Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      23357


  2. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      9910


  3. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      32969


  4. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      8269


Popular Content

Showing content with the highest reputation on 02/25/21 in all areas

  1. எனது முறை வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம் ஆனால் பயணம் முடியும்வரை எந்த காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள் விமானத்துக்குள் வந்ததும் எனது இருப்பிடத்தை தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கவில்லை காரணம் எனது சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ எவருமில்லை (ஒன்று விட்டு ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.) விமானம் பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும் தருகிறார்கள் எல்லோரும் Mask யை களட்டியதால் நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு மணித்தியாலப்பயணம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கவும் சரியாக இருக்கிறது. அடுத்த பரிசோதனைகளை சந்திக்கணுமே என மனம் சொல்கிறது 14 நாள் உள்ளே போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம் தள்ளுகிறது விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன் வெளியே வரும்வரை எந்த பரிசோதனையும் இல்லை. மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக பார்க்கிறார்) நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது சொல்லை கேட்பதில்லை என பஞ்ச் டயலாக்கை விட்டு விட்டு அம்மாட்ட போ என்கிறேன். நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம் ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல் என்று சொல்லியிருந்தேன்) போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி வருகிறது என்ன மகன் நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே என? இதோ 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றபடி சில நிமிடங்களில் கதவை தட்டுகிறோம். மருமகன் விலத்தி என்னை தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக ஓடிவந்து முத்தம் தந்து வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே இல்லை அதிலும் இன்றைய சூழ்நிலையில் எப்படி சாத்தியம் என ??? குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை திறக்க புறப்படுகிறார். நாங்கள் பேசத்தொடங்குகுின்றோம் ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா? ஆமாக்கா இப்பத்தான் வரணும் சாப்பிட என்ன வேணும் எங்க எங்க போகணும்? இது அக்கா இன்றிலிருந்து நீங்க சமைக்கவேண்டாம் முடிந்தவரை வெளியில் உணவகங்களில் சாப்பிடலாம் மற்றும்படி உங்களுக்கு எங்கெல்லாம் போகணுமோ சொல்லுங்க அங்கெல்லாம் போகலாம் எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ பார்க்கவேண்டிய இடமோ என்று ஏதும் இல்லை என்னை யாரும் பார்க்க விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து என்னை சந்திக்கட்டும். அதன்படி காலையில் எழும்பி தேனீர் காலைச்சாப்பாடு முடிய கால் போனபோக்கில் நடந்தோம் மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம் என்ற படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை) வேறு எவரிடமும் கார் திறப்பு கொடுக்காதவர் நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார். அவருக்கு போக விரும்பிய அவருக்கு பிடித்தவர்கள் வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி வந்திருக்கிறார் தம்பி வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தும் போதே என் அக்காவின் முகத்தில் பேரானந்தத்தை கண்டேன். அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும் உங்களை தேடி வரும் தம்பி. அக்கா தம்பி பாசத்துக்கு எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள். பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா மைதானத்துக்கு வந்து விடுவார் இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம் அப்பொழுதும் நான் களைப்பதை பார்த்தே அவர் இன்றைக்கு காணும் என நிறுத்துவார் இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார் தம்பி நீ சின்னனாக இருக்கும்போது உன்னுடன் விளையாடி இருக்கமாட்டன் அது தான் காலம் எம்மை மீண்டும் ஒன்றாக விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்) விளையாடி முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்) எனக்கும் சில பயிற்சிகள் சொல்லித்தருவார். பொழுது பட வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு இரவிரவாக நித்திரை கொள்ளும்வரை அந்தக்கால கதைகள் உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம் தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ தூங்கி விடுவாய் எனக்கு அந்த தூக்கம் தானே பிரச்சினை என்பார் அது தான் எனது சொத்து அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன் இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி அணைத்து நன்றி தம்பி என்றார் எதுக்கு தம்பிக்கு நன்றி அக்கா என்றேன் இந்த 10 நாட்களும் என்னுள் ஒரு அபாரபலம் இருந்ததை உணர்ந்தேன் என்றார் எனக்கும் போக விருப்பமில்லை அக்கா எங்கள் பெற்றோர் இவ்வளவு இடைவெளி விடாது எம்மை பெற்றிருந்தால் நானும் பென்சனில் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம் சொல்கிறது என்னை .இங்கே விமானம் ஏற விடக்கூடாது. ஒரு மாதம் யாரும் எங்கேயும் நகரமுடியாது என்று என்னை திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து அக்காவுடன் நிற்கணும் என. காரில் போய்க்கொண்டிருக்கும்போது மருமகன் கேட்கிறான் இன்றைய சூழ்நிலையில் இங்க வரப்போகும் முடிவு பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள் ஆனாலும் வந்திருக்கிறீர்கள் இந்த முடிவை நீங்க எடுப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்குமென்று எனது உள் மனசு சொல்லுது மாமா தெரிஞ்சு கொள்ளலாமா என்று கேட்டான் கோவிட் 19 தொடங்கி அது மெல்ல மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது தனிமை அக்காவை வாட்டி இருக்கணும் ஒரு நாள் தொலைபேசியில் சொன்னார் தம்பி இதென்ன வாழ்க்கை செத்திடலாம் போலிருக்கடா என்று. அன்றைக்கு ரிக்கற் போட்டேன் ஏனெனில் செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அதற்காகத்தான் வந்தேன் என்றேன் அவனது கண்கள் கலங்கியிருந்தன. விமான நிலையத்தில் எந்த பிரச்சினையுமில்லை. பயணம் தொடர்கிறது....
    7 points
  2. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
    3 points
  3. மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
    3 points
  4. சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல. ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர் வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள். சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். முற்றும் கற்பனையும் உண்மையும் சேர்த்து நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு
    3 points
  5. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
    2 points
  6. புரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்
    2 points
  7. முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴 இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊 முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——
    2 points
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஐப்பசி, 2011 குறிப்பு : விக்கிலீக்ஸில் வந்த செய்தி. முன்னர் இணைக்கமுடியாமல்ப் போய்விட்டது. அதனால் தொடரின் நடுவே இதன் முக்கியத்துவம் கருதி இணைக்கிறேன். அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா அவர்களால் வோஷிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கேபிள் செய்தி அம்பாறைத் தேர்தல்கள் : பயமுருத்தலும், முறைகேடல்களும் "அமெரிக்க தூதரும் (நானும்), யு எஸ் எயிட் மிஷன் நிர்வாகியும் அம்பாறை மாவட்டத்திலிருந்து பத்து வர்த்தகப் பிரமுகர்களையும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் கன்னங்கரவையும் சந்தித்தோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழர்களின் எண்ணிக்கை அம்பாறையில் மிகவும் குறைவானது. 