Jump to content

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      15408


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      76583


  3. பசுவூர்க்கோபி

    பசுவூர்க்கோபி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      418


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      28966


Popular Content

Showing content with the highest reputation on 03/20/21 in all areas

  1. 18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி-
    8 points
  2. தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்... தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள் அலைந்தன. இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும் மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது. முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான். ****************************************************************************** வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல் கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது. தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும். குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும் மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது. இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது. மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக, தனிமையாய் இருப்பது, வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான். அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள் என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன. இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக் கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர். கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது. அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது. இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது. அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது . வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை. அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருந்தன. அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில், நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல், மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தாலும் எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும் ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை 'மாதிரிக் காணொளி வாயிலாக' (demo video) அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார். அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது. இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது. அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு இப்படி ஒரு ஏக்கமா? அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன. அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான். அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான். அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது. புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது. பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான். சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன. உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது. அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது. இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது. அவர்கள் அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது. கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கொண்டான். நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான். வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான். அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது. அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும் துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை மின்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு, இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன. அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு. ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது. அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான். ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அம்மாவும் அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன. யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான். இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது. மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது. அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. ****************************************************************************** அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது. "இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று. என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.' அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட காலத்துக்கும் மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். -
