Jump to content

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா


Recommended Posts

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

கிழக்கு வெற்றி நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்? என்று சிறிலங்கா அமைச்சர் அதாவுல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்தவுக்கு அதாவுல்லா வாழ்த்துத் தெரிவித்தமையை மற்றொரு அமைச்சரான ஹக்கீம் மறைமுகமாகத் தாக்கி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

ஹக்கீமின் நாடாளுமன்றப் பேச்சுக்கு பதிலளித்து அதாவுல்லா கூறியுள்ளதாவது:

கிழக்கின் உதயம் நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதன் மூலம் சில அரசியல்வாதிகள் கூறுவது போல் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான இக்கட்டும் ஏற்படவில்லை.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவரான அரச தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது மகிழ்ச்சியானதுதான்.

எனது செயல் தமிழ் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கும் என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். இது ஏன் என்று எனக்கு புரியவேயில்லை.

பயங்கரவாதிகளை விரட்டியடித்தமைக்கு நான் வாழ்த்துச் தெரிவித்தால் தமிழ் மக்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்.?

அதற்கு நியாயம் ஏதுமில்லை. எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காததால்தான் அவர் என்னை விமர்சித்துள்ளார் என்றார் அதாவுல்லா.

http://www.eelampage.com/

Link to comment
Share on other sites

எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காததால்தான் அவர் என்னை விமர்சித்துள்ளார் என்றார் அதாவுல்லா.

இங்க பாற்ரா..இவருக்கு கிடைத்த..பெரியா வாய்ப்பாம் :P

Link to comment
Share on other sites

கருணா தப்பி ஓடுவதற்கு உடந்தையாக இருந்தவர் இவர் தான். எனவே அதாவுல்லா தமிழருக்கெதிரானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

Link to comment
Share on other sites

தமிழர்கள் குதறப்படுகையில் எட்டி நின்று வேடிக்கைபார்ப்பதும் தமக்குள் எள்ளிநகையாடுவதும் பின்னர் அதிகார பங்கீட்டு என்றதும் முந்தியடித்து கொண்டு வந்து எமக்கு எதிராக செயற்படுவதும் காலங்காலமாக ஒட்டுமொத்த முஸ்லீம் இனத்தின் செயற்பாடாக உள்ளது.

இதே நேரத்தில் சிங்கள இனவெறி மிருகங்கள் தங்களையே இடையிடையே ருசிபார்க்கும் போது அதனை பூசி மெழுகி தமிழர்களின் நிலை தமக்கு வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.

ஆனால் அதே நேரத்தில் அமைதி கனிந்து வரும் போதெல்லாம் தமிழர்கள் தங்களை படுகொலை செய்வதாக கூறி பழைய சம்பவங்களை தூசுதட்டி எடுத்து வந்து புலம்பி மீண்டும் எங்களை போருக்குள் தள்ளி விட்டு விட்டு, இன்று மீண்டும் அமைதியாக நல்ல சலுகைகளுடன் எதிரியுடன் கைகோர்த்தபடி வேடிக்கை பார்கின்றது. இடையிடையே சொல்லம்புகள் வேறு. இதில் அத்தாவுல்லாவுக்கும், கக்கீமுக்கும் இடையிலான வேறுபாடென்பது மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையிலானதே! முன்னையது முரட்டுக் காளை எனில் பின்னையது குள்ளநரி அவ்வளவே.

இவையெல்லாம் தலைவர்களின் செயற்பாடாம், மக்களது இல்லையாம்! தலைவர்களை யார் தெரிவு செய்தனர்? இவற்றிற்கான விளக்கத்தை நாம் ஒரு சாதாரண முஸ்லீமிடமா கேட்பது?

இதற்கு உரிய விளக்கத்தை தரவிரும்புபவர்கள் இங்கே தரவும்!

குறிப்பாக சபேசன் 3 நாட்களில் கட்டுரையுடன் வருவதாக கூறிச் சென்றவர் இன்னமும் காணவில்லை!

