Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/14/21 in all areas
-
இதில் என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறது, நுணா. எனது தனிப்பட்ட வாழ்வை அறிந்திருந்தால், நீங்கள் இப்படிக் கூறி இருக்க மாட்டாரகள். இருப்பினும் ஒருவரது கருத்தை தொடர்ந்து அவதானிக்கும் போது அவர் தனிப்பட்ட ரீதியில் கூறுகிறாரா, அல்லது கோட்பாட்டு ரீதியில் கருத்தியலை கூறுகிறாரா என்பதை கணிப்பது மிக இலகு. ஆனால் கருத்தியல் ரீதியிலான எதிர்க்கருத்தை வைக்க முடியாத சிலர் இங்கு இப்படி தனிப்பட்ட ரீதியானது என்று வசை பாடுவது வழமை. ஆனால் உங்களிடம் இருந்து இதை உண்மையில் நான் எதிர் பாரக்கவில்லை. மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது அதன் பெறுமதி அதிகம் என்பது நான் சொல்லி தெரியவேண்டிய விடயம் இல்லை. அரசியல் ரீதியான ஒரு பக்கச்சார்பான முத்திரை குத்தல்களுக்கு துணை போவது அப்போராட்டதை நீர்ததுப்போக செய்யும் என்பது எமது அனுபவத்தில் கண்ட பாடம். அதையே குறிப்பிட்டேன்.6 points
-
சிகிச்சை எல்லாம் நன்றாகவே முடிந்தது.பயப்படும்படியாக எதுவுமில்லை.ஆ இது எனக்கு முதலே தெரியும் தானே என்று எனது நினைக்கிறது. ஒரு இடத்தில் 30 வீதம் அடைப்பு இருக்கிறது. மற்றைய இடம் முதல் வைத்த இரு ஸ்ரென்த்தும் ஏறத்தாள 100 வீதமும் அடைத்துவிட்டது இனிமேல் பயப்பட ஏதுமில்லை.வேறு எதாவது கேட்க போறியா?சிறிது மெளனத்தின் பின் இல்லை மிகவும் நன்றி டாக்ரர் என்றேன். இது எனது மகளின் தொலைபேசி இலக்கம் அவவும் மருத்துவதுறையில் இருப்பதால் அவவுடன் கதைப்பது நல்லதென்றேன்.பக்கத்து மேசையில் இருந்த எனது தொலைபேசியைக் காட்டினேன்.இல்லை இல்லை இலக்கத்தை சொல்லு என்று தனது கைதொலைபேசியை எடுத்தார். இலக்கத்தை சொன்னதும் மகளுடன் நல்லநேரத்துக்கு அப்பா சிகிச்சைக்கு வந்துள்ளார் என்று நடந்த சிகிச்சையைப் பற்றி விபரமாக கூறியிருக்கிறார்.நான் ஓய்வுஅறைக்கு போவதற்கிடையில் குடும்பம் எல்லோருமாக வட்அப் இல் கூட்டமாக என்ன நடந்தது இனி என்ன செய்ய வேண்டும் என நிறைய சட்டதிட்டங்களை ஏகமனதாக நிறைவேற்றிவிட்டனர். ஓய்வறையில் கொண்டுபோய் விட்டதும் துடையில் போட்ட ஓட்டை மிகவும் வலியாக இருந்தது.முதல்நாள் இரவு சாப்பிட்டதற்கு இன்னமும் சாப்பாடு தண்ணி இல்லை. இதைவிட மனதை குடைந்து கொண்டிருந்தது என்னவென்றால் இதுவரை 23 வருட அனுபவம் நானும் ஒரு குட்டி இருதயவியல் நிபுணர் போல எண்ணிக் கொண்டிருந்தேன்.சாதாரணமாக ஒருவருக்கு இருதயவலி வந்தால் எங்கே எங்கே நோவெடுக்குது என்பதை வைத்து இருதயவலியா என்பதை சுலபமாக பகுத்தறிந்துவிடலாம் என்றே எண்ணியிருந்தேன்.அதனால்த் தான் தொண்டையில் நோ வந்தும் இதயத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று எண்ணினேன்.இப்போது தான் விளங்கியது படித்தவன் எப்போதும் படித்தவன் தான். அனேகமானவர்களை அன்றன்றே வீட்டுக்கு அனுப்பினார்கள். என்ன காரணமோ என்னை அடுத்த நாளே அனுப்புவதாக கூறினார்கள்.நல்ல சாப்பாடுகள் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கொரு தடவை துடையில் போட்ட ஓட்டையால் இரத்தம் வருகிறதா வீக்கம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டார்கள்.எனக்கு பொறுப்பாக இருந்த தாதி மிகவும் பொறுப்பாகவும் ஏதோ குடும்ப உறுப்பினர் போலவும் நடந்து கொண்டது நெஞ்சை நெகிழ வைத்தது. அடுத்தநாள் காலை 9.30 மணிபோல வீட்டுக்கு அனுப்ப போகிறோம் யாரையாவது வரச் சொல்லு அவர்கள் கீழே வந்த பினபு தான் உன்னை இங்கிருந்து அனுப்புவோம் என்றார் தாதி.மகன் 5 நநிமிடத்திலேயே வந்து கீழே நிற்பதாக சொன்னார்.ஒரு சக்கர நாற்காலியில் இருத்தி கீழே கொண்டுவந்து மகனிடம் ஒப்படைத்தார்கள். தொடரும்.6 points
