Jump to content

Leaderboard

  1. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      33808


  2. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      10574


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76777


  4. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      9910


Popular Content

Showing content with the highest reputation on 04/13/21 in all areas

  1. அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு.. நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 8 2 குமாரசாமி 6 3 கல்யாணி 6 4 சுவைப்பிரியன் 6 5 வாத்தியார் 6 6 கிருபன் 6 7 சுவி 4 8 அஹஸ்தியன் 4 9 நந்தன் 4 10 எப்போதும் தமிழன் 4 11 நுணாவிலான் 4 12 கறுப்பி 4 13 ஈழப்பிரியன் 2 14 வாதவூரான் 2
    5 points
  2. இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி... சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட "பிளான்" படி... முறுக்கு சுட்ட இறுமாப்பில், குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவையும்... பெரிய பிளாஸ்ரிக் பாத்திரத்தில் கவிட்டு கொட்டியது. எடுத்த கணக்கின் படி.... கோதுமை மா, வறுத்த எள்ளு, மிளகாய்த் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு விட்டு... மனிசியை நிமிர்ந்து பார்த்தேன். அவளின் முகத்தில்... எல்லாம், திருப்தி என்ற மாதிரி... தலை ஆட்டினாள். இஞ்சையப்பா... இதுக்குள்ளை, கொஞ்ச... சின்னச் சீரகம் போடுவமோ... என்று கேட்ட போது, (எனது மனைவி, சில வேளை... அப்பா... என்று கூப்பிடுவார். ஆசையாக இருக்கும்.) "நோ" என்று சொல்லி, அவளின் ஆசையை, நிராகரித்து விட்டேன். ஏனென்றால்... முறுக்கு, பிழியும் போது... அது, வேறை அடைத்து விடும் என்ற பயம். எல்லாம்.... போட்டாச்சு, நீங்கள் மெல்லமாக தண்ணியை ஊத்துங்கோ... நான், குழைக்கின்றேன் என்று சொல்ல, சுடு தண்ணியை... கொண்டு வந்து ஊத்திய போது, திரும்பவும்... நிகேயின்... "பத்து நிமிட காணொளியை" பார்த்து, அது... "இளம் சூடான சுடு தண்ணீர் என்று, உணர..." காலம், கடந்து விட்டது. மாவை.... குழைத்தால், கழி மாதிரி இருக்கு. அடுப்பில் எண்ணை.... சூடாக, கொதித்துக் கொண்டிருக்கின்றது. என்னுடைய... கை, "பசை" ஒட்டின மாதிரி இருக்கு.
    3 points
  3. உங்கள் ஊகம் மிகச் சரியானதே இந்த முறுக்கு சிறித்தம்பியின் கல்யாணத்திற்கு அவர் அண்ணி சுட்டது.🤣
    2 points
  4. 5 சிறந்த மாங்காய் பந்து வீச்சு.👌
    2 points
  5. தாத்தாவுக்கு பேரனைப்பார்த்ததும் வாயெல்லாம் பல்..
    2 points
  6. கொம்பு ஊதியாச்சு , இனி கொடி இறங்காது .......! 👍
    2 points
  7. ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை வந்துட்டுது. 🥰
    2 points
  8. ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள் தொடர்ந்து முறுக்கு, சுடுவோம். ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசைப் பட்டு வாங்கின "கடலை மா..." அதன், ஆயுட்கலாம்... முடிய, இன்னும் இரண்டு கிழமைகள் உள்ளது. நான்... எப்போதும் உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன். இப்போ... 11 நாள் விடுமுறை. நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று.... நிகேயின்... "பத்தே நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று... மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று, பன்மையில் கேட்டேன். (பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. ஏனென்றால்... முறுக்கு சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) அதனை... திடீரென்று, கேட்ட போது... அவளுக்கு, பயங்கர "கொதி" வந்து, உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள். நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும் "தொலைக்காட்சி" நாடகங்கள், தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு. ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என் வழிக்கு கொண்டு வந்து... முறுக்குக்கு "மா" குழைக்க ஆரம்பித்தோம். அந்த இடைவெளியில்... மனைவி, கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்.... நாங்கள்.... "முறுக்கு, சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார். அவர்கள்..... அத்தான், அப்பா... "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது. இடையில்... நிகேயின், சமையல் குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை..... திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி.... எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... ஒரு அட்டவணை தயாரித்து... எம்மிடம் இருப்பது.... ஒரு கிலோ கடலை மா. அதுக்கு... எவ்வளவு, அவித்த கோதுமை மா.... மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை.... சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம் கணக்குப் பார்த்து, முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.