    5 points
  3. மிஷேலின்... மனைவி, கேட்ட.. ஒரேயொரு நிபந்தனை... இதுதான்.... உன்னுடைய.... வங்கிக் கணக்கில் இருக்கும், ஏழு மில்லியன் ஐரோவையும்... தனது, தனிப்பட்ட வங்கிக் கணக்கில், மாற்றினால் மட்டுமே... இருவரும் சேர்ந்து, குடும்பம் நடத்தலாம் என்று சொன்ன போது... மிஷேல்... கொஞ்சம், அரண்டு போனாலும்... தான்... முதல், செய்த தவறுகளை.... மீண்டும், நினைவு மீட்டிப் பார்த்த போது... அவள்... சொல்வதிலும், ஒரு நியாயம் இருக்கு என்று... என்ரை..... செல்லக் குட்டி, பிரவுணி குட்டி, கள்ளிக் குட்டி... என்று... அவளை தூக்கி, கொண்டாடினான். அந்த நேரம்... பார்த்து, அப்பா.... "பென்சில் சீவி" தாருங்கப்பா... என்ற குரல் கேட்டதும்.... மிச்சத்தை, நாளைக்குப் பாப்பம் என்று, பென்சிலை... சீவத் தொடங்கினான். முற்றும்... திறந்த, முனிவனாகினான் மிஷேல். 🙏
    4 points
  4. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
    3 points
  5. எனக்கென்னவோ இந்த பெயரை, அந்த நேரத்தில் யாருக்கு கிடைக்குதோ அவையல் வச்சிருப்பினம் போல இருக்கு 😝
    3 points
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஐப்பசி 2019 கருணா பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுக்களின் பின்புலத்துடன் மட்டக்களப்பில் மணற்கொள்ளையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்கள் கோரளைப்பற்று வடக்குப் பகுதியான வாகரையில் ஆற்று மணற்கொள்ளையில் ஈடுபட்டுவரும் கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மணற்கொள்ளையர்கள், தம்மை தடுக்க முனைந்த பிரதேச சபை அதிகாரியான கரன் என்பவரை மிரட்டியுள்ளதுடன் "நாங்கள் நினைத்தால் உன்னை இப்பதவியிலிருந்து அகற்றுவோம்" என்றும் கூறியிருக்கின்றனர். தமக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மணல் அகழும் பகுதியினை நீட்டிக்கவேண்டும் என்று அவ்வதிகாரியை மிரட்டிய சிங்கள மணற்கொள்ளையாளன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தாவின் தேர்தல் செலவுகளுக்காக மணற்கொள்ளையில் ஈடுபடவேண்டியிருக்கிறதென்றும், கோத்தாவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், ஆலோசகரும் தமக்குப் பின்னால் பக்கபலமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறான். வாகரையில் கட்டுப்பாடற்ற ஆற்று மணல் அகழ்வினால் இப்பகுதியில் ஏற்படவிருக்கும் பாரிய சுற்றுப்புறச் சூழல் அநர்த்தத்தினைத் தடுக்கும் முகமாக இப்பகுதியில் ஒரு சில அதிகாரிகள் மணல் அகழ்வதற்கான அனுமதிகளைக் கட்டுப்படுத்த எத்தனித்துவரும் நிலையில், அரச அமைச்சுக்களில் ஒன்றான கனியவள மற்றும் புவியியல் அமைச்சு மணற்கொள்ளையர்களுக்கான ஆசீர்வாதத்தினை வழங்கிவருவதாக நம்பப்படுகிறது. தமிழர் தாயகத்தின் ஒரு பாகமான வாகரையிலிருந்து கொள்ளையர்களால் அகழப்படும் மணல் வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதிசெய்யப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. அரச ஆதரவுடனும், துணைராணுவக் கொலைக்குழுக்களின் பக்கத்துணையுடனும் இப்பகுதியில் மணல் அகழ்ந்துவரும் சிங்கள மணற்கொள்ளையர்களின் நடவடிக்கையினால் வெருகல் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துவருவதாகவும், கடும் மழைக் காலத்தில் இப்பகுதியில் அமைந்திருக்கும் தமிழர்களின் மனைகளுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்துவருவதாகக் கூறும் சுற்றுப்புறச் சூழல் அதிகாரிகள் ஆற்று நீரின் உப்பின் அளவும் இதனால் அதிகரித்துவருவதாகவும் கூறுகிறார்கள். சிங்கள மணற்கொள்ளையர்களுக்கு துணையாகச் செயற்பட்டுவரும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படையினரும் தம் பங்கிற்கு இப்பகுதியில் மணற்கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. இதுவரை காலமும் ஆயுதமுனையில் , சட்டவிரோதமாக மணற்கொள்ளையில் ஈடுபட்டுவந்த இக்கொலைக் குழுக்கள் தற்போது அனுமதிப்பத்திரங்கள் ஊடாக மணற்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், அனுமதிப்பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவினைக் காட்டிலும் மிக அதிகளாவான மணலினை அதிகாரிகளை அச்சுருத்தி இவர்கள் அகழ்ந்துசெல்வதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் மக்களை தமது மணற்கொள்ளைக்காகப் பாவிக்கும் இவர்கள், மணல் அகழ்விற்கெதிரான மக்களின் தொடர்ச்சியான ஆர்ப்பட்டங்களையும், இயற்கை அனர்த்தங்களையும் சட்டைசெய்யாது சட்டவிரோத மண் அகழ்வில் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2007 வரை புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழரின் இயற்கை வளம் இன்று இனத்துரோகிகளாலும், எதிரியினாலும் சூறையாடப்பட்டு, நிரந்தரமான அநர்த்தத்தினை எதிர்நோக்கிவருகிறதென்பது குறிப்பிடத் தக்கது. மகாவலி ஆற்றின் ஒரு பகுதியான வெருகல் ஆற்றின் அருகில் காயங்கேணி, மாங்கேணி, கண்டலடி, பால்ச்சேனை மற்றும் கதிரவெளி ஆகிய தமிழ்க் கிராமங்கள் அமைந்திருப்பதுடன் A - 15 நெடுஞ்சாலையினை ஒட்டியும் அமைந்திருக்கின்றன.