Link to comment
Share on other sites

மேலே கூறப்பட்ட கருத்துக்கு யாருமே எதிர் கருத்து கூற முடியாது அப்படி கூறினாலும் அது விதண்டாவாதாமாக தான் இருக்கும்...............

நல்ல ஒரு கருத்து சாணக்கியன்..............

Link to comment
Share on other sites

இங்கு சாணக்கியனின் கருத்தே எனது கருத்தும்.

தமிழ் மொழியையே தாய் மொழியாக பேசிக்கொண்டு ஒரு சமயத்தால் வேறுபடுத்தப்பட்டு அந்த சமயவழிவந்த கலாச்சாரத்தால் தாம் ஒர் தனி இனம் என கூறிக்கொள்ளும் பிரிவினைவாதிகளே இவர்கள். அரசியலிம் சரி சக வாழ்விலும் சரி எங்கு அனுகூலம் இருக்குமோ அங்கு ஒட்டி நின்று நட்டாமுட்டி வேலை செய்யும் ஓர் அற்புதமான பிரிவு.

மொத்தத்தில்

தந்திரமான:

மிருகம் - நரி

மனிதன் (தொழிலில்) - நாவிதன்

சமயம் - முஸ்லிம்

Link to comment
Share on other sites

கிழக்கின் உதயம்"- தமிழ்மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டம்: த.தே.கூ. அரியநேத்திரன் கண்டனம்

[சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:58 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மக்களை இடம்பெயர்த்தி விட்டு தமிழ் மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியமர்த்திவிட்டதாக கூறி "கிழக்கின் உதயம்" நிகழ்வைக் கொண்டாடிவிடுகின்ற செய்தியானது அப்பிரதேச மக்களின் மனதைப் பாதிக்கின்ற செயலாக அமைகின்றது.

மக்கள் வேதனைகளை அனுபவித்து கொண்டு இருக்க அந்த வேதனைகளுக்கு மருந்து போடாமல். அதை கொண்டாட எழுந்து நிண்று ஆடுபவனுக்கு தாளம்போடும் நாய்க்கு கல்லாலை எறிய வேணும்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதவுல்லா என்ற முஸ்லீம் வேடதாரி எப்போதுமே தமிழனுக்கு எதிரானவராகவே இருந்தவர். இவரது அரசியல் வாழ்வு தொடங்கியகாலம் தொடக்கம் தமிழனுக்கு எதிரான சூழ்ச்சிகளையே இவர் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்குப் பொதுப்படையான காரணம் இருக்கின்றது. முஸ்லீம்களும், தமிழ்மக்களும் இணைந்தால் அவர்களின் அரசியல் வாழ்வு சூனியமாகி விடும் என்பது தான்.

எனவே தான் பல தடவை இனமுறுகலைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து கொள்ளுவார். சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்ப காலத்தில் முஸ்லீம் இளைஞர்கள் காணாமல் போவதும், அதைப் புலிகளின் தலையில் கட்டி, இனமுறுகலைத் தூண்டு விக்கப்பட்டதும், ஞாபகமிருக்கலாம். ஒருதடவை முஸ்லீம் இளைஞனை தன் வீட்டினுள் மறைத்த வைத்துவிட்டுப் புலிகள் தான் கடத்தினார்கள் என்று பிரச்சாரம் செய்து இனமுறுகலைத் தோற்றுவிக்க இவர் செய்த சதி பிடிபட்டதும், அதற்குப் பிறகு தான் அவ்வாறன செயற்பாடு குறைந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலில் 10 முஸ்லீம்மக்கள் சிங்கள அதிரடிப்படையால், கொல்லப்பட்டபோது, தப்பி வந்தவரை வைத்திசாலையில் சந்தித்துப் புலிகள் தான் செய்யச் சொன்னார்கள் என்று மிரட்டி வாக்குமூலம் வாங்கியதும், இந்த அரசியல்வாதியே.

ஆனால், அவ்நேரத்தில் குறித்த காயப்பட்டவரை அவரது குடும்பத்தவர்கள் கூடச் சந்திக்கவிடாமல் தடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அதவுல்லாவின் சூழ்ச்சி தெரியாக் கூடாது என்பதற்காக.