-
இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!! இரவு பகலாய் வயலில் புரண்டு...... இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து..... இன் முகத்தோடு அறுவடை செய்து..... இவுலகுக்கே உணவு படைக்கும்..... இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு..... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! @ கவிப்புயல் இனியவன்5 points
-
தை-பா.உதயன் காலைச்சூரியன் எழுதிய கவியினால் வானம் முழுவதும் வசந்தம் தெரியுது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது காதல் கவிதையை காற்றில் வரையுது ஏழு சுரங்களும் எழுதிய ராகமாய் ஆளக்கடலலை தாளம் இசைக்குது வானம் முழுவதும் வண்ணக் கோலமாய் காலைக் கதிரவன் கவிதை வரைகிறான் நீலக் கடலலை ராகம் இசைக்குது அது ஆடும் அழகினை பறவை ரசிக்குது சந்தம் இசைக்குது சலங்கை சிரிக்குது சிந்து பைரவி ராகம் கேட்குது காலைப் பொழுதினில் பூக்கள் விரியுது கையில் வந்தொரு கனவு உயிர்க்குது பாடும் பறவைகள் சிறகை விரிக்குது தை பேசும் கவியினை வானில் வரையுது . -பா.உதயன் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள்4 points
-
இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம். முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.4 points
-
4 points
-
வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். எதிர்பாராத சிகிச்சை. 1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள். அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண்ண இப்போதும் மிகவும் கஸ்டமாகவே உள்ளது. கடந்த மாசி கடைசியில் இருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 6-7 மாதங்களாக இருந்த போது கிழமையில் 4-5 நாட்களாவது 3-4 மைல்கள் நடப்பேன். நடக்கும் நேரங்களில் இடைஇடையே தொண்டையில் ஒரு மெலிதான நோவு அல்லது எரிதல் போன்ற ஏதொவொரு உணர்வு வருவதை உணர்ந்தேன்.நாளாந்தம் கவனித்த போது நடக்க தொடங்கி 8-10 நிமிடங்களில் அந்த உணர்வு வந்து வீடு போய் ஆறதல் எடுக்குமட்டும் இருந்தது. இதுவே வழமையாக இருந்தாலும் தொண்டையில் உள்ள நோவை பெரிதுபடுத்தவில்லை. நியூயோர்க் வந்த பின்பும் பகலில் 8மணி போல் மகன் வீடு போவதும் மகனும் மனைவியும் வேலை செய்ய பேரப்பிள்ளைகள் இருவருடனும் இருந்து மதியம் இரவு சாப்பாடும் முடித்து இரவு 7 போல் வீடு வந்து 2-3 மைல் நடப்போம். ஒருநாள் இருதயவியல் டாக்ரர் அலுவலகத்திலிருந்து ஒரு வருடத்துக்கு மேலாக டாக்ரரைப் பார்க்கவில்லை உங்களுக்கு நேரமிருந்தால் டாக்ரரை பார்ப்பது நல்லது என்று தொலைபேசி அழைப்பு.என்ன செய்வது என்று வேண்டா வெறுப்பாக டாக்ரரைப் பார்க்க நேரம் ஒதுக்கினேன். டாக்ரரைப் பார்க்க வேண்டிய நாள் வந்ததும் எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் போய் பார்த்தேன். எல்லாம் கேட்டு விசாரித்த பின்பு வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்ட போது தான் தொண்டையில் ஏற்படும் வித்தியாசம் பற்றி ஞாபகம் வரவே அதைப் பற்றி சொன்னேன்.எல்லாவற்றையும் விபரமாக கேட்ட டாக்ரர் நெஞ்சு தோள்மூட்டு அல்லது வேறு எங்காவது வித்தியாசமாக இருக்கிறதா என்றார். அப்படி எதுவுமே இல்லை என்றதும் மிகவும் குழப்பமடைந்த டாக்ரர் சரி ஸ்ரென்த் வைத்து 23 வருடம் முடிந்து விட்தால் எதுக்கும் ஒரு தடவை டை அடித்து பார்ப்போம் என்றார். அதுக்கேற்ற மாதிரி ஆஸ்பத்திரி தெரிவு செய்து கொரோனா சோதனை செய்து நாளெடுக்க 5-6 நாள்கள் போய்விட்டன. கடைசியில் மார்கழி 7ம் திகதி சிகிச்சை என்றும் 9 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருமாறு தொலைபேசியில் சொல்லி தேவையான விபரங்களும் எடுத்தார்கள். தொடரும்.3 points
