Jump to content

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      20

    • Posts

      1778


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      76585


  3. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      32969


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      43059


Popular Content

Showing content with the highest reputation on 04/16/21 in all areas

  1. 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில் படிக்கமட்டும் வருகிறான் சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன். மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20 சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி சுலக்சனது மதில் வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது, இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள் உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு" என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும் தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன். "அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் "அன்ரி நீ ங்க வேலையை பாருங்கோ நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான், காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான். கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும் "ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை" "நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு " "அப்போ நேற்று இரவு படிக்க வந்தது " "மச்சான் நானில்லாத நேரத்தில் எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு " "மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் " "டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் " என்று விட்டு அம்மா என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார் எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார். "எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே " என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம் பிரதர் wilheim ஆ எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தான். "மச்சான் மைதிலியை கண்டனியோ " அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன் "வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் " என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல் தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன் அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம் நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம் தோன்றி தோன்றி மறைந்தது. எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான் "என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை " "மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்" என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான், இந்த சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது. 2020 , இலங்கை கிழக்கு மாகாணம் "தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார், "தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது பாடசாலை இஷ்டத்திற்கு முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன் இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது, இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன், இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான் "சேர்" "தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க" இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன் கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள் " என்று முடித்தான். "அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?" "அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் " "சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது " "தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க "என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும் அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான "பாவத்தின் சம்பளம் மரணம்" (முற்றும் )
    5 points
  2. இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 
 நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது. *** எனது உணவு காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு 
அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது 10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் + கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர் மதிய உணவு
 ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்
 4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் + கோப்பி அல்லது தேனீர் இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம் இரவுச் சாப்பாடு மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள் உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். 
 சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும். விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀
    3 points
  3. அங்கே சரியாக கூடைப்பந்தாட்ட மைதானத்தை ஒட்டியவாறு செல்லும் மின்விளக்கு கம்பத்தின் கீழ் வில்லி கைகள் இரண்டையும் தனது காட்சட்டை பையினுள் விட்டவாறு அந்த கம்பத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டு பீலீக்ஸை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார், பீலீக்சின் கண்களால் நம்பமுடியவில்லை கண்களை மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தார், அது வில்லியே தான் மின்விளக்கின் வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாக தெரிந்தது பீலீக்சின் வாய் அவரையறியாமலே வி .....ல் .....லி என்று குழறியது, சற்று நேரம் அவரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லி மெதுவாக பின்னோக்கி நடந்து அந்த இருட்டிலேயே கரைந்து போனார். வெளிறிப்போன முகத்துடன் திரும்பிய பிலீக்சின் மனச்சாட்சி உறுத்தியது இனிமேல் தான் உனக்கு இருக்கு என்று. ரெக்டராக இருந்தகாலத்திலேயே வில்லி அகாலமரணமடைந்தால், கல்லூரி யாப்பின் படி அடுத்த நிலையிலிருந்த பீலிக்ஸ் பாடசாலை ரெக்டரானார், தன்னுடன் ஒரு உதவியாளரையும் வைத்துக்கொண்டார் ஆரம்பத்திலிருந்தே மூர்க்கத்தனம் அதிகமாக இருந்ததால் பாடசாலை முகாமைத்துவத்தில் பல சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தன, ஆசிரியர்களுடனும் சுமூகமான உறவு இல்லாமல் போக ஆரம்பித்தது, காலம் செல்லச்செல்ல பீலீக்ஸிடம் ஒரு தொய்வு தென்படத்தொடங்கியது, அந்தத்தொய்வு தானாக உருவாகியதல்ல, அவர் பார்க்கும் இடமெல்லாம் வில்லி அவருக்கு அருகிலிருந்து அவரையே உற்றுப்பார்த்து போல் தோன்றியது, இரவுகள் அவருக்கு எமனாகின, அந்த நேரத்தில் வெளியே செல்ல நடுங்கினார், முதலில் எப்போதாவது மது அருந்தும் பீலிக்ஸ் பயத்தினை போக்க தொடந்து மது அருந்த நாளடைவில் ஒரு முழுநேர குடிமகனாகிப்போனார். பீலீக்ஸை இந்தப்பாடு படுத்தும் வில்லி சமையல்காரியை விட்டுவிடுவாரா என்ன... வில்லி போட்டு வாட்டியெடுத்ததில் சொல்லாமல் கொள்ளாமல் அவள் இல்லத்தைவிட்டு ஓடியே போய்விட்டாள் அதற்க்கு பிறகு அவளுக்கு என்ன ஆனது என்று யாருக்குமே தெரியவில்லை.