Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since 01/01/23 in all areas
-
முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. வெளிநாடு போய்வந்தவர்களின் புழுகல்கள் மூலமாக கனவுகளை வளர்த்துக் கொண்டேனே தவிர யதார்த்தமான நிலமையைச் சிறிதளவேனும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத நிலமை. பட்டப்படிப்பில்லாமல் எங்கோ எப்படியோ நுளைந்து சுமாராக முன்னேறியிருந்தாலும் தற்போதைய வாழ்க்கையைக் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் படிப்பில் நேரடியாகத் தலையிடுவதில்லை. படிப்பு என்பது முதலில் எமது அறிவை வளர்த்துக் கொள்ளவே, வேலை இரண்டாம் பட்சம் என்றே கருதுகிறேன். அவர்கள் பிற்காலத்தில் ஓரளவு வசதியாக வாழக்கூடிய வகையில் சொத்து சேர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே ! நான் குறைந்தது 5 வருடங்களாவது திட்டமிட்டு செயற்படுவது வழக்கம். ஆனாலும் பல தடவைகள் இலக்குகள் மாறி வேறு விதமாக அமைந்து விடுகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நான் எதிர்பார்த்த/எதிர்பாராத விதமாக வாழ்க்கை நகர்ந்தாலும் அன்று முதல் என்னுள் மாறாமல் இருப்பது நான் தமிழன் என்ற பெருமை மட்டுமே. நான் மேலே குறிப்பிட்டதுபோல் எனது உழைப்பில் தேடிய சொத்தினை (அது சிறிதாக இருந்தாலும்) எனது பிள்ளைகள் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் ஓரளவு தமிழ் பேசுவார்கள். எழுத்துக்கூட்டி வாசிக்கவும் முடியும். இலங்கையில் எமது உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். மற்றப்படி எமது பழக்கவழக்களோடு ஒன்றியிருந்தாலும் அவர்களின் தமிழ் கலாச்சாரம் என்பது பொலிவூட், சாமத்தியவீடு போன்ற கொண்டாட்டங்களுடனேயே மட்டுப்படுகிறது. இதையெல்லாம் நியாயப்படுத்தி அவர்களைத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. பிரெஞ்சுக்காரர்கள். சில பெற்றோரைப்போல் தமிழர்களுக்குள் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப் பட்டாலும் கூட அடுத்த சந்ததி என்னவாகும் என்பது நிச்சயமில்லை. 80-90 களில் வந்தவர்களே இன்று வெள்ளைக்காரப் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நிலையில் எனது உழைப்பினை எனது பிள்ளைகளுக்குப் பின் வெள்ளைக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். இக் கருத்தினை வைத்து என்னை இனவெறியனாகக் கருத வேண்டாம். தொடர்ந்து படியுங்கள். *** முதுமையும் தாழ்வும் மனித நாகரிகம் தோன்றிய முற் பகுதிகளில் மக்கள் வீடு கட்டுவதும் விவசாயம் செய்வதுமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்கான காரணம் பெற்ற அனுபவத்தினை இலகுவாக அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாததாக இருக்கலாம். இலகுவான எழுத்து வடிவங்கள் தோன்றியபோது மனித வளர்ச்சி வேகமடைய ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகள் இடைவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளும் முடிவுகளும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணணி, தொலைத்தொடர்பு வருகைக்குப் பின் வயது வித்தியாசமின்றி எல்லோராலும எல்லாத் தகவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் அலசி ஆராயக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் 70 வயதானவரை விட 20 வயதான ஒருவருக்கு அதிகமான தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் குறைந்து போகின்றது. சென்ற வருட ஆரம்பத்தில் (2022) நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பலர் வேலையை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நான் விளிம்பில் தப்பிப் பிழைத்திருந்தேன். இந்த வயதில் இதுபோன்ற வேலை தேடி எடுப்பது கடினம். வருட முடிவில் எல்லோருக்கும் தமது வேலைகளில் ஜனவரி முதல் தகமைகளை மேம்படுத்த முயல வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளனர். அதாவது புதிய தகமைகளைப் படிக்க வேண்டும். நான் மீண்டும் படிக்கும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து ஏதாவது படித்து ஒரு சான்றிதளாவது பெற முயற்சிக்க வேண்டும். ஆரம்ப வாழ்வு முதல் தகமைகளையும் அனுபவங்களையும் கடும் முயற்சியில் பெற்றுக் கொள்கிறோம். ஆரம்பப் படிப்பில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்படிப்பு உருவாக்குகிறது. மேற்படிப்பின் எல்லை தொழிலை நோக்கி உள்ளது. தொழிலிலும் தொடர்ந்து இறுதிவரை முன்னேற வேண்டும். எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளுக்கும் அனுபவங்களுக்கும் ஓய்வூதியத்தை எட்டியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னால் மீதி வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. என்னைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. ஏன் இந்த நிலமை ? வாழ்நாள் முழுவதும் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களை என்ன செய்வது ? *** எனது தேசியம் 2006 இலும் பின்னர் 2012 இலும் இலங்கை சென்றிருந்தேன். 2012இல் கொழுப்பிலிருந்து யாழ் நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். கிளிநொச்சிப் பகுதியை A9 ஊடாக வாகனத்தில் கடந்து சென்றபோது எனது மனதில் ஏற்பட்ட சோகம் கோபம் இயலாமை ஏமாற்றம் தோல்வி எல்லாமே கலந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. அதன்பின் இலங்கையில் எனக்குடனான தொடர்பு அங்குள்ள உறவினர்கள் மட்டுமே என்று தோன்றியது. நான் பிறந்த நாட்டில் எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் பிரான்ஸ் எனக்குத் தந்துள்ளது. இனிமேல் பிரான்ஸ்தான் எனது நாடு என்று முடிவு செய்திருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. என்னைப்பொறுத்தவரை எமக்கான தீர்வு என்றாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதை விட இனி எதுவுமே கிடைக்காது என்ற சிந்தனையிலிருந்து பாதையை வகுப்பது புத்திசாலித்தனம். பிரான்ஸ் தேர்தலின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் வேட்பாளர்களின் கலந்துரையாடலின் ஒரு பகுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில் வேட்பாளரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ‘பிரெஞ்சுக்காரன்(ரி) என்றால் என்ன?’ என்பதே அக் கேள்வி. அவரது இவ்வாறு பதிலளித்திருந்தார். பிரெஞ்சுக்காரன் என்பவன் : தன்னை உருவாக்கிக் கொள்வான் (கல்வி, அறிவு) எதிர்காலத்தை நோக்கி நகரத் தலைப்படுவான் (திட்டமிடல், உழைப்பு) சொத்துக்களை உருவாக்குவான் இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா. இந்த வரைவிளக்கம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அடுத்த 9-13 வருடங்களில் ஓய்வுபெற்றபின்னான வாழ்க்கைக்கு இப்போது அத்திவாரமிடப் போகிறேன். மீதி இரண்டாம் பகுதியில் தொடரும்.21 points
-
இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு. கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை. என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣10 points
-
முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம். இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ? ஆக்கபூர்வ்வமாக விவாதிப்போம். *** இணையத்தில் தேடியபோது கிடைத்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைக்கிறேன். https://vimarisanam.com/2016/03/31/சாமியார்களும்-சுஜாதா-சா/ ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து – —— கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள். படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது மாஸ் ஹிப்னாடிஸமா? பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது. இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன். என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் – மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity – நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான். முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். —— நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன். இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம். ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம் இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு. அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின் மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள். ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர். ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ, ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று நினைத்தார். பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை – மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில் கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள் இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில் அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன. ( தமிழ்நாட்டில், திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் “குடில்” ஆற்றும் அரும் பணிகள் பற்றி அண்மையில் இந்த இடுகையில் ஒரு நண்பர் விவரித்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்…) இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும் பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன. இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்…. —— ஆனால், தங்களது பேச்சாற்றல், பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை, பெரிய அளவில் அடியார் கூட்டம் – இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட் நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர். இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம், மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.9 points
-
