Jump to content

Leaderboard

  1. புலவர்

    புலவர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      4856


  2. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      10574


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43244


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      29170


Popular Content

Showing content with the highest reputation on 01/03/21 in all areas

  1. நாங்கள் எல்லாம் அந்தக்காலத்திலை லேடீஸ்ன்ரை கையை டச் பண்ண மாட்டம். அவ்வளவுத்துக்கு ஒழுக்க சீலர்மார்.😎
    2 points
  2. உடல் மாறிய உறவுகள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த பைலட்டின் குரல் தட்டியெழுப்பியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. “மாமா, இன்னும் ஒரு மணி நேரத்துல லேண்ட் ஆகும் போல இருக்கு. நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” “இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று அவள் சொல்லும் பொழுதே , மனோகர் மீண்டும் தூங்கச் சென்றதைப் பார்த்தாள் . மனோகர் அவளுடைய தாய்மாமனும் கூட. அறுபது வயதைக் கடந்த இந்த இணையர்களுக்கு மூன்று பிள்ளைகள் . முதல் பையன், பிரபு மைக்ரோசாஃப்ட்டில் ஆர்க்கிடெக்ட். அவனது வீட்டிற்குத்தான் இவர்கள் போகிறார்கள். இரண்டாவது பெண் அனிதா. அவளது கணவன் மற்றும் குழந்தையுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டிலாகி விட்டாள். மூன்றாவது பையன் கிரிஸ் என்கிற கிருஷ்ணமூர்த்தி . நியூயார்கில் வேலைப் பார்க்கிறான். இன்னும் சில மணி நேரங்களில், பசங்களைப் பார்க்கப்போகும் சந்தோசம், அவள் கண்களில் நன்றாகத் தெரிந்தது. அவள் மனதில் “ஏர்போர்ட்டில அனிதாவும், பிரபுவும் பசங்களோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க . அனிதா அவங்க ஊர்லேயிருந்து டிரைவ் பண்ணிக்கிட்டு வரேன்னு சொன்னாள். இவங்களை நேராகப் பார்த்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகிவிட்டது. கிரிஸ் வந்து இருக்கமாட்டான்.” அவனைப் பற்றி நினைத்ததும், அவளது கண்களில் மளமளவெனக் கண்ணீர் கொட்டியது. கண்ணீரைத் துடைத்துவிட்டு “மாமா, டாய்லெட்டுக்குப் போகணும், எழுந்துக்கிறீங்களா?” திடீரென்று மீண்டும் எழுப்பியதால், மனோகருக்கு ஒன்றும் புரியவில்லை. “இப்பதான் போக வேண்டாம்னு சொன்னே?” “இப்ப போகணும் போல இருக்கு, மாமா.” மனோகர் எழுந்து நின்று, அவளுக்கு வழி விட்டார். அவள் நடந்து செல்லும் பொழுது, சகப் பயணிகளை நோட்டமிடடாள். வீடியோ கேம்ஸில் மூழ்கியிருந்த சிறுவர்கள், பல நாள் விட்ட தூக்கத்தை விமானத்தில் பிடிக்க நினைக்கும் அம்மாக்கள், ஏன் குழந்தை அழுகிறது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அப்பாக்கள், ஆங்காங்கே கருப்பு முடிக்கு நடுவில் சில வெள்ளை முடியிருப்பது போல சில வெள்ளைக் காரர்கள், ஏசியன் வெஜிடேரியன் ஆர்டர் சொதப்பியதால், வீட்டிலிருந்து கொண்டு வந்த வறட்டு சப்பாத்தியை சாப்பிடும் பெரிசுகள், கணவனின் தோளில் தலை சாய்த்து தூங்கும் இளம் பெண்கள், இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வரிசையாக ஒரு படம் கூட விடாமல் பார்க்கும் நடுத்தர வயதினர் என பல ரக மக்களை சுமந்துக் கொண்டு சற்று தள்ளாடியபடியே விமானம் போய் கொண்டிருந்ததைக் கவனித்தாள். அவள் முகத்தைக் கழுவி விட்டு, சூடாக ஒரு காபியும் எடுத்துக் கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினாள். மனோகர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் ஆசிரியர். இது