Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/03/21 in all areas
-
இது ஒரு அப்பட்டமான ipl சதி.....கிருபன் முன்னேறி வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.....அதுதான் கொரோனாவை வச்சு ஏதேதோ கோல்மால் செய்கிறார்கள்.......!2 points
-
2 points
-
2 points
-
யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன. விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும். மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்: கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். யாழ்கள விதிகள்:1 point
-
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீரினை சிக்கனமாக பயன்படுத்தலாமே. தொழில் நுட்பம் சொல்லிக் கொடுக்காமல், கம நல சேவை பிரிவு என்ன செய்யுதோ தெரியவில்லை. விக்கு நல்லா இருக்கு மவனே. பகுத்தறிவு பேசிய உங்கப்பருக்கும் போட்டிருக்கலாமே...1 point
-
1 point
-
5 பவுண்ட்ஸுக்கு கச்சான் வாங்கி கொறிச்சுக்கொண்டு இருக்கேன்.😝 40 புள்ளி பாதி சுற்றில்தானே.. அடுத்த சுற்றுக்களிலும் புள்ளிகளை எண்ண முன்னிலை வகித்தவர் பின்னடைவடைவார்!!1 point
-
movie Sondham starring Muthuraman, K.R Vijaya, Pramila, Sivakumar எட்டுக்கன்னு விட்டெறிக்கும் உன்னைக்கண்டா.... உந்தன் கட்டாணி முத்துப்பல்லு எனக்கு உண்டா....?( சிரிப்பு ) கண்ணுபட போகுது கட்டிக்கடி சேலையே பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கடி ரவிக்கைய....1 point
-
1 point
-
1 point
-
1 point
-
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point
-
இண்டைக்கு நடந்த இரண்டு மச்சும் பார்க்கல இண்டையான் நாள் தமிழக தேர்தலோடையே போச்சு நான் 26 புள்ளியுடன் நின்று குசா தாத்தா 40புள்ளியுடன் நின்று இருந்தா மகிழ்ச்சி அடைந்து இருப்பேன்.........நடந்தது நடந்து போச்சு கிருபன் பெரியப்பா தருகிற 5பவுன்ஸ் பரிசை தாத்தாவாகிய உங்களுக்கே தருகிறேன்.........................😀😁1 point
-
1 point
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பஞ்சாப் கிங்ஸை துடுப்பாட பணித்தது. பஞ்சாப் கிங்ஸ் மெதுவாக ஆட ஆரம்பித்து, மயங் அகர்வாலின் அதிரடியான ஆட்டமிழக்காத 99 ஓட்டங்களைத் தவிர மற்றவர்களின் பங்களிப்பு குறைவாக இருந்ததால் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களையே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் பிரித்வி ஷாவினதும் ஷிகர் தவானினதும் அதிரடியான ஆரம்பத் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 40 2 சுவி 34 3 அஹஸ்தியன் 32 4 சுவைப்பிரியன் 32 5 எப்போதும் தமிழன் 32 6 ஈழப்பிரியன் 26 7 குமாரசாமி 26 8 வாத்தியார் 26 9 நுணாவிலான் 26 10 நந்தன் 24 11 கறுப்பி 22 12 வாதவூரான் 20 13 கல்யாணி 20 14 கிருபன் 181 point
-
அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது. நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது. கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது. பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள். கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.1 point
-
வளர்ந்து வா மகனே ! - சுப.சோமசுந்தரம் தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில். வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டார்களாம். எங்களைப் போன்ற டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சிக் காலத்திலும் மக்களைச் சுட்டவர்கள்தானே ! அது தமிழகமாய் இருந்தால் என்ன, TATA முதலாளிக்கான சிங்கூர் ஆக இருந்தால் என்ன ? முதலாளி வர்க்கத்தின் முன் இடது என்ன, வலது என்ன, திராவிடம் என்ன, ஆரியம் என்ன ? Sterlite என்பது தேர்தல் முடிவுக்கு முன் இவர்களுக்கு வைக்கப்பட்ட litmus test. கையில் மை காயுமுன்பே தோற்றுப் போனார்கள். தேர்தல் முடிவு அறியும் ஆர்வமெல்லாம் போய்விட்டதடா. நீதியை வழங்க உன் தலைமுறையினருக்கான ஆயுதத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது மீண்டும் வாக்குச் சாவடியாகக் கூட இருக்கலாம். ஆனால் நீதி வேண்டும். நீயே வழங்க வேண்டும்.1 point
-
தேடுக தமிழரின் தொன்மையும், மேன்மையும் போர்களம் என்பது ஆணுக்கானது மட்டுமல்ல ஆளுமைகளுக்கானது நம் பெரும்பாட்டியின் வரலாறு. #வேலுநாச்சியார் #பெண்மையின்_பேராண்மை பக்கம் : 503 விலை : 570 (தூதஞ்சல் சேர்த்து) நூல் தொடர்புக்கு : 9514472207, 83444592931 point