இந்த (மானிடப்) பிறப்பு எதற்கு? பிறக்க முதல் எங்கிருந்தோம்? இறந்த பின்பு எங்கு போகப் போகின்றோம்? என் பிறப்பின் அர்த்தம் என்ன? நான் பிறந்திருக்காவிட்டால் நான் எங்கு இருப்பேன்? என் ஆத்மா இறுதியில் போய் சேரும் இடம் என்ன? ஏன் அவனை /அவளைப் போல என்னால் வாழ முடியுது இல்லை? அவனு(ள்)க்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை? இவ்வளவு செல்வம் இருந்தும் ஏன் மனது அமைதியடையவில்லை? நான் ஏன் இன்னும் மிக ஏழ்மையில் உழல்கின்றேன்? கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணமா? இப் பிறவியில் நான் செய்த எல்லாம் அடுத்த பிறவிக்கும் வந்து சேருமா? ....இவ்வாறான அரதப் பழசான கேள்விகளை, சமூகத்துக்கோ தனக்கோ கொஞ்சம் கூட நன்மை கொடுக்காத கேள்விகளை ஆன்மீகம் என்ற பெயரில் கேட்டுக் கொண்டு, சோம்பிக் கிடந்து உழல்கின்றவர்களில் பலர் தான் இவ்வாறான சாமியார்களிடம் தஞ்சம் அடைகின்றனர். தன் மீதான பயம். அளவுக்கு மீறிய ஆசை, தன்னம்ப்பிக்கை இன்மை, எதிர்காலம் பற்றிய அச்சம். தான் செய்யும் செயல்களால், தன் தொழிலால் ஏற்படும் மனவுளைச்சல் போன்றவற்றை தணிக்க கிடைக்கும் போதைப் பொருள் தான் இந்த சாமியார்களின் மீதான பக்தி. கடின உழைப்பும் தன்னம்பிக்கையும், எதிர்காலம் மீதான பயமின்மையும் உள்ள கொண்ட எவரையும் இப்படியான சாமியார்களிடம் தஞ்சம் அடைவதையும், ஆன்மீகம் என்ற பெயரில் செய்து கொண்டு இருப்பதையும் நான் காணவில்லை. கடவுள் (இறை) நம்பிக்கையும், சாமியார்களின் மீதான நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நம்புகின்ற கூட்டம் இது. உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை. பின்குறிப்பு: இணையவன், தலைப்பில் தமிழர்கள் என்று இட்டுள்ளீர்கள். இது தமிழர்களுக்கு மட்டுமான "வியாதி" அல்ல. எனக்கு தெரிந்து குஜாராத்திகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழர்களை விட மோசமாக சாமியார்களை நம்புகின்றனர். சாயிபாபாவை நம்புகின்ற தமிழர் அல்லாதவர்கள் பலர் உள்ளனர். தர்காவுக்கு சென்று மெளலவியை தெய்வமாக போற்றும் முஸ்லிம்கள் பலரை எனக்கு தெரியும். மாளிகாவத்தையில் கூட இப்படியான ஒரு முஸ்லிம் "பெரியார்" இருந்தார் (ஆனால் கோப்பரேட் மெளலவிகள் அரிது). சிங்கள பெளத்தர்களுக்கு ஒவ்வொரு பிக்குவும் ஒரு பெரும் சாமியார் தான்.9 points
-
இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது ஆக்கிரமிப்புப்போர் ஒன்றினைக்ன்கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை மீட்கவே அவர்களைக் கொல்கிறேன் என்று கூறும் ரஸ்ஸியாவிற்கும், தமிழினத்தை இனவழிப்புச் செய்துகொண்டே மபிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூறும் இலங்கைக்கும் அதிக வேறுபாடில்லை. அப்படியானால் ரஸ்ஸியா எந்தப்பக்கம் என்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்காது. ஆனால் என்ன, ரஸ்ஸியாவை நியாயப்படுத்த வெளிக்கிட்டால், இலங்கை செய்வதையும் நியாயப்படுத்தவேண்டி வரும். அதையும் செய்வோம்!8 points
-
ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன. இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂7 points
-
அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டின், கிம், சதாம், ட்ரம்ப் என்று ஆதரவு வேறு! ஆனால், என்ன, ரஷ்யா தற்செயலாக வென்று ஜேர்மனி, டென்மார்க் என்று ரஷ்ய தாங்கிகள் நுழைந்தால் முதலில் ஓடப் போவதும் இதே சிவிங்கங்கள் தான்! 😂7 points
-
இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்களுக்கு இன்னொரு அரிய தலைவன் வாய்க்கக்கூடும். அதுவரை இப்படியே இந்த மதவாத, பிரதேசவாத, இனவாத சகதியில் கிடந்து உழலுங்கள்.7 points
-
ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. எம்மில் பலருக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்வதென்ற திட்டம் எதுவும் இல்லை. வாரத்தில் 5-6 நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்யும்போது உடல் தசைகளும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டு வீட்டினுள் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. வாழ்க்கையில் எப்போது ஒரு குறிக்கோள் வேண்டும். ஓய்வூதியத்திற்கு முன்னரே நாம் வலுவாக இருக்கும்போது இது பற்றி சிந்தித்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். ஓய்வு என்பதை சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம். எனது வயதான உறவினர் ஒருவர் எப்போது வீட்டில் இருந்தவாறே கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பார். எல்லா வருத்தங்களும் உண்டு உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இன்னொருவர் 73 வயதாகிறது, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர். எந்த மருந்தும் பாவிப்பதில்லை, ஆரோக்கியமாக உள்ளார். ஒரு வயதிற்கு பின்னர் எமது மூளையும் உடலும் சரியாக இயங்காது. அப்போதுதான் வீட்டுக்குள் முடங்க வேண்டும். அதுவரை நன்றாக வாழ வேண்டும். நான் இங்கு எழுதப்போகும் திட்டம் எல்லோருக்கும் சரிவராது. இங்கு முதுமையோடு வாழ்வதற்கு ஏராளமான வழிகள் பொழுதுபோக்குகள் உள்ளன. சாத்தியமானதைப் பின்பற்றலாம். யாழ் உறவுகள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பெற இருப்பவர்களும் விரும்பினால் தங்கள் அனுபவங்களை அல்லது திட்டங்களைப் பகிர்ந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்.7 points
-
ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் என்று. நான் பங்குசந்தையில் முதலிடும் உங்களுக்கு ரகசியமாக தகவல்களை தந்து விடுகிறேன் என்றால், தகவலுக்கு அமைய, கம்பெனி கணக்குகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முன்னம் நீங்கள் இருப்பதை வித்து அல்லது, வாங்கி பணம் பார்க்கிறீர்கள். மாட்டினால் எனக்கும், உங்களுக்கும் சிக்கல் தான். நீங்கள் பேராசை இல்லாமல் பணம் பார்க்கும் வரை எல்லாம் ஒகே. பேராசை வந்தால், இவர் எப்படி ஊகித்தார், இவர் எப்படி, ரிஸ்க் எடுத்து அதிக பங்குகளை விக்கிறார் அல்லது வாங்குகிறார், என்று உங்களை கண்காணிக்கும் போது, உங்கள் தொடர்புகளை அறிவர். ஆனால், நவீன உலகில், நீங்களும் நானும், பிடிபடும் அளவுக்கு தொடர்புற போவததில்லை அல்லவா. உங்களை பிடித்து விசாரித்தாலும், நான் பெரிய வித்தகன், இந்த கம்பெனியின் சரித்திரமே ஆராய்ந்து தான் முடிவுகள் எடுத்தேன். போனமாதம் கம்பெனில இது நடந்தது, இந்தமாதம் இது நடந்தது, அதனால் பங்கு இறங்கும். ஏறும் என்று கணித்தேன் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது அவர்களால். உதாரணமாக, உங்கள் மனைவியின், கணக்காளர் நண்பி, எதேசையாக, கோஸ்டாவில் கோப்பி குடிக்கும் போது, இந்த முறை நல்ல போனஸ் வரும், கொம்பனிக்கு கொழுத்த லாபம் கிடைத்திருக்கிறது என்று வாயால் சொல்ல, அதனை மனைவி உங்களிடம் சொல்ல நீங்கள் பங்கினை வாங்கி பணம் பண்ணினால், அதனை insider dealing என்று நிரூபிக்க முடியாது. ஆனால் அந்த நண்பி, உங்கள் மனைவிக்கு சொன்னதை, யாராவது பதிவு செய்தால், அது ஓரளவுக்கு insider dealing கை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் மீது அதை வைத்து குத்தம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் சொல்லவந்தது தனது போனஸ், அதுக்கு என்ன காரணம் என்ன என்று மட்டுமே. அந்த தகவலை நீங்கள் பயன்படுத்தினீர்கள். ஆக அடிப்படை நோக்கம் insider dealing அல்ல. ஆக, சட்டத்தில் இருந்தாலும், நீதிமன்றில் உறுதிப்படுத்தக் கூடிய சான்று பெறுவது மிக கடினம். இவை (insider dealings ) வெள்ளைகள், பங்குசந்தையில் நசுக்கிடாமல் செய்யும் வேலைகள். கண்டும் காணாத மாதிரி இருக்கும், அமெரிக்க அதிகாரிகள், நம்மவர், அதுவும் அவர்கள் பார்வையில் வெள்ளை தோல் இல்லாத கறுப்பர் வெற்றியை பொறுக்க முடியாமல், அதுவும், புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்க பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வருமாறு டாக்டர் உள்ளிட்ட சிலரை அழைத்து மாட்டி விட்ட, சிவபெருமான் என்று புனை பெயர் கொண்ட எமது ஈழத்தமிழரை, வைத்தே, wire tapping செய்து மாட்ட வைத்தார்கள். சிவபெருமான் இவரை மாட்டவைத்ததன் காரணம், இவர் தமிழர் புனர் வாழ்வு அமைப்புக்கு (TRO) பணம் கொடுத்தவர் என்று, FBI கண்டுகொண்டதால் தான். நான் மேலே சொன்ன, பேராசையும் ஒரு காரணமாக இருக்கும். மேலும், அதீத வெற்றி காரணமாக, இவர் பாதுகாப்பான தொடபுறலை மறந்து, டெலிபோன் ஊடாக பேசி, அதனை wire tapping (தொலைபேசி ஒட்டுக்கேட்டல் ) சிக்கிக் கொண்டார். அதுவும், இவருடன் பேசிய இந்தியர், இவரை மாட்டி விடும் வகையில் பேசி சிக்க வைத்தார். அவர் FBI காக (approver) வேலை செய்தார். அவரை சிக்க வைக்கும், ஆதாரம் இவரிடம் இருந்தாலும் (இவர் அவர் முன்னாள் தந்த தகவல்களை பதிவு செய்துள்ளார் போலும்). சிறு பிள்ளைகளின் தந்தையான அந்த இந்தியரின் தூரோகத்தினை மன்னித்து, சிறை சென்றேன் என்கிறார் இவர். நான் அப்படி வளர்க்கப்படவில்லை என்கிறார். இதில் கொசுறு தகவல், இவரை சிக்க வைத்த சிவபெருமான், , இலங்கையில் மூன்றாவதாக ஒரு பெர்கர் இன பெண்ணை கலியாணம் செய்து கொழும்பில் வாழ்கிறார். ஆக, இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இயக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை. இவர் சிறை சென்றாலும் கூட, இவரது பணம், insider dealing சட்டப்படி பறிமுதல் ஆகாது. நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று. *** சிங்களவர் செய்தது பாலியல் குற்றம். இவரது குற்றம் White-Collar Crime. From FBI site: White-Collar Crime These crimes are not violent, but they are not victimless. White-collar crimes can destroy a company, wipe out a person's life savings, cost investors billions of dollars, and erode the public's trust in institutions. வெள்ளை காலர் குற்றம் இந்தக் குற்றங்கள் வன்முறையானவை அல்ல, ஆனால் அவை பாதிக்கப்படுபவர்களை உருவாக்காதவை அல்ல. ஒயிட் காலர் குற்றங்கள் ஒரு நிறுவனத்தை அழிக்கலாம், ஒரு நபரின் வாழ்நாள் சேமிப்பை அழிக்கலாம், முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் அழிக்கலாம் மற்றும் நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம்.7 points
-