    2 points
  7. ஆணவம் அடங்கிய அந்த நேரம்......! 👍
    2 points
  8. இனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
    1 point
  9. இது வரை இல்லை உங்கள் பதிவுகளைத்தொடர்த்தும் படித்தால் இனி வரலாம்.😍
    1 point
  10. வேட்பாளருக்குஆரத்தி எடுத்து பணம் பெறுதல் , பெண்கள் பிரச்சாரத்திற்கு சென்றால் தனி காசு , தேர்தல் பணிக்குழு .. என்டு எலக்செனில் மனைவிமார்கள் பிசியாகத்தான் இருக்கினம் .. இஞ்ச வீட்டில் சும்மா இருக்கும் கணவன்மார் செய்து பார்க்க வேண்டிய பதிவு 👌 .. பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்..👍
    1 point
  11. இந்த வீடியோவில் வரும் பெண் முன்னால் நின்று ஆடியபோதும் எப்படி நீங்கள் பார்க்காமல் தவிர்த்தீர்களோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கால வரும் பெண்களையும் கண்டுக்காமல் தவிருங்கள், பிரச்சினைகளே வராது......! 😂
    1 point
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஐப்பசி 2019 படுவான்கரைப்பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களாலும், கருணா குழு துணைராணுவக் கொலைப்படையினராலும் கடந்த 10 மாத காலத்தில் கொல்லப்பட்டுள்ள கால்நடைகளின் எண்ணிக்கை 1500 ! கோரளைப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவினுள் அடங்கும் கிரான் மற்றும் செங்கலடிப் பகுதியில் கடந்த 10 மாதகாலத்தில் மட்டும் குறைந்தது 1500 கால்நடைகளை சிங்கள குடியேற்றக்காரர்களும் கருணா துணைராணுவக் கொலைப்படையினரும் சுட்டுக் கொன்றுள்ளதாக இப்பகுதியின் பாலுற்பத்தி சபையின் செயலாளர் நிமலன் கந்தசாமி தெரிவிக்கிறார். இவ்வாறு கால்நடைகளை இரு பக்கத்தினராலும் இழந்துவரும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் பாழாக்கும் முகமாக மில்கோ எனப்படும் அரச பாலுற்பத்திச் சபை, தமிழர்களிடமிருந்து மிகவும் குறைவான விலைக்கே பாலினைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார். அநியாய விலைக்குக் கொள்வனவுசெய்யப்படும் பாலிற்கான கொடுப்பனவுகள் கூட நீண்ட கால தாமதத்தின் பின்னரே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுவான்கரையிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை நிறுவிவரும் அரசாங்கம் மில்கோ அதிகாரிகளூடாக தமிழ் பண்ணையாளர்களை மேய்ச்சல் நிலங்களைக் கைவிட்டு பண்ணைகளை ஆரம்பித்து மாட்டுத் தீவனத்தைக் கொண்டு தமது கால்நடைகளைப் பராமரிக்கவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறது. சகல வழிகளிலும் தமிழர்களை இப்பகுதியில் இருந்து வெளியேற்றிவிட அரசு கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாகக் கூறும் நிமலன், சிங்கள ஊர்காவல்ப்படை மற்றும் துணைராணுவக் கொலைக்குழுக்களினைக் கொண்டும் பசுக்களைக் கொன்றுவருகிறது என்று கூறுகிறார். சிங்களக் குடியேற்றக்காரர்களினால் சுட்டுக் கொல்லப்படும் பசுக்களை இறைச்சிக்காக விற்பதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை அரச வனவளத்துறை, ராணுவம் மற்றும் பொலீஸார் உதவிவருவதாகவும், இவர்களுக்கான பாதுகாப்பினையும் அவர்களே வழங்கி வருவதாகவும் கூறுகிறார் நிமலன். இப்பகுதியில் 2007 இன் பின்னர் குடியேறிய சிங்களவர்களில் ஒரு பகுதியினர் தமிழர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினை அடுத்து தற்காலிகமாக வெளியேறிச் சென்றதாகக் கூறப்பட்டது. மீதமிருந்தோர் ராணுவத்தினரின் பாதுகாப்புடனும், உதவியுடனும் குடியேற்றத்தினை விரிவுபடுத்தி வந்ததாகவும், ராணுவத்தால் இவர்களுக்கு வழங்கப்பட்ட T - 56 தானியங்கித் துப்பாக்கிகளைக் கொண்டே தமிழர்களின் கால்நடைகளை இவர்கள் கொன்றுவருவதாகவும் படுவான்கரை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இவ்விதமிருக்க, இதே பகுதியில் பிரிதொரு திசையில் கருணா துணைராணுவக் கொலைக்குழுவினரும் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களை அச்சுருத்தி இப்பகுதியிலிருந்து நிரந்தரமாகவே விரட்டும் நடவடிக்கையில் அரசு சார்பாகச் செயற்பட்டு வரும் இக்குழுவினர் தம்மால் கொல்லப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவில் நீர் அருந்த நீர்த் தேக்கங்களை நாடிவரும் மாடுகளை பொறிவைத்துப் பிடிக்கும் இக்குழுவினர் அவற்றைச் சுட்டுக் கொல்வதாக மக்கள் கூறுகின்றனர். அண்மைய ஆட்சிமாற்றத்தின் பின்னர் அதிகரித்துவரும் இவ்வாறான கால்நடைகள் படுகொலைகள் கூறும் விடயம் யாதெனில், இப்பகுதியில் மீளவும் விரைவுபடுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றினை சிங்கள அரசு தனது முப்படையினரைக் கொண்டும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரைக் கொண்டும் நடத்தத் தொடங்கியிருக்கிறது என்பதைத்தான் என்று நிமலன் கூறுகிறார். பெரும்பாலான கால்நடைக் கொலைகள் பெரிய மாதவனை மற்றும் மயிலத்தை மடு ஆகிய பகுதிகளிலேயே நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    1 point
  13. இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள் நினைவுகளை அசை போடுங்கள்.
    1 point
  14. நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊
    1 point
  15. சுவியரும் நானும் போட்டியை சிறப்பிக்கவே பதிகிறோம்.
    1 point
  16. பாடல் வரிகள் அனைத்தும் அருமை. பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் இசைக் குழுவுக்கும் என் பாராட்டுக்கள்.
