்பட்ட போது, தனியாகவே அந்த ‘பில்லா பொங்’ (Billabong) ஐ நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். மாலை நேரமாகையால், உயர்ந்த மரக்கிளைகளைலிருந்து, கூக்கபரா (Kookaburra) பறவைகளின் ஒலி, அவளைப்பார்த்து, யாரோ எக்காளமிட்டுச் சிரிப்பது போல கேட்டது.’தென்றல்' அவர்களது வயிற்றைத் தடவிக் ‘கிச்சு கிச்சு' மூட்டுவதனால் தான், அவை அவ்வாறு சிரிப்பதாக அம்மம்மா இளமையில் கூறுவதுண்டு.

 

எவரது உதவியுமில்லாமலே, ஒரு அழகிய ஆண் குழந்தையொன்றை, அந்த சிறு குளக்கரையின் , உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவில் பெற்றெடுத்தாள்.

ஓரளவுக்கு, அயர்ச்சி தெளிந்து மாயா விழித்துகொண்டபோது அந்தக்குழந்தையின் ‘முனகல் சத்தம்' அவளது காதில் கேட்டது. மெதுவாகக் கண்விழித்துக் குழந்தையைப் பார்த்தவளுக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.  

 

மூக்கையும், தலைமயிரையும் தவிர, அந்தக் குழந்தையின் ‘தோற்றம்' முழுவதுமே, ஒரு ‘வையிட் பெல்லா’ வாகவேயிருந்தது! அடுத்ததாக அவள் செய்த காரியமே, அவளை இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

 

அவளது மூதாதையர் செய்து வந்தது போலவே, அந்தக்குழந்தையை, ஒரு நெருப்பெறும்புகள் வாழும் ‘மண் குவியல்' ஒன்றினுள் வைத்து விட்டு, தனது அம்மம்மா வாழும் ;காம்பை' நோக்கி நடந்து சென்று விட்டாள்.

 

 

hamersley02.jpg

 

குழந்தையின் அவலம், சிறிது நேரம் வரை அவளது காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் துடைத்தபடியே. அந்தக் குழந்தைக்கு ‘மானசீகமாக' ‘ஜோர்ஜ்' என்ற பெயரையும் வைத்து விட்டிருந்தாள். அந்தக் குழந்தையின், கன்னத்தில் ஒரு ‘பூமராங் ' (boomerang) போன்ற கறுத்த நிற ‘மச்சம்' ஒன்றிருந்தது அவளுக்கு இன்னமும், தெளிவாக நினைவிருக்கின்றது. ‘ஜோர்ஜ்' ஐப் பற்றி, நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்!

 

இப்போதெல்லாம், அவள் ‘உலுறு'வுக்கு அடிக்கடி வருவதற்கான காரணமே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு வரும்போது கண்ட, சுருட்டைக் கறுத்தத் தலைமயிருடனும், அகன்ற மூக்குடனும், காணும் அந்த 'வெள்ளை' இளைஞனின் உருவம் தான். அவளும் அடிக்கடி வருவதனால், அவனும் அடிக்கடி அங்கு வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஒரு வேளை, அந்தப்பகுதியிலேயே வசிப்பவனாக இருக்க வேண்டும். அவனது ஒரு கன்னத்திலும்,

'பூமராங் '  போன்ற ஒரு மெல்லிய கருமை நிறம் கலந்த 'மச்சம்'..!

 

அவள் வழக்கம் போல, மலை வாயை நோக்கித் தாயின் பெயரை, உரக்கக் கூறிக் கத்தியபோது, அவனும் உரக்கக் கூவுவது கேட்டது!

 

அதற்கு ‘மலை வாய்' உரத்த குரலில் அளித்த பதில்…..’மாயா…..”  !

 

 

(சிறு கற்பனைகள் மட்டும் கலந்த ஒரு உண்மைக்கதை....ஒரு அவுஸ்திரேலிய 'பூர்வீகக் குடிமகனால்' கூறப்பட்டது...!)

 
Link to comment
Share on other sites

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையினை வாசித்து முடிந்தபின்பு கவலையாக இருக்கிறது. ஒருவேளை நாங்களும் எங்கள் உறவுகளைப் பிரிந்து பல்வேறு நாடுகளில் சிதறிவாழ்வதுதான் காரணமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன்... கதையை வாசிக்க சுராசியமாகவுள்ளது, புங்கை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான புங்கையின் கதையோடம். நன்று அடிக்கடி எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கதை வாசித்த நிறைவு! பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவின் கதையென்றால்

புனைவுடன் 

நியமும் கலந்திருக்கும் என்பது அறிந்தது தானே

அருமை

இன்னும் கொஞ்சம் நேரத்தை  ஒதுக்கலாமே  எமக்காக..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல கதை பூங்கை. வாழ்த்துக்கள்.
 
