தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள்.
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்