ஒரே இரவில் ஒரு கட்சியில் இணைந்து, அடுத்தநாள் அக்கட்சியில் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாமல் பிரிதொரு கட்சியில் இணைந்த வேடதாரிக்குத் தமிழனைப் பற்றிக் கதைக்க என்ன யோக்கியம் உண்டு. இவரை நம்பி முஸ்லீம் காங்கிரசில் இருந்து விலத்திய ஹாரிஸ் பிறகு வேறு வழியில்லாமல் திரும்பவும் முஸ்லீம்காங்கிரஸ்சிலேயே இணைந்து கொண்டார்.

ஹாரிசைப் போல மக்களும் இந்தக் கபடதாரியை இனம் கண்டுகொள்ளும் காலம் விரைவில் வரும்

Link to comment
Share on other sites

இங்கு சாணக்கியனின் கருத்தே எனது கருத்தும்.

தமிழ் மொழியையே தாய் மொழியாக பேசிக்கொண்டு ஒரு சமயத்தால் வேறுபடுத்தப்பட்டு அந்த சமயவழிவந்த கலாச்சாரத்தால் தாம் ஒர் தனி இனம் என கூறிக்கொள்ளும் பிரிவினைவாதிகளே இவர்கள். அரசியலிம் சரி சக வாழ்விலும் சரி எங்கு அனுகூலம் இருக்குமோ அங்கு ஒட்டி நின்று நட்டாமுட்டி வேலை செய்யும் ஓர் அற்புதமான பிரிவு.

மொத்தத்தில்

தந்திரமான:

மிருகம் - நரி

மனிதன் (தொழிலில்) - நாவிதன்

சமயம் - முஸ்லிம்

நாவிதன் தொழில் எவ்வாறு தந்திரமான தொழில் என்பது எனக்கு மெய்யாகவே புரியவில்லை சகோதரி........

நரி பாவம் அதன் தந்திரமெல்லாம் அதன் வயிற்றுப்பாட்டுக்காக.... ஆனால் மனிதன் அப்படியல்ல....

சரி அது போகட்டும் நீங்கள் கூறுவதைப்பார்த்தால் இலங்கைத்தீவில் இனப்பிரச்சனை இருப்பது வரை இஸ்லாமியர்கள் அதை வைத்து தாங்கள் சுகம் அனுபவிப்பது போல் படுகிறது எனக்கு .....தமிழகத்தில் தங்களை தமிழராகக் கருதும் இஸ்லாமியர்கள்...இலங்கையில் மட்டும் ஏன் வேறுபட்டுள்ளனர்???

Link to comment
Share on other sites

ஒரு சில முஸ்லீம்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில கிறிஸ்தவர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில ஹிந்துக்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா ஹிந்துக்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில தமிழர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா தமிழர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில சிங்களவரின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா சிங்களவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஆம்மாம் சவுதி மன்னர் எங்களையெல்லாம் கூப்பிட்டு பிரியாணி சாப்பாடும் தந்து கை நிறைய பொற்காசுகளும் தருவதாக கூறியுள்ளார். அதனால் தான் நாம் இதில் பிரியாணி சாப்பாடு கிடைகாவிட்டாலும் பறவாயில்லை... அந்த பொற்காசுகளையாவது பெற்றுவிடும் நோக்குடன் இதில் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

ஒரு சில சிங்களவரின் செயற்பாட்டால் பல லட்சம் தமிழ்மக்கள் சுமார் 50 வருடங்களாக கொல்லப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஓரு சில அமெரிக்கர்களால் ஈராக் நாட்டின் தைகிரிஸ் ஆற்றில் இரத்த வெள்ளம் பாய்தோடுகின்றது!

