Jump to content

Leaderboard

  1. ஜெகதா துரை

    ஜெகதா துரை

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      13

    • Posts

      802


  2. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      15422


  3. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      23359


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      15869


Popular Content

Showing content with the highest reputation on 01/14/21 in all areas

  1. பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் ஈழத்தில் உண்டா.?
    1 point
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, மாசி 2007 அம்பாறையில் 5 இளைஞர்களைக் கடத்திச் சென்ற கருணா துணைப்படைக் கூலிகள் கல்முனைக்கு வடக்கேயிருக்கும் மத்திய முகாம் பகுதியிலிருந்து 5 இளைஞர்களை இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கருணா துணைப்படைக் கூலிகள் வெள்ளை வான்களில் வந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் பெற்றோர்கள் இதுபற்றிப் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். சிறிதாஸ், தம்பிப்பிள்ளை சிறிதரன், தருமராஜா தயாபரன் ஆகியோரின் பெற்றோரே இம்முறைப்பாட்டினைப் பதிவுசெய்திருக்கின்றனர். ஏனைய இருவரது பெற்றோரும் அச்சம் காரணாமாக இதுவரையில் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யவில்லையென்று தெரியவருகிறது.
    1 point
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, மாசி 2007 பயணிகள் பேரூந்தினை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்ட கருணா துணைப்படைக் கூலிகள் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை ஏறாவூர் பொலீஸ் பிரிவில் அடங்கும் சித்தாண்டிப் பகுதியில் வழிமறித்த கருணா துணை ராணுவக் கூலிகள் பயணிகளிடமிருந்து சுமார் பதினைந்து லட்சம் ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பயணிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள், நகைகள் , தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கூலிகளால் அபகரித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மாவடி மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பகுதிகளில் அமைந்திருக்கும் ராணுவ முகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த கருணாவின் அலுவலகத்திற்கு அருகிலேயே இக்கொள்ளைச் சம்பவத்தினை துணைப்படைக் கூலிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இப் பேரூந்து சுமார் 45 பயணிகளுடன் மாலை 7:30 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும், சித்தாண்டி முருகன் ஆலயச் சந்தியினை அடைந்தபோதே இப்பேரூந்தினை வழிமறித்த கருணா துணைப்படைக் கூலிகள் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. இதேபகுதியில் பல முறை சிறிய வான்கள் கருணாவினால் கொள்ளையடிக்கப்பட்டபோதிலும், இப்பேரூந்துக் கொள்ளையே மிகப் பெரியது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு முஸ்லீம் அமைச்சர் அமீர் இக்கொள்ளைபற்றி மூத்த பொலீஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ளபோதிலும், பொலிஸார் இதுதொடர்பாக அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிப்பதாக தமது பணத்தினைப் பறிகொடுத்த பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
    1 point
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, மாசி 2007 தன்னைப் பலவந்தப்படுத்தியமைக்காக அதிருப்தி தெரிவித்த இந்துக்குருக்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் படுகொலை மட்டக்களப்பு சந்திவெளியில் வசித்துவந்த இந்து மதகுரு செல்லையா பரமேஸ்வரக் குருக்களை கருணா துணை ராணுவக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இக்குருக்கள் அண்மையில் வாகரைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்தவுக்கு ஆசி வழங்கவென்று ராணுவத்தாலும் துணைப்படைக் கூலிகளாலும் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். கடந்த புதனன்று, ராணுவ முகாமிற்கு அருகில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே அவரை வரவழைத்த துணைப்படைக் கூலிகள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தன்னைப் பலவந்தமாக மகிந்தவின் நிகழ்விற்கு அழைத்துச் சென்றதைப்பற்றி அக்குருக்கள் பெரிதும் விசனமடைந்திருந்தார் என்றும், சிலருடன் இதுபற்றிய தனது அதிருப்தியினைத் தெரிவித்து வந்திருந்தார் என்றும் கூறும் அப்பகுதி மக்கள், இதற்குப் பழிவாங்கவே அவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக்கொன்றதாகக் கூறுகின்றனர். இக்குருக்களுடன் மேலும் கிறிஸ்த்தவ, முஸ்லீம் மதத் தலைவர்களும் மகிந்தவின் வாகரை விஜய நிகழ்விற்கு ராணுவத்தாலும் கருணா துணைப் படைக் கூலிகளாலும் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
