படம் : சீர்வரிசை(1976)
வரிகள்: வாலி
இசை : MS விஸ்வநாதன்
பாடியோர் : SPB & P சுசீலா
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா...............கண்ணா..............
கண்ணன்தானே கண்ணன்தானே (கண்ணனை)
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா.........உன்னை மறப்பேனோ நான்
உன்னை மறப்பேனோ (கண்ணனை)
வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா
கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ நான்
உன்னை மறப்பேனோ
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே