உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா..
நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்..
மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது?
என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்ற, உதவாத செயற்பாடுகளும், பரந்த நோக்கற்ற மனபாங்கும் தானே காரணங்கள் என கூறலாம்.. இவற்றை இல்லாதெழிக்க இன்னமும் எத்தனை காலங்கள் போகுமோ தெரியாது..
எங்களது வரலாற்றைப்பற்றிய எல்லா விடயங்களும் பதியப்படுகிறது/பதியப்படவேண்டும், ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றக்கொள்ளாமல் இன்னமும் இருப்பதுதான் வேதனைக்குரியது..