காலப்போக்கில் பீலிக்ஸ் ஒரு மன நோயாளி போல் நடந்து கொள்ளத்தொடங்கினார், இவையனைத்தும் ஒரு குறுகிய காலத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டது, ஒவ்வொரு நாளும் ஒரு கரிய உருவம் அவர் கண்முன்னே வில்லியின் அறையிலிருந்து அவரது தட்டு முட்டு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த குடவுன் நோக்கி நடந்து செல்வதும், அந்த குடவுனில் ரோனியோ இயந்திரம் இயங்கும் சத்தம் இவரது காதிற்கு அருகில் இயங்குவது போல் கேட்பதும் வாடிக்கையாகி போனது, 1962, இலங்கை கிழக்கு மாகாணம் கார்த்திகை 8 அன்று முழுவதும் பீலீக்ஸை காணக்கிடைக்கவில்லை, அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது, பாடசாலைக்கும் பீலிக்ஸ் விடுப்பு அறிவித்திருக்கவில்லை, நீண்ட நேரமாக காத்திருந்தும் பீலீக்சிடமிருந்து எந்த தகவலும் வரவில்லையென்பதால் அவரது உதவியாளர் அவரை தேடி இல்லத்திற்கு வந்திருந்தார் நேரடியாக பீலீக்சின் அறைக்கு சென்ற அவர் கதவினை மெதுவாக தட்டினார், எந்த பதிலும் இல்லை சற்று நேரத்தின் பின் ஓங்கி தட்டினார், அப்போதும் எந்த பதிலும் இல்லை, பயந்து போனவர் பலங்கொண்டமட்டும் கதவினை தான் தோளினால் இடித்து தள்ளினார், கதவும் டமார் என்ற சத்தத்துடன் ஆவென்று திறந்து கொள்ள ,உள்ளெ வெறுமையாக இருந்தது, அங்கே பீலிக்ஸ் இருந்ததற்கான அடையாளமே இல்லை, அப்படியென்றால் எப்படி உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கும் யார் தாழிட்டிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே மேல் மாடியிலிருந்த இன்னுமோர் சகோதரரிடம் விசாரிக்க அவரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார், அந்த சகோதரரின் அறை வில்லியின் அறையை விட்டு சற்று தள்ளி இருக்க வில்லியின் அறையை , வில்லியின் அகாலமரணத்தின் பின் யாரும் பாவிக்க ஆரம்பிக்கவில்லை பெரும்பாலும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுதான் இருக்கும், உதவியாளர் கடக்கும்போதுதான் அவதானித்தார் இன்று அந்த அறை அரைகுறையாக மூடப்பட்டு கிடக்க கதவிடைவெளியினூடு யன்னல் வெளிச்சம் நிலத்தில் பட்டுக்கொண்டிருந்தது, யார் திறந்திருப்பார்கள் என்று கதவினை மூட முற்படும் போது எதேச்சையாக அவரது பார்வை அந்த இடைவெளியினூடு செல்ல, அவர் கண்ட காட்சியில் இதயம் ஒருகணம் நின்று பின் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்று காலை பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனும் நண்பர்களும் அன்று நள்ளிரவு இரவு நடந்த விடயங்களையே சிலாகித்துக்கொண்டிருந்தனர், எப்படி அந்த கரிய உருவம் கணப்பொழுதில் காணாமல் போயிருக்கும் என்ற கேள்வி அவனை உசுப்பிக்கொண்டே இருந்தது, அப்படியே அன்றைய பாடசாலை பொழுது கடந்துவிட , இண்டைக்கு டியூசன் வகுப்பிற்கும் சுலக்சன் வரமாட்டான் வகுப்பு முடிந்ததும் நோட்ஸ் கொப்பியை அவனுடைய வீட்டிற்கு கொண்டுபோய் கொடுப்போம் என்று மனதிற்குள் நினைத்தவாறே டியூட்டரியை நோக்கி தன்னுடைய மிதிவண்டியை மிதித்தான், சரியாக வகுப்பை நெருங்கும் தருணம் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது, சற்று தொலைவில் சுலக்சனோ காலைக் கெந்திக்கெந்தி வந்துகொண்டிருந்தான், "என்ன மச்சான், இண்டைக்கு வரமாட்டாய் என்று நினைத்தேன், கால் எப்படி...?" "கால் கொஞ்சம் பரவாயில்லை மச்சி, நாம எப்ப பள்ளியில் படிச்சிருக்கோம் அதுதான் காலையில் ஸ்கூலுக்கு வரவில்லை" "எப்படி வந்தனீ" "ஆட்டோவில் வந்தனான், டேய் இண்டைக்கும் இரவு படிக்க வருவியா" "உனக்கு பைத்தியமா,நான் வரல்ல வீட்டில் உன்னை விட்டுட்டாங்களா " "நான் ஏற்கனவே சொல்லிப்போட்டன் அப்பா போகச்சொல்லி சொல்லிவிட்டார் , நீயும் வா மச்சான் ஒரு முக்கிய விடயம் சொல்லவேண்டும்" "நான் வரல்ல" "டேய் வா மச்சான், கொஞ்சம் முக்கியமான விஷயம் வாணி மடங்கிட்டாள் கனக்க இருக்கு கதைக்க " "என்னது வாணியை மடக்கிட்டியா, அப்போ கட்டாயம் வாறன் " இருவரும் பேசி விட்டு வகுப்பு முடிந்ததும் இவன் சைக்கிளை எடுத்துகொண்டு வரும் முன் சுலக்சன் சென்றுவிட்டான் (தொடரும் )
    3 points
  4. பஞ்சாப் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி இதுவரை நடந்த போட்டிகளில் அதிகுறைவான ஓட்டங்கள் 106 ஐ 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 16 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை விரைவாக அடைந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 10 2 குமாரசாமி 10 3 பையன்26 10 4 அஹஸ்தியன் 8 5 சுவைப்பிரியன் 8 6 நுணாவிலான் 8 7 கல்யாணி 6 8 நந்தன் 6 9 எப்போதும் தமிழன் 6 10 வாத்தியார் 6 11 கிருபன் 6 12 கறுப்பி 6 13 வாதவூரான் 4 14 ஈழப்பிரியன் 2
    2 points
  5. தொடர்ந்து விடாமல் வாசிக்க வைத்த ஒரு வேகமான எழுத்துநடையுடன் கூடிய அமானுஷ்யக்கதை யாழ் களத்தின் இன்றைய கதை நாயகன் அக்னி தான் 👏👏👏
    2 points
  6. இனிமேல் ஸ்கூலுக்கே வரமாடடேன் 😄
    2 points
  7. என் வாழ்க்கையில் 1975/1976 ஆண்டளவில் ஒர் நாள்அதிகாலை ஆறுமணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு போய் திரும்பிவரும்போது என்னுடைய சைக்கிளை எனது நண்பஙனின் சைக்கிள். மோதியாதால் நடைபெற்ற விபத்தில் தலையின் பின் பகுதியை சீமெத்துகல்லுயென்று தாக்கிவிட்டது இரு கிழமைகள் யாழ் வைத்தியசாலையிலிருந்தேன்..இது O/L பரீட்ச்சைக்கு தாயாரகிக்கொண்டிருந்த காலம் .நான் படித்தது கிராமப்புறப் பாடசாலை. அங்கே பிரயோககணிதம் படிப்பிபாதில்லை பௌதிகவியல்...இராசயனவியல்...உயிரியல்...படிப்பிப்பார்கள்..எனது இலக்கு பொறியளாராக வர வேண்டுமென்பது. ஆனால். அதற்க்கு என்னென்ன பாடங்கள் படித்திருக்க வேணடுமென்பது தெரியாது. யாழ்...இந்து..மத்திய...வைத்திஸ்வர....வில்.படித்த நண்பர்கள் சொல்லியே பிரயோககணிதமும் தேவையென அறிந்தேன். நான் பரீட்சைக்கு பிரத்தியோகமாக விண்ணப்பம் செய்ய விரும்புவதைக் வகுப்பு ஆசிரியர் மூலம் அதிபருக்கு அறிவித்தேன்..அதிபர் என்னையழைத்துக்கூறினார். நீ. பாடசாலை மூலம் தான பரீட்சைக்கு தோற்றவேண்டும்.பிரயோககணிதமும் விண்ணப்பிக்கலாம்..அதற்கான நடவடிக்கையை தான் செய்வதாகக்கூறினார்.. பிரயோககணிதம். படிப்பிக்கமாட்டோம் நீயே. தனியார் வகுப்புகளில் படித்துக்கொள் என்றார்..அச்சமயம் வடமாகணகல்வியாதிகாரியாகவிருந்த மாணிக்கவாசகரிடம் கதைத்து அனுமதியும் பெற்றார். அந்தப்பரீட்சையில் பௌதிகவியல்...தூயகணிதம்...பிரயோககணிதம்...மூன்றிலும் D. எடுத்தேன் ..யாழில். படித்த என் நண்பர்கள். என்னிடம் கேட்டார்கள். அஸ்சே...நாங்கள். இரண்டு ஆண்டுகள் படித்தும் பாஸ். பண்ணமுடியவில்லை நீ எப்படி எட்டு மாதங்களில் D. எடுத்தாய்? என்று...அவர்களுடைய நவூறு எவ்வளவு வலிமையானது என்பது இரண்டு ஆண்டுகளின் பின்பு தெரித்தது..விபத்தின்போது இரத்தம்கசித்து கட்டியாகி கதையடைத்து விட்டது..யாழ்ஆஸ்பத்திரியில் H.N.O. பிரிவில் பரிசோதித்து கட்டியையெடுத்தார்கள் அதன்பின். இன்றுவரை. காது கேட்கும் திறன் 10/15% குறைவு...இங்கு Dr மார். சிறந்த காது எனக் கூறுகிறார்கள் இயர்பேன் நான்கு போட்டும் பிரயோசணமில்லை ..நான் இப்போ போடுவதில்லை வேலை செய்கிறேன் கார் ஒடுகிறேன். .மகள். பக்கத்து City யில் தெருக்களுக்கு பெறுப்பான பொறியளார். மகன். ஆறு. மாதங்களில் எந்திரவியல் பொறியளார். படித்து முடியும்...கொரொனாவால். ஆறுமாதம் அதிகம். பான்ஸ்யண்ணை இந்தப்பிரச்சைனையால் நான்படம் பார்ப்பதில்லை அந்தக்கருத்து சும்மா பொழுது போக்காய் எழுதியது..உங்கள்கருத்துக்கு மிக்க நன்றி. நான் நன்றாகவேயிருக்கிறேன். வணக்கம்.