அவர்களின் முதல் அமெரிக்கப் பயணம். தூங்கிக்கொண்டிருந்த மனோகரை ஆசையாக பார்த்தப்படியே அவளது மனதிற்குள் ” கிட்டத்தட்ட மனுஷன் 35 வருஷ வாழ்க்கையை டீச்சிங், டியூஷன்னு எங்களுக்காகவே அர்ப்பணித்தார். இந்தப் பசங்களப் பார்க்கணும்னு மாமாவுக்கு ரொம்ப ஆசை! இந்த கிரிஸ் கிறுக்குப் பயலாலே அமெரிக்கா வருவதற்கே எங்களுக்கு பிடிக்கல. அனிதா மேல மாமாவுக்கு பாசம் அதிகம். அவளது முதல் குழந்தையோட ஒரு வருட பிறந்தநாள் அடுத்த மாசம் வருது. அப்பாவை எப்படியோ பேசி வர வச்சுட்டா.” என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். மேலும் தன் எண்ணங்களைத் தொடர்ந்தாள். “சில பேர் இத சொல்லி நான் கேட்டிருக்கேன். அம்மாவுக்குத் தாய்மை என்கின்ற பட்டத்தை முதலில் கொடுத்த முதல் குழந்தை மேல் எப்போழுதுமே ஒரு தனி பாசம் இருக்கும். அப்பாக்களுக்குத் தான் இன்னும் ஒரு ஆண்மகன்தான் எனச் சொல்ல வைத்த கடைசி குழந்தை மேல ஒரு தனி அட்டாச்மென்ட் இருக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். கிரிஸ் மேல மாமாவுக்கு ஒரு தனி அக்கறை இருந்துச்சு. இந்தப் பாவிப்பய எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டானே! ” என்று மிக வருத்தமாக அவள் நினைக்கும் பொழுது, திடீரென்று மனோகர் கண்களைத்திறந்து “நீ என்ன கூப்பிட்டியா?” எனக் கேட்டார். “இல்ல மாமா” “நான் எழுந்ததும் ஒரு விதத்தில நல்லதுக்குதான். இம்மிகிரேஷன் அண்ட் கஸ்டம்ஸ் பார்ம்ஸ் இன்னும் முடிக்கல” என்று சொல்லிவிட்டு கட்டங்களை நிரப்ப ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில், விமானம் தரையிறங்கியது. செல்போனில் “டிங்” என்று ஒரு சிறிய சப்தம். போனை அன்லாக் செய்து பார்த்தால் ” வெல்கம் டு யூ.ஸ்.ஏ.. நாங்கள் பேக்கேஜ் ஏரியாவில் காத்திருக்கிறோம்” என்று பிரபுவிடம் இருந்து ‘ஃபேமிலி ‘வாட்ஸ்அப்’ குரூப்பு’க்கு ஒரு மெசேஜ். உடனே அவர் ஒரு ‘ஸ்மைலி’யை போட்டு ” சீ யூ சூன்” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். ‘வாட்ஸ்அப்’ இன்றைய இயந்திரக் காலக்கட்டத்தில் குடும்ப உறவுகளை இணைக்கும் ஒரு அதிசய செயலி என்றால் மிகையாகாது!!. முன்பெல்லாம் வெளி ஊர்களில் வசிக்கும் பசங்களுக்கு மாதத்தில் இரண்டு முறைக் கூட சொந்தங்களுடன் பேச நேரமிருப்பதில்லை. ‘வாட்ஸ்அப்’ வந்தபிறகு “பேமிலி குரூப்” அம்மாக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். பல அம்மாக்கள் பசங்க பேசறாங்களான்னு கவலைப்படுவதில்லை. பத்து தடவை அம்மா மெசேஜ் போட்டா, பசங்களும் ரெண்டு தடவையாவது கால் பண்ணி பேச வேண்டியிருக்கு. பசங்க படிச்சாங்களான்னு பார்க்கவும் முடியுது. அதனால ‘வாட்ஸ்அப்’ அம்மாக்களுக்கு கிடைச்ச “அஸ்திரம்” என்றே சொல்லலாம்! கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து, பிரபுவின் வீட்டை அடைந்தனர். ஒரு மாதம் வேகமாக ஓடி விட்டது. அனிதா வீட்டிற்குச் செல்ல மனோகரனும், வாசுகியும் ரெடியாக இருந்தனர். “டேய் பிரபு, கிரிஸ் அவங்க வீட்டுக்கு வரமாட்டான் தானே? ” “அப்பா, எத்தனை தடவை சொல்றது. நான் அவனோட காண்டக்ட்ல இல்லை. அனிதாகிட்ட பத்து தடவையாவது ஃபோன் பண்ணிக் கேட்டிருப்பேன். அவள் பாப்பா ‘பார்ட்டி’க்கு கிரிஸ் வர மாட்டான்னுதான் சொன்னாள்.” அதைக் கேட்ட வாசுகி ” நீ காண்டக்ட்ல இல்லைன்னு தெரியும். சின்ன வயசுலிருந்தே, அவனுக்கு எல்லாமே அக்கா தான். எனக்கு என்னமோ அவங்க ஏதோ ஒரு குளறுபடி பண்ணுவாங்கன்னு தோணுது” “அம்மா, இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. மூணு மணி நேரத்துல உங்க ஃபிளைட். வாங்க கிளம்பலாம். என் பொண்ணு ஸ்கூல்ல பெரிய ஈவென்ட். அதனால நாங்க வர முடியாது. அடுத்த மாசம் வந்து நாங்கள் அவர்களைப் பார்க்கறோம்னு சொல்லு” எனச் சொல்லி முடித்து அவர்களுடன் ஏர்போர்ட்டிற்குச் செல்லத் தயாரானான். *** அன்று புதன்கிழமை. அனிதாவின் குழந்தையின் முதல் வருடப் பிறந்த நாள் விழா முடிந்து மூன்று நாட்கள் ஓடி விட்டது. அனிதா அம்மா அப்பாவின் பெட்ரூம் கதவை மெதுவாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். “அம்மா தூங்கறீங்களா? “இல்லம்மா, சும்மாதான் படுத்துகிட்டு இருக்கோம்” “உங்களைப் பார்க்க ஒரு ஃபேமிலி வந்திருக்காங்க, ஹாலுக்கு வரீங்களா?” சிறிது நேரத்தில் மனோகரும், வாசுகியும் ஹாலுக்கு வந்தனர். அங்கே ஹாலில் கிரீஸும் இன்னொரு வாலிபனும் உட்கார்ந்து இருந்தனர். அந்த வாலிபன் நீலக் கலர் போலோ டி-ஷர்ட்டும், வெள்ளை நிற கதர் வேட்டியும் அணிந்திருந்தான். நெற்றியில் பளிச்சென்று திருநீறு. சற்று தூக்கியவாறு ஹேர் ஸ்டைல். மாநிறம், ஒல்லியான உடலமைப்பு. “எனக்குத் தெரியும், நீ இப்படி பண்ணுவேன்னு. எங்களுக்குத்தான் அவங்களைப் பார்க்கவே பிடிக்கலைன்னு சொன்னேன்ல. ” என்று கண்களில் கண்ணீரோடு வாசுகி கேட்டாள். “அனிதா, எம்மா எங்களைக் கஷ்டப்படுத்துற? நான் யாரை எங்க வாழ்க்கையில திரும்பவும் பார்க்கவே கூடாதுன்னு நினைத்தோமோ, அவங்களை கூட்டிட்டு வந்திருக்கே” என்று மனோகரன் சொல்லிவிட்டு, சட்டென்று திரும்பி வாசுகியின் கையை பிடித்துக்கொண்டு அவரது ரூமிற்கு சென்று கதவை மூடிக்கொண்டார். அனிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பா, அம்மா ரூமிற்குச் சென்று அவர்களைச் சமாதானப்படுத்துவதா, இல்லை அவர்கள் அவமானப்படுத்திய தம்பியின் ஃபேமிலியிடம் மன்னிப்புக் கேட்பதா என்று ஒன்றும் புரியவில்லை. அனிதா முதலில் வீட்டுக்கு வந்த விருந்தினரைச் சமாளிப்போம் என்று நினைத்து ” எக்ஸ்ட்ரீம்லி சாரி, கார்த்திகேயன். சாரிடா கிரிஸ். இவ்வளவு வயலண்ட்டா ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல! ரியலி சாரி” என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டாள். அதற்கு கார்த்திகேயன் ” டேக் இட் ஈசி அக்கா. இதை நாங்கள் எதிர்பார்த்தோம். அட்லீஸ்ட் கிரிஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு அவங்க அப்பா அம்மாவை நேரில பார்த்ததுல ஒரு சின்ன சந்தோஷம் ” அதைக் கேட்டதும், கிரிஸ் கண்களில் கண்ணீர். அவனுக்குப் பேச்சு வரவில்லை. சிறிது தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “அனிதா, நான் தான் உன்கிட்ட சாரி கேக்கணும். என்னால நீ அப்பா அம்மாவோட ரிலேஷன்ஷிப்பை இழந்து விடாதே. பாப்பாவைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம். நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் மிகுந்த வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினர். அன்று இரவு கிட்டத்தட்ட எட்டு மணி வரை, வாசுகியும் மனோகரனும் அந்த ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. இரண்டு நாள் கழித்து, கவிதா மீண்டும் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் ரூமிற்குள் சென்றாள். மனோகர் அவளைப் பார்த்தவுடன், வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அவள் வருவது தெரியாதது போல வாசுகி கைகளில் ஏதோ ஒரு புத்தகம். “உங்களுக்கு என்னோட பேச பிடிக்கலைன்னு தெரியுது. உங்க மனசுல நான் என்னமோ நம்ப வைத்து கழுத்தறுத்துட்டேன்னு நினைக்கிறீங்க. அவ்வளவு பெரிய பாவம் நான் ஒன்னும் செய்யல. எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேச டைம் கொடுங்க. நீங்க என்கிட்ட திரும்பி பேச