நினைவிருக்கா...
எத்தனை தொலைக்காட்சி தொடர்கள் வந்த போதும் அன்று 70,80...களில் எம்மை கட்டிப்போட்டு வைத்திருந்த இத்தொடருக்கு ஈடாகுமா..?
வேதாளம் முருங்கை மரம் ஏறியது கதையில்; ஆனால் நிஜத்தில்... எத்தனை கடை ஏறியிறங்கியிருப்போம் தவறவிட்டு விடுவோமோ என்கிற நம் பயக் கதையில்.
இம் முயற்சியில் நாமும் விக்கிரமன்களே...
முதல் முதலில் இரவல் தந்து என்னை புத்தகத்தில் புதையச்செய்தவர் என் அப்பாவின் அருமைத் தோழர் அமரர் 'தர்மலிங்கம் மாமா' (அம்புலிமாமா தந்த அன்பு மாமா)
அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்திரா, கோகுலம், லயன், முத்து, ராணி காமிக்ஸ்... இவைகள்தான் எங்கள் அன்றைய கார்ட்டூன், அனிமேஷன் எல்லாம்...
பழமையும் புதுமையும்