    2 points
  8. அவர் கணிப்பிலை பிழைவிட்டுட்டார். என்னை மாதிரி கண்ணுக்கை எண்ணை விட்டு கவனமாய் கணிச்சிருக்க வேணும்.. அதோடை கிரிக்கெட் அனுபவம் எண்டது இதுகளுக்கு முக்கிய பொயின்ட். நான் இந்த போட்டியிலை களம் இறங்கேக்கை 68 குறை குற்றம் சொன்னவையளை பாத்து சும்மா கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு இருந்திட்டன்.🤣 இப்ப? இப்ப? இப்ப அவையளை பாக்க...😁
    2 points
  9. மாஸ்க்கை இடம்மாறி போட்டதால் கும்பமேளாவில் 3,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. 😎
    2 points
  10. டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு கட்டத்தில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, மீண்டு வந்து 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து தோற்கும் என்றே நினைத்தபோது கிறிஸ் மொறிஸ் நிதானத்தை இழக்காமல் ஆடி வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 8 2 குமாரசாமி 8 3 பையன்26 8 4 கல்யாணி 6 5 அஹஸ்தியன் 6 6 நந்தன் 6 7 சுவைப்பிரியன் 6 8 வாத்தியார் 6 9 கிருபன் 6 10 நுணாவிலான் 6 11 எப்போதும் தமிழன் 4 12 கறுப்பி 4 13 ஈழப்பிரியன் 2 14 வாதவூரான் 2
    2 points
  11. வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல் கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும் சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக்கேட்டும் கேட்காதவள் போல் எந்த சலனமும் இல்லாமல் இருந்துவிட, பயப்பிள்ளை வாட்டியெடுப்பது அவனது நண்பர் குழாமைத்தான் ஒவ்வொருத்தராக தூது போயும் வேலைக்காகவில்லை,நண்பர் குழாமை விட அதிகமாக மாட்டுவது மைதிலி, அவனது வகுப்பு சகமாணவி, வாணியின் உற்ற நண்பி எப்போதும் சுலக்சனிடம் அவளுக்கு ராஜமரியாதை, பாடசாலை இடைவேளைகளில் விசேட தீன்பண்ட உபசரிப்பும் நடக்கும், ஒரே வகுப்பு என்பதால் முழு நண்பர் குழாமின் வீடுகளுக்கும் மைதிலி நன்கு பரீட்சயம், இப்படி வாணியின் நண்பியை கைக்குள் போட்டும் சொல்லிக்கொள்ளக்கூடியவாறு எதுவுமே நடக்கவில்லை, நிலைமை இப்படியிருக்க இன்று சுலக்சன் புது கதை ஒன்றை சொல்கிறான். அவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, சரியாக இரவு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பாடசாலையை நெருங்க அங்கே என்றுமில்லாதவாறு சுலக்சன் இவனுக்கு முதலிலேயே வந்து பாடசாலை நுழைவாயிலில் இருந்த படி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான். "என்னடா நேரத்தோடை வந்திட்டபோல " "ம்ம் ...உனக்காகத்தான் வெயிட்டிங், வா மண்டபத்திற்குள் போவோம், நிறைய கதைக்கவேண்டியிருக்கு " "வாணியை மடக்கிட்ட இனியென்ன" "உன்னோட ஐடியா வேணும் மச்சி " "சரி நடந்ததை சொல்லு அப்புறம் ஐடியா தறாதா இல்ல உன்னை போட்டு மிதிக்கிறதா என்று நான் சொல்றன்" என்று அவன் சொல்லவும், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நொண்டிக்கொண்டே முன்னோக்கி நடக்கத்தொடங்கினான், உள்ளே வந்ததும் இருவரும் தங்களது படுக்கை விரிப்புகளை விரித்து விட்டு அதில் தங்களை கிடத்திக்கொள்ள முதலில் சுலக்சன் ஆரம்பித்தான். "மச்சான் வாணி வீட்டடியால தானே பள்ளிக்கு வாறவள், உனக்கும் தெரியும்தானே டெயிலி அவளை முன்னால விட்டு தானே நான் பின்னால வரானான், நேற்று வாணி வார டைமில நானும் வந்து கேட் பக்கம் நின்டானான் ,எப்போதும் ஒரு அசிப்பும் காட்டாமல் போறவள் நேற்று ஒரு இரக்கத்தோட ஒரு பார்வை பார்த்துவிட்டு காலில் என்ன என்று சைகையில் கேட்டாள்ரா" "பார்ரா ...பிறகு " " நானும் போத்தல் ஓடு கிழிச்சிப்போட்டு என்று மெதுவாக சொல்ல, எதோ சொல்ல வந்தவள் அம்மாவை காணவும் அப்படியே போய்ட்டாள் , பின்னேரம் அம்மா டேய் சுலக்சன் உன்னை தேடி மைதிலி வந்திருக்கிறாள் நோட்ஸ் கொப்பியை தர வேணுமாம் என்று எழுப்பவும் போய் ஒரு லூசுவேலை பார்த்துவிட்டேன், பெரிய சத்தமாக எந்த நோட்ஸ் கொப்பிடீ...? என்று கேட்க அவளோ மெதுவாக என்று சைகை காட்டிவிட்டு, அவள் கையிலிருந்த கொப்பியை தருவது போல் அருகில் கூப்பிட்டு வாணி உன்னை விசாரித்தவள், ஆளுக்கு உன்னோட செம லவ் டா, அமசடக்கு வெளியில காட்டவில்லை, உனக்கு காலில வெட்டு என்று என்னை இருக்க விடுறாளில்லை,போய் விசாரித்து விட்டு வரட்டுமாம், அதுதான் வந்தனான் அவளுக்கு என்ன சொல்ல என்று கேட்டாள் " "டேய் ..நீ கேடி டா சரி என்ன சொல்லி அனுப்பின நீ " " அவளை கேட்ட என்றும் , நானும் அவள் ஞாபாகமாக தான் இருக்கிறன், கால் சுகமாகினதும் எங்க மீட் பண்ணலாம் என்று கேட்க சொல்லி அனுப்பினனான் " "சரி...இதில நான் என்ன ஐடியா தாரது " இது அவன் "முதல் முதலாக சந்திக்கும்போது கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கணும் மச்சான் அதுதான் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று உன்னிடம் கேட்போம் என்று தோணிச்சு " "நானே இந்த விவகாரத்தில் தத்தி நீ என்னிடம் கேட்கிற..!, சரி எதுக்கும் அக்காவிடம் கேட்டு சொல்றன், அவவுக்கு தான் உந்த வயசு பிள்ளைகள் என்ன விரும்பும் என்று தெரிந்திருக்கும் " "டேய் நாசமாபோவானே வீட்டில என்னை மாட்டிகொடுத்திடாதடா" என்று சுலக்சன் கூவவும் அவனோ "நான் இன்னொரு ஆளுக்கு என்று சொல்லித்தான் கேட்பன், உன்ன மாட்டிக்கொடுக்கிறதென்றால் உண்டை வீட்டிலேயே மாட்டிக்கொடுக்க வேணும் லவ் பன்றாராம் ...லவ் " "உனக்கு பொறாமை " என்று விட்டு சுலக்சன் புத்தகத்தை கையிலெடுத்தான். இவனிருக்கும் குஷியில் இண்டைக்கு நன்றாகதான் படிப்பு இவனுடைய மண்டையில் ஏறப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அவனும் கையில் ஒருபுத்தகத்தை தூக்கினான், ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் முன்னாலிருந்த சுலக்சன் புத்தகத்தை விட்டு மண்டபத்தையே சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான் என்னத்தடா அப்படி பார்க்கிற என்று அவன் கேட்கவும், மச்சி படிக்கிற மூடில்லையடா என்று விட்டு சுலக்சன் மண்டபத்தின் மூலையிலிருக்கும் களஞ்சிய அறையை நோக்கி நடக்க (நிற்க!) நொண்ட ஆரம்பித்தான், அந்த அறையை பாடசாலையின் வரலாறு என்று சொல்லலாம், கறையான் அரித்து இற்றுப்போன கதவிற்கு பின்னே வருடக்கணக்கான வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையில் அங்கே என்னென்ன தஸ்தாவேஜுகள், ஆவணங்கள்,புத்தகங்கள் ,பழைய பொருட்கள் இருக்கின்றன என்று அதிபருக்கே தெரியாது, தட்டு முட்டு பொருட்கள் என்று குவித்து குவித்து என்ன எங்கே இருக்கிறது, எப்படி உள்நுழைந்து உடலில் காயம் படாது திரும்புவது என்று யாருக்குமே தெரியாது, அதிபர் யாரையும் அந்த களஞ்சிய அறைக்குள் அனுமதிப்பதில்லை ஒருவரை தவிர, அந்த ஒருவர் யாருமல்ல சாட்சாத் சுலக்சனே தான், அவன் கூட அதிபரின் மேற்பார்வையுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும், சுலக்சனின் வீடு பாடசாலைக்கு மிக அருகாமையில் நடை தூரத்தில் இருப்பதால், எல்லா அதிபர்களுடைய எடுபிடிக்கான முதல் தேர்வு அவனாகவே இருப்பது வழக்கம், இந்த நேரத்தில் எதற்கு அந்த அறையை நோக்கி செல்கிறான் இவன்...? "டேய் எதற்கு அந்த பக்கம் போறாய் ...?" என்று பதறினான் அவன், சுலக்சனோ சாவகாசமாக திரும்பி "மச்சான் அறைக்கு உள்ள ஒரு அயிட்டம் இருக்கு பொறு எடுத்துக்கொண்டு வாறன்", என்று சொல்லிவிட்டு கதவில் மாட்டியிருந்த பூட்டை இடது பக்கமும் வலது பக்கமும் இருமுறை அசைக்கவும் பூட்டு தன்னை விடுவித்துக்கொண்டு அவனது கையுடன் வந்துவிட்டது, அவனை நோக்கி திரும்பிய சுலக்சன் சிரித்துக்கொண்டே "இந்த பூட்டு சாட்டிற்குத்தான் எனக்கும் அதிபருக்கும் தான் இந்த விடயம் தெரியும்" என்று ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கதவை தள்ளித்திறந்தான், அப்படியெதனை சுலக்சன் அந்த அறையிலிருந்து லவட்டி கொண்டுவரப்போகிறான் என்று அறியும் ஆர்வம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது 1962, இலங்கை கிழக்கு மாகாணம் கார்த்திகை 8 மெல்லத்தெரிந்த கதவிடைவெளியூடு பார்வையை படர விட்ட உதவியாளர், விறைத்துப்போனார் வாயில் எச்சில் உலரத்தொடங்கியது, சரியாக அந்த அறையின் நடுவில் இருந்த விட்டத்தில் இறுகக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் பீலீக்சின் உயிரற்ற உடல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது, கயிறு கழுத்தை மேல்நோக்கி இழுத்ததிலும் உடலெடை கீழ்நோக்கி இழுத்தத்திலும் பீலீக்சின் கழுத்துப்பிரதேசம் ஏகத்திற்கு நீண்டிக்க, வாயின் ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த வெளிறிப்போயிருந்த நாக்கு, நாளங்களில் இரத்தஓட்டம் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டதை அறிவித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே சிலநிமிடங்கள் சுயநினைவற்று நின்ற உதவியாளர் நினைவிற்கு வந்தவராக அறையின் சுற்று முற்றும் நோட்டம் விட்டார், அறையின் ஓரத்திலிருந்த மேசை மேல் அவர் தேடிய பொருள் இருந்தது, அது பீலீக்சின் நாட்குறிப்பு, உடனடியாக அதனை நோக்கி பாய்ந்த அவர் வில்லி மரணமான அந்த நாளிலிருந்து இன்றைய தினம்வரை எழுதப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் கிழித்து தனது சட்டைக்குள் ஒழித்துக்கொண்டார், வடிந்த வியர்வையை துடைத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து அவர் எழுப்பிய ஓலத்தில் ஒரு கணம் அந்த முழு இல்லமும் அதிர்ந்தது சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முழு இல்லமும் , ஆறு மாத இடைவெளியில் இரு ரெக்டர்களை பறிகொடுத்த சோகத்தில் பாடசாலையும் சோகமயமாகிவிட்டது, நடந்த துர் சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த மக்களில் பலர் இந்த இல்லம் சபிக்கப்பட்ட இல்லமாக போய்விட்டது என்று பேசுவதையும் , பலர் இந்த இல்லத்தை இடித்துவிட்டு புதிய இல்லம் கட்டுவது சபைக்கு நல்லது என்று அவர்கள் கருத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தனர் சற்று நேரத்தில் பீலீக்சின் உடல் சகல சம்பிரதாயங்களையும் முடித்து மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட பீலீக்சின் உதவியாளரோ எதுவுமே நடக்காதது போல் பீலீக்சின் பூதவுடலுக்கு அருகில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தார், அன்றிலிருந்து இரண்டு நாட்களில் பீலிக்சின் உடல் நல்லடக்கம் செய்யப்பட, கொஞ்சம் கொஞ்சமாக வில்லி மற்றும் பீலீக்சின் ஞாபகங்கள் காலவோட்டத்தில் கரைந்து அப்படியே எல்லோரதும் நினைவிலிருந்து மறைந்து விட்டன (தொடரும்)