2005 கணக்கெடுப்பின் பிரகாரம் 40 வீதம் சிங்களவர்களும், 40 வீதம் முஸ்லீம்களும் 18 வீதம் தமிழர்களும் அம்பாறையில் வாழ்கிறார்கள்". மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் சூழ்நிலை ஆயுததாரி "தேசமான்ய" இனியபாரதி "அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்கள் எம்மிடம் கூறிய தகவல்களின்படி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி சுமார் 700 ஆயுததாரிகளை வைத்துக்கொண்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறார் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதனை அச்சுருத்தித் தடுத்துவருகிறார் என்றும் தெரியவருகிறது". "ஆனாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு மிகவும் பலவீனமாகவே இங்கு காணப்படுகிறது. கடந்த தை மாதம் அவரது ஒருங்கிணைப்பாளர்களால் இங்கு கூட்டப்பட்ட தேர்தல் கூட்டமொன்றிற்கு வந்த பொதுமக்கள் 500 பேரில், ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன் உலர் உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ் வக்காளர்களைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஷவைக் காட்டிலும் சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்களின் கருத்துப்படி குறைந்தது 85 வீதமான தமிழர்களும், 60 இலிருந்து 80 வீதமான முஸ்லீம்களும், 50 வீதமான சிங்களவர்களும் சரத் பொன்சேக்காவுக்கே வக்களிப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் ராஜபக்ஷ 67 வீதமான வாக்குகளையும் பொன்சேக்கா 30 வீதமான வாக்குளையுமே பெற்றதாக இறுதியில் அரசால் அறிவிக்கப்பட்டது". ------------------------------------------------------------------------------------------------------------ "அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அரச அதிபர் இதுதொடர்பாக தன்னாலான முயற்சிகளை எடுத்துவருவதாகக் கூறுகிறார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி எதிரணியினரின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்துகள் மீது உந்துரிகளில் வந்த சுமார் 40 ஆயுததாரிகள் ராணுவச் சாவடியொன்றில் வைத்து வாட்களாலும் தடிகளாலும் தாக்கியிருக்கின்றனர். இப்பேரூந்துகளின் அமைவிடம் மற்றும் பாதை பற்றிய தகவல்களை தாக்குதல் நடத்தியவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. அதே நாள் வேறொரு சம்பவத்தில் குறைந்தது 25 எதிரணி ஆதரவாளர்கள் இதே அணியினரால் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரைப் பாவித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட அரச அதிபர் முயல்கிறார். சுமார் 70 - 8- பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் குறைந்தது 25 - 30 வரையான பொலீஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களை தேர்தல் முடியும்வரை ஒத்திவைப்பதாக மாவட்ட அரச அதிபர் கூறுகிறார். -------------------------------------------------------------------------------------------------------------------- "சுமார் 420,000 இலிருந்து 627,000 வரையான வாக்களர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரச ராணுவத் துணைக்குழுக்களின் வன்முறையினால் பலர் வாக்களிப்பில் கல்ந்துகொள்ளத் தயங்குவதுபோலத் தெரிகிறது. சுமார் 59,000 சிங்கள ஊர்காவல்ப் படையினைக் கொண்ட அணியொன்றினை உள்ளூர் அரசியல்வாதியான சரத் வீரசேகரா எனப்படுபவர் தலைமைதாங்கி நடத்துவதாகத் தெரிகிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பிற்கே இப்படை அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது". ---------------------------------------------------------------------------------------------------------------------- தேர்தல் செயன்முறைகள் "அம்பாறை மாவட்டத்தின் அதிகாரம் வாய்ந்த தேர்தல் அதிகாரியாக அம்மாவட்டத்தின் அரச அதிபரே இருக்கிறார். சுமார் 20 ஒருங்கிணைப்பு நிலையங்களை இம்மாவட்டத்தில் நிறுவியுள்ள அவர், தேர்தல் கால முறைகேடுகளைக் கண்காணிக்க அதிகாரிகளையும் நிறுத்தியிருக்கிறார். இம்மாவட்டத்தில் முறையிடப்படும் தேர்தல் கால முறைகேடுகளை மக்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு தேர்தல் ஆணையாளருக்கு அதுபற்றி அறிவிப்பது அவரது கடமையாகும். தேர்தல்களின் நிறைவில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், இம்முறை தேர்தல்களில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் தகவலின்படி மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களுட்பட 8 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த உத்தியோகபூர்வ பணிப்பின் பேரில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அறியத்தருமாறு கட்டளையிடப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்". "இதற்கு மேலதிகமாக போலி வாக்காளர் அட்டைகளைப் பாவித்து வாக்களித்தமை, வாக்குப் பெட்டிகளை போலியான வாக்குகளைக் கொண்டு நிரப்பியமை, கைகளில் இடப்பட்ட மையினைக் கழுவியபின்னர் பலதடவைகள் வாக்களர்கள் வாக்களித்தமை உட்பட பெருமளவு தேர்தல் மோசடிகளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மகிந்தவின் ஒருங்கிணைப்பாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்".