    2 points
  9. தாத்தாவின் புத்தாண்டு தீர்மானம்..🤭😄
    1 point
  10. .அனைவரும் கொரோனாவிலிருந்து விடுபடும் ஆண்டாக பிலவ வருடம் அமையட்டும்.✍️👋
    1 point
  11. உண்மைதான் பையா சஞ்சு என்ற குஞ்சு 119 ஓட்டங்கள் எடுக்கும் யார் நினைத்தா? எனக்கு இப்படி ஒரு வீரர் இருக்கின்றார் என்றே தெரியாது எனக்குத் தெரிந்தவர்கள் வார்னர் வில்லியம்சன் போல்டு அலி சங்கக்கடைக்காரன்😀 கெயில் ஆனாலும் கெயில் பஞ்சாப்பிற்கு விளையாடுவதும் தெரியாது😞
    1 point
  12. நன்றி உடையார், செல்லக் குட்டி என்றது பேரப்பிள்ளை என்று நினைக்கிறேன் 🙂. நடையை ஓட்டமாக மாற்றுங்கள், நீங்களும் பிள்ளையாகவே மாறிவிடலாம். நன்றி விசுகு அண்ணா, பார்க்கலாம், இன்னொரு தடவை சந்திப்போம். வாரத்தில் ஒரு தடவை நேரம் ஒதுக்கி நடவுங்கள் மனதுக்கும் நல்லது.
    1 point
  13. ர‌ஸ்சில் கார்த்திக் இவ‌ர்க‌ளின் விளையாட்டு இன்று எடுப‌ட‌ வில்லை ஈசியா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு இவ‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி ஹா ஹா 😁😀 தாத்தாவுக்கு புள்ளி கிடைக்க‌ போகுது என்று சொல்லி இர‌ண்டு விளையாட்டிலும் கிடைக்காம‌ போய் விட்ட‌து ந‌ண்பா ஆனால் இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் கொல்க‌ட்டா இப்ப‌டி கேவ‌ல‌மாய் விளையாடுவினம் என்று எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் ஹா ஹா கிரிக்கெட் மாஜிக் 😀😁 பிழையை திருத்த‌வும் பெரிய‌ப்பா 😀😁 என‌க்கு தான் 8 புள்ளி கிருப‌ன் பெரிய‌ப்பா ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு 6 ம‌ற்றும் 4 புள்ளி அவ‌ச‌ர‌த்தில் பிழை விட்டு விட்டீர்க‌ள் ஹா ஹா 😀😁
    1 point
  14. மும்பை இந்தியன்ஸ் 152 ஓட்டங்களை எடுத்திருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓட்ட இலக்கை இலகுவாக எடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தும் இறுதி ஓவர்களில் எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்கமுடியாமல் தடுமாறியும் தோல்வியைத் தழுவியது. மும்பை இந்தியன்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 8 2 குமாரசாமி 6 3 கல்யாணி 6 4 சுவைப்பிரியன் 6 5 வாத்தியார் 6 6 கிருபன் 6 7 சுவி 4 8 அஹஸ்தியன் 4 9 நந்தன் 4 10 எப்போதும் தமிழன் 4 11 நுணாவிலான் 4 12 கறுப்பி 4 13 ஈழப்பிரியன் 2 14 வாதவூரான் 2
    1 point
  15. சாச்சா! அப்படி நடக்காது. மும்பை இந்தியன்ஸ் இன்று வெல்லாவிட்டால் எப்படி கப் தூக்கமுடியும்? நான் KKR fan ஆனால் இன்றைக்கு மற்றப் பக்கம் (இரண்டு புள்ளி முக்கியம்)😂
    1 point
  16. கண்டதையும் சாப்பிட்டு கொழுப்பு கொலஸ்டரோல் என்று அவஸ்தைப்படுவதை விட மரக்கறியை சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்தானே. யானைக்கு குதிரைக்கு இல்லாத பலமா எமக்கு இருக்கிறது?