    2 points
  12. காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை , கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும் பொறுப்பான சபை முதல்வரிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம் சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார், 1962, ஏப்ரல் 26 மதியம் 1 மணி சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர், வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம் அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார். சிறிது நேரத்தில் இதயத்தை கையால் பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின் தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர் அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் எல்லோரும் இரவு 7:00 மணிக்கே பாடசாலைக்குள் ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர். நேரம் 11:45 இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான் ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு புதர்களின் பின் மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது. நேரம் 12:40 நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர் நேரம் 1:05 மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான் ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும் அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது. "டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்" "உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள் ரெண்டுபேரும் வந்தம் " "டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?" "விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் " அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம் அந்த கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன் அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது. டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர் (தொடரும் )
    2 points
  13. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
    1 point
  14. மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
    1 point
  15. வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்! முறுக்கெடுத்து முறுக்குச் சுடச் சிறித்தம்பிக்கு வயதுபோய் வலு காணாதாம். அதனால் அவர் தனது உடம்பில் முறுக்கேற்ற முருங்கக்காய் கட்டுவாங்கிக் கறிகாச்சினவராம், எனக்கும் தந்தவர். 😋
    1 point
  16. பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த கள உறவுகள் தமிழ் சிறி, புரட்சிகர தமிழ்தேசியன், ஜெகதா துரை, புங்கையூரன், உடையார், பெருமாள், சுவி, வாத்தியார், ஈழப்பிரியன், யாயினி, குமாரசாமி, நிலாமதி, நந்தன், இணையவன், கிருபன், சுவைப்பிரியன், அனைவருக்கும் பாஞ்சின் உளமார்ந்த நன்றிகள்!!
    1 point
  17. ஈழப்பிரியன் உங்கள் ஓட்டத்தை குமாரசாமி விரும்பவில்லை 😀என்பதை இத்தால் அறியத்தருகிறார்.
    1 point
  18. எரிச்சல் புத்திதான் உங்களையெல்லாம் உப்புடி எழுத வைக்குது.
    1 point
  19. 8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை PBKS vs CSK 5 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 9 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் வாத்தியார் கிருபன் சென்னை சூப்பர் கிங்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் பையன்26 நுணாவிலான் கறுப்பி இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤔
    1 point
  20. குருடனாய் இருந்தாலென்ன முடவனாய் இருந்தாலென்ன அடி சரியாக ஆளுக்கு விழுவதுதான் முக்கியம்.....கண்ணைத் திறந்து கொண்டு விலக்குப் பிடிக்க வந்த மாமிக்கு அடிக்கக் கூடாது......! 😂
    1 point
  21. மாஸ்க்கை.... மூக்குக்கு போடச் சொன்னால், வேறை எங்கையோ போடுறாங்கள். 😂 🤣
    1 point
  22. லெப் கேணல் ராஜன் நினைவு தினம்
    1 point
  23. இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு (2) உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமும் அடைந்தது (2) பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே வானில் நின்று மானிடரைக் காணும் தெய்வமே வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே (2) நீதியும் நேர்மையுமாய் வழி நடத்துமே நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே இயேசுவின் திருநாம கீதம்
    1 point
  24. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலுல்லாஹ்
    1 point
  25. மூச்சு எப்படி விட வேண்டும் என்று தெரியாது. எனக்கு ஆஸ்மா இருந்தபடியால் ஓடும்போது அதிமாக சத்தத்துடன் மூச்சு வாங்கும். 😀 இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும். வயதைப் பொறுத்து ஒருவரது அதிகப்படியான இதயத் துடிப்பு வேறுபடும். பெண்களுக்கு BPM = 226 - வயது ஆண்களுக்கு BPM = 220 - வயது (உதாரணமாக உங்களுக்கு 40 வயதென்று வைத்துக் கொண்டால் : 220 - 40 = 180 BPM) மன்னிக்கவும் உடையார். அப்படியானால் தயங்காமல் ஓடுங்கள்.