இவ்வாறு பல ஒரு சிலர் செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் எப்போதாவது நீதி வழங்கப்பட்டுள்ளதா? இனியும் வழங்கப்படுமா? அப்படி எதிர் காலத்தில் நீதி வழங்கப்பட்டாலும் இத்தனை பாரிய குற்றத்தை செய்தவர்களுக்கு ஒரு மரணதண்டனை போதுமா? இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரமும் பக்கபலமும் வழங்கி தொடர்ந்தும் அவர்களை மெனமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஆதரித்து வருபவர்கள் குற்றமற்றவர்களா? தங்கள் மதத்தை சாராதவர் என்ற ஒரு காரணத்திற்காக இந்தப்படுகொலைகளை கண்டும் காணாது கேட்டும் கேட்காது தன்வழியே செல்பவர் அப்பாவியா?

அடுத்தவரின் துயரை தம் துயர் என இந்த மக்கள் நினைத்திருந்தால் காலங்காலமாக ஏன் இந்த தலைவர்களை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். பேருந்தில் தமிழில் கதைத்துக்கொண்டு வந்த ஒருவர் பேரூந்து சோதனை சாவடியில் நிறுத்தப்படும் போது நான் தமிழன் யாழ்பாணத்தில் பிறந்தவன் என்பதால் நிறுத்தப்படும் போது அவர் தான் ஒரு முஸ்லீம் என்று கூறிவிட்டு வெகு சாவகாசமாக மீண்டும் வண்டியில் ஏறி ஏளனமாக யன்னல் வழியே பார்ப்பது எந்தவகையில் அவர் மீது எனக்கு அன்பை உருவாக்கும்?

பின்னர் எந்த முகத்துடன் வந்து பேச்சில் சம அந்தஸ்தை கேட்கிறார்கள். நாங்கள் இரத்தம் சிந்திப் பெற்றதில் பாதியை அவர்கள் தட்டிப்பறித்துச் செல்வது நியாயமா?

இதற்காக என்னை இன நல்லுறவை குலைப்பவன் என்று கூறி திட்டினால் பறவாயில்லை. அவர்களிடம் கூறிக் கொள்வதெல்லாம் ஒண்றுதான் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எமக்கு தோள் கொடுக்காதவர்களின் உறவு என்றுமே எமக்கு தேவையில்லை என்பதுதான்.

இன்று கூட முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் காதில் விழுந்தன,

ஒன்று, அரசுசார பிற அமைப்புகள் பல சுமார் 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஆதாரங்களுடம் குறிப்பிட்டுள்ள போதும், மீள்கட்டுமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமார் ஒரு லட்சம் மக்களே தனது மதிப்பீட்டின் படி இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என்றும், அதற்கு யாழ் கிளிநொச்சி மன்னார் வவுனியா திருகோணமலை போன்ற பகுதிகளில் இன்னமும் யுத்தம் நடைபெறுவதே காரணம் எனக் குறிப்பிடதோடு புத்தளத்தில் 17 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்கள் வசிப்பதாகவும் கூறினார். உண்மையில் அரசினால் விடுவிக்கப்பட்ட கிழக்கில்தான் அதிக எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும், பல்வேறு உள்நோக்கங்கள் காரணமாக அவர்கள் மீளகுடியேற்றப்படாமல் அவர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.17 வருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்று புத்தளம் பகுதில் சொந்தமாக காணிகளில் வாழ்ந்துவருகிறார்கள்.

இரண்டாவது, நீதிமன்றத்தால் பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்ட ஒரு சந்தேகநபரை கைதுசெய்வதற்காக ஊர்மக்கள் கொடுத்த தகவலில் இரகசியப் பொலிசார் ஒரு வீடுக்கு சென்றபோது, அங்கு வந்த ஆளுனர் அலவி மெளலானா இரண்டு மணிநேரத்தின் பின் பொலிசாரை "குறிப்பிட்டவர் அந்த வீட்டில் இல்லை" என்று கூறவைத்துவிட்டு திரும்பிச் செல்ல வழி சமைத்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் மிகவும் நகைச்சுவையானது, இன்று கொழும்பில் பல கடத்தல்கள் நடைபெறுவதால், ஆயுதங்களுடன் சிலர் தன் வீட்டுக்கு வந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தனக்கு அறிவித்ததை அடுத்தே தான் அங்கு வந்தாகவும் ஒரு விளக்கம் கொடுத்தார். இத்தனைக்கும் குறித்த நபர் பெருமளவு கள்ளநோட்டு அடித்த குற்றத்தில் தேடப்படும் ஒரு முஸ்லீம் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவையிரண்டுமே முஸ்லீம்களின் பிறறுக்கு உதவும் பண்புக்கு நல்ல எடுத்துக்காட்டுகள். அவர்கள் சக மனிதன் என்று மதிப்பது இன்னுமொரு முஸ்லீமையே அன்றி வேறொருவரை அல்ல!