    1 point
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2007 ஆரையம்பதியில் நிலைகொண்டிருந்த கருணா துணைப்படையினரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரி அண்மையில் ஆரையம்பதி - காத்தான்குடி எல்லையில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து தமது ஊரினூடாக கருணா துணை ராணுவக் கூலிகள் சென்றுவருவதனை காத்தான்குடி முஸ்லீம்கள் எதிர்த்ததனையடுத்து அவர்களை வேறு பகுதியொன்றிற்கு மாற்றியிருக்கிறார் இலங்கை ராணுவத்தின் 23 - 3 படையணியின் தளபதி கேர்ணல் முனசிங்க. இப்பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூலிகளின் முகாமுக்கு வேறு இடத்திலிருந்து இன்னுமொரு தொகுதி கூலிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோர் மட்டுநகர் ராணுவத் தளபதியுடனும், மக்கள் தொடர்பாட்டு அதிகாரியுடனும் சுமார் 3 மணித்தியாலங்கள் இத்துணைப்படைக் கூலிகளை அகற்றுவதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். முஸ்லீம் மக்களுடனான இந்தச் சந்திப்பிற்கு துணைப்படைக் கூலிகளின் முக்கியஸ்த்தர்களும் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டிருந்தனர். காத்தான்குடியில், இராணுவத்தில் அரவணைப்பில் துணைப்படைக் கூலிகள் தங்கவைக்கப்படுமிடத்து, அவர்களின் முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும், அதனை துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இதனைப் பாவித்து ஈடுபட முயலலாம் என்றும் அச்சம் தெர்வித்தனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் துணைப் படைக் கூலிகளால் கடத்தப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் உடலை துணைப்படையினர் வேண்டுமென்றே காத்தான்குடியில் எறிந்துவிட்டுச் சென்றதைக் குறிப்பிட்ட முஸ்லீம்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான மோதல் ஒன்றினை உருவாக்கவே துணைப்படைக் கூலிகள் முயல்வதாக தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லீம் மக்களும் உடனடியாக இந்த துணைப்படை கூலிகளின் முகாம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையினை ராணுவத் தளபதியிடம் முன்வைத்தனர். இதனையடுத்தே அங்கு முகாமிட்டிருந்த துணைப்படையினரை வேறு முகாம்களுக்கு மாற்றிய தளபதி இன்னொரு தொகுதி துணைக் கூலிகளை அங்கே நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
    1 point
  6. கொஞ்ச நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் – 2 உன் மடி அமர்ந்து உன் மடி தவழ்ந்து உன்னோடு நான் பேச வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2 1. என் அன்பு தாயக உன் அன்பு சேயாக உன்னோடு நான் பேச வேண்டும் உன் குரலை நான் கேட்டு உனை என்றும் தியானித்து உன் நிழலில் நான் வாழ வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2 2. என் ஆயன் நீயாக உன் சீடன் நானாக உன்னோடு நான் வாழ வேண்டும் உன் ஞானம் எனக்களித்து உன் வழியில் எனை நடத்தி உன் உருவாய் எனை மாற்ற வேண்டும் -2
    1 point
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இறைவன் தந்த அருட்கொடை
    1 point
  8. இது வேற லெவல் புரட்சியர்! ....நெருப்பில்லாமல் பொங்கல் பொங்கியே விட்டது. 😁
    1 point
  9. இப்படியான பல வீடியோக்கள் நானும் பார்த்திருக்கின்றேன். சில வீடியோக்களை பார்க்க அழுகைதான் வரும். ஏனெனில் நாங்களும் பல உறவுகளை பிரிந்து வாழ்கின்றோம். அதன் வலி எமக்கும் நன்கு தெரியும். இணைப்பிற்கு நன்றி சுவியர்.
    1 point
  10. உயரம் பாய்தலில் பயிற்சி செய்வோம் வாருங்கள்......! 😁
    1 point
  11. செல்வச் சந்நிதி முருகன் தரிசனம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்
    1 point
  12. அணையாத சுடராய்/காணிக்கைப்பாடல் அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறி சென்றேன் நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன் எனை கண் பாரும் உந்தன் பிள்ளை நான் பாடி வரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும் உம அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னை பிரிந்து நொந்தேன் சுமைகளில் சோர்ந்தோரை என்னிடத்தில் வாரும் என்றீர் அந்த ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததைய்யா வாழ்வு தரும் வசனம் எல்லாம் நீர் என்று அறிந்த பின்னும் வேறு எங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா
    1 point
  13. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
    1 point
  14. எது வேண்டும் உனக்கு இறைவா/சுவர்ணலதா/காணிக்கைப்பாடல்
    1 point
  15. வயசான காலத்துல... கம்பை ஊண்டி நடக்காம, இது... என்ன விளையாட்டு. 🤣
    1 point
  16. யானைப்பசி நான் உனக்கு யானைப்பசி... சோளப்பொரி நீ எனக்கு சோளப்பொரி ...
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.