-
எப்படியும் மீண்டும் மக்களை வன்முறையை நோக்கி திருப்புகிறேன் என்று இந்தியா பிடிவாதமாக முயற்சிக்கிறது. இதை முறியடிக்க, அரசியல் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் விகாரை சேதப்படுத்தப்பட்டதை கடுமையாக கண்டிப்பதோடு, முன்னின்று விகாரையை திருத்தி அமைக்க வேண்டும்.3 points
-
3 points
-
அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில்.3 points
-
2 points
-
இவை அனைத்தும் மிருக வதையே, ஜில்லிக்கட்டும் இவைகளுக்கு சளைத்தவையாகும். உலகல்லாம் உள்ள அநேக கலாசாரங்களில் மிருகவதைகள் இருந்தன , அநேகமானவை வழக்கொழிந்து போய்விட்டன,சிலதுகள் மட்டும் தொக்கிநிக்கின்றன. அவைகள் தான் ஜில்லிக்கட்டு, கோழி சண்டை , Bull Fight,Rodeo Riding.2 points
-
இடிக்கப் பட்டது முள்ளிவாய்க்காலில் படுகொலையான தமிழ் மக்களின் நினைவுத் தூபி. இதை எதிர்ப்பவர்கள் அரை டசின் புலிக்கொடிகளோடு நின்றால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை! ஆனால் சிங்களவன் இந்தப் படத்தைக் காட்டி "புலிகளின் நினைவுத் தூபியை இடித்ததால் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!" என்று செய்தி போட்டாலும் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை! நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையே நடுநிலை இல்லை! ஆனால், தவறான கருத்துப் பரவ இடங்கொடுக்கக் கூடாது என்ற பொதுப்புத்திசாலித்தனத்தைக் கோருவது தவறல்ல! இதைத் தான் பந்தி பந்தியாக ருல்பென் விளக்க வேண்டியிருக்கிறது இங்கே!2 points
-
கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக குரல் கொடுக்கின்ற போது, படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே..2 points
-
நீங்கள் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உங்களது எண்ணக்கருவை பிரதி பலிப்பதாக செய்யலாமே?? நம்பினால் நம்புங்கள் நீங்கள் அவ்வாறு செய்யும்போது புலிக்கொடி பிடிக்காமல் நான் நிச்சயம் வந்து கலந்து கொள்வேன் (இதையும் தனிப்பட என நீங்கள் எடுக்கக்கூடாது)2 points
-
இது உண்மையானால், தர்மமா முள்ளிவாய்க்காலில் பழிவாங்கியது? “புத்தம், தர்மம், கச்சாமி”2 points
-
92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் 92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே இது. இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார். பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த இவர் தற்போது ஒரு மாட்டை தானே பராமரித்து வருகிறார். இப்போது அவரது விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மகள் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றார். தான் இன்றும் தன் அன்றாட கருமங்களை தானே பார்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு அன்றைய உணவுப் பழக்க வழக்கங்களே காரணம் என சொல்கிறார். எங்களோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே மாட்டுக்கு புல்லுப் புடுங்க போக நேரமாகுது என ஆயத்தமாகிறார். அன்றைய கால உணவுப்பழக்கங்களையும் ஒரு வித சிலிர்ப்போடு எம்மோடு பகிர்ந்து கொண்டார். அன்றைய காலங்களில் சாமி, குரக்கனை வருடாந்தோறும் தவறாமல் பயிரிட்டு வருவோம். அதனை காயவைத்து பக்குவமாக உரலில் தான் குத்துவோம். பின் தானியங்களை ஒரு வருடத்துக்கு கூடைகளில் போட்டு பாதுகாத்து அதனையே நாளாந்தம் சாப்பிட்டு வருவோம். அன்று செல்வாக்குள்ளவை தான் அரிசி வாங்கி சாப்பிடுவார்கள். முருங்கை இலைக்கறி, கஞ்சி அல்லது ஒடியல் கூழ் தான் பகல் சாப்பாடு, மரவள்ளிக்கிழங்கு என்றால் பலாலி தான் பேமஸ். கொவ்வை, குறிஞ்சா இலைகளை போட்ட குரக்கன் கூழும் நன்றாக இருக்கும். அன்றைய காலத்தில் காலை சாப்பாடு தினைச்சாமி கஞ்சி அல்லது பழஞ்சோறு, பழந்தண்ணீர் தான். அன்று பயிர்களுக்கு தண்ணீர் வழங்கும் துலா, பட்டை இறைப்பு முறைகள் குறித்தும் விளக்குகிறார். ஒரு முறை இறைக்கவே மூன்று / நான்கு பேர் தேவை. விவசாயிகள் அன்று ஒருவருக்கொருவர் உதவி செய்து எவ்வாறு விவசாய கூலிகளை இயன்றளவு குறைத்து தாங்களே கூட்டாக எவ்வாறு இணைந்து வாழ்ந்தோம் என்றும் சொல்கிறார். வெறும் தோட்டக் காணிகளில் ஒரு பக்கத்தில் தொட்டிலில் மாடுகளும், அருகே அட்டாளையில் ஆடுகளும் கட்டப்பட்டிருக்கும். தொட்டிலை தோட்டக்காணியில் மாற்றி மாற்றி மாடுகளை கட்டுவோம். மாற்றும் போது ஏற்கனவே கட்டிய இடத்தை கொத்தி விடுவோம். அன்றிருந்த ஊர் மாடுகளின் பாலும் தரமாக தான் இருக்கும். சித்திரை 28 க்கு தினை தானியத்தை விதைத்து நாற்றுமேடை போட்டு விடுவோம். 21 ஆம் நாளில் பிடுங்கி கலப்பையால் உழுத தோட்டத்தில் நடுவோம். மூன்று மாதத்தில் அறுவடை செய்து விடுவோம். சிறுதானியங்கள், பாகல், வெங்காயம், மிளகாய் என்று அந்ததந்த போகத்துக்கு ஏற்றவாறு மாறிமாறி பயிர்களை நாட்டுவோம். மலை ஆமணக்கு, பூவரசு, வேம்பு போன்றவற்றின் இலை, தழைகளையும், மண்வீட்டுக் கூரையின் பழைய ஓலைகள், வெட்டிய பனை ஓலைகளையும் தாழ்த்து தான் இந்தப் பயிர்களையும் நடுவோம். பனை ஓலை தாழ்ப்பித்து தான் பாகலைப் பயிரிடுவோம். இலந்தை கொப்புக்களை கட்டி அதன் மேல் படர விடுவோம். பாகல் காயை பேப்பரால் சுற்றி காய்களை தாக்கும் பழ ஈக்களில் இருந்து காப்பாற்றுவோம். தோட்டத்தோடு தான் எப்போதும் இருப்போம். தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளை தலையில் சுமந்து கொண்டு தான் சுன்னாகம் போவோம். சிலர் சைக்கிளிலும் போவார்கள். றோயல் டிஸ்பென்சரி என்று யாழ்ப்பாணத்தில இருந்தது. அவை தான் எங்களுக்கு கொண்டு வந்து பொலுடோலை அறிமுகப்படுத்தினர். அதை விசிற புழு, பூச்சிகளும் சாகும். அதனை சாப்பிடுகின்ற பறவைகளும் இறக்கும். இப்போது பல மருந்துகள் விவசாயத்தில் வந்துவிட்டது. மனிதனைத் தாக்கும் நோய்களும் கூடி விட்டது. அன்று பயிர்களுக்கு மாட்டு சாணமும், ஆட்டு புழுக்கைகளும் தான் பசளை. பிறகு செயற்கை உரம் வந்ததும் இரவிரவாக ஒழிச்சு தான் போடுவினம். என்று தன் அன்றைய தற்சார்பு வாழ்வையும் பின் எவ்வாறு இரசாயனங்களுக்கு எம் விவசாயிகள் மாறினர் என்பதையும் விளக்கியுள்ளார். @Nimirvu2 points
-
உலகத்திலேயே இலங்கையிலுள்ள காத்தான்குடியில்தான் குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று முன்பு செய்திவந்து படித்த ஞாபகம் உள்ளது. தற்போது சீனாவின் சின்யியாங் பகுதி இலங்கையின் காத்தான்குடி பகுதியை விடவும் அதிக புள்ளிகள் எடுத்து முன்னணியில் இருப்பதுபோல் தெரிகிறதே.2 points