சரி இனி சங்கர்லாலுக்கு கிடைகப் போகும் பொற்காசுகள் பற்றிய விடயத்திற்கு வருவோம், உண்மையில் அது எனக்கு தேவையற்ற விடயம் அப்படி உங்களுக்கு ஏதும் கிடைக்குமா இருந்தால் அதில் எனக்கும் சந்தோசமே. ஆனால் உறுத்தலான விடையம் என்னவென்றால் காலடியில் நடக்கும் அராஜகத்தை கண்டுகொள்ளாமல் காததொலைவில் அதுவும் அவர்களுக்கு புரியாத மொழியில் நாளும் செய்திகளை சேகரித்து இங்கே ஒட்டுவதன் நோக்கம்தான் புரியவில்லை! நான் நினைத்தேன் நீங்கள் ஏதோ ஒப்படை ஒன்றிற்காக அதனை செய்கின்றீர்கள் என.

இனி மாதுகா, அது என்ன தந்திரமான நாவிதன் கதை, பாட்டி எனக்கு சொன்ன கதைகளில் அது இல்லையே, தயவு செய்து அதனை ஒரு முறை எனக்காக இங்கு சொல்ல முடியுமா?

அனைவரிலும் அன்புடன்,

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் எவ்வளவுக்கு இன வாதம் தமிழர்கட்கு எதிராக ஊட்டப்பட்டுள்ளார்களோ அதே அளவுக்கு முஸ்லிம்களும் இனவாதம் ஊட்டப்பட்டுள்ளார்கள்.இது சிங்கள ,தமிழ் அரசியல் வாதிகளின் சுய நலவாதமும்,குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பாங்குமாகும்.எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் எமது நியாயங்களை உணர செய்யும் வரை அல்லது சிங்கள, முஸ்லிம் மக்கள் உண்மை நிலையை உணரும் வரை அதாவுல்லாக்களும்,கக்கீமுகளு

Link to comment
Share on other sites

ஜயா அதாவுல்லா அவர்களே! கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ, அளவுக்கு அதிகமாக கொக்கரியாதையுங்கோ.

எங்களை அதாவது விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்ல உங்களுக்கு அருகதை உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கோ. இதைப்பற்றி அதாவது உங்க துரோகத்தனத்தையும், அரசியல் வங்குரோத்தையும் விரிவாக எழுதி உங்களை கௌரவப்படுத்த நான் விரும்பவில்லை. சொந்த காலிலை நிற்க அருகதையில்லாத நீங்கள் எல்லாம் இன்று விடுதலைப்புலிகளை விமர்சிக்க வந்துள்ளீர்கள். உங்க கூத்துக்களை உங்களுக்குள் வைத்திருங்கள் எங்களை வீணாக வம்புக்கு இழுப்பது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. உங்களுடைய அரசியல் வியாபாரத்திற்கும், எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கும் வெகுதூர இடைவெளி உண்டு மறந்துவிடாதீர்கள்.

நீங்களும், சிங்கள அரசியல்வாதிகளும் நிறைய கனவு காண்கிறீர்கள், கனவு தானே காண்கிறீர்கள் காணுங்கோ, காணுங்கோ..எதிர்வரும் நாட்கள் நல்ல பதில் தரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவுல்லா காலங் காலமாகவே தமிழ் மக்களுக்கு எதிரான வேலைகளை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறையில் செய்து வருபவர். பதவிக்காகவும், பிழைப்புக்காகவும் எதையும் செய்யக்கூடியவர். எனினும் வறுமையில் வாடும் கிழக்கு முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யதமாதிரி இல்லை. இப்படியானவர்களின் வசனங்களுக்குத் தமிழ்த் தலைமை எப்போதுமே காதுகொடுத்ததில்லை. நாங்களும் காது கொடுக்காவிட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

ஆமாம்!

