அன்பு உறவுகளுக்கு வணக்கம்..
எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன்.
இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன்.
தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன்.
படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven)
கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம்
படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும்.
ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது
https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1
இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில....
1) பாதுகை
2) தாத்தா
வணக்கம் மதிசுதா,
என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?
லைகா போன்ற பெரும் முதலீட்டாளர்கள் தமிழக சினிமாவுக்கு மாத்திரமே உதவிக் கொண்டு இருக்கையில் எமக்கான, எமக்கே எமக்கான ஈழத் தமிழர் சினிமாவை வளர்த்தெடுக்க முனையும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.
உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது.
யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் யாழ் களத்தின் பலம் என நினைக்கிறேன்.
இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?
முதலில் இவ் யாழ் களத்திற்கு பெரு நன்றியுடன் பதிலை ஆரம்பிக்கிறேன். காரணம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக முயற்சித்து என்னால் 129 பேரையே இணைக்க முடிந்தது. ஆனால் யாழ் களத்தில் ஒரு நாளில் இத்தனை பேரை அடையாளம் கண்டிருக்கிறேன் என்பதே எனக்கு பெரு மகிழ்ச்சியாக உள்ளது.
இப் பணச் சேகரிப்புக்கு என ஒரு பொதுக் கணக்கு வைத்திருக்கிறேன். அதைப் பகிர்கிறேன். பணமிடுபவர் பகிரங்கத்திலோ தனிமடலிலோ தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.
crowedfunding என்ற முயற்சியானது ஒட்டு மொத்த இலங்கையில் கூட இன்னும் வெற்றியடையவில்லை. அதனால் இம் முதல் முயற்சி எவ்வித அப்பழுக்கற்றதாக முடித்து வெற்றி அடைந்து எல்லாப் படைப்பாளிகளுக்குமான ஒரு பாதையை திறக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே சில நிபந்தனைகளை இடுகிறேன் யாரும் அதைத் தப்பாக எடுத்து விட வேண்டாம்.
இலங்கைக்கு தனித் தனியே பணம் அனுப்புவது பரிமாற்றச் செலவை அதிகரிக்கும். உங்கள் உங்கள் நாடுகளைத் தெரியப்படுத்தினாலும் பணச் சேகரிப்புக்கு உள்ள எனது நண்பர்களை தொடர்புபடுத்தி விடுகிறேன்.
என்னில் நம்பிக்கை வைத்து இக்குழு உழைப்புக்குள் கால் பதிக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு பெரு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
thillaiampalam suthakaran
account number
1000036907 (current account)
commercial bank
nelliady.
குறிப்பு - இதில் ஆர்வ முள்ள உங்கள் நண்பர்கள் யாருக்காவது இம்முயற்சி பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரியப்படுத்தி விட முடியுமா ?
அடுத்த இரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் காரணம் நவம்பர் 16 க்கு பின் வரும் ஆட்சியாளர் எப்படியோ தெரியாது.
தற்போதுள்ள நல்லாட்சி அரசு (அப்படிச் சொல்லிக் கொள்ளும்) படப்பிடிப்புக்கான அனுமதியை சட்டரீதியாகத் தந்துள்ளது. ஆனால் இனி வரும் அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்குமோ தெரியாது.
மீன்கொடி பறந்தபாண்டிய நாட்டின்வான்புகழ் மதுரைஎங்கள் ஊர் ! வேப்பம்பூ எங்கள் பூ
வீரம்தான் எங்கள் வாழ்வு
வெற்றி ஒன்றே எங்கள் உயிர் !
இறைவன் என்றாலும்
குற்றம் குற்றமே என்று
நின்ற ஊர் எங்கள் மதுரை !
அபலை என்றாலும்
நீதி கிடைக்கும்
என்று நிறுவிய
கண்ணகியின் காதை
நிகழ்ந்த நகர்
எங்கள் மதுரை !
வேலை சரியாகச்
செய்யவில்லைஎன்றால்
சொக்கன் என்றாலும்
சாட்டைச் சொடுக்கு
கொடுப்போம் நாங்கள்!
உலகப் பொது மறை
திருக்குறளை
உரசிச் சரிபார்த்த
சான்றோர் சங்கம்
எங்களூர் தமிழ்ச் சங்கம் !
நீதிக்குத் தலை கொடுத்த
நெடுஞ்செழியன் ஆண்ட மதுரை
எங்கள் மதுரை !
முத்துடைத்து எங்கள் நாடு
முகம் சுழிக்கா விருந்து
படைக்கும் பெயருடைத்து
மல்லிகை வாசமாய்
மணம் பரவி நிற்கும்
மதுரை எங்கள் ஊர் !
அழகர் மலையில்
அணி செய்யும்
கருப்பசாமி
முருகன் கோயில்
வள்ளி தெய்வானையோடு
நூபுர கங்கையோடும்
சாரல் விழும் சந்தனத்
தென்மதுரை எங்கள் ஊர் !
தென்பரங்குன்றத்திலே
தெய்வானையை
திரு முருகன்
திருமணம் கொண்ட ஊர்
மதுரை ஊர் !
திருமலை, இராணி மங்கம்மாள்
என்று புகழ் நிறுவும்
தங்க மன்னர்
பாதம் தாங்கி வாழ்ந்த
மதுரை எங்கள் ஊர் !
கோச்சடையான், கூளப்பன்
மருதப்பாண்டியன் என்று
குறுநில இரத்தினங்கள்
குடி கொண்டிருந்த
கூடல் நகர் எங்கள் ஊர் !
மருதநாயகம்
அன்னியர் ஆட்சியை
மறுத்தநாயகம்
மரித்த பின்னே
அவர் உடலம்
சமாதியில் உறங்கும்
சம்மட்டிபுரம்
அமைந்த ஊர் எங்கள் மதுரை !
இன்னும்தான் சொல்லவே
என்னுள்ளே ஆசை;
இருந்தாலும்
இப்போது இது போதும்
என்று சொல்லி
அடங்குகிறது
என்றன் மன ஓசை !
--- போஸ் பாண்டி ---