வேண்டாம்.” அறையில் ஒரே நிசப்தம். அனிதா தான் சொல்ல நினைப்பதைச் சொல்ல ஆரம்பித்தாள். “அவனோட அந்த வாழ்க்கை அவன் ஒன்றும் ஆசைப்பட்டு ஏற்றுக் கொண்டதில்லை. இது மரபியல், அதாவது ஜெனிடிக்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு ப்ராப்ளம். நீயும் அப்பாவும் இதற்கு காரணம் இல்லை. நீ அவனுக்கு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருந்தேனா, அந்தப் பெண்ணோட வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? அவள் வாழ்க்கையே பாழாய்ப் போயிருக்கும். கண், கையில்லாம சிலபேர் பிறப்பதுபோல, இவனுக்கு ஜீன் சம்பந்தமான பிரச்சனை. அதுக்கு அவனை எப்படித் தண்டிக்க முடியும்? இதுக்குமேலே என்கிட்ட பேச வேறு விஷயம் இல்லை. ” என்று சொல்லி முடிப்பதற்குள், “அனிதா, பிரபுகிட்ட பேசிட்டோம். நாளைக்கு ஈவினிங் வந்து, அவங்க வீட்டுக்கு எங்களைக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான் ” என்று மனோகர் சொல்லும் பொழுது, அவள் கண்களில் வந்த கண்ணீரைக் காட்டிக் கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் அனிதாவுடன் பட்டும் படாமலே அவர்கள் பேசிக் கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் இந்தியாவிற்கும் கிளம்பிச் சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள் காலைப் பொழுதில், பிரபுவிற்கு வாசுகியிடமிருந்து ஒரு இன்கம்மிங் கால் வந்தது. “பிரபு, அப்பா டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்துடுச்சு. அப்பாவோட இரண்டு கிட்னியும் ரொம்ப பழுதடைந்து விட்டதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு இதுக்கு மேல டயாலிசிஸ் எல்லாம் பண்ண முடியாது. கிட்னி ட்ரான்ஸ்பிளாண்ட்தான் பண்ணனும்னு சொல்லிட்டார். இன்னும் இரண்டு மாசம் தான் கெடு குடுத்திருக்காரு “ “ஓ மை காட், செலவு பத்தி நீ கவலைப்படாதே.எப்ப ட்ரான்ஸ்பிளாண்ட் செய்யலாமுன்னு சொல்லறாரு? “ “ட்ரான்ஸ்பிளாண்ட்டுக்கு பெரிய வெயிட்லிஸ்ட் இருக்குப்பா. என்னோட பிளட் குரூப்பும் அப்பா குரூப்பும் வேற வேற. அதனால நான் கொடுக்க முடியாது. என்ன பண்றதுன்னு தெரியலபா. அப்பாக்கு வேறு எந்த பிராபளமும் இல்லை. ட்ரான்ஸ்பிளாண்ட் கிடைச்சா, அப்பா இன்னும் பத்து வருஷமாவது உயிரோடு இருப்பாருன்னு டாக்டர் சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” அதற்கு மேல் பேச முடியாமல் வாசுகி அழுதவாறு ஃபோனை கட் பண்ணினாள். சில வாரங்களுக்குப் பிறகு, அம்மாவிடமிருந்து பிரபுவிற்கு மீண்டும் ஒரு போன் கால். “டேய் பிரபு, அந்த மாங்காடு அம்மன் கருணைதான்பா!!!. யாரோ ஒருத்தர் அப்பாவுக்கு ஒரு கிட்னி தரேன்னு சொல்லிட்டாரு. பர்ஃபெக்ட் மேட்ச்சுன்னு டாக்டர் சொல்றாரு! அதனால நாளைக்கே ஆப்பரேஷன். அனிதா கிட்ட போன் பண்ணிச் சொல்லிடு” என்று சொல்லிவிட்டு லைனை கட் பண்ணி விட்டாள். அன்று ஆபரேஷன் நாள். வாசுகி ஆபரேஷன் தியேட்டர் காத்திருப்பு அறையில் உட்கார்ந்துக் கொண்டு கந்த ஷஷ்டி கவசம் படித்துக் கொண்டிருந்தாள். “அம்மா” என்று ஒரு பரிச்சயமானக் குரல். கையில் குழந்தையுடன் கிறிஸ்! ” நீ எங்கடா இங்க? எனக்கு இருக்கிற கஷ்டம் போறாதா? நீ வேற வந்து, ஏன் கஷ்டப்படுத்துற. உன்னை யாரு இங்கே வரச் சொன்னது” என்று கோபமாகக் கேட்டாள். “அம்மா நான் உனக்காக வரல. அப்பாக்கு கார்த்திகேயன் தான் கிட்னி தானம் செய்யறான் . நான் அவனைக் கவனிச்சுக்க வந்திருக்கிறேன்” வாசுகிக்கு தூக்கி வாரிப் போட்டது. ” என்னடா சொல்ற?” “அப்பா நிலைமையை ஒரு மாதத்திற்கு முன்னாடி அனிதா எங்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாள். கார்த்திகேயனுக்கு