    2 points
  9. அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜
    2 points
  10. ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........
    2 points
  11. இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான‌ பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக‌ மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄
    1 point
  12. அப்பப்ப அவர்களும் மனிசர்களுக்கு ப்பிரசர் கொடுத்துட்டு போயிடுவாங்கள் அதைதான் சொல்ல வந்தன்
    1 point
  13. நேற்று போயாச்சு நாளை புதிராச்சுஇன்றே நிலையானது......!👏
    1 point
  14. 23 வயது ஆமையுடன் ஒரு ஆமை நடை.........! 🐢
    1 point
  15. உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக......! 👍
    1 point
  16. இது பலருக்கு உள்ள பிரச்சனை, கண்டி சிங்களவர்கள் தங்கள் பெயரை பரம்பரையுடன் இணைத்துதான் பதிவார்கள், எங்களுக்கு சொந்த இடமே இல்லாமல் போய்விட்டது இனி பெயரை வைத்து என்ன செய்ய, இந்த பரம்பரை பெயரும் ஒரு சாதி முறையைதான் இந்தியா & சிங்களவர்களில் உருவாக்கியுள்ளது
    1 point
  17. திருவேரகத்தில் மகிழ்வோடு கொலு
    1 point
  18. இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா (2) விண்ணக உணவே வா உறவாய் என்னில் வா (2) வருக வருக தேவா எந்தன் உள்ளம் வருக தேவா (4) இனிய குயிலின் இசையினிலே இயற்கை தந்த அழகினிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா கனிவு நிறைந்த வார்த்தையிலே அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன் நான் உன்னருள் பெறுகின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) வண்ண மலரின் சிரிப்பினிலே மயிலின் வண்ண சிறகினிலே உன் எழில் காண்கின்றேன் நான் உன் எழில் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா பொங்கும் கடலின் அழகினிலே புன்னகை நிறைந்த மழலையிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2)
    1 point
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கன்னித் தமிழ் சாலையோரம் யா ரசூலல்லாஹ்... யா ஹபீபல்லாஹ்... நெஞ்சமே பாடுதே
    1 point
  20. தனியின் எழுத்துக்குள் சுமந்திரன் சாணக்கியன் இன்னோரன்ன பேர்வழிகளுக்கு கௌரவ வேடம். அப்பிடி சும்மா எண்டாலும் வந்து எட்டிப் பார்த்துட்டு போவார்கள்.😆
    1 point
  21. TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால் குப்பை மட்டுமே அள்ள அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்... தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.
    1 point
  22. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்கழி 2013 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னர் மட்டக்களப்பில் குடியேறிய தமிழர்களை வஞ்சித்த கருணா முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர்தப்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுமார் 1100 குடும்பங்கள் மீளவும் மட்டக்களப்பில் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் உதவிகள் அனைத்துமே மறுக்கப்பட்டு மிகவும் அவலமான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 2004 இல் மட்டக்களப்பிலிருந்து வன்னிநோக்கி இம்மக்கள் இடம்பெயர்ந்தபொழுது, இவர்களின் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துக்கொண்ட கருணாவும் அவரது குழுவினரும், மீதமிருந்த வீடுகளையும், ஏனைய சொத்துக்களையும் அழித்தது நினைவிலிருக்கலாம். இனவழிப்புப் போரின் பின்னர் இவர்கள் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து குடியேறியபோது அரசசார்பற்ற நிறுவனங்களும், ஐ நா அமைப்புக்களில் சிலவும் இவர்களுக்கான தற்காலிக தங்கு கொட்டகைகளை வழங்கியிருந்தன. ஆனால், அதன்பிறகு இம்மக்களுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரியவருகிறது. தமக்கு ஐ நா வினாலும், அரசாரா தொண்டர் நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட கொட்டகைகளைக் கொண்டே தாம் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுவதாகவும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணங்கள் தமது கொட்டகைகளை தாண்டிச் சென்றுவிடுவதாகவும், வன்னியில் புலிகளுடன் இருந்த காரணத்தினாலேயே தாம் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்தியாவின் இலவச வீட்டுத் திட்டத்திலும் தாம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கொடூரமான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்து, அவலங்களைச் சுமந்து மீண்டும் தமது மாவட்டத்திற்குத் திரும்பியிருக்கும் இத்தமிழர்களுக்கான அனைத்து நிவாரணங்களையும் கருணா தனது அரசியல் பலத்தினைப் பாவித்து தடுத்து வருவதாகவும், தம்மை வந்து பார்ப்பதற்குக் கூட அரச அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் திட்டத்தின்படி, மட்டக்களப்பில் மாத்திரம் 2000 வீடுகள் கட்டப்படுவதாகவும். இவற்றுள் ஒரு வீடுகூட வன்னியிலிருந்து மட்டக்களப்பு திரும்பியிருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லையென்றும், பெரும்பாலான வீடுகள் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர் தப்பி, ராணுவ தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளைச் சந்தித்து, முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு அல்லற்பட்ட இம்மக்கள் கோரளைப்பற்று வடக்கு - வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான், வவுணதீவு, கோரளைப்பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
    1 point
  23. பாலமுருகன் விளையாடல்
    1 point
  24. வாரும் தூய ஆவியே வாரும் தூய ஆவியே
    1 point
  25. எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு
    1 point
  26. நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள் மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாய‌விம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம். மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து. நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. தொடரும்
    1 point
  27. இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.
    1 point
  28. கூண்டுக்குள் நிக்கும் குரங்கானாலும் குரைக்கும் நாயானாலும் கர்ப்பத்தை காதலிக்கவே செய்கின்றன.....! 👍
    1 point
  29. குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்...🌸
    1 point
  30. எழுதப் பஞ்சியில தொடருவியள் போல. பேசாமல் எழுதி முடியுங்கோ விசுகு.
    1 point
  31. இலங்கையில் எந்த இடத்திற்கு சென்றாலும் (காரியாலங்கள் ,) வாசலில் இந்த மெசினை வைத்து உடல் சூட்டை கணித்து வெப்பநிலையின் வீதம் , ஊர் பெயர் , வருபவரின் அடையாள அட்டை இலக்கம் , விலாசம் , போண் நம்பர் எல்லாம் பதிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள் நான் மோட்டார் சைக்கிளில் சென்றேன் அதன் போது வெப்பநிலை உடலில் அதிகம் இருக்க கொஞ்ச நேரம் பிடித்து வைத்தார்கள் பின்னர் உடல் சூடு குறையவே உள்ளே விட்டார்கள் , கொஞ்ச நேரம் மரண பீதிதான் எனக்கும் தொடரட்டும் விசுகர்
    1 point
  32. வெள்ளிக்கிழமை வரை நிற்க வைச்சிட்டு போறது நல்லமில்லை சிறி Bro. 😷
    1 point
  33. தொடருங்கள்
    1 point
  34. ரென்ஷன் ஆனாலும் சூடாகும்! தொடருங்கள்.
    1 point
  35. இப்பவே சணல் பறக்குது தொடருங்கள் சிறி அதுக்காக அடுத்த வெள்ளி வரை எல்லாம் பொறுக்க முடியாது.
    1 point
  36. தொடருங்கள்
    1 point
  37. இது பரவாயில்லை. அனேகமான இடங்களில் தானியங்கியாக நிறுத்தி வைத்துள்ளார்கள். பக்கத்தில் போய் குனிந்து,நிமிர்ந்து முன்னுக்கு,பின்னுக்கு போய் வெறுப்பே வந்துவிடும்.
    1 point
  38. பாடசாலையில் இருந்து விமானநிலையம் வரை பயன்படுத்துகிறார்கள்.
    1 point
  39. அரச கட்டடங்கள் வைத்தியசாலை போன்ற இடங்களில் தலையை வைக்க அது பெரிய சத்தத்தில் சொன்ன பின்பு தான் உள்நுழையவிடுகிறார்கள்.