கார் மயக்கம் -சுப.சோமசுந்தரம் களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அவ்வப்போது பிரிந்ததும், அவள் அவனது பிரிவினால் வருந்தி உழன்றதும் உலகோர்க்குப் பேசுபொருளாகவும் பாவலர்க்குப் பாடுபொருளாகவும் அமைந்ததில் யாதொரு வியப்புமில்லை. திணையின்பாற்பட்டு பிரிவாற்றாமை வகைப்படுத்தப்படலாம். இக்கட்டுரையில் நாம் எடுத்தாள எண்ணுவது முல்லைத்திணை நவிலும் பிரிவாற்றாமையாம். முல்லைத் திணையில் முதற் பொருளில் கார்காலமும், உரிப்பொருளாக (ஆற்றி) இருத்தலும் இருத்தல் நிமித்தமும் அமைந்த பின்னணியில் முல்லை நிலத்தின் பிரிவாற்றாமையும் அமையக் காணலாம். கார்காலத்திற்குள் மீண்டு வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் கார்காலத்திலும் திரும்பாததால் தலைவி பெருந்துயருற்று ஆற்றி இருத்தலும் அது தொடர்பானவையும் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்று குறிக்கப்பெற்றன. விலங்கினங்கள் தம் இணைகளைத் தேடும் காலம் குறிப்பாகக் கார்காலம் என்பது சான்றோர் மட்டுமின்றி இயற்கையறிவு பெற்ற பாமரரும் அறிந்ததே. சமூக விலங்கான மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன! ஏனைய விலங்கினங்களுக்கு இதனை வெறும் உடலியல் சார்ந்த ஒன்றாகக் கொள்ளுவதும், தனக்கு மட்டும் 'உளவியலும் சார்ந்த ஒன்றாக்கும்!' எனும் மானிடக் கற்பனையும் மனிதனுக்கான உரிமை, பெருமை, இன்பம் அனைத்தும். தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பொறுத்தமட்டில் இப்பெருமையையும் இன்பத்தையும் இலக்கியங்களில் வலை வீசித் தேட வேண்டியதில்லை. முன்னர் கூறியது போல் அக இலக்கியங்கள் முழுவதும் காணக் கிடைப்பது. தமிழ் இலக்கிய உலகத்தின் ஆழமும் அகலமும் தமிழுக்கான சிறப்பு. எனவே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொட்டுச் செல்வதே உலகளவைக் காட்டும் கையளவுக் கட்டுரையாய் அமையும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே. கருதுபொருள் சிறு சிறு தலைப்புகளாய் மனத்திரையில் ஓடுகிறது. சிறுவயதில் கட்டுரைகள் எழுதிப் பழகிய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளோ என்னவோ! கார் வந்தது காதலன் வரவில்லை : கார்காலம் வந்தமைக்குக் கட்டியம் கூறுகிறது முல்லைப்பாட்டின் இறுதியில் அமைந்த இரு வெண்பாக்களில் ஒன்று. "...................துன்னார் முனையுள் அடல்முகந்த தானை அவர்வாரா முன்னம் கடல்முகந்து வந்தன்று கார்". பொருள்: செறுகளத்தில் (துன்னார் - பகைவர்; துன்னார் முனை - போர் முனை) பகைவரின் அழிவினை முகந்த சேனை (அடல் - அழிவு; தானை - சேனை) திரும்பி வரும் முன் கடலினை முகந்து வந்தது கார்மேகம். தலைவன் பிரிந்து செல்வது போர் மேற்கொண்டு அல்லது பொருள் தேடக் கடல் கடந்தும் வாணிகம் செய்யும் பொருட்டு என அமைவது இயல்பு. நாம் முன்னம் கண்ட முல்லைப்பாட்டு சுட்டும் தலைவி போர்க்களம் சென்ற தலைவனால் பிரிவுத் துயரம் கொண்டாள். இப்போது நாம் காணப்போகும் குறுந்தொகைத் தலைவி இரண்டாவது ரகம். வேனிற்காலத்தில் பிரியும் போது கார்காலத்திற்குள் மீண்டு விடுவதாய் வாக்களித்த தலைவன் திரும்புவதற்குள் கார் சூழ்ந்து கலக்கமுற்றாள் தலைவி. மழைக்காலம் தொடங்கியதும் முல்லைக்கொடியில் மொட்டுகள் அரும்பின. அம்மொட்டுகளை ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களாகக் கொண்டு கார்காலமே தனது துயர நிலை கண்டு நகையாடுமே என்று தோழியிடம் புலம்புகிறாள் தலைவி. "இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர் இவணும் வாரார் எவண ரோஎனப் பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்குஎயிறு ஆக நகுமே தோழி நறுந்தண் காரே" ---------- குறுந்தொகை 126. பொருள்: இளமைப் பருவம் வீணாவதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை. பொருள் வளம் விரும்பிச் (நசைஇ) சென்றவர் இங்கும் (இவணும்) வரவில்லை. எங்கு இருக்கிறாரோ (எவணரோ)? மழை (பெயல்) முல்லை நிலமெங்கும் (புறம்) முல்லைப் பூங்கொடியில் கொத்துக் கொத்தாக (தொகு) அளித்த அரும்புகளை (முகை) ஒளிரும் (இலங்கு) பற்களாகக் (எயிறு) கொண்டு நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய கார்காலம் (நறுந்தண் கார்) நகையாடுமே தோழி! ("எனது நிலை கண்டு நகையாடுமே!" எனக் கொள்க). தலைவன் வாராத காலம் நீண்டு கொண்டிருக்க மேலும் மேலும் துயர் உருகிறாள். "நான் உயிர் பிழைக்க மாட்டேனோ!" என்று தோழியிடம் மறுகுகிறாள். "மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயின் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே" ------ (குறுந்தொகை 108) பொருள்: மழை மேகம் விளையாடும் குன்று அமைந்த தலைவியின் சிற்றூரில் (சிறுகுடி) கறவைப் பசு தன் கன்றின் இடத்தை (கன்று வயின்) நோக்கிச் செல்கின்றது (படர). அம்முல்லை நிலத்தில் (புறவில்) பசுமையான இலைகளை (பாசிலை) உடைய முல்லைக்கொடியின் தூய்மையான (ஆசு இல் - குற்றமற்ற) வெண்பூக்கள் (வான் பூ) செவ்வானம் தோன்றிய மாலை வேளையில் (செவ்வான் செவ்வி) பூத்திருக்கின்றன. (கார்ப் பருவத்தின் இக்காட்சிகள் என்னை வாட்டுவதால்) நான் உயிர் வாழ மாட்டேன் (உய்யேன்) போல் தோன்றுகிறது தோழி! பிரிவுத் துயரம் வாட்ட தலைவியின் உடலில் பசலை படர்வதும், உடல் மெலிந்து கைவளைகள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் இலக்கிய உலகில் பரவலாய்க் காணக் கிடைப்பவை. பிரிவுத் துயரினால் அவள் உயிர்வாழாள் என்னும் எச்சரிக்கை மணி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாம். மேற்கூறிய குறுந்தொகைப் பாடல் ஒரு சான்று. "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" ------------------------ (குறள் 1151) என்று தலைவி கூற்றாக வரும் பிரிவாற்றாமை குறளும், "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" -----------(நற்றிணை 19; ஈற்றடிகள்) என்று தோழி கூற்றாக வரும் நற்றிணைப் பாடலும் இவ்வகை வருவன. இல்லை இல்லை கார் வரவில்லை : அல்லலுற்ற மனம் ஆறுதல் தேடும். தன் மனமே தனக்கு ஆறுதல் சொல்வதும், தன்னைச் சார்ந்தோர் தேற்ற ஆறுதல் கொள்வதும் உளவியல் மற்றும் உலகியல் நடைமுறை. பொய்யான தேறுதல் கூட மெய்யான ஆறுதல் தரும். அவ்வாறே குறுந்தொகைத் தலைவியொருத்தி, "கொன்றை மரம் சூழ்ந்த காடு புதிதாய்ப் பூத்துக் குலுங்கி கார்காலத்தை அறிவித்தாலும் நான் நம்பப் போவதில்லை. கார்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற என் தலைவன் பொய் சொல்வதில்லை" என்று அரற்றுகிறாள். பிரிவாற்றாமையின் வலி அவளுக்குதானே தெரியும்! "..............புதுப்பூங் கொன்றைக் கானம் கார்எனக் கூறினும் யானோ தேறேன்அவர் பொய்வழங்கலரே" ------------------------ குறுந்தொகை 21 தன்னைத்தானே தேற்ற முயன்றும் தேறாத மனதுக்குத் தேர்ந்து தெளிந்த நட்புதானே மருந்து! ஆங்கே இடுக்கண் களைய தோழி முற்படுகிறாள். "மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார்என மதித்தே" -------------------- குறுந்தொகை 66 பொருள்: பரந்த அடியினையுடைய (தடவுநிலை) கொன்றையானது, ஏதும் விளையாத கற்கள் நிறைந்த பாலை நிலம் (கல்பிறங்கு அத்தம்) சென்ற தலைவன் திரும்பி வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வரும் முன்பே (சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை), உறுதியாகப் (மன்ற) பேதலித்தது (மடவ). கொம்புகளில் சேர்ந்த கொடி போல் நெருக்கமாய், சரம்சரமாகப் (நெரிதர) பூத்துக் குலுங்கியது (இணர் ஊழ்த்த). காலமல்லாத காலத்தில் பெய்த மழையினை (வம்பமாரி) கார் என மதித்ததால் இப்பேதைமை கொன்றைக்கு ஏற்பட்டது. தலைவியைத் தேற்றுவதில் ஐங்குறுநூறில் வரும் முல்லை நிலத் தோழியும் சளைத்தவளா என்ன! "ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் தகையெழில் வாட்டுநர் அல்லர்" ------------------ ஐங்குறுநூறு 462 பொருள்: காரணமின்றிப் பெய்யும் மழை (ஏதில பெய்ம்மழை) கண்டு கார்காலம் என மயங்கிய பேதையான கொன்றை பூத்த நிலை (கொன்றைக் கோதை நிலை) நோக்கி நீ வருந்துவதால் (நின் கலிழ்வே) என்ன பயன் (எவன் இனி), மடந்தையே? உன்னிடம் அமைந்த (நின் வயின்) மேதகு அழகினை (தகை எழில்) அவர் வருத்துபவர் அல்லர். அவன் வருவான் தோழி! தலைவியை மேலும் தேற்றுகிறாள் தோழி. "இனையல் வாழி தோழி எனையதூஉம் நின்துறந்து அமைகுவர் அல்லர்" ------------------ ஐங்குறுநூறு 461. பொருள்: அழாதே! (இனையல்). நீ நீடூழி வாழ்க, தோழி! என்ன நடந்தாலும் (எனையதூஉம்) உன்னை மறந்து (நின் துறந்து) வாழ மாட்டார் (அமைகுவர் அல்லர்). கார் வந்த பின்பும் தலைவன் வாராது சிறிது காலம் தாழ்த்தியமைக்குக் காரணமும் ஊகித்து இயம்பலானாள் ஐங்குறுநூறு காட்டும் தோழி. "புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய வாராது அமையலோ இலரே நேரார் நாடுபடு நன்னலம் தரீஇயர் நீடினர் தோழிநம் காத லோரே" ------------------ ஐங்குறுநூறு 463. பொருள்: புதர்களில் பூத்திருக்கும் நறுமணம் பொருந்திய மலர்களை (புதல்மிசை நறுமலர்) அழகுறத் தொடுத்து (கவின் பெறத் தொடரி) உன் நலம் மிக்க கூந்தலில் மேலும் அழகு பெறச் சூட (தகைகொளப் புனைய) வாராது இருக்க மாட்டார் (வாராது அமையலோ இலரே). தோழி! பகைவர் நாட்டின்கண் உள்ள (நேரார் நாடுபடு) நற்செல்வங்களைக் கொணரும் பொருட்டே (நன்னலம் தரீஇயர்) காலம் நீட்டித்தார் காதலர். கார் வந்தது காதலனும் வருகிறான்: மெல்லியலார் தலைவியும் தோழியும்தான் வருந்துவர் என்றில்லை. தலைவியின் துயர் இத்தன்மையது என உணர்ந்த தலைவனும் தலைவிக்காகப் பெரிதும் வருந்துகிறான். "எவன்கொல் மற்றுஅவர் நிலைஎன மயங்கி இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம் இதுநற் காலம் .................." ------------- அகநானூறு 164; 8-10. பொருள்: அவர் நிலை என்னவாயிற்றோ (எவன்கொல்) எனக் கலக்கமுற்று நீர் வழியும் (இகுபனி உறைக்கும்) கண்ணோடு அங்கு அழுது (இனைபு ஆங்கு) துன்பத்துடன் வாழ்பவள் (இன்னாது உறைவி) தனது முந்தைய பொலிவினைப் (தொல்நலம்) பெறும் நற்காலம் இது (அஃதாவது அவன் கார்காலத்தில் திரும்பி விடுவதாய் முன்பு வாக்குரைத்தமையால் அது அவளுக்கு நற்காலம்தானே!). போர் முடிந்து அல்லது கார்காலத்திற்காகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு தலைவன் தனது முல்லை நிலம் நோக்கித் தேரில் புறப்படுகிறான். அப்போது தேரினை விரைவாய்ச் செலுத்துமாறு தேரோட்டியைப் பணிக்கிறான். அவன் அவசரம் அவனுக்கு! "அரும்படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க ஏமதி வலவ தேரே