    1 point
  17. 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் சுலக்சனின் வரவை எதிர்நோக்கியவாறு கதவினை நோட்டம்விட்டுக்கொண்டிருந்தான் அவன், களஞ்சிய அறைக்குள் பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் ஒரே சத்தம், புகுந்திருப்பதும் ஒரு யானை தானே என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு நொண்டிக்காலன் என்ன செய்கிறானோ ஒரு தடவை எட்டிப்பார்ப்போம் என்று கதவோரத்தை நெருங்கிய கணத்திலேயே சுலக்சன் கையில் ஒரு பொருளுடன் வெளிப்பட்டான், அது ஒரு நாட்குறிப்பு, 1962 என்று புழுதி படிந்த அட்டை முகப்பில் ஆண்டு தெளிவாகவே தெரிந்தது. என்ன மச்சான் இது ..? யாரோ ஒரு பழைய பிரதரின் டைரி போல... அதுசரி...அதெப்பிடி உனக்கு கிடைச்சுது ...? நான் தான் ஒவ்வொருநாளும் வாறனானெல்லோ என்று விட்டு அவனை பார்த்தான் சுலக்சன் போடா லூசு ஒவ்வொரு நாளும் வாறநீயோ...? என்று அவன் கேட்கவும் ,ஒற்றைக்கண்ணடித்து சிரித்துவிட்டு சுலக்சன் மேலும் தொடர்ந்தான், "அது டா ஒருநாள் அதிபரோடு வந்து ஒரு அட்டைப்பெட்டியை தோண்டும் போது கையில் அகப்பட்டது, திறந்து பார்ப்போம் என்று பார்த்தால் வெளியே அதிபர், வாய்ப்பு கிடைக்கும் போது உருவிவிடுவோம் என்று அகப்பட்ட ஒரு மரப்பலகைக்கு கீழே சொருகி விட்டு வந்தேன், இண்டைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது,அடுத்தவர்களோட டயரியை வாசிப்பதே தனி சுகம் இது வேற பழைய டயரி வா சேர்ந்து வாசிக்கலாம் " அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள இருவரும் அருகிலுள்ள மேசையை மின்விளக்கிற்கருகில் இழுத்து போட்டுக்கொண்டு ஒற்றைகளை திருப்ப துவங்கினர். முதல் ஒற்றையில் உரியவரின் பெயர் கறுப்பு ஆங்கில கூட்டெழுத்தில் Rev.Bro Felix Rodrigez என்று மினுமினுத்தது, பெயரை வாசித்துவிட்டு இந்தப்பெயரை இதற்க்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்து விட்டு சற்று தலையை உயர்த்திய அவனது கண்கள் மண்டபத்தினுள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த ரெக்டர்களது புகைப்படங்களை வரிசையாக மேய்ந்தன, அவனுக்கு பிடித்தமான Wilheim பிரதரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த புகைப்படத்தில் இதே பெயர் இருந்தது, ஓ இவரது நாள்குறிப்பா என்று நினைத்தவாறு ,ஒற்றையை பிரிக்கமுன் சுலக்சனோ பத்து பதினைந்து ஒற்றைகளை கடந்து வேறு எதுவொன்றையோ தேடுவது போல் படு சீரியஸாக வாசித்துக்கொண்டிருந்தான், என்ன மச்சான் இப்பிடி வேகமாக பார்க்கிறாய் என்று கேட்கவும் சுலக்சனோ எழுதியிருக்கும் எல்லாமே ஒரேமாதியாகவே இருக்கு டா அதுதான் கொஞ்சம் வேகமாக வசிக்கிறேன் என்று விட்டு ஒற்றைகளை பிரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இப்படியே சிறிதுநேரம் போயிருக்கும் சுவாரசியமாக எதுவுமில்லை அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான் நாளேடு பெரிதாக தோன்றினாலும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, இனி அவர்கள் படிக்கப்போகும் பக்கத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டிய அனைத்து ஒற்றைகளும் கையினால் கோணல் மாணலாக அவசரமாக கிழிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ள கிழிக்கப்பட்டிருக்கும் ஒற்றைகளுக்கு மேலிருக்கும் கடைசி பக்கத்தை கூர்ந்து படிக்க ஆரம்பித்தனர் "இன்று நான் செய்யப்போகும் செயல் எனது