    1 point
  26. பாகம் - 02 கேள்வி : இனி புலிகளின் எதிர்காலம் என்ன? கருணா : புலிகள் இனிமே மீள எழ முடியாது. காடுகளில் மறைந்திருக்கும் சிறு கெரில்லாக் குழுக்கள் சில சிறிய தாக்குதல்களை நடத்த முயலலாம். ஆனால், ஒரு அமைப்பாக மீண்டும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணித்து புறந்தள்ளி விட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் நடந்தது இதுதான். யாழ்ப்பாண மக்களே புலிகளை முதலில் நிராகரித்தவர்கள். அவர்கள் இனிமேல் ஒருபோது புலிகளுடன் இணையப்போவதில்லை. புலிகளிடம் ஆட்கள் இல்லை. புலிகளுக்கான ஆட்பலம் கிழக்கிலிருந்து இதுவரை கிடைத்துவந்தது. 8500 கிழக்கு மாகாணப் போராளிகள் வன்னிக் களமுனைகளில் பலியாகியுள்ளனர். புலிகளின் பொருளாதார மையம் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறது. ஆனால், தற்போது ஆட்பலத்தையும், பொருளாதாரப் பலத்தையும் புலிகள் ஒருங்கே இழந்திருக்கின்றனர். வன்னி மக்களும் புலிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் வன்னி மக்கள் நிச்சயம் புலிகளை எதிர்ப்பார்கள் என்பது திண்ணம். புலிகளை முடிக்க ராணுவத்திற்கு சிறிது காலமே போதுமானது. கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வெறும் ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. சில சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் அமைதி நிலவுகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். கேள்வி : புலம்பெயர் தமிழர் தொடர்பான உங்களின் கருத்தென்ன ? கருணா : இங்கிருக்கும் உண்மையான நிலவரம் தொடர்பாக அவர்களுக்கு எதுவுமே தெரியாது. புலிகளின் பொய்யான பிரச்சாரத்தினால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், தெற்கில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர் போன்று தவறாக வழிநடத்தப்படவில்லை. புலம்பெயர் தமிழரைப் பொறுத்தவரை பிரபாகரனைக் காப்பற்றினாலே போதுமானது, தமிழர்கள் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் பிரபாகரனே காரணம். அவர் ஒரு தலைவர் கிடையாது. ஒரு சரியான தலைவர் தனது மக்களை ஒருபோதும் பகடைக்காய்களாகப் பாவிக்கப்போவதில்லை. போர் தொடங்குமுன்னமே பொதுமக்களை அவர் வன்னியிலிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும். மக்களை விடுவிப்பதை விடுத்து, மக்களின் பின்னால் தன்னை பிரபாகரன் ஒளித்துக்கொண்டார். தங்களைத் தப்பிச் செல்லவிட்டிருந்தால் தமிழர்கள் அவருக்கு நன்றியாக இருந்திருப்பார்கள். புலம்பெயர் தமிழர் ஒருபோதுமே இலங்கைக்கு மீண்டும் வரப்போவதில்லை. இலங்கையில் யுத்தமும், அழிவும் இடம்பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழமுடியும். அதற்காக வன்னி மக்கள் பாரிய விலையினைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. லண்டனில் ஒருலட்சம் மக்கள் திரண்டதாகக் கூறுவது முழுப்பொய்யாகும், எனக்குத் தெரிந்ததன்படி 20,000 இற்கும் குறைவானவர்களே அங்கே கூடியிருந்தார்கள். கேள்வி : புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனவே, இதுபற்றிய உங்கள் கணிப்பென்ன? கருணா : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் மூன்று லட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருக்கிறார்கள் என்பது முழுப் பொய்யாகும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெறும் 180,000 மக்களே முன்னர் இருந்தனர். போர் தொடங்கும்போது குறைந்தது 90,000 பொதுமக்கள் போர்க்களத்தை விட்டு தப்பி வந்துவிட்டனர். மீதியாயிருந்த 90,000 பொதுமக்களில் 65,000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டினை மீறி அரச பக்கம் வந்துவிட்டனர். எனது கணிப்பின்படி 30,000 இற்கும் குறைவான மக்களே யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கிறார்கள். கேள்வி : தற்போது ஒரு யுத்த நிறுத்தம் அவசியமானது என்று நினைக்கிறீர்களா? கருணா : தற்போது நிச்சயமாகத் தேவையில்லை. பிரபாகரன் ஒருபோதுமே இதயசுத்தியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வரப்போவதில்லை. கேள்வி : பிரபாகரன் தற்போது எங்கே இருக்கலாம் என்று யூகிக்கிறீர்கள்? கருணா : அவர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இல்லையென்று நினைக்கிறேன். சிலவேளை அவர் காட்டிற்குள் தப்பி ஓடியிருக்கலாம். அவர் இன்னொரு வெளிநாட்டிற்கு இதுவரையில் தப்பியோடவில்லை. அவரால் ஒருபோதுமே இந்தியாவுக்குள் நுழைய முடியாது. வேண்டுமானால் இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டிற்குத் தப்பிப் போகலாம், ஆனால் நெடுநாள் அங்கும் ஒளிந்திருக்க முடியாது. சிலவேளை நோர்வேயில் அடைக்கலம் தேடலாம். ஆனால், அவர் கட்டாயம் இறந்தேயாக வேண்டும். அவரது இரண்டாம் நிலைத் தளபதிகள் பலர் இறந்துவிட்டனர். பாணு, சொர்ணம் போன்றவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பாணுவும் பொட்டு அம்மானுமே முஸ்லீம்களை யாழில் இருந்து 24 மணித்தியாலத்தில் வெளியேற்றியவர்கள். நான் எவ்வளவோ மறுத்தும், அவர்கள் அதைக் கேட்கவில்லை. கேள்வி : குறைந்தது உங்கள் குழுவினரால் 400 தமிழ் இளைஞர்கள் தெற்கில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன, இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? கருணா : இவ்வாறான எண்ணிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், மணோ கணேசனாலுமே முன்வைக்கப்படும் முழுப் பொய்கள் ஆகும். இவற்றுள் பெரும்பாலனவை பொய்யான தகவல்களாகும். நான் இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசி தெளிவுபடுத்தியிருக்கிறேன். கேள்வி : உங்கள் அமைப்பிற்கும் இக்கடத்தல்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது பற்றி ? கருணா : இது மிகவும் தவறான செய்தி. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரே கப்பம் கோரித் தமிழ் இளைஞர்களைக் கடத்துகிறார்கள். அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிள்ளையான் குழுவின் அநீதிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எமது ஜனாதிபதி பொலீஸாருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார். கேள்வி : தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டுவந்ததன் மூலம் இனப்பிரச்சினையினை ஆரம்பித்துவைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் நீங்கள் தற்போது இணைந்திருக்கிறீர்கள். தற்போது அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கருணா : பல அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தினைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றோ மக்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பான சிறந்த தெளிவு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது தெற்கில் வன்முறைகள் பரவின. ஆனால், இன்று புலிகளால் தெற்கில் எத்தனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும்கூட சிங்கள மக்கள் தமிழர்கள் மேல் கைவைப்பதில்லை. புலிகள் கிழக்கு மாகாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரைக் கொன்றபோதும், ஒரு தமிழ் மாணவனாவது தெற்கில் துன்புறுத்தப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் மிகச் சிறந்த சிங்கள வைத்தியர் ஒருவரைப் புலிகள் கொன்றனர். ஆனால், ஒரு தமிழ் வைத்தியரும் சிங்களவரால் துன்புறுத்தப்படவில்லை. மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் இனவாதிகள் அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்ல. கடந்த காலங்களில் வடக்கில் எத்தனை வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொண்டது? போரின் நடுவிலும் கூட, சந்திரிக்காவுக்கு அமோக ஆதரவினை கிழக்கு மாகாண மக்கள் வழங்கியிருந்தனர். கேள்வி : இந்தியாவுடனான உங்களின் உறவு எப்படியானது? கருணா : மிக நன்றாக உள்ளது. நான் அண்மையில்க் கூட இந்திய உயர்ஸ்த்தானிகரைச் சந்தித்தேன். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார். கேள்வி : தமிழ்நாட்டுடனான உங்களின் உறவு எப்படியிருக்கிறது ? கருணா : பெரிதாக இல்லை. ஆனால், அங்கிருக்கும் பல ஊடகவியலாளர்களோடு தொடர்பில் இருக்கிறேன். கேள்வி : இந்தியாவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டீர்களா? கருணா : ஆம், இந்திய ராணுவம் எங்களுக்குப் பயிற்சியளித்தது. கேள்வி : இறுதியாக தனிப்பட்ட கேள்வியொன்று, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கருணா : ஆம், மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது மனைவி எனது வேலைகளில் தலையிடுவதில்லை. நான் புலிகளுடன் இருந்தபோதும் சரி, விலகிய பின்னரும் சரி அவர் எனது நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். நான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறேன். முற்றும்
    1 point
  27. லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி பாகம் - 01 கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது? கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்? கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது. கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்? கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன். தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன். ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன். புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்? கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள். நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள். மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள். கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும். உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.