மாமருண்டு உகளும் மலரணிப் புறவே" ------------------ ஐங்குறுநூறு 485. பொருள்: பிரிவினால் பெரிதும் துயருற்ற அவளது அவலம் (அரும்படர் அவலம்) தீரவும், தொய்வுற்ற அவளது பெருந்தோள் நலம் பெறுமாறு யான் அவளை அணைக்கவும் (முயங்க) விலங்கினங்கள் மருண்டு திரியும் (உகளும்), மலர்களால் பொலிவு பெற்ற முல்லை நிலத்தின் (புறவு) வழியே தேரினை ஏவுவாயாக (ஏமதி), தேரோட்டியே (வலவ)! அவ்வாறு செல்லும்போது சோலைப் பூக்களில் கலவயின்பம் கொள்ளும் வண்டினங்கள் தேரின் மணியொலியில் கலக்கமுறும் என அஞ்சி அந்த மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்துத் தேரினைச் செலுத்துகிறான். இதுவயின் தலைவியைக் கண்டடையச் செல்லும் தலைவனின் மனநிலையைப் படம் பிடிக்கிறான் புலவன். பிறிதின் நோய் தந்நோயென உணரும் சூழலும் அது. "பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" ----------------- அகநானூறு 4; 10-12. பொருள்: பூத்துக் குலுங்கும் சோலையின்கண் (பூத்த பொங்கர்) தன் துணையோடு இணைந்த (வதிந்த), மலரின் மகரந்தத்தை உண்ணும் பறவையாகிய (தாது உண் பறவை) வண்டு கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி தேரின் மணியிலுள்ள நாவினைக் கட்டி வைத்த (மணிநா ஆர்த்த) மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் (மாண்வினைத் தேரன்). மேற்கூறிய பாடலில், "இத்தகைய கருணையுள்ளம் கொண்டவன், நீ பிரிவாற்றாமையால் வாட எங்ஙனம் பொறுப்பான்? அவன் உறுதியாய் விரைவில் வருவான்" என்று தோழி தலைவியைத் தேற்றுவதாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு முந்திய தலைப்பிலேயே இப்பாடல் பொருந்தி அமையும். எனினும் கடந்த காலத்தில் அவனது மேன்மையான செயல்பாடு தற்போது அவனது மாண்பினை முன்னிறுத்துவதால் ஈண்டு இறந்தகாலம் நிகழ்காலமாய் ஆக்கப்பட்டது எனலாம். தோழி கூறுவதாய் உள்ளது மறைக்கப்பட்டு அவளது கூற்றில் உள்ள நிகழ்வே முன்னிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு இக்கட்டுரைக்கு நிறைவுரையாய் அமைவது ஏற்புடைத்தே. கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகத்தினும் பெரிதென வள்ளுவப் பெருந்தகை கூறி அனைவரும் அறிந்ததே. முல்லைத் திணையில் காமத்தில் கார் கொள்ளும் சிறுபாகமும் உணர்ந்து நோக்கற்பாலதே.6 points
-
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை, யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை. இப்படியாக தமிழ் இனத்தின் மாண்பைக் கெடுக்கும் நீங்கள் உண்மையில் தமிழரா கேட்கலாம் தானே! அவர் மத மாற்று குழுவால் மதம் மாற்றப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் இல்லை. சாணக்கியன் ஒரு சிறந்த தமிழ் அரசியல்வாதி. தனது மண்ணில் நின்று அரசியல் செய்கிறார். அவர் தவறு செய்தால் மக்கள் அவரை நிராகரிப்பார்கள். இங்கு அவர் என்ன தவறு செய்தார் என்ற கேள்விக்கு பதிலாக, அவரின் குடும்பம் பற்றி அவதூறுகளை வீசும் கேவலமான கீழ்மட்ட அரசியலை விட சாணக்கியனின் அரசியல் பல மடங்கு மேலானது. மிக இளம் வயதினரான அவர் உணர்ச்சி வசப்படுவதை தவிர்தது தனது அனுபவங்களின் மூலம் பலம் பெற்று தன்னை சிறந்த அரசியல் தலைவராக பரிணமிக்கும் ஆற்றல் அவரிடம் உள்ளது. அதே வேளை இவர் மட்டும் போதும் என்று இருக்காமல் பல இளைஞர்கள் அவருக்கு போட்டியாக அரசியலுக்கு வந்து ஆளுமை கொண்ட அரசியலை செய்வதன் மூலமே வயதானவர்களின் அறளை பெயர்நத அரசியலையும், அதற்கு நிகரான புலம் பெயர்ந்த சுயநலமிகளின் றிமூட் கொன்றோல் அரசிலையும் ஒழிக்க முடியும்.6 points
-
நுண்ணுயிர் எதிரிகளை (antibiotic) நீங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். முதலில்: அன்ரிபையோரிக் தேவையா என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இரண்டாவது: தேவையெனின் எந்த அன்ரிபையோரிக் உங்கள் நாட்டில் பரவலாகக் காணப்படும் பக்ரீரியா வகையைக் கட்டுப் படுத்துகிறது என்பதையும் உங்கள் மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க உதவும் Antibiograms போன்ற தகவல்கள் மருத்துவரிடம் தான் இருக்கும். இது இரண்டும் இல்லாமல் பயன்படுத்தும் அன்ரிபையோரிக் வேலை செய்யாமல் போகலாம். அத்தோடு கோசான் சொன்னது போல நீண்ட காலப் போக்கில் நுண்ணுயிர் எதிரிகளுக்கான எதிர்ப்பைப் (antibiotic resistance) பரப்பலாம். மருத்துவர் சொல்வதற்கு மேலதிகமாக சில எளிய முறைகள் மூலம் உங்கள் சுவாசத் தொற்றுக்களை உடல் இலகுவாகக் கையாள வைக்கலாம்: 1. உப்புக் கொப்பழித்தல்: ஒரு தேக்கரண்டி (4-5 g) கறியுப்பை இளஞ்சூடான முக்கால்வாசி கோப்பை நீரில் கரைத்து காலை, மாலை gargle செய்து கொப்பழியுங்கள். சாப்பாட்டிற்கு முன்னர் செய்வது சிறப்பு. எங்கள் தொண்டையின் ஆரம்பப் பகுதியில் இயற்கையாகவே இருக்கும் பக்ரீரியாக்கள் தான் வைரஸ் தொற்றின் போது மேலதிக தொற்றைச் சில சமயங்களில் ஏற்படுத்துகின்றன. இவற்றை தற்காலிகமாக வைரஸ் தொற்றின் போது அகற்றும் வேலையை உப்புக் கொப்பழித்தல் செய்யும். 2. சூடான பானங்களையே அருந்துங்கள், தண்ணீராக இருந்தாலும். 3. மெந்தோல் (menthol) எனப்படும் யூகலிப்ரஸ் வாசனையை இரவில் படுக்கும் நேரங்களில் நுகரலாம். இதை விக்ஸ் மணப்பதாலோ அல்லது மெந்தோல் வாசனை ஆவியாக வெளிவிடும் ஈரப்பதன் கூட்டிகளைப் (humidifier) பாவிப்பதாலோ செய்யலாம். 4. உங்கள் வீட்டின் காற்று குளிர்காலத்தில் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அனேக நவீன வீடுகளில் காற்றைச் சூடாக்கி அனுப்புவதன் (forced air) மூலம் தான் வீடு சூடாக்கப் படுகிறது. இந்த காற்றில் இருக்கும் மாசுக்களை அகற்றும் வடிகட்டியை (filter) சாதாரணமாக 3 மாதங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். ஆனால், அதிக சுவாச ஆரோக்கியம் பாதிக்கப் பட்டால் ஒரு மாதத்திற்கு ஒரு வடிகட்டி எனக் குளிர் காலத்தில் மாற்றலாம். இந்த வடிகட்டிகளிலும் 1000 முதல் 1500 mpr (micro particle rating) வரை உடையவை அனேக சுவாசத் தொந்தரவு தரும் மாசுக்களை அகற்றக் கூடியவை. விலை கூட என்றாலும், இவை மூலம் வரும் சுவாச ஆரோக்கியம் விலை மதிப்பற்றது. எல்லோருக்கும் அல்ல - உடற்பயிற்சி செய்து பழகியோருக்கு மட்டும்: 5. காய்ச்சல், உடல் உழைவு இல்லாத தொண்டைக் கரகரப்பு, இரவில் மட்டும் இருமல் என்று இருப்போர் பகலில் மிதமான உடற்பயிற்சி செய்வது சுவாச ஆரோக்கியத்திற்கு நல்லது. எங்கள் உடல் இயங்கும் போது தசைகளில் இருந்து வெளிவிடப் படும் சில சுரப்புகள் எங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு பலம் சேர்ப்பதால் இது நிகழ்கிறது. கொசுறுத் தகவல் இந்த இடத்தில்: மனிதன் உட்பட ஏனைய விலங்குகளுக்கு ஆபத்தான பல வைரஸ்களுக்கு வௌவால் காவியாக இருக்கிறது. ஆனால், வௌவாலுக்கு இந்த வைரசுகளால் தீவிர நோயோ, மரணமோ வருவது மிக அரிது. இதன் ஒரு காரணம், வௌவால் பறக்கும் போது அது தீவிரமான உடற்பயிற்சி செய்வதால், அதன் உடலில் நோய்த் தடுப்பிற்கு அவசியமான சுரப்புகள் பெருமளவில் சுரக்கப் படுவது தான். எனவே, வௌவால் போல இருங்கள்!😎6 points
-
இதை எல்லாம் சிந்திக்க ஒரு தொலை நோக்கு பார்வை வேண்டும் அண்ணா.. அது இந்த மண்ணின் மைந்தர்களால்தான் முடியும்.. வந்தேறிகள் நம்மவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை.. அவர்களுக்கு வெள்ளயளுக்கு வேலைக்கு ஆள் வரக்குடாது அப்பதான் நாங்க டிமாண்ட் வச்சு சம்பளத்தை கூட்டலாம்.. ஆள்தட்டுப்பாடு எண்டாதான் ஊரில இருந்து சகோதரங்கள் மனிசின்ர ஆக்கள எடுத்து அசைலம் அடிச்சு வேலை ஒண்டில சேத்து விடலாம்.. வந்தேறி தெலுங்கனுக்கு தமிழ் நாட்டை பற்றி என்ன கவலை என்று சொல்லுவம்.. அப்புறம் வந்தேறி நாங்கள் ஜரோப்பா பற்றி என்ன..?6 points
-
யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.5 points
-
ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களை கட்டாயமாக போருக்குப் பிடித்து வகைதொகையாகச் சாகடிக்கும் வல்லமை உள்ளவர். மாண்புமிகு என்பதாலேயே அவரது உள்வட்டத்தில் உள்ளவர்கள், மேசைக்கு அடுத்த பக்கம் 40 அடியில் நின்றாலும், அவர் சொல்லுக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் உயரமான மாடிக் கட்டடங்களில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்யவேண்டுமல்லவா! மாண்புமிகு என்பதாலேயே அவர் தான் வெற்றியடைந்ததாக அறிவிக்கும்வரை போரைத் தொடர்வார்! மாண்புமிகு என்பதாலேயே நேட்டோவின் ஆயுத உதவிகளோடு போரிடும் உக்கிரேனை அழித்தாவது விஷேட நடவடிக்கையை முடித்துவைப்பார்!5 points
-
உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான். நான் ஆட்களை பார்ப்பதில்லை உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன் நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரியாவிலோ இது எல்லாம் கனவில் கூட சரிவராது. நன்றி5 points
-
புருஜோத்தமன் தங்கமயில்.... தமிழரசு கட்சியின் பழைய செம்பு போலை இருக்கு. 😂 பல இடங்களில்... அவரின் வா(ஆ)ய்வுக் கட்டுரைகள், சம்பந்தனின் தமிழரசு கட்சிக்கு, முரட்டு முட்டு கொடுப்பதாகவே இருக்கின்றது. 🤣5 points
-
நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரப் படானா பதவி,பிபிசி செய்தியாளர் 15 ஜனவரி 2023, 11:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று, சுமார் மூன்று வாரங்களுக்கு நெடுந்தொலைவு கப்பலில் பயணம் செய்த 15 மீனவர்கள் குழுவில் இவர்கள் இருவரும் இருந்தனர். பொதுவாக மீனவர்கள் கடலில் நாள் கணக்கில் செலவிடுவார்கள் என்பதால் தொடக்கத்தில் இருவரின் குடும்பத்தினரும் பதற்றம் அடையாமல்தான் இருந்தனர். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையே வந்து சென்றும் அவர்கள் திரும்பாதது குடும்பத்தினரை பயம்கொள்ள செய்தது. 2017ஆம் ஆண்டில் கோரத் தாண்டவம் ஆடி மீனவர்கள் இறப்புக்கு காரணமான ஒக்கி புயலின் நினைவுகள் அவர்களின் மனதில் வந்து சென்றன. அதேபோன்ற நிலை எதாவது எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்குமோ என்று அவர்களின் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், இருவரும் ஜனவரி 2ஆம் தேதி வீடு திரும்பினர். தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?14 ஜனவரி 2023 ரொனால்டோவைவிட அதிக சம்பளத்தில் மெஸ்ஸி சௌதி அரேபிய கிளப்புக்கு செல்வதாக தகவல் - உண்மை என்ன?14 ஜனவரி 2023 துணிவு சினிமாவின் மையக் கதையில் என்ன சர்ச்சை? அந்தக் கதை எப்படி உருவானது?14 ஜனவரி 2023 அவர்கள் சென்ற படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் யாருமற்ற தீவில் அவர்கள் ஒதுங்கினர். பல நாட்களை அவர்கள் அங்கு செலவிட்ட நிலையில், இறுதியாக அவ்வழியாக சென்ற பிரிட்டிஷ் கப்பல் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். எப்போது மீட்கப்படுவோம் என்பது குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில், இளநீர் போல, தீவில் கிடைத்தவற்றை வைத்து உயிர் பிழைத்து இருந்துள்ளார்கள் அந்த மீனவர்கள். தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக அவர்கள் க்ரிஷா மோல் என்ற படகில் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால், 7வது நாளில் அவர்கள் படகின் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் படகு கடலுக்குள் நெடுந்தொலைவு செல்லத் தொடங்கியது. இலங்கை படகு ஒன்று வரும்வரை 5 நாட்களுக்கு இந்த நிலை தொடர்ந்தது. “அந்த படகில் இருந்த குழுவினர், நீரின் ஆழம் 8 அடியாக இருக்கும் பகுதிக்கு எங்களின் படகை இழுத்தனர். நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நினைத்து அங்கு நங்கூரத்தை பாய்ச்சினோம் ” என்று பிபிசியிடம் கூறுகிறார் நெமஸ். பட மூலாதாரம்,VIVEK R NAIR படக்குறிப்பு, அகஸ்டின் நெமஸ் இலங்கை படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதால், அப்பகுதி வழியாக செல்லும் இந்திய மீனவப் படகுகளிடம் உதவிக் கோர வயர்லெஸ் செய்தி அனுப்புமாறு இருவருக்கும் அவர்கள் அறிவுறுத்தினர். மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு படகு இவர்களுக்கு பதிலளித்தது. எனினும், எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோரின் படகுகளை கரைக்கு இழுத்து செல்லும் அளவுக்கு அந்த படகின் எஞ்சின் திறன் வாய்ந்ததாக இல்லை. அந்தக் குழுவில் இருந்த க்ரிஷா மோல் படகின் உரிமையாளர், படகின் கியர்பாக்ஸை எடுத்துக்கொண்டு அதை சரிசெய்வதற்காக இந்தியப் படகுடன் புறப்பட்டார். மீனவர்கள் தங்கள் படகை உறுதியாகப் பிணைத்து, அது அலைபாய்வதை தடுக்கும் வகையில், குழுவினர் தங்கள் நங்கூரத்தை விட்டுச் சென்றனர். ஆனால், டிசம்பர் 19ஆம் தேதி ஏற்பட்ட திடீர் காற்றினால் நங்கூரம் ஒன்றின் கயிறு அறுந்தது. மூன்று நாட்கள் கழித்து 2வது நங்கூரத்தின் கயிறும் அறுந்தது. இதனால், படகு மீண்டும் கடலில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. “கடலின் நடுவில் நம்மால் கடவுளை பிரார்த்திக்க மட்டுமே முடியும். அது எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் கூறும் நெமஸ் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் குறித்து நினைத்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார். படகில் இருந்த திசை காட்டும் கருவியை அவர்கள் பார்த்தனர். “29 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு தீவு இருப்பதை ஜிபிஎஸ் எங்களுக்கு காட்டியது,” என்று டேவிஸ் கூறினார். பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் அது அமைந்துள்ளது. பட மூலாதாரம்,VIVEK R NAIR படக்குறிப்பு, எடிசன் டேவிஸ் இதனிடையே தங்கள் படகுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய மரப் படகில் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 9 மீனவர்கள் தீவை நோக்கி சென்றதாக டேவிஸ் தெரிவித்தார். மீதி 5 பேர் தாய்ப் படகிலேயே காத்திருந்தனர். 9 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகு, தீவை அடைந்த பிறகு அவர்களில் இரண்டு பேர் அந்த சிறிய படகை எடுத்துக்கொண்டு தாய்ப் படகில் காத்திருந்த 5 பேரை மீட்பதற்காக திரும்பிச் சென்றனர். ஆனால், அதற்குள் தாய்ப் படகு மேலும் விலகி எங்கோ சென்றுவிட்டது. “ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகுதான் நாங்கள் படகை கண்டுபிடித்தோம்” என்று டேவிஸ் குறிப்பிட்டார். பிறகு அதில் இருந்த ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு தீவுக்குச் செல்ல அவர்களுக்கு 5 மணி நேரம் பிடித்தது. ஒரு வழியாக அவர்கள் 14 பேரும் தீவை அடைந்தனர். இப்போது அவர்கள் முன்பு புதிய சவால் இருந்தது. இருக்கும் குறைந்த அளவிலான பொருட்களை வைத்து அந்தத் தீவில் எப்படி வாழ்வது என்பதுதான் அது. 10 நாட்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கிடையாது. எனவே, இயற்கையின் உதவியை அவர்கள் நாடினர். சமைப்பதற்கு கடல் நீரை பயன்படுத்தினர். தாகமெடுத்தால் தென்னை மரங்களில் இருந்த இளநீரை பருகினர். மழை பெய்யும்போது, பிளாஸ்டிக் கவரை தரையில் விரித்து மழை நீரை அதில் சேமித்து பின்னர் கேன்களில் அடைத்து குடிக்க பயன்படுத்தினர். “சாவை நேருக்கு நேர் சந்திப்பது போல் நான் உணர்ந்தேன். நாங்கள் சரியாக தூங்கவில்லை. மிகவும் சிக்கனமாகவே சமைத்து உண்டோம் ” என்று நெமஸ் கூறினார். எங்களிடம் இருந்த பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துபோகலாம் என்று நாங்கள் பயந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம் , இன்னும் எத்தனை நாட்கள் அங்கு சிக்கி இருக்க போகிறோம் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. பட மூலாதாரம்,AFP ஐந்து நாட்கள் கழித்து, டிசம்பர் 27ஆம் தேதி, அவர்கள் சிக்கியிருந்த தீவில் இருந்து சிறிது தொலைவில் பிரிட்டிஷ் கப்பல் செல்வதை அவர்கள் பார்த்துள்ளனர். பரவசமடைந்த மீனவர்கள், சிவப்பு துணி ஒன்றை மரத்தின் கிளையில் கட்டி தொங்கவிட்டு உதவி கோரியுள்ளனர். “கப்பலில் இருந்த குழுவினரின் கவனத்தை ஈர்க்க எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்றோம். 2 மணி நேரம் கழித்து தண்ணீர் மற்றும் கூடை நிறைய பழங்களுடன் 4 பேர் எங்களை அணுகினர். நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று அவர்கள் கேட்டனர்,” என்று டேவிஸ் தெரிவித்தார். பின்னர், சிறிய படகில் மீனவர்களை அவர்கள் கப்பலுக்கு அழைத்து சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கப்பலில் அவர்கள் குளித்தனர். அவர்களின் உடல்நலத்தை பரிசோதித்த குழுவினர் அவர்களுக்கு பழங்கள், ஆடைகள் போன்றவற்றை வழங்கினர். ஜனவரி 2ம் தேதி, விழிஞ்சம் துறைமுகத்தில் வைத்து மீனவர்களை அந்த குழுவினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் அடையாளங்களை சரிபார்ப்பது மற்றும் இன்ன பிற நடைமுறைகள் முடிய ஒரு நாள் ஆனது. அதன் பின்னர், குடும்பத்தினருடன் அவர்கள் சேர்ந்தனர். “நான் வீடு திரும்பியபோது, என் குழந்தைகள் என்னை கட்டிப்பிடித்து என்ன நடந்தது” என்று கேட்டார்கள் “அவர்களிடன் கூற என்னிடம் விசித்திர கதையே இருந்தது. எத்தனை முறை திரும்ப திரும்ப சொன்னேன் என்று தெரியவில்லை. அந்த தொலைதூர தீவில் நாங்கள் சிக்கித் தவித்தபோது, நாங்கள் வீடு திரும்புவோம் என்று யாரும் நினைக்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார். ” இந்த அனுபவம் தன்னை உலுக்கியதாக கூறும் நெமஸ் இனி குறைந்த தூரத்தில் உள்ள பகுதிகளிலேயே மீன் பிடிக்கப்போவதாக தெரிவித்தார். “இதுதான் என் வேலை, இதுதான் என் விதி” என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c1ew0gd59jeo5 points
-
என்ன அக்கா இனிமேல் என்னை மென்சன் பண்ண வேண்டாம் என என் மேல் ஏரிஞ்சு விழுந்து போட்டு, இப்ப நான் சொன்னதுக்கு பதில் எழுதி, கேள்வியும் கேக்கிறியள் (என்னை கோட் பண்ணாமலே). சரி நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் வெறுக்கவில்லை ஆகவே பதில் போடுகிறேன். ———- நீங்கள் கேட்ட கேள்விக்கு மேலதிகமாக இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். கிளிநொச்சியில் தமிழ் தாய், தந்தைக்கு பிறந்த வாய்பேச முடியாத, காதுகேளாதவரின் இனம் என்ன? சரி இனி பதிலுக்கு வருவோம். நம் இன அடையாளம் என்ன என்பது பெரிதும் நாம் எம்மை பற்றி எவ்வாறு உணர்கிறோம் என்பதில் தங்கியுள்ளது. அடுத்து சூழ உள்ளோர் எம்மை எப்படி உணருகிறார்கள் என்பதில் உள்ளது. தாய்மொழி (mother tongue) வேறு, முதன்மை மொழி (primary language) வேறு. பலசமயம் இவை இரெண்டும் ஒன்றாக இருந்தாலும், எப்போதும் அப்படி இருக்க வேண்டியதில்லை. நீங்கள் யாரும் ஞான குழந்தைகளிடம் டீல் பண்ணினீர்களா? நானறிய யாரும் பிறந்தவுடன் இரு மொழிகளையும் கதைப்பதில்லை. ஒரு மொழியை கூட கதைப்பதில்லை. குழந்தை வளரும் வீட்டு சூழலை பொறுத்து அதன் தாய் மொழி அடையாளம் விருத்தி அடைகிறது. இதுக்கு கொழும்பு போக தேவையில்லை. இங்கே லண்டனில் பிறக்கும் குழந்தைகள் இப்போ, ஆங்கிலமும், தமிழும் புழங்கும் வீட்டில்தான் பிறக்கிறன. 4 வயதில் நேர்சரி போகும் வரை பல வீடுகளில் அவர்களுக்கு இரு மொழி பரிச்சயம் ஏற்படுகிறது. அதன் பின் வீட்டுக்கு வெளியான வாழ்க்கை ஆங்கில மயப்படுகிறது. ஆனால் அப்படி வளர்ந்த பிள்ளைகளிடம் உன் இனம் என்ன (ethnicity) என்ன என கேட்டால் தமிழ் என பதில் சட் என வரும். எவ்வளவு கொச்சையாக தமிழ் கதைத்தாலும், திறமாக ஆங்கிலம் கதைத்தாலும், ethnicity என்ன என கேட்டாலும் யாரும் English என சொல்வதில்லை. தமிழ் என்றே சொல்லுவார்கள். இதுதான் இன அடையாளம். இது எப்படி வந்தது? வளரும் போது வீட்டில் நாம் தமிழர் எமது தாய் மொழி தமிழ் என வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதாலும், அதை இந்த பிள்ளைகள் தன்னிலைகொண்டு (subjective) உணர்வதாலும் வருகிறது. நாளை இந்த பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கு இது சொல்லப்படாவிடில், மொழி தொடர்பு அறுந்தே போய்விடின் - அவர்கள் தாம் தமிழர் என தன்னிலைகொண்டு உணர்வது குறைய தொடங்கும். அப்போ அவர்களின் தமிழ் அடையாளம் படிபடியாக இழக்கப்ப்டும் (ரியூனியன் தமிழர்). ஒரு கட்டத்தில் முழுமையாக இழக்கப்படும் (கயானா, சீ செல்ஸ், டிரினிடாட், தமிழர்). ஆனால் வீட்டில் இந்த மொழி பேசப்பட்டால், நாம் தமிழர் என்பது சொல்லி வளர்க்கப்பட்டால் - தமிழர் அடையாளம் நூற்றாண்டுகள் தாண்டி நிலைக்கும். அம்மா, அப்பா மட்டும் தெரிந்திருந்தாலும் கூட இவர்கள் தம்மை தமிழராகவே உணர்வர் (மலேசியா, சிங்கபூர், மேற்கு). பிரஜா உரிமை (citizenship) : பிரிட்டிஷ் தேசியம் (nationality) : பிரிடிஷ், இங்கிலிஷ் பேரினம் (race): தெற்காசியர். இனம் (ethnicity) : தமிழர் தாய் மொழி (mother tongue) : தமிழ் முதன்மை மொழி (primary language) : ஆங்கிலம். சமயம் (religion): கீறிட்ட இடத்தை விரும்பிய படி நிரப்பவும் இதுதான் இவர்களின் அடையாளங்கள். நாமாக வீட்டில் நீ தமிழன் என்பதை சொல்லி கொடுக்காமல் விட்டு, ஓரிரு வார்த்தை தன்னும் தமிழ் பேச முடியாமல் ஆக்கி, எமது வரலாற்று கடனை மறப்போம் ஆகில்…. அவர்கள் தன்னிலைபட்டு தம்மை தமிழராக உணர மாட்டார்கள் - ஆகவே அவர்கள் தமிழர் அல்ல. என்னது தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெரும்பான்மை ஆங்கில கதைக்கிறார்களா? 🤣 ஆங்கிலம் கலந்து தமிழ் கதைத்தாலும், தாய்மொழி தமிழ், நான் தமிழன் என தன்னிலை கொண்டு உணர்ந்தால் தமிழன். அல்லாமல் என்னதான் மேடையில் தும்பு பறக்க தமிழ் பேசினாலும், வீட்டில் தெலுங்கை பேசி, உன் தாய் மொழி என்ன என கேட்டால் தமிழும், தெலுங்கும் என கூறினால் - அவர் தன்னிலைபட்டு தன்னை தமிழனாக உணரவில்லை என்பதே அர்த்தம் (காமாட்சி நாயுடு). பிகு மதம் ஒரு போதும் இன அடையாளத்தை நிறுவாது. சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டதே சைவம். தம்மை சைவர் என அழைக்கும் பல மொழிமக்கள் இந்தியாவில் உள்ளர். ஆகவே மொழி, அதன் பால் வரும் தமிழன் என்ற தன்னிலை உணர்வு மட்டுமே எமக்கு மட்டும் உரித்தான, ஒரே அடையாளம்.5 points
