தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட பின்பு, கூட்டமைப்பினருடன் காலம் தள்ளுவது இலங்கைக்கு மிகவும் இலகுவாக உள்ளது! இந்தியாவின் நிலையம் இது தான்!
எனவே, கூட்டமைப்புக்கு எதிராகப் புதியதொரு தலைமை உருவாவதை, இலங்கை ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது! குறிப்பாக ஜெயபாலன் போன்றவர்களுக்கு, முஸ்லிம்கள், சில சிங்களவர்களின் 'பின்புல ஆதரவு' பின்னணியில் உள்ளது! அத்துடன் இனப்பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடிய பின்புலமும் இவரிடம் உள்ளது!
அனந்தியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட படம் வெளியானதும், தமிழ்த் தலைமைகளும், இந்திய அவதானிகளும், சிங்களத் தலைமையும் விழித்துக்கொண்டன என்பதே உண்மையாகும்! ஜெயபாலன், நீண்ட காலங்கள் புலத்தில் வாழ்ந்திருந்தாலும், பேராசிரியர் நுஹ்மான், போன்றவர்களுடனும், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடனும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் உருவான அரசியல் வாதிகளுடனும், பல புத்தி ஜீவிகளுடனும் தொடர்புகளைப் பேணியே வருகின்றார்!
ஜெயபாலனுடன் ஒரு பிடிவாதக் குணம் எப்போதும், இவருடன் இணைந்தே பிறந்தது போல உண்டு! இப்போது கூட சிங்களப் புலனாய்வாளர்களுடன் 'சண்டை' பிடித்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்!
எம்மைப்போல அன்றி, இலங்கை அரசு மிக நீண்ட தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகின்றது ஏன்பதைய இந்தக் கைது வெளிக்காட்டி நிற்கின்றது!