    1 point
  17. குமாரசாமி அண்ணை.... எனக்குத் தெரிந்த வரையில்..... 😎 இணையவன்.... மோகன் அண்ணாவின், B ரீம் நிழலி அண்ணர்.... பா.ஜ.க. மாதிரி.... பிழம்பு, குழம்பு, நியானி என்று... உதிரி கட்சிகளை வைத்துக் கொண்டு... "சேர்க்கஸ்" காட்டுகின்றார். 🤣 நுணாவிலான் மட்டும் தான்... சீமான் மாதிரி, மனச் சாட்சிப் படி நடக்கும், ஒரு "ஜென்ரில் மன்" என்பது... எனது... கணிப்பு. 😂
    1 point
  18. அனைத்தும் அழகு....! பாடலின் கருத்தும் உள்ளடக்கம்! வாழ்த்துக்கள்....!
    1 point
  19. Suvy , qualifier 1 இல் MI வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!
    1 point
  20. பொறுமை பொறுமை கிருப‌ன் பெரிய‌ப்பா பெறும் 10 பேர் இல்லை , போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் போட்டி தொட‌ங்க‌ ஒரு நாளுக்கு முத‌ல் த‌ங்க‌ளின் போட்டி ப‌திவுக‌ளை ப‌திவிடுவின‌ம்..........கொப்பிய‌டி ம‌ன்ன‌ர்க‌ள் யாரை கொப்பிய‌டிக்க‌லாம் என்று யோசிக்கிற‌தா ப‌ச்சை சொல்லுது ஹா ஹா😁😀........... இப்ப‌ பார்த்து கோசானை வேற‌ காணும் கோசானும் க‌ல‌ந்து கொண்டால் தான் யாழ்க் க‌ள‌ போட்டி சூடு பிடிக்கும்.............😁😀
    1 point
  21. அத்தனையும் அழகாய் இருக்கு .......தொடருங்கள் கோபி........! 👏
    1 point
  22. எச்சரிக்கை!!!!!. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். 🤣 மிஷேலுக்கு... இரண்டாவது முறை, "7 மில்லியன் ஐரோ", பரிசு விழுந்ததில்... அவன், சிறிய சந்தோசம் அடைந்தாலும்... அவனது... நினைவு முழுக்க, பிரிந்து சென்ற தனது.. மனைவி, பிள்ளைகளின் மீதே இருந்தது. 💓 தனக்குப் பரிசு, விழுந்த கதையை.... மனைவிக்கு சொல்லி... தன்னுடன் வந்து, முன்பு போல்... வாழ்க்கை நடத்தலாம் என்று கேட்ட போது... ஆரம்பத்திலேயே... மனைவி, மறுத்து விட்டார். ⛔ இவன் பல முறை... மன்றாட்டமாக கேட்டதாலும்... "க(தை)ரைத்தார்.... கரைத்தால், கல்லும் கரையும் என்பது போல்... பெண்களுக்கே உரிய, இழகிய மனத்துடன்.. 1️⃣ ஒரே... ஒரு, நிபந்தனை மட்டும் விதித்து... அதற்கு... மிஷேல், வர சம்மதம் என்றால்... தான்.. சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக தெரிவித்தார். அந்த... நிபந்தனை என்ன? ➡️ ➡️ ➡️
    1 point
  23. யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை பங்குபற்றியவர்கள்!!!! ஈழப்பிரியன் சுவி ... ... ... ... .... .... .... .... ஈழப்பிரியன் ஐயா, சுவி ஐயா இருவரினதும் விடைகள் சரிபார்க்கப்பட்டு கூகிள் சீற்றில் ஏற்றப்பட்டுள்ளது.👍🏾 மிகுதி இடங்களையும் நிரப்ப விரைவில் போட்டியாளர்கள் விரைந்து முன்வந்தால் data entry இலகுவாக இருக்கும்! 😀 Diversity வேண்டுமென்பதால் பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள், பையன்கள், பொண்ணுங்கள் எல்லோரும் கலந்துகொள்ளலாம்😎
    1 point
  24. கனடாவில் நாளை இலைத் துளிர் காலம் ஆரம்பமாகிறது.🌱🌿🍃☘️🍀🌻🌹🌷🍁🍂
    1 point
  25. பிழைக்கத் தெரிந்த மனிசன். அடப்பாவி. நிறைய இளைஞர்கள் போய் சேரப் போறாங்களே.
    1 point
  26. வணக்கம், தோழி...! ரோஜாப் பூவை உங்கள் கதையின் நாயகன் சந்திக்காமலே போனது நல்லது போலவே உள்ளது! இப்படியான கூட்டுப் புழுத் தனமான வாழ்வு இப்போது அதிகரித்த படி செல்கின்றது! கால அட்டவணை போட்டு வாழ்வதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை! தொடர்ந்தும் உங்கள் சிறு கதைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
    1 point
  27. அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்.. மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍
    1 point
  28. 1) ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை MI vs RCB MI 2) ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை CSK vs DC CSK 3) ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை SRH vs KKR SRH 4) ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை RR vs PBKS PBKS 5) ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை KKR vs MI MI 6) ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை SRH vs RCB RCB 7) ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை RR vs DC RR 8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை PBKS vs CSK CSK 9) ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை MI vs SRH MI 10) ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை RCB vs KKR RCB 11) ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை DC vs PBKS PBKS 12) ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை CSK vs RR CSK 13) ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை DC vs MI MI 14) ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை PBKS vs SRH PBKS 15) ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை KKR vs CSK CSK 16) ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை RCB vs RR RCB 17) ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை PBKS vs MI MI 18) ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை RR vs KKR KKR 19) ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை CSK vs RCB CSK 20) ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை SRH vs DC SRH 21) ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் PBKS vs KKR PBKS 22) ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் DC vs RCB RCB 23) ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி CSK vs SRH CSK 24) ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி MI vs RR MI 25) ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் DC vs KKR DC 26) ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் PBKS vs RCB PBKS 27) மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி MI vs CSK MI 28) மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி RR vs SRH SRH 29) மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத் PBKS vs DC PBKS 30) மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் KKR vs RCB RCB 31) மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி SRH vs MI MI 32) மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி RR vs CSK CSK 33) மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத் RCB vs PBKS PBKS 34) மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி SRH vs CSK CSK 35) மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத் KKR vs DC DC 36) மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி RR vs MI MI 37) மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் CSK vs PBKS PBKS 38) மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா RCB vs SRH RCB 39) மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் MI vs KKR MI 40) மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா DC vs RR DC 41) மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் CSK vs KKR CSK 42) மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் MI vs PBKS MI 43) மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா SRH vs RR SRH 44) மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா RCB vs DC DC 45) மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் KKR vs PBKS PBKS 46) மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RR vs RCB RCB 47) மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் CSK vs MI MI 48) மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா DC vs SRH DC 49) மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் KKR vs RR KKR 50) மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் SRH vs PBKS PBKS 51) மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா RCB vs MI MI 52) மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர் KKR vs SRH SRH 53) மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா DC vs CSK CSK 54) மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் PBKS vs RR PBKS 55) மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா MI vs DC MI 56) மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா RCB vs CSK RCB 57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? MI , RCB , CSK , PBKS . 58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - MI #2 - PBKS #3 - RCB #4 - CSK 59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? KKR 60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? CSK 61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? PBKS 62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? RCB 63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? MI 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? RCB 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? RR 66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? Suresh Raina 67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? RCB 68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? T. NATARAJAN. 69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? RCB 70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? VIRAT KOHLI 71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? MI 72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? RAVICHANDRAN ASHWIN. 73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? DC 74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? ROHIT SHARMA. 75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? MI 76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? CSK
    1 point
  29. நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......! 😁
    1 point
  30. ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண். நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?
    1 point