-
தமிழர்களின் தனித்த ஒரே அடையாளம் எமது, மொழி மட்டுமே. The clue is in the name தமிழ-ர். யார் தமிழர்? கீழ்கண்ட இரு கேள்விகளுக்கும் கீழ்காணும் பதிலை விடையெனின் - அவர் தமிழர். உன் தாய் மொழி என்ன? தமிழ். உனக்கு வேறு தாய்மொழிகள் உள்ளனவா? இல்லை. அவ்வளவுதான். சிம்பிள். பிகு தமிழரின் பெரும்பான்மை மதம் சைவம்/இந்து. சிறுபான்மை மதம் கிறீஸ்தவம். சைவம் மட்டும்தான் தமிழரின் அடையாளம் என்றால் - கிறீஸ்தவ மாவீரர்கள் யாரின் அடையாளத்தை காக்க போராடி மடிந்தார்கள்? ஆகவே சைவம் தமிழரின் அடையாளங்களில் ஒன்று என்றால், கிறிஸ்தவமும் இன்னொரு அடையாளம். இரு மதங்களுமே வெளியில் இருந்து வந்தவை எனவே இரெண்டும் எம் அடையாளம் அல்ல ( எம் அடையாள மதம் தொலைந்து போய்விட்டது). ஆகவே மக்காள், மொழியை இறுக பற்றி கொள்ளுங்கள். போதும் போதும் எனும் அளவுக்கு அதில் அடையாளம் கொட்டி கிடக்கிறது.5 points
-
அனுசன் இப்போ கொஞ்ச மாதங்கள் உதவி திட்டங்களில் இணைந்தவர்.கிருஷ்ண்ணா ஆரம்பத்திலிருந்தே உதவி திட்டம் தான் நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் சொல்லப் போனால் அனுசனை விட கிருஷ்ணாவைப் பார்க்கும் போது கவலையாகவும் இருப்பது ...ஆனாலும் நான் கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவரோடு நேரடியாவே பேசிக் கொள்கிறேன்.எனக்கு யாரையும் பிழை பிடிக்க வேணும் என்ற நோக்கம் அல்ல..அதே நேரம் நாங்களும் சுனாமியோடு ஆரம்பித்து இன்னும் எனது கை கொடுத்துக் கொண்டே இருக்கிறது பையா..இந்த வருடமும் மட்டு மாவட்டதிலிருந்து பல்கலைக்கு போக இருக்கும் ஒரு மாணவியின் கல்விச் செலவை ஏற்று இருக்கிறேன்.நன்றி.5 points
-
அனுஷ்கான் இல்லை அனுசன். கான் ஐ சேர்த்து விட்டீர்களே. உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா மதத்துக்கு மாறி விட்டினம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர். ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது. இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை. இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள். அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை. இரண்டாமவர் அனுசன். அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அம்மா மட்டும் தான். இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார். இவர்கள் சைவ குடும்பம். வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர். இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது. உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள். உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள். உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது. இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம். நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது. ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள். அதில் குறை எதுவும் இல்லை. தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது. அது அவர்களின் பெரும்தன்மையே.5 points
-
நானும் இப்பிடி அஞ்சாறு சப்ரைஸ் டெலிவெரி ஊருக்கு அனுப்பலாம் எண்டு யோசிக்கிறன்..😂5 points
-
பிரேமம் கொண்டு, மணியை எடுத்து, கஜேந்திரனை நினைத்து, லிங்க தரிசனத்துடன், மாவை காணிக்கையாக்கி வழிபட்டால், விக்கினங்கள் விலக கூடும், சிவஞான சித்தம் கைகூடும், செல்வம் பெருகும் என்ற கணக்கு, இருப்பது போல் படுகிறது. ஆனால் பொன்னார் மேனியனுக்கு அம்பலத்தில் தனியே ஆடுவதுதான் பிடிக்கும் என நினைக்கிறேன்.5 points
-
ஆரம்பத்தில் உணவகத்தில் சமையல்காரனாக வேலை செய்துள்ளேன் (சமைப்பது பிடிக்காத விடயம்). கிட்டதட்ட 130 உணவுப்பதார்த்தங்கள் செய்யப்படும் ஆனால் ஒன்றைகூட சுவை பார்த்தது கிடையாது காரணம் 90% உணவு வகைகள் மேலைத்தேய உணவுவகைகள். எம்மவர்கல் மட்டும் பந்தா காட்டுவதில்லை, சில மேற்கத்தையவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை. தமது இறைச்சியினை எவ்வாறு சமைக்க வேண்டும் என ஒன்றை தெரிவு செய்வார்கள் அவ்வாறே சமைத்து கொடுத்தாலும் இறைச்சியினை வெட்டிபார்த்துவிட்டு சண்டை பிடிப்பார்கள், தமது தவறு என காட்டாமல் மற்றவர்கள் மேல்தான் தவறு என்று நிற்பார்கள், சில சமையல்காரர்கல் பதிலுக்கு சண்டை பிடிப்பார்கள். காரனம் அவர்கள் நிலை சரி என்பதுடன் நேரம் வரையறுக்கபட்டதாக இருக்கும், ஒரு மேசையில் 2 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் 20 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் அனைத்து ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ஒரு உணவு ஆறிவிடும். என்னுடன் வேலை செய்த சில சமையல்காரர்கள் இறைச்சியினை கத்தியால் மெல்லிய அளவில் கீறி சரிபார்ப்பார்கள் ஆனால் அது அவசியாமாக இருக்காது எனென்றால் தொடர்ச்சியாக வேலை செய்யும் போது இறைச்சியினை கரண்டியினால் பிடிக்கும்போதே உணர முடியும் சரியாக சமைக்கப்பட்டுள்ளதா என. தற்போது அந்த உணர்திறன் போய்விட்டது. வேகமாக சமைக்க சில விடயங்களை கையாளுவார்கள், அந்த இறைச்சி சுவையில்லாமல் வெறும் இறப்பர் மாதிரி இருக்கும். சமையல் கூடம் எப்போதும் ஒரு போர்க்களம் போல இருக்கும், இதில் இப்படி தேவையில்லாமல் நேரம் விரயம் ஆக்கும் குழப்பகாரர்களை கண்டால் சமையல்காரர் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். பல மேசைகளுக்கான உணவு பதார்த்தங்களுக்குள் ஒற்றுமையாக உள்ள பதார்த்தினை சேர்த்தே சமைப்பார்கள் (நேரத்தினை சேமிக்க) இப்படி பல விடயங்களையும் அதே நேரம் நேரத்தினையும் கணக்கில் கொள்ளவேண்டும், ஒரு பதார்த்தத்தினை மறந்தாலும் கடினமாகி விடும். பொதுவாக ஒரு தடவை ஓடர் இரசீதினை பார்த்தால் திரும்ப திரும்ப பார்க்க விரும்ப மாட்டார்கல் நேரம் விரையமாக்கப்படும் என்பதால். இந்த வேலையில் சேருவதற்கு முன்னர் எனது நினைவாற்றல் படுமோசமாக இருந்தது. எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால். எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும். அதே போல்தான் சம்பளத்திற்கு வேலை செய்யும் சமையல்காரன் கூட எந்த வகையான அழுத்தத்திலும் சுவையான உணவினை வழங்கவே முழு மூச்சாக முயற்சிப்பான்.5 points
-
5 points
-
கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது. https://www.donneesmondiales.com/europe/norvege/inflation.php https://www.donneesmondiales.com/europe/danemark/inflation.php ஜேர்மனியும் ஐரோப்பாவுடன் இணையாவிட்டால் இந்த நிலைதான் இருந்திருக்கும். சுவிஸ் மட்டும் விதிவிலக்கு. அதற்கு வேறு காரணங்கள் உண்டு. வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது. ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம்.5 points
-
தாகம் எடுக்கிறது என்பதுக்காக நீங்கள் ஒரு நாளைக்கு 5 போத்தல் தண்ணி உங்கள் சொந்த காசில் வாங்கி குடித்தாலும் அதுவே பெரும் திருட்டுதான். எங்கோ ஒரு ஏழைக்கு இலவசமாக இந்த பூமியில் இருந்த தண்ணீரை அவர்களுக்கு கிடைக்க விடாது தடுத்து தண்ணீரை தனிநபர் சொத்தாக்கி உங்களை என்னைப்போன்ற பணக்காரவர்க்கத்தின் அடியாட்கள் ஆகிய எங்களை வடிக்கையாளராக்கி. பணம் பார்க்கும் ஆதிக்க வெறியர்களுக்கு நாம் துணையாக நின்றுகொண்டே.... திருட்டு பற்றி.... திருநீறு பூசிய நெற்றியுடன் நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். கடந்த 3 மாதத்தில் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் 200 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து இருக்கிறார் இந்தளவு பணத்தை உலகில் இதுவரை இழந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த 200 பில்லியனும் எலன் மாஸ்கின் குடும்ப சொத்தில்லை ..... கடின உழைப்பே உயர்வை தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு அமெரிக்க நடுத்தர ஏழை வர்க்க மக்கள் இரவுபகலாக உழைத்து ஓய்வூதிய காலத்துக்கு என்று ஒதுக்கி சில முதலீட்டு நிறுவங்களில் முதலீடு செய்த பணம் ஆகும். பணம் ஒன்று நீர் அல்ல நீராவியாகி மேலே போவதுக்கு. இன்று அமெரிக்க உழைப்பாளிகளின் 200 பில்லியன் டாலர்கள் பணக்கரவர்க்கத்தின் கைகளுக்கு ...... வெறும் வார்த்தைகளான டெஸ்லா லாஸ்ட் 80% ( ) என்பதோடு கைமாறி இருக்கிறது. எம் கண்முன்னே நடந்த இந்த திருட்டுக்கு யார் குற்றவாளியாகி உள்ளே போவார்கள்? அமெரிக்க சடடத்தின் பிரகாரம் குற்றவாளியாக உள்ளே செல்லவேண்டும் என்றால் நான் இந்த யாழ்களத்தில் உண்மையாக எழுதிய சில கருத்துக்களே போதும். ராஜரட்ணம் என்ன குற்றம் செய்தார் .......அது உண்மையில் குற்றமா இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வால் ஸ்ட்ரீட் பற்றி குறைந்தது 20-25 புத்தகம் வாசிக்க வேண்டும். அல்லது இனொருவரது பணத்தை பறிக்காமல் எப்படி பங்கு வர்த்தகம் செய்வது என்ற உங்கள் சூட்ஷமத்தை தெளிவாக எமக்கும் சொல்லி தரவேண்டும். ராஜரட்ணத்தை சிறைபிடித்த போது கொழும்பில் சிங்கள மக்கள் அமெரிக்க துராலயம் முன்பு அவரை விடுதலை செய்ய சொல்லி ஆர்பாடடம் செய்தார்கள். ஏன் என்று நீங்கள் தெரிந்துகொள்ள முயன்றால் ஏன் குற்றவாளி ஆக்கப்படடார் என்பதை பாதியாவது புரிந்துகொள்வீர்கள். (ராஜரட்ணம் செய்த மாபெரும் குற்றம் என்ன? என்று கேட்டிருந்தேன் பதில் எழுத உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறன் இன்று புதுவருடம் வேறு) இந்த கருத்தை உங்கள் எண்ண பாட்டில் ஏதும் மாறுதலை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பில் நான் எழுதவில்லை. பிடித்த கொப்பில் நின்று தொங்குவதை கைவிடுவது யாழ் களத்துக்கே இழுக்கு என்றுதான் நான் எழுதுவதையே குறைத்துக்கொண்டேன். கருத்து பரிமாற்றம் என்பதுக்கு நாம் துளியும் இடம் கொடுக்கலாகாது. கருது திணிப்பில் கவனமாக இருக்கவேண்டும். புதுவருட நாளில் எதையாவது எழுதிடலாம் என்று தோன்றியதால் எழுதினேன் எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணீர் இன்று ஓர் இரு பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஆனதை நேரில் பார்த்த தலைமுறை நாம் காற்றும் சூரிய ஒளியும் எமக்கு கிடைக்கிறது வரும்கால சந்ததிக்கு அதுக்கும் வரி வருமோ தெரியாது காற்றை உள் இழுத்து சுவாசத்தை ஆரோக்கியமாக்கி பிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோரும் கொஞ்சம் ஆரோக்கியமாக வாழுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள் !5 points
