இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்..
குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ???
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா
இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா
பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த
வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா
கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப்
பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா
முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம
மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா
சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா
நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா
பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப்
போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா
நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா
ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா
விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது
சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா
தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால்
இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா
நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப்
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா
பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான்
பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா
பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே
ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.