எல்லோருக்கும் உதவுற குணம்! எந்த ஒரு வீக்கெண்டும் வீட்ல இருக்க மாட்டான். வீட்டு வசதி, சாப்பாடு வசதி இல்லாத மக்களுக்கு உதவி செய்ய போயிடுவான். ஒரு வருடத்திற்கு ஒரு முறை, ஏழை மக்களுக்கு உதவ ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு வருவான். அவன்தான் பிடிவாதமாக பேசி, இந்தியாவுக்கு வந்து இந்தத் தானத்தைச் செய்கிறான்.” என்று சொல்லியபடியே குழந்தையை அடுத்த தோளிற்கு மாற்றினான். “உன்கிட்ட முன்னாடியே சொன்னா, நீ ஒத்துக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். உனக்கு உன் மாமாண்ணா ரொம்ப உசுருன்னு எனக்குத் தெரியும்.” வாசுகி கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர். அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, அவளது குடும்பம் பணக் கஷ்டத்தில் திண்டாடிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், தாய்மாமன் மனோகர்தான் அவளைத் திருமணம் செய்து கொண்டு ,அவளது தாய்வழி குடும்பத்தையும் காப்பாற்றினான். வாசுகியின் உலகமே மாமா மனோகர் தான். தன் கை இரண்டையும் கூப்பி அவனைக் கும்பிட்டாள். “அம்மா, ஏன் ஒரு குழந்தையைப் போல நடந்துக்கிறீங்க? உள்ள இருக்கறது என் அப்பாவும் தான்!” வாசுகி அவனைக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்கார வைத்து அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். “இந்தக் குழந்தை யார் என்று” சற்று ஆச்சரியமாக கேட்டாள் . “எங்க குழந்தைதான்” வாசுகிக்கு ஒன்றும் புரியவில்லை. “எனது ஆண் உயிர் அணு கொண்டு, ஒரு வாடகைத் தாய் மூலமாக இந்த குழந்தைப் பிறந்தது” எனச் சொன்னான். “பாப்பாவுக்கு லஞ்ச் ரெடி பண்ண வேண்டும். நீ கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள முடியுமா?” “கட்டாயம் பாத்துக்கிறேன். பாப்பா பெயர் என்ன?” “பத்மாவதி, பத்மா என்று கூப்பிடுவோம்” வாசுகியின் அம்மாவின் பெயர் பத்மாவதி. அவள் குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவனைப் போய் விட்டு வரும்படி கூறினாள். அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின், அந்தக் குழந்தையை ஆசையாகப் பார்த்தாள். மனதில் பல எண்ணங்கள் “கிரிஸோட முகத்தோற்றம் குழந்தைகிட்ட இருக்கு. அனிதா சொன்னமாதிரி அவன் பிறப்பில் குறைபாடிருந்தால், இவன் என்ன பண்ணுவான் . நாங்க அவமானப்படுத்தினாலும், அந்தப் பையன் எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கான். பெரிய மனசுதான். ஒரு காலத்துல ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம இருக்கிற மக்களை, சினிமால காமெடி டிராக்லதான் யூஸ் பண்ணாங்க. ஆனா இன்னிக்கு அவங்கள புரிஞ்சுகிட்டு அழகா “திருநங்கையர்” என்று ஒரு பெயர் கொடுத்து மரியாதை கொடுக்கிறார்கள். அது போலத்தான் கார்த்திகேயன், கிறிஸ் போன்ற மனிதர்கள். கார்த்திகேயன் என் மருமகள்(ன்)! உடல் மாறிய உறவுகள்!!!” என்று அவள் நினைத்து அவர்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது வழிந்தக் கண்ணீரை, குழந்தையின் பிஞ்சு விரல்கள் தடவிக் கொடுத்தது. — மருங்கர் பனிப்பூக்கள் வலையிலிருந்து வாசித்தது..எனது போண் ஊடாக யாழுக்குள் எல்லா பகுதிக்குள்ளும் உள் நுளைய முடியாத காரணம் எனக்கு புரியவில்லை.அதனாலயே சில விடையங்களை சில நேரங்களில் இதற்குள் மட்டும் ஒட்ட வேண்டிய சந்தர்ப்பம்.கணணியால் யாழுக்குள்ளும் வேலை விடையங்கள் மட்டும் செய்வேன்..காரணம் அடிக்கடி வைரஸ் தாக்கம்..சோ யாரும் யாயினி வேணும் என்று கொண்டு போய் யாயினி என்னும் பக்கத்தில் ஒட்டுறா என்று நினைத்து கெொள்ள வேண்டாமே.