  31. கண்களில் மலர்ந்த முகமன்றோ அந்த கந்தனே அருளின் சுடரன்றோ தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ என் சிந்தனை முழுவதும் நீயன்றோ சரவணபவகுக சண்முகனே சராச்சர மந்த்ர குருபரனே முருகா... முருகா... முருகா... முருகா... அன்னையிட்ட நாமம் முருகனல்லவா சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை மலைமேல் நின்றது மறுபிள்ளை அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே சஞ்சலம் போக்கிட வந்தவனே கோயில் மணியோசை கோலமயிலாட்டம் கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . . அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா சிரகிரி வேலவனை அழைக்குதம்மா அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . . அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . . பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா மயக்குதம்மா.. மயக்குதம்மா. . கருணைப்பொழியும் கந்தன் கந்தசஷ்டி கவச நாதன் கடம்ப மலரினிலே அலங்காரம் குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும் மயக்குதம்மா.. மயக்குதம்மா. . மயக்குதம்மா.. நம்மை மயக்குதம்மா. . செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு சரவணபொய்கையிலே அபிஷேகம் மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம் சென்னிமலையின் நாண்டி அவன் கண் மலர்ந்து காப்பாண்டி தேவியர் இருவருடன் வருவாண்டி அந்த தேவர்குலம் காத்த வேலனடி
    1 point
  32. 1) ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை MI vs RCB MI 2) ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை CSK vs DC CSK 3) ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை SRH vs KKR SRH 4) ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை RR vs PBKS PBKS 5) ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை KKR vs MI KKR 6) ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை SRH vs RCB SRH 7) ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை RR vs DC DC 8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை PBKS vs CSK PBKS 9) ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை MI vs SRH MI 10) ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை RCB vs KKR RCB 11) ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை DC vs PBKS PBKS 12) ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை CSK vs RR CSK 13) ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை DC vs MI MI 14) ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை PBKS vs SRH SRH 15) ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை KKR vs CSK KKR 16) ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை RCB vs RR RR 17) ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை PBKS vs MI PBKS 18) ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை RR vs KKR RR 19) ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை CSK vs RCB CSK 20) ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை SRH vs DC DC 21) ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் PBKS vs KKR KKR 22) ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் DC vs RCB DC 23) ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி CSK vs SRH SRH 24) ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி MI vs RR RR 25) ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் DC vs KKR KKR 26) ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் PBKS vs RCB PBKS 27) மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி MI vs CSK MI 28) மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி RR vs SRH SRH 29) மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத் PBKS vs DC DC 30) மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத் KKR vs RCB RCB 31) மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி SRH vs MI SRH 32) மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி RR vs CSK CSK 33) மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத் RCB vs PBKS PBKS 34) மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி SRH vs CSK SRH 35) மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத் KKR vs DC DC 36) மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி RR vs MI MI 37) மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் CSK vs PBKS PBKS 38) மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா RCB vs SRH RCB 39) மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் MI vs KKR KKR 40) மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா DC vs RR DC 41) மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் CSK vs KKR CSK 42) மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் MI vs PBKS PBKS 43) மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா SRH vs RR SRH 44) மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா RCB vs DC RCB 45) மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் KKR vs PBKS KKR 46) மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RR vs RCB RCB 47) மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் CSK vs MI MI 48) மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா DC vs SRH SRH 49) மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் KKR vs RR KKR 50) மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர் SRH vs PBKS SRH 51) மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா RCB vs MI MI 52) மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர் KKR vs SRH SRH 53) மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா DC vs CSK CSK 54) மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் PBKS vs RR PBKS 55) மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா MI vs DC DC 56) மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா RCB vs CSK CSK 57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? SRH,PBKS,MI,CSK 58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - SRH #2 - PBKS #3 - MI #4 - CSK 59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? RR 60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? PBKS 61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? MI 62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? MI 63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? PBKS 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? MI 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? RCB 66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ISHAN KISHAN 67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? MI 68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? TRENT BOULT 69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? MI 70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ISHAN KISHAN 71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? MI 72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? T.NATARAJAN 73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? SRH 74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? ISHAN KISHAN 75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? MI 76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? PBKS
    1 point
  33. *** நிர்வாகம்: இந்த திரியை யாழின் 23வது வருட கொண்டாட்ட திரிக்கு மாற்றிவிடுங்கள் நல்லதொரு வித்தியாசமான கதை, நன்றி தோழி பகிர்வுக்கு
    1 point
  34. மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்... 9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால், தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து, வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும், அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி என்ன சொல்லுவாரோ... கை, கால் எல்லாம் உதறல் எடுத்தது. 🥶 வீட்டிற்கு... திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும், 🍛 "சோத்துக்கு... என்ன வழி❓" என மனதை திடப் படுத்திக் கொண்டு, வருவது வரட்டும் என நின்றான். ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில் தனியே... வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன், கையை அசைத்து... அவரின் காரை மறித்தான். கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗 முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று.. தனக்கு நடந்த சோகங்களை சொல்லி... தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது, "நீ... திரும்பி வருவாய் என்று, எனக்குத் தெரியும்." ஒரு கிழமை... கழித்து, வேலையில் வந்து சேர். என்று சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார். மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால், முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. ஆனாலும்... மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம் அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢 //"விட்ட காசை, திருப்பி எடுப்பம்" என்று... அவனது 🐵 "மங்கி" புத்தி 🐒 சொன்னதால்...// சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான். என்ன... ஆச்சரியம்!!!!!! அவனுக்கு... "7 மில்லியன் ஐரோ", விழுந்து விட்டது. 😮 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣
    1 point
  35. நல்லதொரு சிறப்பான வித்தியாசமான கதையை தந்திருக்கின்றீர்கள்.....நன்றி.....! 👍 பிரியன் சொல்லியதுபோல் அங்கு பதிந்தால் பலர் வாசித்து கருத்து கூறுவார்கள்......!
    1 point
  36. குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣
    1 point
  37. விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. "ஒரு தொழிற்சாலைக்கு, பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற.. கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை... இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ ➡️ ➡️ தொடரும்.... ✍️
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.