-
ட்ரம்ப் விடயத்தில் ஒன்று சொல்வார்கள்: "இதோ ட்ரம்ப் அரசியல் நாகரீகத்தின் அடிமட்டத்தைத் தொட்டு விட்டார் என்று எல்லோரும் நினைக்கும் போது, அவர் இன்னொரு காரியம் செய்து, அந்த அடியும் புட்டுக் கொண்டு இன்னொரு அடிமட்டத்திற்கு இறங்கி விடுவார். இப்படி புதிய அடிமட்ட நிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்!"😂 அதே போன்ற நிலை தான் புலத் தமிழர்களுள் ஒரு பிரிவினரது கருத்துகளில் வெளிப்படும். இந்த உக்ரைன் -ரஷ்ய பிரச்சினை பற்றிய உரையாடல்களில், சில புலத் தமிழர்கள் "he ain't so bad" என்ற வரையறைக்குள் ஹிற்லரையும் கொண்டு வந்து விட்டார்கள். இதை யாழில் மட்டுமன்றி யாழிணையத்திற்கு வெளியேயும் காண்கிறேன். இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன். காலங்காலமாக யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை! இப்படிப் பட்ட ஒரு மனநிலை மாற்றத்தால் பிலிப்பைன்ஸ் அடைந்த பலனை கடந்த ஆண்டுத் தேர்தலில் உலகம் கண்டது.4 points
-
ஆலமர நிழலில் இளைப்பாற இம்முறை புத்தனை முந்திவிட்ட சித்தன் சிவன்… நான் அறிய இந்த இடத்தில் எந்த சிலையும் இருந்ததில்லை. இம்முறை கண்டதால் ஒரு ஆச்சரியம்..4 points
-
புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ. 😀4 points
-
உங்களுக்கென்ன? அமெரிக்கா.......... நீங்கள் எட்டத்த இருந்து உள்ள நாடுகளுக்கு சொட்டிப்போட்டு இருப்பியள். சாகிறது இன்னல்களை அனுபவிக்கிறது முழுக்க அப்பாவிச்சனங்கள். கேட்டால் அரபு வசந்தம்,அப்பு வசந்தம் ஆச்சி வசந்தம் உக்ரேன் வசந்தம் எண்டுவியள். கொஞ்சம் நில்லுங்கோ... உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள். ஆனால் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் உக்ரேன் ஆதரவாளர்கள்.மனித உரிமையை மதிப்பவர்கள். மனிதாபிகள். ஆனால் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிப்பவர்கள். இதன் மூலம் நீங்கள் சார்ந்தோர்தான் போரை விரும்புகின்றீர்கள். அப்பாவிகள் உயிரிழப்பை விரும்புகின்றீர்கள். அமைதி வழியில் போரை நிறுத்த சிந்திக்காதவர்கள். அது பற்றியே கருத்தெழுதாதவர்கள். போர் நடப்பது ரஷ்யாவில் அல்ல.உக்ரேனில். அழிவு யாருக்கு???4 points
-
போங்க போய் பிள்ளைகளையாவது சொல்வதை புரிந்து கொள்ளமுடிபவர்களாக வளருங்கள். நன்றி 🙏4 points
-
4 points
-
அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆணை தந்தை செல்வாவின் இறுதிப் பிரகடணம் ஐந்து காரணங்களுக்காக "1977" ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருடத்திலேயே இலங்கையின் இரு முக்கிய சிங்களக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையில் தமிழருக்கு இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டன. இந்த வருடத்திலேயே தந்தை செல்வா இலங்கைத் தமிழருக்கிருக்கும் ஒரே தெரிவு சுதந்திரமான தனிநாடு மட்டுமே என்று பிரகடணம் செய்திருந்தார். இந்த வருடத்திலேயே இலங்கைத் தமிழர்கள் தனிநாட்டிற்கான தமது விருப்பத்தினை ஏகமனதோடு தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இந்த வருடத்திலேயே ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பொலீஸ் ராணுவ அமைப்புக்களையும், காடையர்களையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த வருடத்திலேயே தமிழ் ஆயுத அமைப்புக்கள் அரச ராணுவத்திற்கெதிரான தமது ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. இது ஒரு தேர்தல் ஆண்டாகும். இந்த வருடத்திலேயே சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்பின் மூலம் நடைமுறைக்கு முரணாக தனது 5 வருட ஆயுட்காலத்தை இன்னும் இரு வருடங்களால் நீட்டித்து, ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்த ஆண்டு. ஜெயவர்த்தனாவிற்கு சிங்கள மக்களிடையே அதிகரித்துவரும் செல்வாக்கினைக் கண்ணுற்று அச்சமடைந்த சிறிமாவோ, தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாராளுமன்றத்தில் இவ்வின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அம்மக்களின் குறைகளையும், தேவைகளையும் அறிந்துகொள்ள கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பினை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடனேயே பார்த்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழ் மக்களால் தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி ஒன்றுதான். அது தம்மை ஒருவிடுதலைப் போராட்ட அமைப்பாக உருவாக்கி தனிநாட்டிற்கான வரைபினை வரைவது மட்டும்தான், நீங்கள் சிறிமாவின் கூட்டத்தில் பங்கேற்க எந்தத் தேவையுமில்லை என்று அவர்கள் வாதாடினர். தமிழ் இளைஞர் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எந்தவொரு அரசியற் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாதென்றும், தனிநாட்டினை உருவாக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை இந்தப் பிரச்சினையினை தந்தை செல்வாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. சுமார் 79 வயது நிரம்பிய, அனுபவம் மிக்க சிவில் வழக்கறிஞரான தந்தை செல்வா தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களிடம் பின்வருமாறு கூறினார்.4 points
-
அதிகாரிகள் தமது கடமைகளை செய்திருக்கிறார்கள் இனி நீதி, சட்டம், பதவி என பல படிமுறைகளை தாண்டணும். அதையும் மீறினால் மக்களின் தீர்ப்பு தேர்தலில் சொல்லப்படும். இதைத் தான் ஜனநாயகப்பண்பு என்கிறோம்.4 points
-
சீ சீ சாராயத்தை வாங்கி தந்து கள்ளவாக்கு போடச் சொல்லி கரைச்சல்படுத்தலாம்.4 points
-
ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பிறகு கொஞ்சக்காலம் போக, 1935இல் தமிழ்நாட்டில, பச்சையப்பன் கல்லூரியில கூட்டம் வைச்சத் தமிழ் அறிஞர்கள் தையிலதான் தமிழருக்கு புதுவருசம் எண்டு முடிவெடுத்ததா திரும்பவும் கொஞ்சப்பேர் கதைக்க வெளிக்கிட்டினம். பாரதிதாசன் எண்ட கவிஞர் சொன்ன நாலு வரியையும் வைச்சுக் கொண்டு சித்திரையல்ல புதுவருடம், தை ஒன்றே தமிழரின் புதுவருசம் என்று கம்பு சுத்தத் தொடங்கிட்டினம். சித்திரையில புதுவருசம் கொண்டாடுறவன் முட்டாள் என்று நக்கல் வேறை. அதைப் பாத்து என்ர நாட்டில உள்ளவங்களும் இந்த விசயத்தை ஒவ்வொரு வருசமும் கதைக்கிற விவாதப் பொருளாவே மாத்திட்டாங்கள். தைப் பொங்கலுக்கு பால் பொங்குதோ இல்லையோ, உவங்கள் பொங்கல் உந்த விவாதப் பொங்கலை வைக்க மறக்கிறேல்லை. உந்தப் பிரச்சினையைக் கெட்டியாப் பிடிச்சுக் கொண்ட தமிழர்களின் கட்டுமரம் கலைஞர் தாத்தாவும் தன்ர விழுந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தலாமெண்டு பிளான் பண்ணி 2008 இல் இனிமேல் தை 01ம் தேதிதான் தான் புதுவருசம் எண்டு சட்டமே போட்டுவிட்டார். என்ன பிரயோசனம்? மூன்றே வருசத்திலேயே திரும்பப் பதவிக்கு வந்த ஜெயலலிதா பருத்தி மூட்டை கோடவுனிலயே இருக்கட்டும் என்று சொல்லி, சித்திரையில்தான் புதுவருசம், தையில இல்லையென்று சொல்லிப் போட்டா. நாட்டாமை தீர்ப்பை மாத்து எண்டு சிலர் சத்தம் போட்டாலும் ஒண்டுமே செய்ய முடியேல்லை. ஆனால் கட்டுமரம் ஐயாவுக்கு முன்னமே, 90களில ஈழத்தில பொடியளும் தை மாதம்தான் தமிழருக்கு புதுவருசம் தொடங்குதெண்டு அறிவிச்சவை எண்டு என்ர கூட்டாளி சொல்லுறான். ஆனால் அதையும் எல்லாரும் பின்பற்றினதாத் தெரியேல்லை. வழமையா எங்கடை ஆக்களுக்கு தாங்கள் நினைச்சதைச் செய்ய முடியாமப் போனா அதை யாரிட்டையாவது புலம்புறதுதானே வழமை. அதுதான் கொஞ்சக் காலமா உவங்கள் எல்லாரும் சமூக வலைத்தளத்தில ஒவ்வொரு வருசமும் வம்புப் பொங்கல் வைக்கிறாங்கள். நானும் உந்த இரண்டு பக்கமும் பேசி ஒரு முடிவுக்கு வருமெண்டு இவ்வளவு காலம் இருந்து பாத்தால் ஒரு முடிவையும் உவங்கள் எடுக்கிறதாத் தெரியேல்லை. இந்தப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, இப்ப கொஞ்சக் காலமா தமிழ்நாட்டில எப்பிடியாவது தாமரையை மலரச் செய்ய வேணும் எண்டு வேட்டியை மடிச்சுக் கொடுக்குக் கட்டிக் கொண்டு திரியுற கும்பல் கொஞ்சநாளா தைப்பொங்கல் இந்துக்களின் பண்டிகை எண்டு புதுசா ஒரு போர்த்தேங்காயை உருட்டி விளையாடுறாங்கள். அதுக்கு இலங்கையில இருந்தும் புலம்பெயர் நாட்டில இருந்தும் கனபேர் முண்டு குடுக்கிறாங்கள். உந்தக் காவி கட்டுற பாவியள் ஈழத் தமிழரை தங்கட வெறிக்கு ஊறுகாயா பாவிக்கிறாங்கள் எண்டு சொன்னாலும் இவங்கள் கேக்கிறாங்கள் இல்லை. உவங்கள் எல்லாருக்கும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு. உந்த இந்திய சங்கிகள் செய்யுற ஆக்கினை போதாதெண்டு இப்ப அவங்கட வாலைப் பிடிச்சு தொங்கிற ஈழத்து சங்கிகள் கொஞ்சபேர் இலங்கையில காலம் காலமாக தைப்பொங்கல் கொண்டாடுற சில கிறிஸ்தவ சகோதரங்களை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாங்கள். எங்கட தைப்பொங்கலை இவை ஏன் கொண்டாடுகினம் என்று Facebookஇல பிராது குடுத்துத் திரியுறாங்கள். இது தமிழரின்ர, குறிப்பாச் சொன்னால் உழவர் திருநாள், மதம் சார்ந்த பண்டிகை இல்லையடா என்று சொன்னால் குறுக்கால போவார் காதிலையும் வாங்கிறாங்கள் இல்லை. இது போதாதெண்டு இப்ப புதுசா ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறாங்கள். இந்த முறை இலங்கையில 15ம் திகதிதான் தைப்பொங்கல் வருகுது, அதெப்படி கனடாக்காரர் 14 ம் திகதியே பொங்கலைக் கொண்டாடினவை எண்டு ஒரு தமிழ் இணைய இதழ் ஆசிரியர் கேட்டிருக்கிறார். உடன நிறையப்பேர் அங்க வந்து கும்மியடிச்சு கனடாக்காரரை, குறிப்பாச் சொன்னா கனடாவில இருக்கிற ஐயர்மாரை குற்றவாளிக் கூண்டிலையும் ஏத்தி விட்டிருக்கினம். உது ஐயர்மார் செய்யுற விளையாட்டாம். தங்கட விருப்பத்துக்கு தேதிகளை மாதத்தில் சனத்தை ஏமாத்திக் காசு பறிக்கிறாங்களாம். அந்தப் பதிவில ஒருத்தர் உந்தப் தைபொங்கல் நாள் எப்பிடி மாறுதெண்டு பெரிய விஞ்ஞான விளக்கமே குடுத்திருந்தார். இந்திய பஞ்சாங்க நேரக் கணக்கீட்டுப்படி சூரியன் ஒவ்வொரு வருசமும் மகர ராசிக்குள்ள நுழைய 20 நிமிசங்கள் பிந்துறாராம். அதாலை, 72 வருசத்தில சூரியன் ஒருநாள் பிந்தித்தான் மகர ராசிக்குள்ள நுழைவாராம். இதுவரை, 1934 இல இருந்து 2007 வரை ஜனவரி 14 இலதானாம் பொங்கல் வந்தது. 