நாயும் நாயும் உறவு கொள்வதில் நமக்கென்ன வந்தது

நடுத்தெருவில் வைத்து உறவு கொள்வதால் கொஞ்சம் அருவருப்பாய் உள்ளது

அவ்வளவு தான்

அதாவுல்லா போன்றவர்களுக்காக எல்லா முஸ்லீம் சகோதரர்களையும் நாம் எதிரிகளாக பார்க்கத் தேவையில்லை.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் கடித்து குதறிக் கொள்ள வேண்டும் என்பது தான் அதாவுல்லா போன்றவர்களின் எதிர்பார்ப்பு. அந்த சதிக்கு நாம் பலியாகி

விடக்கூடாது.

Link to comment
Share on other sites

நண்பர்களே!!

நாம் உணர்ச்சி வேகத்தில் சிந்திப்பதை விடுத்து நீண்டகால நோக்கில், புத்திசாலித்தனமாகவும் சாதுரியமாகவும் எமது கடமைகளை தாயகத்துக்கு ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

உண்மையில் சுதந்திர தமிழீழத்தில் முஸ்லிம்களும் வாழவேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். அவர்களை நாம் துரத்திவிட முடியாது. அது அழகும் அல்ல. அப்படியானால், அவர்களை உண்மையை அறிந்துகொள்ள வைப்பதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்கிறோமா? பாழாய்ப்போன அரசியல் வாதிகளின் சுயநலங்களுக்காக, அரசியல் செல்வாக்கிற்காக இவ்வாறு அவர்கள் தடம்புரண்டு போகின்றார்கள்.

எமக்கென தனியரசு உருவாகுமட்டும் இவர்கள் சிறீலங்காவையே சார்ந்து இருக்க போகின்றார்கள். அவர்களின் வியாபாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக "தமிழர்களில் இருந்து விலகி இருப்பதாக" பாசாங்கு செய்கிறார்கள். என்று தமிழீழம் உதயமாகிறதோ அன்றே எம்பக்கம் சாய்ந்து விடுவார்கள்.

இவர்களை திட்டிக்கொண்டிருப்பதில் ஆகப்போவது ஒன்றும் இல்லை. இயலுமானளவு நாம் இவர்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்த வேண்டும். அங்கும் சில நல்லவர்கள் இருக்கக் கூடும். எமது கடினமான பணி அவ்வாறான நல்லவர்களை இனங்காணுவதும், எமது நீதியான கொள்கைகளை அவர்களுக்கு புரிய வைப்பதும் தான். அவ்வாறான ஒரு கணிசமான கூட்டத்தை உருவாக்கி விட்டால் மீதியை அவர்களே பார்த்துக் கொள்வர். திட்டிக் கொண்டு இருப்பதில் மேலும் விபரீத விளைவுகளே ஏற்படும். அரசியல்வாதிகளின் அரை வேக்கட்டு தனமான கதைகளுக்கு பதில் சொல்லி எமது நேரத்தை வீணடிக்க வேண்டியதும் இல்லை.

தமிழீழம் உதயமாகும் போது இதே அரசியல்வாதிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என 100% உண்மையாக நம்பலாம். சமூகம் என்பது இதுதான். உண்மைகளை மிகச்சரியாக கணித்து புரிந்து கொண்டால் பல விடயங்களை முளையிலே கிள்ளி விடலாம்.

அன்புடன்

ஈழத்திருமகன்

Link to comment
Share on other sites

மிருகம் - நரி (சரி)

மனிதன் (தொழிலில்) - நாவிதன்(???????)

சமயம் - முஸ்லிம்(????????????????????????????????????????????)

YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.