சில வருடங்களுக்கு முன் நீல மலைப்  [ Blue Mountains] பகுதிக்குப் போயிருந்தோம்.
 
அங்கு டிஜரீடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பூர்வீகக் குடிமகன் எங்களைக் கண்டு முகம் மலர்ந்தான். அந்த சிரிப்பில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.
 
நெடிய வாட்ட சாட்டமான உடலில் சுடலைப் பொடி. நீண்ட சடை. இடையைச் சுற்றி ஒரு துண்டு.
 
 
++++++++++++++++++++++++++++++++++  
 
மாயா = ம் + யா
 
ம் ‍  = பிரபஞ்சம் இதனுள் அடங்கும்
யா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = இஸ் + வரா
 
இஸ் = பிரபஞ்சம் இதனுள் அடங்கும் 
வரா = பிரபஞ்சம் இதிலிருந்து விரியும்
 
ஈஸ்வரா = மாயா ???  :blink:

 

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...!  இணைப்புக்கு  நன்றி புங்கை ,  மாயா போன்றே அவனும் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்...! :)

வணக்கம், சுவியர்.

 

இவர்களது, தேவையில்லாத 'குழந்தைகளைக்' கொடுமையான முறையில் கொன்று விடும் பழக்கம், கங்காருக்களை அவதானித்ததில் இருந்து வந்திருக்கக் கூடும் என அனுமானிக்கிறேன்! :o

 

பொதுவாக, கங்காருக்களின், பைகளுக்குள் தான், குட்டிகளுக்குப் பாலுட்டும் 'முலைக்காம்புகள்' அமைந்திருக்கும். 

 

மிகவும் சிறியதாகவே இவை, தாயின் கருப்பையிலிருந்து 'பிறந்து' பின்னர் 'தாங்களாக' கங்காருப் பைகளிலிருந்தே, மிகுதியான முதிர்ச்சி நிலையை அடைகின்றன!

 

பொதுவாக, எதிர்பார்ப்புக்கும் மேலாக, அந்த வருடத்து 'வரட்சி' இருக்குமென்பதைக், கங்காருத் தாய்களால், ஏதோ ஒரு வகையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

 

அவ்வாறு உணர்ந்தால், அவை தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட, 'குட்டிகள்' அந்தப் பையிலேயே மரணித்துப் போகின்றன! 

வெளிப் பார்வைக்குக் 'கொடுமை' போலத் தோன்றினாலும், அந்தக் குட்டிகள் எப்படியோ 'அழியத் தானே போகின்றன' எனப் பார்க்கையில், தாய்க் கங்காருக்கள், எங்களை விடவும், பல யுகங்களுக்கு, முன்னேறியுள்ளதாகவே, நான் கருதுகின்றேன்..!

 

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே... நினைவுக்கு வரவேண்டுமே...! :icon_idea:  

Link to comment
Share on other sites

இவராக இருக்கலாம். இளமையாகவும் கொஞ்சம் திடகாத்திரமாகவும் இருந்த மாதிரி ஞாபகம். அதே இடம் தான். குகைக்கு முன்பாக.
 
இவர் பிரித்தானியா சென்று வந்ததாகவும் இவருடைய பழைய ஓவியங்களை லண்டன் நூதனசாலை அவுஸ் பழங்குடிகளின் ஓவியம் என்று நல்ல விலைக்கு வாங்கியதாகவும் ஒருவர் சொன்னார். கொஞ்ச நாள் நல்ல காசு கையில் புழங்கியதாம்.
 
இவரை வைட் ஃபெலாக்கள் ஜோன் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணா.. நிறைய விடையங்கள் தெரிந்து வைத்திருக்கிறீங்கள்.இன்னும் நிறைய விடையங்கள் பற்றி எழுதனும் என்பது ஆவல்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! உங்களின் எழுத்தாற்றலை கண்டு பெரிதும் மெச்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
original_checking_cattle__copy_.jpg
dingo_medium.jpg 
blue-mountain-aboriginal-didgeridoo-play

 

எம்மைப் போன்று,  இவர்கள் கட்டுவதும்... வேட்டி, சாரம் போலுள்ளது.
அவர்களது பெயர்களிலும்.... நமது பெயர் கலந்துள்ள‌து.
அப்படிப் பார்க்கையில்... குமரிக்கண்டம் அழிய முன்பு, தற்போதுள்ள ஆசியக்கண்டமும், அவுஸ்திரேலியக் கண்டமும் ஒரே நிலப் பகுதியாக இருந்த போது..... தமிழகம், ஈழத்திலிருந்து கால் நடையாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற தமிழ் மக்களாக இருக்கலாம்.