-
சிகிச்சைக்கு முதல்நாள் இரவு பிள்ளைகள் மருமக்கள் கூட்டாக சேர்ந்து அப்பாக்கு மாமாக்கு எத்தனை ஸ்ரென்த் வைப்பார்கள் என்று ஆளுக்காள் போட்டி.ஒன்று இரண்டு மூன்று நான்கு வரை போனது.மனைவியும் நானும் அப்படி எதுவும் நடக்காது.வேணுமென்றால் பழைய ஸ்ரென்த்தை கொஞ்சம் சரி செய்யலாம் என்று நம்பியிருந்தோம். மார்கழி 7ம் திகதி காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு மகனுடன் போனேன்.கொரோனா காரணமாக சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மீட்புஅறையில் என்னை விட்டுவிட்டு அவர் போய்விட்டார். சிகிச்சை என்றால் தெரியும் தானே.ஒன்றுக்கு பின்னால் ஒருவர் உடுப்பு மாற்றுதிலிருந்து ஊசிகள் ஏற்றுவது வரை விரைவில் செய்து முடித்துவிட்டார்கள்.நானும் வழமைபோல யாழை நோண்டிக் கொண்டிருந்தேன்.அன்றும் ஏதேதோ எழுதியதாக ஞாபகம். சரியாக 10 மணிக்கு டாக்ரர் வந்தார்.நான் தான் உனக்கு சிகிச்சை செய்யப் போகும் டாக்ரர்.முன்னரும் இதே சிகிச்சை பெற்றபடியால் இதைப்பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.போனதடவை கையிலா காலிலா செய்தது என்றார்.காலில் தான் செய்தது என்றேன்.இப்போது ஒருவருக்கு சிகிச்சை செய்ய போகிறேன்.அடுத்தது நீ தான் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பிற்பகல் 12.15 மணியளவில் ஒருவர் வந்து கிடந்த கட்டிலோடே சிகிச்சை அறைக்கு தள்ளிக் கொண்டு போனார்.23 வருடத்துக்கு முன் பார்த்த சிகிச்சை அறையைவிட நவீனஅறையாக இருந்தது.எனக்கு எதுவித பதட்முமில்லாமல் ஏதோ தியேட்டரில் படம் பார்க்க வந்தவன் எப்படா படம் தொடங்கும் என்று ஆவலுடன் இருப்பதைப் போல பெரிய திரையில் பெயர் வயது வேறு ஏதேதோ போட்டார்கள்.15 நிமிடத்திலேயே டாக்ரர் வந்து சிகிச்சை ஆரம்பிக்க போவதாக சொன்னார். ஏறத்தாள இரண்டு மணிநேரம் சிகிச்சை.திரையை பார்த்துக் கொண்டருந்த வரை வயருகள் போகுது வருகுது.கமராக்கள் போகுது வருகுது.எதுவுமே எதிர்பாராமல் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ வித்தியாசம் விபரீதம் நடப்பதாகப் பட்டது.சிகிச்சை முடிந்ததும் அருகே வந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.உனக்கும் சொல்கிறேன் குடும்பத்தில் யாருக்காவது சொல்ல வேண்டுமா என்றார். தொடரும்.2 points
-
2 points
-
2 points
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும் Maniam Shanmugam : · யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்) தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது. இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது. தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது. பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது. தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது. இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை. அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது. தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல. புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர். இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர். 