    1 point
  28. நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.
    1 point
  29. சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார். "இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
    1 point
  30. நாளைய பாகத்துடன் முடியும். வேலைப்பளுவிற்கு மத்தியில் எழுதுவதால் தான் இந்த சுணக்கம், வாசக உள்ளங்களிடம் வருந்துகிறேன்
    1 point
  31. உங்கள் ஊகம் மிகச் சரியானதே இந்த முறுக்கு சிறித்தம்பியின் கல்யாணத்திற்கு அவர் அண்ணி சுட்டது.🤣
    1 point
  32. 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் சுலக்சனின் வரவை எதிர்நோக்கியவாறு கதவினை நோட்டம்விட்டுக்கொண்டிருந்தான் அவன், களஞ்சிய அறைக்குள் பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் ஒரே சத்தம், புகுந்திருப்பதும் ஒரு யானை தானே என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு நொண்டிக்காலன் என்ன செய்கிறானோ ஒரு தடவை எட்டிப்பார்ப்போம் என்று கதவோரத்தை நெருங்கிய கணத்திலேயே சுலக்சன் கையில் ஒரு பொருளுடன் வெளிப்பட்டான், அது ஒரு நாட்குறிப்பு, 1962 என்று புழுதி படிந்த அட்டை முகப்பில் ஆண்டு தெளிவாகவே தெரிந்தது. என்ன மச்சான் இது ..? யாரோ ஒரு பழைய பிரதரின் டைரி போல... அதுசரி...அதெப்பிடி உனக்கு கிடைச்சுது ...? நான் தான் ஒவ்வொருநாளும் வாறனானெல்லோ என்று விட்டு அவனை பார்த்தான் சுலக்சன் போடா லூசு ஒவ்வொரு நாளும் வாறநீயோ...? என்று அவன் கேட்கவும் ,ஒற்றைக்கண்ணடித்து சிரித்துவிட்டு சுலக்சன் மேலும் தொடர்ந்தான், "அது டா ஒருநாள் அதிபரோடு வந்து ஒரு அட்டைப்பெட்டியை தோண்டும் போது கையில் அகப்பட்டது, திறந்து பார்ப்போம் என்று பார்த்தால் வெளியே அதிபர், வாய்ப்பு கிடைக்கும் போது உருவிவிடுவோம் என்று அகப்பட்ட ஒரு மரப்பலகைக்கு கீழே சொருகி விட்டு வந்தேன், இண்டைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது,அடுத்தவர்களோட டயரியை வாசிப்பதே தனி சுகம் இது வேற பழைய டயரி வா சேர்ந்து வாசிக்கலாம் " அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள இருவரும் அருகிலுள்ள மேசையை மின்விளக்கிற்கருகில் இழுத்து போட்டுக்கொண்டு ஒற்றைகளை திருப்ப துவங்கினர். முதல் ஒற்றையில் உரியவரின் பெயர் கறுப்பு ஆங்கில கூட்டெழுத்தில் Rev.Bro Felix Rodrigez என்று மினுமினுத்தது, பெயரை வாசித்துவிட்டு இந்தப்பெயரை இதற்க்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்து விட்டு சற்று தலையை உயர்த்திய அவனது கண்கள் மண்டபத்தினுள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த ரெக்டர்களது புகைப்படங்களை வரிசையாக மேய்ந்தன, அவனுக்கு பிடித்தமான Wilheim பிரதரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த புகைப்படத்தில் இதே பெயர் இருந்தது, ஓ இவரது நாள்குறிப்பா என்று நினைத்தவாறு ,ஒற்றையை பிரிக்கமுன் சுலக்சனோ பத்து பதினைந்து ஒற்றைகளை கடந்து வேறு எதுவொன்றையோ தேடுவது போல் படு சீரியஸாக வாசித்துக்கொண்டிருந்தான், என்ன மச்சான் இப்பிடி வேகமாக பார்க்கிறாய் என்று கேட்கவும் சுலக்சனோ எழுதியிருக்கும் எல்லாமே ஒரேமாதியாகவே இருக்கு டா அதுதான் கொஞ்சம் வேகமாக வசிக்கிறேன் என்று விட்டு ஒற்றைகளை பிரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இப்படியே சிறிதுநேரம் போயிருக்கும் சுவாரசியமாக எதுவுமில்லை அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான் நாளேடு பெரிதாக தோன்றினாலும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, இனி அவர்கள் படிக்கப்போகும் பக்கத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டிய அனைத்து ஒற்றைகளும் கையினால் கோணல் மாணலாக அவசரமாக கிழிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ள கிழிக்கப்பட்டிருக்கும் ஒற்றைகளுக்கு மேலிருக்கும் கடைசி பக்கத்தை கூர்ந்து படிக்க ஆரம்பித்தனர் "இன்று நான் செய்யப்போகும் செயல் எனது மனச்சாட்சிக்கும் சபைக்கு நான் கொடுத்திருக்கும் வார்த்தைப்பாடுகளுக்கும் எதிரானது, இருந்தும் எனது மானம்,மரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இதனை தவிர்க்கமுடியாது, அன்று மட்டும் Wilhem கண்ணில் நாங்கள் பட்டிருக்காவிடில் வரப்போகும் இரத்தப்பழி என்மீது இருக்கப்போவதில்லை, Wilheim என்றாவது ஒருநாள் உன்னிடம் மன்னிப்பு வேண்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் அது அடுத்த பிறவி என்றாலும் அன்று நிச்சயம் உனது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டுவேன் " என்று முடிந்திருந்தது அந்த ஒற்றை இருவரும் ஆளை மாறி ஆள் விறைத்துப்போய் நோக்க , சுலக்சனோ அந்த ஒற்றையை திருப்பி பார்த்தான் அதன் பின் இருந்த ஒற்றைகள் முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்தன, அப்போதுதான் அவன் கவனித்தான் கிழிக்கப்பட்ட ஒற்றையில் ஒன்று முழுவதுமாக கிழியாமல் ஒரு நூலிழையில் தொங்குவது போல் நாட்குறிப்பில் தொங்கிக்கொண்டிருந்தது, அவசரமாக கிழிக்கப்பட்டதால் கிழித்தவரும் அதனை கவனிக்கவில்லை போலும், நூலிழையில் தொங்குவது போல் இருந்தததால் அது ஒரு பக்கம் மடிந்து நாட்குறிப்பின் கடைசி மட்டையில் இருந்த உறையினுள் புகுந்து விட்டிருந்தது, அந்த பக்கத்தை உருவி எடுத்த அவனும் சுலக்சனும் ஆர்வம் தாங்காது வாசிக்கத்தொடங்கினர். அதுவரை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் இந்த பக்கத்தில் இலகுவில் வாசிக்க முடியாதவாறு மிகவும் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது. இனிமேலும் என்னால் முடியாது, உயிருடன் இந்த வேதனையை அனுபவிப்பதை விட நரக வேதனை எவ்வளவோ மேல், நீ என்னை விடப்போவதில்லை என்று தெரிந்து கொண்டேன் Wilheim, எனக்கு அடிக்கடி அறிவுரை தரும் வேளையில் பாவத்தின் சம்பளம் என்ற வசனத்தை நீ பாவிப்பாய், அது உனக்கு பைபிளில் பிடித்த வசனமும் கூட எந்த பாவமும் அறியா உனக்கு அந்த சம்பளத்தை அளித்த அந்த பாவத்திற்காக இன்று இரவு எனது பாவத்தின் சம்பளத்தை தேடிக்கொள்கிறேன், இதுவே இந்த ஜென்மத்தில் நான் எழுதும் இறுதி வாக்கியம் என்று முடிந்த அந்த ஒற்றையை இறுதிவரியின் பின் பேனா குத்திக்கிழித்திருந்தது. வாசித்து முடிந்து விட்டு