2008 – 2081 வரையும் ஜனவரி 15இலதானாம் பொங்கல் வரும். ஆனால் இதில என்ன பகிடி எண்டால் இவர் சொன்ன 2007இல் இலங்கையில 14இல தைப்பொங்கல் வரேல்லை. 15இலதான் கொண்டாடினவை. அதேமாதிரி இவர் சொன்னபடி 2009, 2010, 2013, 2014, 2017, 2021 எண்ட ஆறு வருசமும் இலங்கையில அவர் சொன்ன 15ம் தேதி பொங்கல் வரேல்லை, 14ம் திகதிதான் பொங்கல் வந்தது. அதுமட்டுமில்லை, உவரும் மற்றவையும் சொல்லுற மாதிரி இந்த வருஷம் மட்டும் இல்லை இதுக்கு முதலும் இலங்கையில ஜனவரி 15 பொங்கல் வந்த வருசங்களில கனடாவில 14ம் திகதி கொண்டாடுறது வழமை எண்டு இஞ்ச உந்தச் சடங்கு சம்பிரதாயங்களை இறுக்கமா பின்பற்றுற என்ர சொந்தக்காரர், நண்பர்கள் சொல்லிச்சினம். பொங்கல் மட்டுமில்லை, சதுர்த்தி விரதங்களும் ஒருநாள் முந்தி வருமெண்டும் அவை சொல்லிச்சினம். இதுக்குள்ள இரகுநாதர் பஞ்சாங்கம் எழுதுறவை இப்ப கனடாவுக்கு எண்டொரு பஞ்சாங்கக் கணிப்பை எழுதி விக்கிறாங்கள். இஞ்ச உள்ள சனம் அதைத்தான் பார்த்து இப்பிடிக் கொண்டாடுகினமாம். உந்த Facebook போராளிகள் இவ்வளவு நாளும் எங்க படுத்துக் கிடந்திட்டு இப்ப வந்து புதுசா பிரச்சினையைக் கிளப்புறாங்கள் எண்டும் கனடாச் சனம் கேக்குது. மனிசனுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கிற இந்தக் காலத்தில சந்தோசமா தைப்பொங்கலோட வருசத்தைத் தொடங்கலாம் எண்டு பாத்தா, இது தமிழரின் புத்தாண்டு எண்டு கொஞ்சப் பேர், இது இந்துக்களின் பண்டிகை எண்டு கொஞ்சப் பேர், இலங்கையில கிறிஸ்தவர் எப்பிடிப் பொங்கல் கொண்டாடலாம் எண்டு கொஞ்சப் பேர், இலங்கை, இந்தியாவில கொண்டாடுற நாளிலதான் புலம்பெயர் தமிழரும் பொங்கல் கொண்டாட வேணும் எண்டு கொஞ்சப் பேர் மாறிமாறி வழக்கு வைக்கிறாங்கள். எனக்கு இப்ப தைப்பொங்கல் எண்டாலே சீ எண்டு கிடக்கு! இப்ப கனபேரின்ர பிள்ளையளும், வை இஸ் திஸ் கொன்பியூசன் அம்மா எண்டு அம்மாமாரைக் கேக்கினமாம். இதெல்லாத்தையும் பாக்கேக்கை, ஐயோ சாமி தைப்பொங்கலே எனக்கு வேண்டாம் எண்டுதான் நினைக்கத் தோன்றுது. ஐயோ சாமி தைப்பொங்கல் எனக்கு வேணாம்! ஆளாளுக்கு என்னைக் குழப்பினது போதும்!! -வீமன்- https://www.facebook.com/akkampakkam24 points
-
அப்பவும் தலையில அடிச்சு சொன்னனான், கூப்பிடுறீங்கள் கடைசிவரை நின்று நிலைத்தாட முடியுமா உங்களால் என்று? இனி, முடிந்தால் தடுத்துப்பாருங்கோவன். நான் இந்தப்பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டேன்.4 points
-
நல்ல முயற்சி. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.4 points
-
நிறைய யூ டியூப்பார்கள் புலம் பேர் மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்க வெளிக்கிட்டினம்...அவர்களை சொல்லி குத்தமில்லை ...அவர்கள் கேட்டவுடனேயே இங்கேயிருந்து கேட்டு கேள்வி இல்லாமல் காசு அனுப்பிறவர்களை சொல்லோணும். கத்தோலிக்கர்கள் வலிந்து ஒருவரை மதம் மாத்துவதில்லை அவர்களுக்குள் திருமணம் செய்தால் தவிர,யாயினி இணைத்த முதலாவது காணொளியில் இருப்பவர் எனக்கு தெரிந்த வரையில் சுத்த சைவமாயிருந்து அவர்களுடைய தகப்பன் ,தாயை திருமணம் செய்ய ஏதோ கோயிலில் நேர்த்திக் கடன் எல்லாம் வைத்தது...தாயும் சைவம் தான் ...பிறகு மதம் மாறி விட்டார்கள் ...அது அவர்கள் விருப்பம் ...மதமாறின ஒருத்தரும் தாங்கள் காசுக்காய் மதம் மாறினோம் ,வசதிக்காய் மதம் மாறினோம் என்று சொல்லப் போவதில்லை. சைவர்கள் இப்பவும் அந்தோனியார் கோயிலுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் ...இயேசு மேல் அன்பு அதனால் மதம் மாறினோம் என்று சொல்வது சுத்தப் பொய் என்று உங்களுக்கு தெரியும்...மதம் மாறியவர்கள் தங்களுக்குள் அதை வைத்துக் கொண்டு இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை ...மற்றவரை மாத்த வெளிக்கிடும் போது தான் பிரச்சனை வருகிறது. சாணக்கியனது தாத்தா வேண்டுமானால் தமிழ் காங்கிரசை சேர்ந்தவராய் இருந்திருக்கலாம் ...அவருடைய தகப்பன் அப்படி அல்ல ...சாணக்கியனும் மதம் மாறியவர் ,சும்மும் மதம் மாறினவர், அவர்கள் இருவரது சேர்க்கைகள், செய்கைகள்....கூட்டிக் கழித்து பாருங்கோ விளங்கும்...விளங்காத மாதிரி நடிக்க வேண்டாம்மதம் மாற்றுபவர்கள் ஒரு நாளில் மாற்றுவதில்லை ...அதற்கு வீடியோ ஆதாரம் எல்லாம் கேட்க்கிறீர்களே உங்களுக்கே இது சிரிப்பாய் தெரியவில்லை . எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...ஆனால்,தமிழர்களின் அடையாளம் சைவம் என்பதில் உஐதியாய் இருக்கிறேன்...அதை மற்றவர்கள் அழிக்க முற்படும் போது எதிர்ப்பேன் ...மற்றப்படி எந்த மதத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவர்களது விருப்பம்4 points
-
இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !4 points
-
நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்கம்👍🏿👏🏾 பிகு மருத்துவம், அரசியல், பாராளுமன்ற நடைமுறைச்சட்டம், வரலாறு, இராஜதந்திரம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்துறைகளில் தரவுபூர்வமாக நீங்கள் கொடுத்த தகவல்கள் பிறிதொரு படிநிலை, பிறிதொரு படிநிலை (அதாவது வேறலெவல், வேறலெவல்🤣). ஆகவே உங்களுக்கு “அட எப்புர்றா” விருதை வழங்கி கெளரவிக்கிறேன்👏🏾👏🏾👏🏾4 points
-
சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை.. செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…4 points
-
கொஞ்சம் தரவுகளை மட்டும் (facts) பார்போமா? 1. ராஜ் யார்? அமெரிக்க மேன்முறையீட்டு நீதி மன்றில் குற்றம் என தீர்க்கப்பட்ட மனிதர் (fact). 2. அவரிடம் இப்போ இருக்கும் பணம் முழுவதும் கொள்ளை அடித்த பணமா? தெரியவில்லை. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தண்டம் கட்டி விட்டார். இப்போ அவர் வசம் மீதம் இருக்கும் பணம், தவறான வழியில் சேர்த்தது என்று எந்த வழக்கும் இல்லை (fact). 3. ஒருவர் செய்த குற்றத்துக்கு வாழ்நாள் பூராவும் தண்டை அனுபவிக்க வேண்டுமா? இல்லை. குற்றத்துக்கான தண்டனை கிடைத்த பின், அவர் மீண்டும், மீண்டும் அதே குற்றத்துக்காக தண்டிக்க, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க்கப்பட தேவையில்லை (பொதுவான வழமை) . 4. ஆக, ராஜின் பணத்தை நாம் பொதுகாரியங்களுக்கு பெறுவது தவறா? இல்லை - விளக்கம் புள்ளி 2 இல் உள்ளது. 5. ராஜை நாம் எமது சமூகத்துக்குள் வரவேற்பது தவறா? இல்லை. சொல்லப்போனால் இப்படி மனம் திருந்திய முன்னாள் குற்றவாளிகளை ஒதுக்காது, சமூகத்தில் அவர்களுக்கு ஒரு பங்கை கொடுத்து - அவர்களை நல்வழிக்கு இட்டு செல்வது ஒரு சமூகத்தின் கடமை. இதன் மூலம் இவரோ அல்லது வேறு எவரோ இதே குற்றத்தை மீள செய்ய முனைவது தடுக்கப்படும். 6. அப்போ ராஜ் குற்றவாளி இல்லை என வெள்ளையடிக்க தேவையா? ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை. நாமே அரைகுறையாக விளங்கிய சட்டம் பற்றி மேலும் பிழையான தகவல்களை பரப்ப்பி, ஓஜே சிம்சன், அமெரிக்க நீதி முறை, என்று யானை பார்த்த விழிபுலன் அற்றவர் மாதிரி எழுதவும் தேவையில்லை. டெஸ்லாவின் பங்கு விலைச்சரிவையும், insider trading ஐயும் ஒன்றாக போட்டு குழப்பவும் தேவையில்லை( டெஸ்லா விடயத்தில் price manipulation அல்லது insider trading இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை). பங்கு ஏறும், இறங்கும் - எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் பங்கு என்று எதுவும் இல்லை. உலகில் சட்டம் பிழைத்த நிலை (miscarriage of justice) வரும் முதல் நாடு அமெரிக்கா இல்லை. யூகேயில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு வரை போன கேசுகள் உண்டு. அதே போல் நான் நிரபராதி, சட்டத்தில்தான் பிழை என கூறிய முதல் அல்லது கடைசி குற்றவாளி ராஜும் அல்ல. அவர் தனது புத்தகத்தில் தான் நிரபராதி என கூறவும் இல்லை. ராஜ் தன்னை தண்டித்த சட்டம் மறுமலர்ச்சிக்கு (reform) உட்படுத்தபடவேண்டும் என்றே சொல்கிறார். அது அவரின் கருத்து. அதுக்காக குரல் கொடுக்க, போராட அவருக்கு முழு உரிமையும் உண்டு. இவ்வாறு போராட்டங்கள் மூலம் சட்டங்கள் மாற்றப்பட்ட சந்தர்பங்கள் பல உள. இந்த சட்டத்தால், சட்ட நடைமுறையால் தண்டிக்க பட்டவர் என்ற வகையில், அவரின் கருத்துக்கு ஒரு “வாழ்ந்த-அனுபவ” (lived-experience) கனமும் உண்டு. ஆனால் சட்டம், சட்ட நடைமுறைகளை தனிமனித, அல்லது ஒரு குழுவின் கருத்துகள் தீர்மானிப்பதில்லை. இந்த சட்ட மறுமலர்சியை சமூகம் ஏற்றுகொள்ள வேண்டும் - அது சட்ட மூலமாகி, சட்டமாக வேண்டும். இதை அடைய ராஜ் முயலலாம் (முயல்வதாக தெரியவில்லை). ஆனால் அப்படி நிகழும் வரை ராஜ் ஒரு - தண்டனையை அனுபவித்த குற்றவாளி. தொடர்ந்து ராஜை, அவரின் பணத்தை நாம் ஒதுக்க ஒரு அவசியமும் இல்லை, ஏனென்றால் அவர் ஏலவே குற்றத்துக்கு சிறை அனுபவித்து, கேட்ட தண்ட தொகையையும் கட்டி விட்டார். ஆகவே ராஜ் வரட்டும். இதுவரை குற்றமே செய்யாத மகானாக அல்ல, ஒரு தண்டையை பூர்த்தி செய்து, சமூகத்தில் மீள இணையும் பிரசையாக.4 points