    1 point
  3. இந்தப் புத்தாண்டில் இருந்து தொந்தியை இழந்து தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கி ஆரோக்கியமாய் வாழ சும்மா ஆசைப்படுவோம்........! 👍
    1 point
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006 கருணா துணைப்படையினர் சிறுவர்களைக் கடத்திச் சென்று பயிற்சியளிக்கின்றனர், அவர்களுடனான அரசின் தொடர்பு கவலையளிக்கிறது - மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை கடந்த வியாழக்கிழமை மனிதவுரிமைக் காப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் கருணா குழுவின் சிறுவர் கடத்தல்களில் அரச ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை கருணா குழு கடத்திச் செல்வதும், அக்குழுவிற்கு அரச ராணுவம் கடத்தல்களில் உதவிவருவதும் தமக்கு பாரிய கவலையாக உருவெடுத்துள்ளதாக அவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்தார். "கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு மிகத் தெளிவாக இப்போது புரிகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச ராணுவத்தின் அனுசரணையின்றி கருணா குழுவினரால் சிறுவர்களைக் கடத்த முடிவதென்பது சந்தேகத்திற்குரியது. சிறுவர்களைக் கட்டாயமாக ராணுவப் பயிற்சிக்குக் கடத்திச் செல்லும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேரவிரும்புவதுபோலத் தெரிகிறது. உலகில் மிகவும் மோசமான மனிதவுரிமைகளில் ஈடுபடும் பர்மிய ராணுவத்துடன் ஒப்பிடக்கூடியளவிற்கு இலங்கை ராணுவம் செயற்பட விரும்புவதுபோலத் தெரிகிறது. சிறார்களை ராணுவப் பயிற்சிக்கு கட்டாயமாகக் கடத்திச் செல்லும் செயற்பாடுகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதுபற்றி அரசு தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது" என்று கொழும்பிற்கு விஜயம் செய்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கிழக்கு மாகாணத்தில் மிக மோசமான வன்முறைகள் அரச ராணுவத்தினராலும், துணைப்படையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் பல நூற்றுக்கணக்கான சிறார்களும் இளைஞர்களும் கருணா துணைப்படையினராலும், அரச ராணுவத்தாலும் ராணுவப் பயிற்சிக்குக் கடத்தப்பட்டு வருகின்றனர். கருணா துணைப்படையினரின் முகாம்களில் இருந்து தப்பிவந்த சில இளைஞர்களின் தகவல்களின்படி பெருமளவு சிறார்களும் இளைஞர்களும் அரச ராணுவத்தால் தமிழர்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு பயிற்றப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது. மிக அண்மையில் ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி விஷ்ணு ஆலயத்தில் விளையாடிக்கொண்டிருந்த 15 இளைஞர்களை வெள்ளைநிற வான்களில் வந்த கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இக்கடத்தலில் ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இளைஞர்களை இழுத்துவந்து வான்களில் ஏற்றும்போது ராணுவம் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கியதாகத் தெரியவந்திருக்கிறது.
    1 point
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006 பதின்ம வயது இளைஞரை கட்டாயப்படுத்தி தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பிய கருணா துணைப்படை மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் அவர்களின் கூற்றுப்படி, அரச ராணுவத்தினால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படையினர் கட்டாயப்பயிற்சிக்கு கடத்திவந்த 19 வயது இளைஞரை வெடிமருந்து கட்டப்பட்ட உந்துருளியில் புலிகளின் முன்னரங்குகள் நோக்கி அனுப்பி தூரவிருந்து இயக்கும் கருவிமூலம் வெடிக்கவைத்துக் கொன்றனர் என்று கூறியுள்ளார். தமது தற்கொலைத் தாக்குதலில் 5 புலிகள் பலியானதாக கருணா துணைப்படை உரிமைகோரியிருந்தபொழுதும், தமது முன்னரங்கிலிருந்து குறைந்தது 80 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர் வரும்பொழுதே கருணா குழுவினர் குண்டை வெடிக்க வைத்ததனால் தமக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்பதை உறுதிப்படுத்திய தயாமோகன் அப்பாவி இளைஞரைக் கட்டாயப்படுத்தி கருணா குழு கொன்றதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். திமிலைதீவு சந்தை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்பாவி இளைஞரான சத்தியசீலன் தர்ஷன் சில தினங்களுக்கு முன்னரே கருணா குழுவினரால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவரையே வவுனதீவு முன்னரங்கு நோக்கி கருணா குழு கட்டாயப்படுத்தி அனுப்பிக் கொன்றுபோட்டதாகவும் தெரியவருகிறது. தர்ஷனின் உடலைக் கையளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் அதேவேளை, அண்மையில் முச்சக்கரவண்டியொன்றில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு புலிகளின் முன்னரங்கு நோக்கி வந்தவேளை குண்டுவெடித்து இரு துணைப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
    1 point
