சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎
வணக்கம் வாத்தியார்.....!
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும்
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டிடாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்.
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னனும் நானே மக்களும் நானே மரம் செடி கொடிகளும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ்க ........!
----மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா-----