தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)
1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
2. என் சிறு இதய வயலுமே செழிக்க
இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2
3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு?
குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!