வணக்கம் வாத்தியார்.....!
ஆண் : விளக்கு எதற்கு பானு
பெண் : எனக்கு இருட்டு பிடிக்கலை
ஆண் : நீ இருக்கும்போது இருள் ஏது
பெண் : நல்லாயிருக்கு..., காவிய என்ன குறையென்று காதலிக்க பார்க்கிறீங்களா
ஆண் : காதல் இல்லாமல் காவியம் இல்லை விரல் மீட்டினால்தானே வீணையில் ஓசை வரும்
மேகங்கள் மோதினால்தானே மழை வரும்
அன்பே .அமுதே ...ஆரணங்கு பாவையே
என் அழகு பொக்கிஷமே
வானத்து முழுநிலவோ வார்த்தெடுத்த தங்கச்சிலையோ
மீனொத்த விழியோ நின் கூந்தல் நதியோ
தேனொத்த இதழோ திகட்டாத கனியோ
கானத்து குயிலோ கண்ணே நீ மயிலோ
எத்தனை அழகு.....எத்தனை அழகு.......!
---எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது----
(அவசரமான நேரங்களில் வார்த்தைகள் கோர்வையாக வராது, அவசியமானவர்கள் மனனம் செய்து வைத்து கொண்டால் அந்தந்த நேரத்துக்கு உதவும்). 😁