Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      18

    • Posts

      14524


  2. Paanch

    Paanch

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      7

    • Posts

      7510


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76591


  4. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      23359


Popular Content

Showing content with the highest reputation on 01/22/21 in all areas

  1. அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா.
    2 points
  2. நன்றி உடையர் அண்ணா & துல்பேன் அண்ணா.. நிலாந்தனின் இந்த தெளிவான பார்வையை எல்லோருக்கும் இருக்குமா தெரியவில்லை.. அவர் கூறுவது போல தற்போதைய அரசியல்தலைமைகளுக்கு(விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர) மக்களின் நலனில் அக்கறை என்பது துளியும் இல்லை.. ஆனால் அவருடைய இந்த காணெளியில் வந்த Think Tank ஏன் எங்களால் இப்பொழுதும் கூட உருவாகவில்லை? சரி அப்படி ஒன்று உருவாகினால் கூட அது இனவாத அரசினால் அரும்பிலேயே கிள்ளியெறிப்படும் சாத்தியங்கள் அதிகமாகதானே இருக்கும்? ஏன் அரசியல்வாதிகளை அதிகளவு உள்ளடக்கித்தான் இந்த Think Tank உருவாக்கப்படவேண்டுமா? புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை/பலத்தை பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் ஆனால் இந்த Think Tank கட்டியெழுப்ப ஏன் எங்களால் இப்பொழுது முடியாதுள்ளது..
    2 points
  3. விலங்குகள் வீதியைக் கடப்பதற்காக மேம்பாலம்......! 👍
    2 points
  4. பொன்னோவியம் லிடியன் குடும்பம் இளையராஜா அவர்களின் பாடல்களில் நனையும் போது....
    1 point
  5. சுலபமான முறையில் சுவையான சீனி அரியதரம்.....பொருட்களின் அளவுகளோடும் அதிகமான விளக்கங்களுடனும் சாதாரணமாக சமைப்பவர்களும் செய்யக்கூடியவாறு இருக்கின்றது.........! 👍
    1 point
  6. உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா.. நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்.. மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது? என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்ற, உதவாத செயற்பாடுகளும், பரந்த நோக்கற்ற மனபாங்கும் தானே காரணங்கள் என கூறலாம்.. இவற்றை இல்லாதெழிக்க இன்னமும் எத்தனை காலங்கள் போகுமோ தெரியாது.. எங்களது வரலாற்றைப்பற்றிய எல்லா விடயங்களும் பதியப்படுகிறது/பதியப்படவேண்டும், ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றக்கொள்ளாமல் இன்னமும் இருப்பதுதான் வேதனைக்குரியது..
    1 point
  7. குரலும் இசையும் கேட்டு ரசியுங்கள்.
    1 point
  8. வணக்கம் வாத்தியார்.....! ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பெண் : கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி. ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.....! --- பூங்காற்றிலே உன் சுவாசத்தை---
    1 point
  9. கண்மணியே காதல் என்பது
    1 point
  10. உன்னைத்தேடி வந்தேன் அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    1 point
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 உலகத்தில் நான்... உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உம் வாசல் தேடி வந்தோமம்மா நாயகியே
    1 point
  12. அந்தப்படம் இதுவாய் இருக்குமோ...?
    1 point
  13. முதலில் இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க நன்றி உடையார். நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். எமது மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்த‍ததை சுட்டிக்காட்டுகிறார். எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக அலசுகிறார். அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல் உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக எமக்கு இருந்த பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்த‍னத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம். தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும் இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.
    1 point
  14. இராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்? என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.