1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள். இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு. (1960 களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபோதும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சயுடனும், கிறிஸ்தவ மத பீடங்களுடனும் இணைந்து அதை எதிர்த்த ‘கீர்த்திமிக்க’ வரலாறும் அதற்கு உண்டு. யார் கண்டது, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார இலவசக் கல்வியை அறிமுகம் செய்தபோது தமிழரசுக் கட்சி இருந்திருந்தால் அதையும் அவர்கள் எதிர்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் அவர்களுக்கு கல்வி மீது ;பற்றுதல்’. இல்லாவிட்டால் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அரும்பாடுபட்டு உருவாக்கிய யாழ் பல்கலைக்கழகத்தை தமது சொந்த தேவைகளுக்காக அரசியல் சதுரங்க மேடையாக்குவார்களா?) http://namathu.blogspot.com/2021/01/blog-post_70.html1 point
-
அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???1 point
-
துல்பென் கேட்டதில் எந்த குறையும் இல்லை. கொடியை தூக்காவிட்டாலும் எல்லாரும் வந்து எங்கட பிரச்சினைகளை ஞாய பூர்வமா அணுகி தீர்ப்பார்கள் என்றும் நான் நம்பவும் இல்லை. இப்படித்தான் கண்டியில் வாழ்த்த காலங்களில் தினமும் சாமியை கும்பிட்டு விட்டு வெளியே ரோட்டுக்கு இறங்கும் போது விபூதியை அழித்துவிட்டு போவோம். எதுக்கு வீண் பிரச்சினைகள், கேலிச்சொல், குத்தல் கதை.அப்படிதான் இதுவுமோ என்று தோணுகிறது. புலிக்கொடி யாருக்கு பிரச்சினை? இலங்கை அரசாங்கத்துக்குத்தானே? அவர்களுக்கு எதிரானது தானே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்? கனேடிய அரசாங்கத்தால் கனடா வாழ் தமிழருக்கு ஒரு தவறு நடந்தால், அவர்கள் புலிக்கொடி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை தானே. சிட்னியில் சிங்களவர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் சிங்கக்கொடி பிடித்தார்கள், புலிக்கொடி எரித்தார்கள். இந்த செய்தியை எப்படி பார்க்குறீர்கள்? I am not convinced about this flag issue. Trying to understand the "real" ups and downs.1 point
-
சிங்கள அதிகார வர்க்கத்துக்கும் இதுதான் பிடிக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பார்கள், இதற்க்கு நல்லதரவு வழங்குவார்கள்1 point
-
யாரும், யாரையும் குறை சொல்லவில்லை. 'தானும் தின்னான், தள்ளியும் இரான்' எண்டு இருக்கக்கூடாது என்பது தான் சொல்லவருவது. நம்மால் முடியவில்லையா, முடிந்தவர்களை, பாராட்டவும் முடியவில்லையா, குறணி பிடிக்காமல் கடந்து செல்லவேண்டும். கொடி பிடிப்பது எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால், நீ என்ன செய்து கிழித்தாய் என்று மனசாட்சி கேட்க்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.1 point
-
1 point
-
சுட்டுக்கொன்றது பிள்ளையான் தான் என உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? அல்லது நீங்கள் நேரில் பார்த்தீர்களா? இரு கேள்விக்கும் பதிலை சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் இருக்கும் போது கூட்டமைப்புக்கு பிடிக்காத எம்பிக்களை எச்சரிக்கை கொடுத்தது மிரட்டியது எல்லாம் லிஸ்டில் இருக்கு சொன்னால் இன்னும் நான் எதிரியாவேன் இந்த இணையத்தில் யாரோ சொல்வதை கேட்டு எழுதுவது அல்ல கபிதன் வாக்களித்த மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள் , ஆனால் எனது வாக்கு அம்பாறையில் நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் மட்டக்களப்பு மக்கள் ஓரளவுக்கேனும் அதன் பலனை அனுபவிப்பார்கள் இப்படித்தான் கிழக்கில் பல போராட்ட