( வணக்கம் யாழ் உறவுகளே )
எம் தமிழீழ போராட்டத்தில் 25000 ஆயிரம் மாவீர செல்வங்களை இழந்து இருக்கிறோம் /
எம் போராட்டத்தில் எனது மச்சான் மான் மூன்று பேர இழந்து இருக்கிறேன் , அவர்களுடன் சிறு வயதில் பழகின அன்பனா நினைவுகளை சுறுக்கமாய் எழுதுகிறேன் 😓/
எனது முதலாவது மச்சான் 1990ம் ஆண்டு போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , மச்சானுக்கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை இறந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்தங்கள் மச்சான் மேல் அளவு இல்லா பாசமும் அன்பையும் காட்டி வளத்து விட்டவை /
1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம தன்னை போராட்டத்தில் இணைத்து கொண்டார் , மன வேதனையுடன் உறவினர்கள் ஏன் மச்சான் இப்படி செய்தார் என்று தங்களுக்குள் அழுது கொண்டு இருந்தார்கள் கவலையில் ,
1991ம் ஆண்டு ஆனையிறவுவில் சிங்கள இரணுவத்தினருடனான நேரடி மோதலின் போது , சிங்கள இரணுவம் தந்திரமாய் வைச்ச மிதிவெடியில் கால வைச்சு இரண்டு கால்களையும் இழந்து அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்தார் மச்சான் 😓😓😓/
போராளிகள் எங்க வீட்டுக்கு வந்து சொல்லிச்சினம் ( திருவேரகன் ஆனையிறவில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று 😓 )
அம்மா அப்பம்மா அத்தை மார் எல்லாரும் கதறி அழுதிச்சினம் மச்சானின் இறந்த செய்தி கேட்டு 😓 /
போராளிகளின் பேருந்து வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்றது , மச்சானின் உடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில் வைக்க பட்டது உறவினர்களின் பார்வைக்கு 😓 , மச்சானுடன் சேர்ந்து இன்னும் ஜந்து போராளிகளின் உடலும் வைக்க பட்டு இருந்தது 😓/
மச்சானின் இரண்டு கால் இல்லா இடத்தை போராளிகள் அதிக பூ போட்டு இருந்தார்கள் 🌹🌻🌼/
பின்னாளில் அம்மா சொல்லி
சொல்லி அழுவா மச்சானின் பிரிவை நினைத்து , தூக்கி வளத்தவைக்கு தானே பிள்ளைகளின் பிரிவு தாங்க முடியாத வலியை குடுக்கும் 😓/
பின்னாளில் போராளிகள்
(மச்சான் நடந்து திரிந்த சாலைக்கு ) செனித் வீதி என்று பெயர் வைச்சவை 🙏 , (செனித் மச்சானின் இயக்க பெயர் 🙏)
இரண்டாவது மச்சான்
இவன் கூட அதிகம் பழகி இருக்கிறேன் , பயம் என்ன என்று தெரியாம வளந்தவன் , சிறு வயதிலே நல்லா நீந்துவான் ,
இந்த மச்சானும் போராட்டத்தில் தானா விரும்பி தான் தன்னை இணைந்து கொண்டார் , 2000ம் ஆண்டு ஆனையிறவு மீட்பு பேரில் தளபதிகளின் வழி நடத்தலில் சிங்கள ஆமியை சக போராளிகளுடன் சேர்ந்து விரட்டி அடிச்சவன் , 2001ம் ஆண்டு நடந்த தீச்சுவாலை சண்டையில் ஆமி அடிச்ச செல் பீஸ் மச்சானின் ஒரு கண்ணை காவு கொண்டு போனது 😓, போர் களத்தில் இருந்து அப்புற படுத்த பட்டார் மச்சான் / ஒரு கண்ண போர் களத்தில் இழந்ததால் மச்சான் வீடு வந்து சேர்ந்தார் போராட்டத்தில் இருந்து விலகி 🙏/
எத்தனையோ போர் களத்தில் சண்டை பிடிச்சு போகாத உயிர் , 2006ம் ஆண்டு கண் குடுத்து பார்க்க முடியாத ஒரு விபத்தில் இறந்து போனார் 😓😓( அந்த நாள் நான் புலம் பெயர் நாட்டில் தனிமையில் இருந்து அழுத நாள் 😓 )
போர் களத்தில் மச்சானின் உயிர் போய் இருந்தா மச்சானின் படத்தை இந்த இரண்டு மச்சான் மாரின் படத்தோடு இணைத்து இருப்பேன் /
மூன்றாவது மச்சான் ,
தமிழீழ போராளிகளின் உடையில் நிப்பவர் தான் மூன்றாவது மச்சான் , சின்னனின் ஒன்றாய் படுப்போம் ஒன்றாய் விளையாடுவோம் , ஒன்றாய் கோயிலை கூட்டி சாமியை கழுவுவோம் , இப்படி சொல்லிட்டு போகலாம் எனது மூன்றாவது மச்சானுடனான நினைவுகளை /
2005ம் ஆண்டு தானாக விரும்பி போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , 2008ம் ஆண்டு மன்னாரில் சிங்கள இரணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது வீரச்சாவு /
மச்சான் மாருக்கும் மற்றும் மச்சான் மாருடன் வீரச்சாவை தழுவிய சக போராகளுக்கும் வீர வணக்கம் 🙏/
பதிவு பையன்26 😓/