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006 கடத்தப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அம்பாறை மாவட்டத்திலிருந்து கருணா துணைப்படையினரால கடத்திச் செல்லப்பட்ட பெருமளவு சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகள் முறையிட்டிருக்கின்றனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பலர் இலக்கத்தகடற்ற வெள்ளை வான்களில் வலம்வரும் ராணுவ துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டிருப்பதாகவும் இந்த முகாம்களுக்கு விஜயம் செய்வதன்மூலம் இச்சிறாரின் கதிபற்றி அறிந்துகொள்ளுமாறும் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். அம்பாறை மாவட்டம், பாவட்டை பகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ஜெயா அம்பாறை மாவட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் கடத்தல்கள் பற்றி முறையிட்டார். இதற்குப் பதிலளித்த யுனிசெப்பின் டி புருட் தம்மிடம் இவ்வாறான 32 கடத்தல்கள் பற்றி முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும், புலிகளும் தம்மிடம் இருக்கும் 18 வயதிற்குக் கீழான போராளிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார். ஜெயா அவர்கள் மேலும் இக்கடத்தல்கள் பற்றித் தெரிவிக்கும்போது, கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் கூற்றுப்படி வெள்ளைநிற இலக்கத்தகடற்ற வான்களில் வந்த தம்மை கருணா குழு என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஆயுததாரிகள் ராணுவம் பாதுகாப்பிற்கு நிற்க பெற்றோரிடமிருந்து அச்சிறார்களை இழுத்துச் சென்றதாக கூறினார். மேலும் அவர் கூறும்போது, இளைஞர்களின் விருப்பிற்கு மாறாக கடத்தப்பட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலானோர் பொலொன்னறுவை மாவட்டம் தீவுச்சேனைப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். திருக்கோயில் அதிரடிப்படையினர் அப்பகுதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மீது கொடுத்துவரும் துன்புருத்தல்கள்பற்றி ஜெயா விவரித்தபோது, இதுபற்றி தமது தலைமைக் காரியாலயத்திற்கு அறியத்தருவதாக டி புருட் கூறினார்.
    1 point
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006 கருணா துணைப்படை மற்றும் இராணுவத்தால் வெட்டிக்கொல்லப்பட்ட மீனவர் - வாழைச்சேனையில் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம், கண்ணகிபுரம், கோராவில் வீதியைச் சேர்ந்த மீனவரான 27 வயது நிரம்பியவரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான பெரியதம்பி வேலுப்பிள்ளை எனும் குடும்பஸ்த்தர் செவ்வாயன்று இரவு கருணா துணைப்படையினராலும், பாதுகாப்பிற்கு வந்த இராணுவத்தாலும் குரூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கல்மடு "50 வீடுகள்" கிராமத்தில் வாழ்ந்துவந்த இவரை கருணா துணைப்படையினர் கடத்தமுயன்றவேளையில் அவர்களிடமிருந்து தப்பியோடி அருகிலிருந்த வீடொன்றில் பதுங்கியிருந்தார். தப்பியோடுபோது காலில் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்த அவரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்த துணைப்படையினர் அவர் மறைந்திருந்த வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்தனர். நடக்கப்போகும் அசம்பாவிதத்தை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அவரைக் கொல்லவேண்டாம், இங்கே சிறுபிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுக் கெஞ்சியபொழுதும் அவர்மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த துணைப்படையினரும் ராணுவமும், மக்கள் பார்த்திருக்க அவரது தலையை வாட்களாலும் கோடரிகளாலும் கொய்தெடுத்தனர். துணைப்படையினரும் ராணுவமும் வீதியில் அவரது உடலை வீசிவிட்டுச் சென்றபின்னர் அங்கே வந்த பொலிஸார் அவரது உடலை வாழைச்சேனை வைத்தியசாலைக்குப் பிரதேசப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை துணைப்படையினரோ ராணுவமோ இதுவரை வெளியிடவில்லை. கட்டாய ராணுவப் பயிற்சிக்கு வரமறுத்ததாலேயே இவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்றும், பயிற்சிக்கு வரமறுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்படியே இவ்வாறு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
    1 point
  8. இசை ~ சலீல் சவுத்தரி பாடல்வரிகள் ~ கங்கை அமரன் (எல்லாப் பாடல்களும் அவர் தான்) திரைப்படம் ~ அழியாத கோலங்கள். (1979) பிரதாப், ஷோபா பாலுமகேந்திர மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட பள்ளிக்கால அனுபவங்களை வைத்து திரைப்படமாக எடுத்திருப்பார். ஒவ்வொருவர் வாழ்விலும் அழியாத கோலங்கள் இருக்கும். மிஸ் பண்ணக்கூடாத ஒரு படமும் கூட. நான் அந்த வயதிலும் கூட அனுபவித்து பார்த்த ஒரு படம். அந்த இந்துமதி டீச்சரை மறக்கவே முடியாது. படத்தில் எல்லா பாடல்களும் அருமை. வித்தியாசமான இசை. குறிப்பாக இந்த பாடல் ஒரு கஸல் பாடல் போல அமைந்திருக்கும். மிகவும் நுணுக்கமான பொடிப் பொடி சங்கதிகள், அசைவுகள் வெற லெவல். பாடல் தொடக்க இசை தொடங்கி 1 நிமிடம் 11 நொடிகளுக்குப் பிறகு தான் குரல் வரும்.