 

மேலும் புங்கை குறிப்பிடும் "டிங்கோ" போன்ற நாய்களை இப்போதும் அநேகமான‌ யாழ்ப்பாண‌ வீடுகளில் வளர்ப்பு நாயாக காணலாம். அவுஸ்திரேலிய வனாந்தரத்தில்.. திரியும் சில மண்ணிற மாடுகளும்... நம் ஊர் மாடுகளாவே தெரிகின்றன. இவர்கள் இடம் பெயரும் போது... தமது தேவைகளுக்காக அந்த நாயையும், மாட்டையும் ஆசியாவிலிருந்து கூட்டிச் சென்றிருக்கலாம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

புங்கை உங்கள் எழுத்து வளமைபோல ஒரு வரலாற்றுக் கதையையும் சொல்லிச் சென்றுள்ளது. மாயா மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். ஒரு பெண்ணாய் அவள் பட்ட துயர்களிலிருந்து கண்ணீராய் ஒரு சந்ததியின் கதையை மாயா சொல்லிக் கொண்டு போகிறாள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறுதிக்கதையில் உங்கள் முத்திரை நன்றாகவே உள்ளது புங்கை வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இவரைச் சொல்லுகிறீர்களா, ஈசன்?

 

இவருடன் ஒரு நாள் கதை கொடுத்தேன்! பின்னால, நிக்கிற கறுத்தக் கார், இவருடையது தான்! :D

 

blue-mountain-aboriginal-didgeridoo-play

 

அநேகமான, பூர்வீகக் குடிகளின் பெயர்களில், மாயா, பின்டி, குலன் என்பதை, எல்லா அவுஸ்திரேலிய மாநிலங்களினலும் வாழும், வெவ்வேறு இனப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவாகவே உள்ளன!

 

அவர்களது மொழிகளுக்கு எழுத்துருக்கள் இல்லாததால், 'மாயாவை' சில இடங்களில் 'மியா' என்று ' மையா' என்றும் அழைக்கிறார்கள்! அதே போலவே, பின்டியும், பிந்தி எனவும், பிந்தை எனவும் மாற்றியும் அழைக்கிறார்கள்.

 

ஆனால் இவர்கள் பேசும்போது, நுணுக்கமாக அவதானித்தால், 'தமிழ்' அல்லது 'மலையாளம்' போலவே சத்தங்கள், வருகின்றன! :D

 

மிகக் கடுமையான அவதானத்தின் பின்னர் 'தண்ணி' என்ற வார்த்தையும் இடைக்கிடை வந்து போகின்றது! என்ன, கருத்து என்று தெரியவில்லை! :unsure:

 

வரவுக்கு நன்றிகள், ஈசன்!

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையுடன தெரியாத பல விசயங்களையும் அறியக்கூடியவாறு இருந்தது. நன்றி

இந்த படத்தில் உள்ள பழங்குடிமகனுடைய கார் பின்னால் நிற்பதாக கூறியுள்ளீர்கள். இவரின் வாழ்க்கைச் சூழல் புரியவில்லை.

வணக்கம், சண்டமாருதன் !

 

பொதுவாக பழங்குடி மக்களின் 'வாழ்க்கை நிலை' அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது! இவர்களுக்கென,அரசாங்கம் பல விதமான 'உதவிகள்' செய்கின்ற போதும், எல்லாமே, அரை வாசி 'அபோரிஜின்' அல்லது கால்வாசி 'அபோரிஜின்' என்று வெள்ளைகளே, அவற்றை அனுபவிக்கின்றார்கள்.

 

இவர்களின் நிலை எப்போதும், 'செத்தையில இருக்கிறதைத் தூக்கி மெத்தையில போட்டால், திரும்பவும் செத்தையை நாடிப்போகும்' நிலை தான்!

 

ஒரு சிலர் 'இப்போது' கொஞ்சம் கொஞ்சமாக ' அரசியல்', 'விளையாட்டு' போன்ற துறைகளில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள்!

 

இவர்களும் தங்களுக்கெனத் தனித்துவமான 'பிரதேசங்கள்' வைத்திருக்கிறார்கள்! ஒரு 'இனத்தின்' பிரதேசத்துக்குள். வேறு இனத்தவர் 'போவது' மிகவும் குறைவு!