மனச்சாட்சிக்கும் சபைக்கு நான் கொடுத்திருக்கும் வார்த்தைப்பாடுகளுக்கும் எதிரானது, இருந்தும் எனது மானம்,மரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இதனை தவிர்க்கமுடியாது, அன்று மட்டும் Wilhem கண்ணில் நாங்கள் பட்டிருக்காவிடில் வரப்போகும் இரத்தப்பழி என்மீது இருக்கப்போவதில்லை, Wilheim என்றாவது ஒருநாள் உன்னிடம் மன்னிப்பு வேண்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் அது அடுத்த பிறவி என்றாலும் அன்று நிச்சயம் உனது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டுவேன் " என்று முடிந்திருந்தது அந்த ஒற்றை இருவரும் ஆளை மாறி ஆள் விறைத்துப்போய் நோக்க , சுலக்சனோ அந்த ஒற்றையை திருப்பி பார்த்தான் அதன் பின் இருந்த ஒற்றைகள் முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்தன, அப்போதுதான் அவன் கவனித்தான் கிழிக்கப்பட்ட ஒற்றையில் ஒன்று முழுவதுமாக கிழியாமல் ஒரு நூலிழையில் தொங்குவது போல் நாட்குறிப்பில் தொங்கிக்கொண்டிருந்தது, அவசரமாக கிழிக்கப்பட்டதால் கிழித்தவரும் அதனை கவனிக்கவில்லை போலும், நூலிழையில் தொங்குவது போல் இருந்தததால் அது ஒரு பக்கம் மடிந்து நாட்குறிப்பின் கடைசி மட்டையில் இருந்த உறையினுள் புகுந்து விட்டிருந்தது, அந்த பக்கத்தை உருவி எடுத்த அவனும் சுலக்சனும் ஆர்வம் தாங்காது வாசிக்கத்தொடங்கினர். அதுவரை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் இந்த பக்கத்தில் இலகுவில் வாசிக்க முடியாதவாறு மிகவும் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது. இனிமேலும் என்னால் முடியாது, உயிருடன் இந்த வேதனையை அனுபவிப்பதை விட நரக வேதனை எவ்வளவோ மேல், நீ என்னை விடப்போவதில்லை என்று தெரிந்து கொண்டேன் Wilheim, எனக்கு அடிக்கடி அறிவுரை தரும் வேளையில் பாவத்தின் சம்பளம் என்ற வசனத்தை நீ பாவிப்பாய், அது உனக்கு பைபிளில் பிடித்த வசனமும் கூட எந்த பாவமும் அறியா உனக்கு அந்த சம்பளத்தை அளித்த அந்த பாவத்திற்காக இன்று இரவு எனது பாவத்தின் சம்பளத்தை தேடிக்கொள்கிறேன், இதுவே இந்த ஜென்மத்தில் நான் எழுதும் இறுதி வாக்கியம் என்று முடிந்த அந்த ஒற்றையை இறுதிவரியின் பின் பேனா குத்திக்கிழித்திருந்தது. வாசித்து முடிந்து விட்டு நிமிர்ந்தான் அவன் அருகில் இருந்த சுலக்சனோ காணாமல் போயிருக்க, மண்டபத்திற்கு வெளியே சுலக்சனின் காலடியோசை கேட்டது, மெதுவாக எழுந்த அவன் மண்டபத்திற்கு வெளியே செல்ல சுலக்சனோ மண்டபத்தின் சுவற்றில் ஒருக்களித்தவாறு தனது இருகைகளையும் அவனது காட்சட்டை பையினுள் விட்டவாறு நிலவினை பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே அன்று வித்தியாசமாக இருந்தது மெதுவாக அருகில் சென்ற அவன், சுலக்சன் தோளில் கையை வைத்து "மச்சான் wilheim பிரதருக்கு என்னடா நடந்திருக்கும்...? எதுவோ விவகாரமாக நடந்திருக்கிறது, முழுவிடயமும் அந்த டயரியில இருந்திருக்கு யாரோ ஒருத்தன் சபையை காப்பாற்றவோ அல்லது பிலீக்சின் பெயரை காப்பாற்ற ஒற்றைகளை கிழித்திருக்கிறான் " என்று முடித்தான் சற்று நேரம் அதனை காதில்வாங்காதவன் போல் நிலவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் அவனை நோக்கி திரும்பினான், அவனது கண்ணில் அப்படியொரு தெளிவும் ஈர்ப்பும் இதுவரைக்கும் சுலக்சனின் கண்ணில் அப்படியொரு காந்தவிசையை அவன் கண்டதில்லை, இன்று என்னவோ சுலக்சன் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்துகொண்டேயிருக்கிறான், திரும்பிய சுலக்சன் அவன் தோளில் கையைவைத்து "உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் மச்சான் , இன்று இல்லாவிடினும் என்றாவது" என்று சொல்லிவிட்டு "அந்த பாவத்தின் சம்பளம் என்ற வசனம் நல்லாயிருக்கில்ல' என்று அவனது கன்னத்தை தட்டிவிட்டு மண்டபம் உள்ளே சென்றுவிட்டான், சற்று நேரத்தில் இருவரும் கண்ணயர , சிறிதுநேரம் கழித்து, "மச்சான் விடிஞ்சுபோட்டு பள்ளிக்கு பிள்ளைகள் வரப்போகினம் வா போவோம்" என்று அவனை உலுப்பினான் சுலக்சன், கண்முழித்து நேரத்தைப்பார்த்தான் அதிகாலை 5:45 சரி வா போவோம் என்று இருவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற, சுலக்சனும் வீட்டைநோக்கி கெந்தி கெந்தி நடக்கும் பரிதாபம் பார்க்கமுடியாது அவனும் "சைக்கிளில் ஏறு டா கொண்டு போய் வீட்ட விடுறன்" என்று சொல்ல அவனோ "ஓ இவ்விடத்தில் இருக்கும் வீட்டிற்கு சைக்கிள் ஒரு கேடு" என்று சிரித்துவிட்டு "நீ வீட்டை போ கொஞ்சநேரத்தில் பள்ளியில் சந்திப்போம் " என்று விட்டு மெதுவாக நடந்து அவனது பார்வையில் இருந்து மறைந்து போக, சிறிது நேரம் அவனை பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக வீட்டை நோக்கி சைக்கிளை விரட்டினான் (தொடரும்)
    1 point
  18. ஊக்கப் புள்ளிகள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும், கருத்துப் பதிந்து ஊக்கபடுத்திய சொந்தங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும்.....வாழ்த்துக்களும்...!
    1 point
  19. படம் : ஒத்தையடி பாதையிலே(1979) இசை & நடிப்பு : சங்கர்கணேஷ் பாடியவர் : KJ ஜெசுதாஸ்
    1 point
  20. சொன்னாப்போச்சு. முறுக்கு. முறுக்கு. முறுக்கு. ஓடருக்கும் சுட்டுக்கொடுப்பீர்களா ?சும்மா கேட்டேன். உதை. யார் வேண்டப்போறான்.😜😜😜😜
    1 point
  21. செந்தூர் செல்லும் தென்றல் இரவின்றி பகலின்றி
    1 point
  22. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 குன்ஹு தாத்திலே இரகசிய பொருளே
    1 point
  23. குமாரசாமி அவர்கள் தொடர்ந்தும் முன்னணியில் இருக்கின்றார். இரண்டாம் இடத்திற்கு விரைவாக முன்னேறிய பையன் இருபத்தியாறு என்ற அன்பருக்கும் அ.உ.க.கூ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.😎
    1 point
  24. எனக்கு ஒரு சத்தேகம் தயவுசெய்து விசயம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். முறுக்கு உரல் பழையது.....பிளாஸ்ரிக் கோப்பை பழையது.....கடலைமா பழையது...எண்ணை பலதடவை மிளகாய் பெரித்த பழைய எண்ணை....முருக்கு. சுட்டவர் ...வயோதிபர்...😝😝😝😝முறுக்கு..மட்டும்...எப்படி. புதிதாயிருக்கமுடியும்..எனவே இது..பழைய. முருக்கு. 😜😜😜😜😜😜😜. புதிய. முருக்கு. எவ்வாறு. சுடலாம் என்பதை. முருக்கு சுட்டு. சாப்பிட்ட...அனுபவமுள்ளவார்கள். அறியத்தரவும்
    1 point
  25. என‌க்கு புள்ளிய‌ ப‌ற்றி க‌வ‌லை இல்லை ச‌ஞ்சு ச‌ம்சுன‌ என‌க்கு மிக‌வும் பிடிக்கும் , கேர‌லாவில் பிற‌ந்தாலும் த‌மிழில் அழ‌காய் க‌தைக்க‌ கூடிய‌வ‌ர்.........த‌லைக் க‌ன‌ம் இல்லாத‌ சிற‌ந்த‌ வீர‌ர் 🙏
    1 point
  26. இந்த மட்ச்சில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் சம்சனுக்குகாக அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்;பாராட்டுக்கள் இளம் மற்றும் முதல் கப்ரனுக்கு.