    1 point
  9. அதிகப் பாதுகாப்போடு வாழ்பவர்கள்
    1 point
  10. அதை ஏன் பேசுவான்... இன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...?
    1 point
  11. வணக்கம் தம்பி Kapithan, நீரிழிவு ஒரு நோயே அல்ல. அது உண்மையில் இன்சுலின் குறைபாடு (Type 2 Diabetes). இது border level இல் இருக்கும்போது சுலபமாக மீண்டு வந்துவிடலாம். அந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டால் வாழ் நாள் முழுவதும் மருத்துவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி நடக்க வேணும். மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்து, உடற்பயிற்சி செய்து, சாப்பாட்டு பழக்கவழக்கங்களையும் மாற்றவேணும். மிகவும் ஆரம்ப கால டியபெடீஸ் என்றால் கடினமான lifestyle மாற்றத்தால் மருந்து எடுக்காமலேயே மாற்றலாம் என்று ஆராச்சிகள் கூறுகின்றன. கட்டுப்படுத்தப்படாத டியபெடீஸ் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதிக்கும். அந்தவகையில் சிறுநீரகம் மிகவும் பாதிப்படையும். ஆங்கில மருத்துவ முறையில் இதற்கு இப்போதைக்கு சிகிச்சைகள் இல்லை. ஆனால் ஆயுர்வேத முறையில் இஞ்சி ஒத்தடம், அல்லது இஞ்சித்தேநீர் நல்ல பலன்களை தருகிறது என்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் பலர் இதனை செய்கிறார்கள். உங்களது அம்மாவுக்கு சிறுநீரகம் பாதித்ததால் அதற்காக ஏதாவது மருந்து எடுத்தார்களா? ஏனெனில் சில மருந்துகள் சிறுநீரகத்தை மேலும் பாதிக்கும். ஒரு வைத்தியரின் ஆலோசனையுடன் நிற்காமல் பல நாடுகளில் இருக்கும் வைத்தியர்களிடம் ஆலோசனைகள் எடுப்பது நல்லது. உங்களது அம்மா, மாச்சத்து சாப்பிடுவதை மிக மிக குறைத்து, நடை பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் மேலு நல்ல பலனை பெறலாம். இஞ்சி ஒத்தடம் மற்றும் green tea with ginger தொடர்ந்து செய்து வரவும். இஞ்சி, சிறுநீரக குழாய்களை சுத்திகரித்து, நீரிழிவால் புண்பட்ட திசுக்களை திருத்தி, நச்சு பொருட்களை அகற்றி சிறுநீரகத்தை மிக நல்ல வகையில் செயல்பட வைக்கும். உங்களது அம்மா இந்த முறைகளாலும், மருந்துகளாலும் டயாபடீஸ் ஐயும் அதன் தாக்கங்களையும் குறைத்து நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன். அன்புடன் நில்மினி அக்கா
    1 point
  12. உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்! என் மேனியில் இரண்டு துளிகள் விழும்.. அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்!.. ரவிவர்மன் எழுதாத கலையோ!! படம்: வசந்தி(1988) இசை: சந்திரபோஸ் பாடல்வரிகள்: வைரமுத்து பாடியவர்: KJ Yesudas!
    1 point
  13. முதலையின் வாயிலகப்பட்ட புலி.......! 🐊
    1 point
  14. சுவையான இளநீர்ப் பாயாசம், சிம்பிள் & டேஸ்ட் ......! 👍
    1 point
  15. 1970 ம் ஆண்டுப் பகுதியில் துருக்கிநாட்டில் இருந்து ஜேர்மனியில் குடியேறிய குடும்பம். மஞ்சள் நிறத்திலான ரீ சேட்டுடன் காணப்படும் சிறுவன் இன்று கொரோனா தடுப்பு மருந்தை உலகத்திற்கு அளித்த விஞ்ஞானி!
    1 point
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்
    1 point
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
    1 point
  18. ஏராளன் .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடு வாழ்க
    1 point
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
    1 point
  20. நீரும் நிலமும் வானும் கலந்துறவாடும் காலத்தில் கதிரவனோ மேற்கில்......! 😁
    1 point
  21. இருமணங்கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்......! 😁
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.