 

இதன் பிரகாரம், 'Blue Mountains' பிரதேசத்தில், 'மேலுள்ளவர்'  வசிக்கிறார். இவருக்கு, வெளிநாட்டினர் வரும்போது, இவருடன் இருந்து படம் எடுப்பதற்குப் 'பணம்' கொடுப்பதுண்டு. அத்துடன்  Didjeridoo எனும் நீண்ட குழாய் போன்ற வாத்தியக்கருவியையும் வாசிப்பார்.அதனாலும், இவருக்கும் பணம் கொடுப்பார்கள். அதனால்  இவரிடம் பணம் புழங்குகின்றது! அதை வைத்து ஒரு பழைய 'பென்ஸ் கார்' வாங்கி வைத்துள்ளார். அதனால் தான் அதைக் குறிப்பிட்டேன்!

 

'Blue Mountains'  என்ற பியர் வரவும் ஒரு காரணம் உள்ளது. இந்த மலைக்குன்றுகளில் ' விக்ஸ்' மரங்கள் நிறைய வளரும். அதிகாலை வேளையில், பனி தடவப்பட்ட ;விக்ஸ்; இலைகளில் சூரிய ஒளி, பட்டுத் தெறிக்கும் போது, மலைகள் நீல நிறமாகத் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி புங்கையூரான்

இங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையும் மிகுந்த துயரம் நிறைந்தது. உலகில் அதிகளவு தற்கொலை செய்பவர்கள் இவர்கள். பலர் மது போதைக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். நிறைய ஊனமுற்றவர்கள். பலர் மேம்பட்ட நிலையிலும் உள்ளனர் மேம்பாட்டை நோக்கி போராடிக்கொண்டும் உள்ளனர்.

இப்போத வயதான நிலையில் மிகவும் பாதிப்புக்குள்ளானவர்களாக காணப்படும் ஒரு தலைமுறை சிறுவயதில் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு புறம்பான பள்ளிகளில் அடைத்து பாலியல் துஸ்பிரயோகம் முதல் அனைத்து இன ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உட்பட்டு பாதி இறந்துபோக மீதி உடலும் உள்ளமும் சிதைக்கப்பட்ட தலைமுறை. இவ்வாறாக எஞ்சியிருந்த கடசிப் பள்ளிக்கூடம் 1996 ல் தான் மூடப்பட்டது.

இப்போதுள்ள பிரதமர் மற்றும் பிரதான கட்சித்தலைவர்கள் நடந்த கொடுமைகளுக்காக மன்னிப்புக்கேட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சண்டமாருதன்!

 

ஆங்கிலேயர்களால், காலனித்துவப்படுத்தப்பட்ட' நாடுகளின்' பொதுவான நிலை, ஒரே மாதிரிப்போலத் தான் உள்ளது!

 

Maralinga -தெற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களில் தான், மிகவும் ஆபத்தான ' அணு ஆயுத பரிசோதனைகளைப்' பிரித்தானியா செய்து முடித்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 'இந்தப் பூர்வீகக் குடிகளே" !

 

அத்துடன், இன்னுமொரு தனித்துவமான ஒரு  'அபோரிஜினல் இனம்' கொஞ்சம் 'நிறமாக' இருந்ததால், அந்த இனம் தங்களுக்குப் போட்டியாக வரக்கூடும் என்பதால், அந்த இனத்தில் ஆண்கள் அனைவரும், வரிசையில் அழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும், ஈவிரக்கமின்றிக் 'காயடிக்கப் பட்ட' சம்பவங்களும் நடந்தேறின!

 

அதன் பின்னர், அந்த இனம் முழுவதுமாகவே அழிக்கப்பட்டது. :o 

 

நேரம் கிடைத்தால், நிச்சயம் இதைப்பற்றி 'யாழில்' எழுதுவேன்!

 

நீங்களும் அவ்வாறே எழுதினால், மற்றவர்களும் இப்படியான வரலாறுகளைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்!

 

அத்துடன், 'யாழ்' என்பதையும் ஒரு ஆவணப் பொக்கிசமாகவே நான் பார்க்கிறேன்!

 

நாளை, நாம் இல்லாத காலத்திலும், தமிழினமே ஒரு வேளை, அழிந்து போயிருந்தாலும், யாரோ ஒரு தமிழன் நிச்சயம், யாழிலிருந்து  பல உண்மைகளை அறிந்துகொள்வான் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உள்ளது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.