நிமிர்ந்தான் அவன் அருகில் இருந்த சுலக்சனோ காணாமல் போயிருக்க, மண்டபத்திற்கு வெளியே சுலக்சனின் காலடியோசை கேட்டது, மெதுவாக எழுந்த அவன் மண்டபத்திற்கு வெளியே செல்ல சுலக்சனோ மண்டபத்தின் சுவற்றில் ஒருக்களித்தவாறு தனது இருகைகளையும் அவனது காட்சட்டை பையினுள் விட்டவாறு நிலவினை பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே அன்று வித்தியாசமாக இருந்தது மெதுவாக அருகில் சென்ற அவன், சுலக்சன் தோளில் கையை வைத்து "மச்சான் wilheim பிரதருக்கு என்னடா நடந்திருக்கும்...? எதுவோ விவகாரமாக நடந்திருக்கிறது, முழுவிடயமும் அந்த டயரியில இருந்திருக்கு யாரோ ஒருத்தன் சபையை காப்பாற்றவோ அல்லது பிலீக்சின் பெயரை காப்பாற்ற ஒற்றைகளை கிழித்திருக்கிறான் " என்று முடித்தான் சற்று நேரம் அதனை காதில்வாங்காதவன் போல் நிலவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் அவனை நோக்கி திரும்பினான், அவனது கண்ணில் அப்படியொரு தெளிவும் ஈர்ப்பும் இதுவரைக்கும் சுலக்சனின் கண்ணில் அப்படியொரு காந்தவிசையை அவன் கண்டதில்லை, இன்று என்னவோ சுலக்சன் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்துகொண்டேயிருக்கிறான், திரும்பிய சுலக்சன் அவன் தோளில் கையைவைத்து "உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் மச்சான் , இன்று இல்லாவிடினும் என்றாவது" என்று சொல்லிவிட்டு "அந்த பாவத்தின் சம்பளம் என்ற வசனம் நல்லாயிருக்கில்ல' என்று அவனது கன்னத்தை தட்டிவிட்டு மண்டபம் உள்ளே சென்றுவிட்டான், சற்று நேரத்தில் இருவரும் கண்ணயர , சிறிதுநேரம் கழித்து, "மச்சான் விடிஞ்சுபோட்டு பள்ளிக்கு பிள்ளைகள் வரப்போகினம் வா போவோம்" என்று அவனை உலுப்பினான் சுலக்சன், கண்முழித்து நேரத்தைப்பார்த்தான் அதிகாலை 5:45 சரி வா போவோம் என்று இருவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற, சுலக்சனும் வீட்டைநோக்கி கெந்தி கெந்தி நடக்கும் பரிதாபம் பார்க்கமுடியாது அவனும் "சைக்கிளில் ஏறு டா கொண்டு போய் வீட்ட விடுறன்" என்று சொல்ல அவனோ "ஓ இவ்விடத்தில் இருக்கும் வீட்டிற்கு சைக்கிள் ஒரு கேடு" என்று சிரித்துவிட்டு "நீ வீட்டை போ கொஞ்சநேரத்தில் பள்ளியில் சந்திப்போம் " என்று விட்டு மெதுவாக நடந்து அவனது பார்வையில் இருந்து மறைந்து போக, சிறிது நேரம் அவனை பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக வீட்டை நோக்கி சைக்கிளை விரட்டினான் (தொடரும்)
    1 point
  33. வீடுகளில் எப்போதும் சாதம் மிஞ்சுவது வழக்கம்......அப்படி மிஞ்சும் சாதத்தில் மெர்சலான அல்வா செய்து சாப்பிடலாம்.......! 👍
    1 point
  34. சப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை, அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை. இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது, இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின் மூலையில் முனகல் சத்தம் அதிகமாக கேட்க தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது, "இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில் மயங்கிருவான் " எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர் இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன் வைத்தியரை நோக்கி சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர், அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார், "டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் , ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல" என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர். சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன். நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?" என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று தலையை ஆட்டினர், சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான் அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும் அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர் 1962, இலங்கை கிழக்கு மாகாணம் வில் ......காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள் தங்களது முழு இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார், அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது. (தொடரும் )
    1 point
  35. ஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில் உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும், ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான் மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு ,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது . சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " , ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' இது அவன் :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' ஐடியாமணி : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ" அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது " ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா" இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம் " தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 1952, இலங்கை கிழக்கு மாகாணம் வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார், பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம் நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர் ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுதேசியாக இந்திய சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான் இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும் நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும், பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர், (தொடரும்)
    1 point
  36. கரும்புலி வீரனுக்கு வீரவணக்கம் மைத்துனருக்கு வீரவணக்கம் இந்த பதிவில் கண்ணனை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் காந்தன் வசந்தன் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.