    1 point
  27. பஞ்சாப் கிங்ஸ் 221 ஓட்டங்களை மழையெனப் பொழிந்தும் தளராமல் புயலெனப் பின்தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓட்ட இலக்கை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. சஞ்சு சாம்ஸன் தனி ஒருவராக அபாரமாக முயன்றும் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. எனினும் நகம் கடிக்க வைத்த த்ரில்லிங் போட்டி!!👏👏👏 பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 6 2 பையன்26 6 3 கல்யாணி 4 4 அஹஸ்தியன் 4 5 சுவைப்பிரியன் 4 6 வாத்தியார் 4 7 கிருபன் 4 8 கறுப்பி 4 9 ஈழப்பிரியன் 2 10 சுவி 2 11 வாதவூரான் 2 12 நந்தன் 2 13 எப்போதும் தமிழன் 2 14 நுணாவிலான் 2
    1 point
  28. அவன் மனுசனா இல்லை பிசாசு.......! 🤣
    1 point
  29. ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?
    1 point
  30. மிகவும் பயனுள்ள பதிவு👏👏👏 எனது நண்பர்கள் சிலரும் அரை மரதன், முழு மரதன் ஓடுகின்றவர்கள். ஆறடிக்கும் அதிக உயரமான ஆஸ்திரிய நண்பர் தனது 40 களில் 110 கிலோ எடையாக இருந்தபோது வைத்தியரின் ஆலோசனையின்படி ஓட ஆரம்பித்து சில வருடங்களில் வருடத்திற்கு 3 மரதன்கள் ஓடுவார். மழையில், குளிரில், பனியில் எல்லாம் ஓடிக்கொண்டேயிருப்பார்! கொரோனாவுக்கு முன்னர் சந்தித்தபோது 74 கிலோவுக்கு வந்திருந்தார்! பல வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடியபோது மொக்குத்தனமாக விழுந்து எனது வலது முழங்கால் சிரட்டையில் பிரச்சினை (stretched ligaments) இருப்பதால் ஓடுவதில் பிரச்சினை இருக்கு. நடப்பதில் பிரச்சினைகள் இல்லையென்பதால் சத்திரசிகிச்சை செய்ய விருப்பம் இல்லை. ஆகவே வேகநடைதான் எனது முக்கிய உடற்பயிற்சி😀 ஓட விருப்பம் உள்ளவர்கள் இங்கிலாந்து பொது உடல்நல துறையால் வெளியிடப்பட்ட Couch to 5k App ஐ பாவிக்கலாம். https://www.nhs.uk/live-well/exercise/couch-to-5k-week-by-week/
    1 point
  31. மரதன் ஓட்டத்தையும்... அதன் பயிற்சியையும்... நான் அறியாத, புதிய தகவல்களை, திரட்டித் தந்தமைக்கு நன்றி இணையவன். 👍
    1 point
  32. ஆஹா இணையவன் உங்களது இன்னொரு முகத்தைப் பார்க்கின்றேன்......சூப்பரான கட்டுரை.அநேகமானவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை. மேலும் பல தகவல்களை தாருங்கள். நன்றி இணையவன்.......! 🌹
    1 point
  33. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.