இயங்கங்கள் உருவாகி இருந்தது நீங்கள் அறிந்து இருப்பீர்கள் மாற்று இயக்க உறுப்பினர்களை கொன்று அவர்கள் உடல்களை யார் எடுக்கிறார்களோ அவர்களையும் சுடுவோம் என நேரடியாக சொல்லியவர்களும் உண்டு . இதே கர்ணா பிள்ளையான் வீட்டுக்கு ஒருவர் வந்தே ஆகவேண்டுமென அழைப்பு விடுத்து போகாமல் விட்டால் அவர்களை கடத்தி சென்று பயிற்ச்சி கொடுத்து இயக்கத்தில் இணைக்கும் போது மட்டும் உங்களுக்குகுளிர்ந்து இருக்கும் போல. துரோகத்திற்கு அப்பால் பல சம்பவங்கள் உண்டு வேண்டாம் என நினைத்து விலகி போகிறேன் , யாரோ எழுதினதை வெட்டி ஒட்டி வியாக்கியானம் பேசுவது உங்களுக்கு அழகாக இருக்கலாம் . நான் மாறி புலிகளை குற்றம் சொல்ல நினைத்தால் நமக்கு நாமே தூற்றிக்கொள்வது போல் ஆகும் நண்பர்களுடன் சில நேரம் சிங்கள பகுதிகளுக்கு செல்வேன் அங்கே நமக்கு நடந்த சோக கதைகளுக்கு மேலாக அதிகம் நடந்து இருக்கு இதையெல்லாம் எழுத நினைத்தால் புலிக்கு எதிரானவனாக பார்ப்பார்கள் ஆனால் புலிகளுக்கு நினைவு தூபிகளை நாட் கணக்கில் நின்று கட்டியதுதான் எனக்கு மிஞ்சி இருக்கிறது . அதே பல்லவி தான் இப்பவரைக்கும் அளவானவர்கள் தொப்பியை போடலாம் இந்த இருவராலும் நான் மேலே கூறியதுதான் போராட்டத்திற்கு பிள்ளைகளை வரவேண்டுமென கூறும் போது நீங்கள் எங்கிருந்தீர்கள் ??1 point
-
1 point
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, மாசி 2007 தன்னைப் பலவந்தப்படுத்தியமைக்காக அதிருப்தி தெரிவித்த இந்துக்குருக்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் படுகொலை மட்டக்களப்பு சந்திவெளியில் வசித்துவந்த இந்து மதகுரு செல்லையா பரமேஸ்வரக் குருக்களை கருணா துணை ராணுவக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இக்குருக்கள் அண்மையில் வாகரைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்தவுக்கு ஆசி வழங்கவென்று ராணுவத்தாலும் துணைப்படைக் கூலிகளாலும் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். கடந்த புதனன்று, ராணுவ முகாமிற்கு அருகில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே அவரை வரவழைத்த துணைப்படைக் கூலிகள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தன்னைப் பலவந்தமாக மகிந்தவின் நிகழ்விற்கு அழைத்துச் சென்றதைப்பற்றி அக்குருக்கள் பெரிதும் விசனமடைந்திருந்தார் என்றும், சிலருடன் இதுபற்றிய தனது அதிருப்தியினைத் தெரிவித்து வந்திருந்தார் என்றும் கூறும் அப்பகுதி மக்கள், இதற்குப் பழிவாங்கவே அவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக்கொன்றதாகக் கூறுகின்றனர். இக்குருக்களுடன் மேலும் கிறிஸ்த்தவ, முஸ்லீம் மதத் தலைவர்களும் மகிந்தவின் வாகரை விஜய நிகழ்விற்கு ராணுவத்தாலும் கருணா துணைப் படைக் கூலிகளாலும் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.1 point
-
1 point
-
1 point
-
1 point
-
உந்த குளிருக்கை, எழும்பி ஓடிப்போய், ஏதோ தம்மால் முடிந்த ஏதோ ஆர்பாட்டத்தினை செய்யினம். அதிலை ஓரிருவர் கொடி பிடித்தால், எல்லோரும் பிழை எண்டு சொல்லுறது சரி இல்லை. சும்மா ஈசி சேறிலை இருந்து கிழடுகள் புறுபுறுக்கிறமாதிரி எதையாவது சொல்ல வேணும் எண்டதுக்காக சொல்லக்கூடாது. கனடாவில் நடந்தது, கவன ஈர்ப்பு கார் ஓட்டம். நடந்து, போகவோ, கூட்டமாக சேரவோ தடை உள்ள நேரத்தில், இதுவே அவர்களுக்கு தோன்றி உள்ளது. கவனத்தினை ஈர்க்க, ஹோர்ன் அடித்து உள்ளனர். சிலர் புறுபுறப்பதன் மூலம், கவனத்தினை ஈர்த்து ஏன் என்று அறிய வைத்துள்ளார்கள். இதேபோலவே 2009ல் உயர் தெருவில் நடந்து போய், ஒட்டுமொத்த கனடா கவனத்தினை ஈர்த்தனர். அதேபோல் பிரித்தானிய பாராளுமன்றின் முன்னால், கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போதும் கூட, இதில் பிரயோசனம் இல்லை. மினக்கெட்ட வேலை என்று, இங்கே சொன்னார்கள்.1 point