    1 point
  40. கண்ணே கண்ணே கதை கேளு
    1 point
  41. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 9, மார்ச் மாதம், 2004 கருணா ஆதரவாளர்களால் மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவிருந்த தினக்குரல் பத்திரிக்கைகள் பறிமுதல் கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவென அனுப்பிவைக்கப்பட்ட பிரபல தமிழ் நாளிதழான தினக்குரலின் 3000 பிரதிகள் வாழைச்சேனை, வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் கருணா குழு ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக எடுத்துசேல்லப்படு எரிக்கப்பட்டதாக அப்பத்திரிக்கையின் விநியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர். தினக்குரல் நாளிதழ் ஒரே நேரத்தில் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பிலிருந்து வந்த தகவல்களின்படி வாழைச்சேனைப் பகுதியில் பஸ்ஸில் ஏறிய கருணா ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிக்கைகளை விட்டு விட்டு தினக்குரல் பத்திரிக்கைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அப்பத்திரிக்கைகளைக் கொண்டுவந்தவர்களை எச்சரித்த கருணாகுழு, இனிமேல் இப்பத்திரிக்கைகள் மட்டக்களப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுருத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். சுதந்திர ஊடக சம்மேளனத்திடம் இச்சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் சில ஜனநாயக அமைப்புக்களும் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.
    1 point
  42. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 என்னை வீட்டுக்காவலில் புலிகள் வைத்திருப்பதாக கருணா கூறிவருவது முழுப்பொய் - திருகோணமலைத் தளபதி பதுமன் அஷோஷியேட்டட் பிரஸ் எனும் செய்திச் சேவைக்குப் பேட்டியளித்த திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன், தன்னை புலிகள் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக துரோகி கருணா கூறிவருவது பொய்யான தகவல் என்றும், நகைப்புக்கிடமானதென்றும் கூறினார். அவர் கிளிநொச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபொழுது பி பி சி செய்திச்சேவைக்கு கருணா கூறிய பொய்களை முற்றாக நிராகரித்தார். இப்பேட்டியின்போது பதுமனுடன், தமிழ்ச்செல்வன், கரிகாலன், ரமேஷ், ராம், கெளசல்யன் ஆகியோரும் உடனிருந்தனர். கருணாவின் துரோக நாடகம்பற்றிக் கருத்துக்கூறிய கிழக்கின் தளபதிகள் கிழக்கில் இருக்கும் போராளிகளை நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் தமிழ்த்தேசிய தலைமைக்கும் , தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். "எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தனிப்பட்ட துரோகியின் செயல் தமிழ்ச் சமூகத்தினை பிரிக்கவோ, தேசியத்தின் குறிக்கோளினை உடைக்கவோ அனுமதியளிக்கப்போவதில்லை" என்றும் அவர்கள் உறுதிபடக் கூறினர்.
    1 point
  43. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயரும் அவரது குழுவும் புலிகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்கள். மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் மட்டக்களப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான தமிழ்ச்செல்வன், சிறப்புத்தளபதி ரமேஷ் மற்றும் கரிகாலன் ஆகியோரை வன்னியில் சந்தித்தார்கள். கிழக்கிலிருந்து வருகைதந்திருந்த இக்குழுவிற்கு கருணாவை இயக்கத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டதற்கான காரணங்களை தமிழ்ச்செல்வனும் கிழக்கின் தளபதிகளும் எடுத்துரைத்தனர். அவர்கள் மேலும் இதுபற்றிக் கூறுகையில் தனது முறைகேடுகளையும், இச்சைகளையும் மறைப்பதற்காக கருணா மக்களையும் போராட்டத்தினையும் காட்டிக்கொடுத்து, பிரதேசவாதம் எனும் நச்சுவிதையினை தமிழ்ச் சமூகத்தினுள் விதைக்கமுற்படுவதாகவும் கூறினர். தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர்கள், கருணாவுக்கெதிரான நடவடிக்கைகள் கிழக்கின் பொதுமக்களோ, போராளிகளோ எவ்விதத்திலும் பாதிப்படையாவண்ணம் மிக அவதானத்னத்துடன் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். புலிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த ஆயர் தலைமையிலான குழு, இப்பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டது.
    1 point
  44. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது தவறுகளுக்காகவும், முறைகேடான நடத்தைகளுக்காகவும் தலைமையினால் இயக்கதிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சிய கருணா நேரடியாக தலைமையைச் சந்திப்பதைத் தவிர்த்தார் - தளபதி ரமேஷ் ஐ பி சி செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில், தளபதி ரமேஷ் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியே இயங்குவதற்கான முடிவு கருணாவினாலேயே எடுக்கப்பட்டதென்றும், பல முக்கிய தளபதிகளும் பிரமுகர்களும் கூறிய அறிவுரைகளைக் கருணா ஏற்கமறுத்ததாகவும் அவர் கூறினார். இன்று கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலை கருணா எனும் தனிமனிதரால், தனது முறைகேடுகளை மறைப்பதற்காக அவரால் ஆடப்படும் நாடகம் என்றும், இதற்காக அப்பாவிப் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவர் பகடைக்காய்களாகப் பாவிக்கப் பின்னிற்கவில்லையென்றும் கூறினார். தனது இந்த முடிவுபற்றி மூத்த தளபதிகளிடனோ, கிழக்குவாழ் மக்களுடனோ கலந்தாலோசிக்காத கருணா, இறுதிவரை இப்பிரச்சனை குறித்து தலைவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் கூறினார். தான் உட்பட, ராம், பிரபா, கெளசல்யன், கரிகாலன், வாமன் ஆகிய பலர் கருணாவின் இந்த முடிவு தொடர்பாக அவருடன் பேசியதாகவும், தேசியத் தலைவருடன் இதுபற்றிப் பேசி நிலைமையினைச் சுமூகமாகத் தீர்த்துவைக்க தாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் கருணா தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். தமது அறிவுரைகளை விடாப்பிடியாக ஏற்கமறுத்த கருணா, தலைமையிடமிருந்து வந்த அனைத்துக் கட்டளைகளையும் ஏற்கமறுத்ததுடன், தனது நடவடிக்கைகளுக்காக தான் இயக்கத்திலிருந்து அகற்றப்படலாம் என்று அவர் அச்சமுற்றிருந்தார் என்றும் கூறினார். "அவர் இப்போது தனது தவறுகளை மறைக்க தமிழர்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்கும் உளரீதியான புரட்டுக்களையும், புனைவுகளையும் கொட்டிவருவதுடன் கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றும் முகமாக மிகவும் தவறாக, துரோகத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்". "இவரது இந்தச் செயற்பாடுகள் அவரை இயக்கத்திலிருந்தும் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேற்றுவதைத் தவிர தலைமைக்கு வேறு எந்த முடிவினையும் விட்டுவைக்கவில்லை". "தனது தவறான நடவடிக்கைகளாலும், முறைகேடான நடத்தைகளினாலும் இயக்கத்திலிருந்து விரட்டப்படலாம் என்று அஞ்சிய கருணா தலைவரை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். புலிகளியக்கத்தின் கட்டுக்கோப்பும், ஒழுக்கமும், தனிமனித ஒழுக்கமும் நீங்கள் அறியாததல்ல. நாம் இயக்கத்தில் இணையும்போதே இக்கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிவோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தலைமையின் கட்டளைகளை ஏற்கமறுப்பதும், தலைமைக்கெதிராகச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத குற்றமாகும்". "கிழக்குமாகாணத் தமிழர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எமது தேசியத்தலைவர் மீது அளப்பரிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்கள். கிழக்குவாழ் மக்களும் பெருமளவு போராளிகளும் இச்சிக்கல் தொடர்பாகத் தலைவருடன் பேசி சுமூகமான தீர்வொன்றினைப் பெறவே விரும்பினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி தலைவருடன் பேசி இப்பிரச்சினையினைச் சுமூகமாகத் தீர்க்கவே