எல்லா செயற்கை மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் இருக்கு. மருந்துக்கு மருந்து அதன் விளைவுகள் மாறுபடும் . மற்றும் எடுக்கும் dose ஐ பொறுத்ததும் தான். Rosuvastatin பக்க விளைவுகள் அவ்வளவு இல்லை. மூட்டு, தசை நோக்கள் தான் பொதுவானது. இந்த மருந்து ஈரலில் கொலெஸ்ட்ரோல் உருவாக்க தேவையான ஒரு நொதியத்தை தடுத்து கொலெஸ்ட்ரோல் கூடாமல் செயற்படுவதால் ஈரலை கொஞ்சம் பாதிக்கும். அனால் ஈரல் எமது உடற் பாகங்களுக்குள் மிகவும் வலிமையானது. பாதித்த பகுதிகள் தம்மை திருத்தி விடும். ஆனால் அதையும் மீறி நாம் ஈரலை பாவித்தால் ஈரல் பழுதாகி விடும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இந்த மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கலாமா என்று டொக்டரிடம் கேக்கவேணும். Alcohol , Nicotin பொதுவாக எல்லா மருந்துகளோடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ( சிலர் Alcohol உடன் மருந்தை எடுப்பார்கள். இது மிக ஆபத்தானது. ஈரலை பாதிக்கும் ) ஒவ்வொரு நாளும் prescrption இந்த படி மருந்தை எடுக்கவேண்டும் ( அளவு, சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா , capsule மருந்தை முழுதாக விழுங்க வேணும். ஒரு நாளைக்கு எடுக்க மறந்தால் அடுத்த நாளைக்கு double டோஸ் எடுக்க கூடாது. சில மருந்துகள் Fridge இல் வைக்க வேணும். சிலதுகள் இருட்டான இடத்தில நிறைய வெப்பம் இல்லாமல் இருக்கும் இடத்தில வைக்கவேணும். இவை எல்லாம் பார்ப்பதுக்கு சின்ன விடயங்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமான விடயங்கள்.
குறிப்பு: 16 மணி நேரம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் ஒரு கிழமைக்கு இரு நாட்கள் செய்தால் ஈரலுக்கு நல்லது, எல்லா berry வகை பழங்களை smothie அடித்து குடித்தல் , உணவில் organic மஞ்சள் சேர்த்தல் , Apple , Broccoli , இஞ்சி , கொத்தமல்லி இலை , புதினா (mint ) இலை எல்லாம் ஈரலை மற்றும் உடல் பாகங்கள் அனைத்தைம் detox பண்ணும். எனது அவதானிப்புப்படி மருந்துக்களை நான் மேலே சொன்னமாதிரி எடுத்துக்கொண்டு எமது உணவுப் பழக்கங்கள், சிறிது உடற் பயிற்சி, யோகாசனம், தியானம் செய்தால் முக்கால்வாசி நோய்களும் குறையும். கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளும் நல்லது ( நிறைய fake ones இருக்கு, தெரிந்தவர்கள் மூலமாக தான் போக வேணும்). யோகாசனம், தியானம் நிச்சயம் பலனளிக்கும் . விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள்.