பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன் சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து , தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது சுடுநீர் குடித்தால் நிம்மதியான நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம். மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன. சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்)
இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள் எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால் நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள் Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில் பாவிப்பது நன்று.