நாம் முயல்கிறோம்". "தலைவர் எமக்கிட்ட கட்டளையின் பிரகாரம் கிழக்கின் மக்களுக்கோ அல்லது போராளிகளுக்கோ எதுவித தீங்கும் ஏற்படாது இச்சிக்கலைத் தீர்ப்போம். கருணா தன் பங்கிற்கு மிலேச்சத்தனமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும் இன்று மக்கள் அவரை விட்டு மிக விரைவாக வெளியேறிவருகிறார்கள்". "கருணா எனும் தனிமனிதரால் ஏற்படுத்தப்பட்ட இந்த துரோக நாடகத்தில் அப்பாவிகளோ போராளிகளோ பாதிக்கப்படாவண்ணம் அவருக்கான தண்டனையினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மிக அவ்தானமாகத் திட்டமிட்டு அதன் சில படிகளை இப்போது முன்னெடுத்துவருகிறோம்". "கருணாவின் துரோக நாடகம்பற்றிய விளக்கத்தினை நாம் கிழக்கு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இன்று மக்கள் அவரின் உண்மையான முகத்தினைக் கண்டறிந்துவிட்டார்கள். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் கருணாதான் என்பதை ஏற்றுக்கொள்வதோடு, தேசியத் தலைவர்மீதான முழுநம்பிக்கையினையும் வெளிப்படுத்திவருகிறார்கள்". "கிழக்கு மகாணத்திற்கு சரியான பிரதிநித்துவம் தரப்படவில்லை என்று கருணா கூறுவது மிகப்பெரிய பொய். மத்திய குழுவில் முக்கிய அங்கத்தவரான அவர் தலைவருக்கு அடுத்த படியில் உள்ள ஒருவர். அதுமட்டுமல்லாமல் எமது நிர்வாகத்துறையின் தலைவராக இருப்பது புதியவன் எனப்படும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஒரு போராளியே. இவர்போன்ற பல கிழக்குமாகாணப் போராளிகள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கருணா உண்மையிலேயே கிழக்கு மாகாணத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று எண்ணியிருந்தால் ஏன் அவர் இறுதிவரை தலைவருடன் இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கவில்லை?" "நாம் புலம்பெயர் தமிழருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்த எமக்கு உற்றதுணையாக இருங்கள். கிழக்கு மாகாண மக்களை எம்முடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைத்து எமது இயக்கத்தை நாம் பலப்படுத்துவோம். இந்தப் பிரச்சினையால் நாம் துவண்டுபோகாது எமது தாயகத்தை மீட்டெடுக்கும் உறுதியில் நிலைத்திருப்போம்". என்றும் அவர் மேலும் கூறினார்.
    1 point
  45. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது துரோகத்தினையும், தனது தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்- கரிகாலன் ஐ பி சி தமிழ்ச்சேவைக்கு வன்னியிலிருந்து கரிகாலன் வழங்கிய செவ்வியில் தனது துரோகத்தினையும், தான் விட்ட பல தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான , ஏற்கமுடியாத பொய்களை சர்வதேச செய்திநிறுவனங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று கூறினார். உலகத் தமிழரின் முன்னால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டு, துரோகியெனும் அடையாளம் சூட்டப்படுவதைத் தடுக்க இவ்வாறான பொய்களைக் கூறி வருகிறார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். கரிகாலம் மேலும் கூறுகையில், கருணாவின் துரோகத்தினால் தம்மீது பூசப்பட்டிருக்கும் இழிச்சொல்லை மிகவிரைவில் துடைத்தழித்துவிட்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்திற்கான தமது அசைக்கமுடியாத ஆதரவினை மீண்டும் நிரூபிப்பார்கள் என்றும் கூறினார். அவர் மேலும் பேசும்பொழுது, தற்போதுவரை கருணாவின் துரோகத்தினை மன்னித்து அவரது தவறுகளை மறந்து ஏற்றுக்கொள்ள தேசியத் தலைவர் தயாராகவே இருக்கிறார் என்றும் கூறினார்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.