-
1 point
-
1 point
-
அணையாத சுடராய்/காணிக்கைப்பாடல் அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறி சென்றேன் நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன் எனை கண் பாரும் உந்தன் பிள்ளை நான் பாடி வரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும் உம அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னை பிரிந்து நொந்தேன் சுமைகளில் சோர்ந்தோரை என்னிடத்தில் வாரும் என்றீர் அந்த ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததைய்யா வாழ்வு தரும் வசனம் எல்லாம் நீர் என்று அறிந்த பின்னும் வேறு எங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா1 point
-
பயித்தம் பணியாரம் எனக்கும் நல்ல விருப்பம். நல்ல பதம் தெரிஞ்சவர்கள் செய்தால் நல்லாயிருக்கும். இல்லாட்டி சுத்தியல் கோடாலிதான் வேணும். கன நாளைக்கு வைச்சிருந்து சாப்பிடக்கூடிய பலகாரம். பழுதுபடாது. செய்முறைக்கு நன்றி nige.1 point
-
1 point
-
1 point
-
ஈழப்பிரியனை... மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. கடவுளே.. என்று, கடைசி நேரத்தில், வைத்தியரிடம் போனது நல்லதாய் போச்சு. அதனை எங்களுடன், பகிர்ந்து கொண்டமையால், எம்மையும்... உசார் படுத்தியுள்ளது.1 point
-
1 point
-
1 point
-
என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை ..... என்னவளில் பதில் வரவில்லை ... வெறுத்தவள் மறுத்தவளாகவே.... வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ... என் கவலையை சொல்லாமல் .... யாரிடம் சொல்வேன் .....? என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....! # வேதனையில் சாதனை செய்யப்போகிறேன் .... என்னை விட தாங்கும் இதயம் ... இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது .... வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் .... என்னையே சுற்றி சுற்றி வருகின்றன ..... அவ்வப்போது ஆறுதல் பெறுவது ..... என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....! # என்னை உசிப்பி விட்டு .... வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் .... என்னை காதல் பைத்தியம் .... வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ... இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்.... என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....! ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ... என்னை பைத்தியம் போல் .... அவர்களுக்கு காட்டுகிறது .... காதல்கிழியாமலே இருக்கிறது .....! # பள்ளி பருவத்தில் மாறு வேடபோட்டியில் ..... பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் .... காதலியால் வாழ் நாள் முழுவதும் .... முதலிடம் அருமையான வேஷம்.....! பிடித்தது கிடைக்கவில்லை என்றால் .... கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!1 point
-
1 point
-
ஊரோடும், உறவோடும் உறவாடி அன்போடு வாழ்வோம்!! அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!1 point