Jump to content

Leaderboard

  1. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      8269


  2. பாலபத்ர ஓணாண்டி

    பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      1319


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43054


  4. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      32969


Popular Content

Showing content with the highest reputation on 11/30/21 in all areas

  1. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். படித்ததில் பிடித்தது.!
    2 points
  2. தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள். நீங்களும் பாருங்கள்.
    1 point
  3. ஒரு நண்பனின் பதிவு #ஆண்கள்... அடிவயிறு நொந்துவிடும் என்று அந்த மூன்று நாட்களும் தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!! கிணற்றடியில் குளிக்கும் போது யாராவது எட்டிப்பார்த்தால் இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!! அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!! பள்ளிக்கு நேரம் சென்றால் தம்பி பிள்ளையை ஒருக்கா அதிலை இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!! பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!! நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில் கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!! எங்களை கூட்டிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!! பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுப்போகும் ஆண் நட்புகள்!!! ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்... எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை (50,60's, 70's Kids) முகநூலிருந்து....
    1 point
  4. மேலோட்டமாக பார்க்கும்போது அப்பிள் வாங்குவதற்கு உகப்பாக உள்ளதாக கருதுகிறேன் 155 மற்றும் 147 வாங்குவத்ற்கு ஏற்ற வலயங்களாக உள்ளது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே. 138 stop
    1 point
  5. பேபாலின் மொத்த பங்குகள் 1.17 பில்லியன், அதனுள் ஏறத்தாழ 16.5 மில்லியன் பங்குகள் சந்தையில் மிதக்கவிடப்பட்டுள்ளது, தற்போதய நாளாந்த பங்குகள் விற்பனை மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினை விட குறைவாக உள்ளதனால் தற்போதய சந்தை விலை குறைவாக உள்ளது (கடைசியாக 12.4 மில்லியன் விற்பனையாகியுள்ளது அதுவும் இறங்குமுகம்) மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினிலே Short interest உள்ளது நிலமை மாறினால் விலை சடுதியாக உயரலாம்(Short squeeze) . குறிப்பாக Tech index நல்லநிலையில் உயர்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் இந்த பங்கின் முக்கிய வலயமான 300 எடுத்து செல்லலாம் எனெனில் இதன் பீட்ட 1.24 அதாவது சந்தை மாற்றத்திற்கு அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும், இதன் விலை ஒரு கட்டத்தின் சரிவது தடுக்கப்பட்டு பின்னர் மெதுவாக வாங்கப்படுகின்றநிலை ஏற்பட்டால் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகலாம். சூமின் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகள் 8 மில்லியன், Short interest 9 millions, Beta 0.08 இந்த பங்கில் Short squeeze வாய்ப்பு அதிகம்.சூமின் நாளாந்த பங்கு விறபனை ஏறத்தாழ அரைவாசியாக மிதக்க விடப்பட்டுள்ள பங்குகளின் அளவில் உள்ளது நிலமை சாதகமாறும் போது விலை ஏறலாம் ஆனால் இதன் பீட்டா குறைவாக இருபதனால் அந்த துறசார் பங்குகளைப்போல் அதிகரிக்குமா? என்பது தெரியவில்லை.
    1 point
  6. வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)? எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.
    1 point
  7. ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன் இலங்கையைப் பற்றி டச்சு மொழியில் பதிவு செய்தவர்கள் சிலர் இலங்கையைப் பற்றி அவ்வளவு இழிவாக பதிவு செய்திருக்கக் கூடும். அல்லது அப்படி இழிவாக பதிவு செய்திருப்பதை மட்டும் வுயிஸ்ட் பார்த்திருக்கக் கூடும். எனவே தான் வுயிஸ்ட் இலங்கையர்கள் பற்றிய மட்டமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். பல நூல்களில் வுயிஸ்ட் ஒரு மனநிலை பிறழ்ந்து இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றே குறிப்பிடுகின்றன. பிரபல டச்சு வரலாற்றாசிரியர் குடீ மொல்ஸ்பெர்கன் (E.C.Godée Molsbergen) எழுதிய “Tijdens de O.-I. Compagnie” என்கிற டச்சு மொழி நூலில் 47 வது அத்தியாயம் வுயிஸ்டின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். அவ்வத்தியாயத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்பு “De krankzinnige Gouverneur” (பைத்தியைக்கார கவர்னர்) என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நூலில் வுயிஸ்ட் மேற்கொண்ட அட்டூழியங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது .(1) வுயிஸ்ட் காயங்களினால் வெளியாகும் இரத்தத்தைப் பார்த்து இன்பமடைந்தார். இரவு விருந்துக்காக கொண்டுவரப்படும் விலங்குகளை இறைச்சியாக கொண்டு வராமல் உயிருடன் அவற்றைக் கொண்டு வந்து அவற்றை தீயில் இடும் போது கேட்கும் சத்தத்தில் இன்பமடைந்தார். Sadist என்கிற துன்பூட்டுவேட்கை மிகையாகவே அவரிடம் இருந்தது. அது போல பாலியல் இன்பத்தையும் அப்படித்தான் அவர் அனுபவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஏனையோரும் வுயிஸ்டின் இயல்பையும், போக்கையும் பற்றி உணர்ந்துகொண்டனர். தன்னைப் பற்றிய மிகை மதிப்பு அவரிடம் இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் கடும் தண்டனைகளை நிறைவேற்றினார். நீதியற்ற முறையில் விசாரணைகளை நடத்தினார். டச்சு காலத்தில் 1658 வரை காலி தான் இலங்கையின் தலைநகராக இயங்கியது. 1658 இலிருந்து தான் கொழும்பு தலைநகராக ஆனது. ஏனென்றால் கொழும்பு 1656 இல் தான் போர்த்துகேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். அப்போது டச்சு காலத்து ஆளுநர் வாசஸ்தலமாக இருந்தது இப்போது கொழும்பு கோட்டை புலனாய்வுப்பிரிவு தலைமையகத்துக்கு பின் புறமுள்ள புனித பீட்டர் தேவாலயம். போர்த்துகேயர் அதுவரை ஒரு தேவாலயமாக பயன்படுத்திவந்த அழகிய கட்டிடத்தைத் தான் தமது வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிற் பகுதிக்கு எதிரில் இருக்கும் Grand Oriental Hotelக்கு வலது புறமாக அந்த தேவாலயம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் 1804 இல் அதனை தமது படையினர் வழிபடுவதற்காக St Peter’s Church ஆக ஆக்கினார்கள். ஆளுநர் வுயிஸ்ட்டின் வாசஸ்தலமாகவும் இது தான் இருந்தது. வாசஸ்தலத்திலிருந்து அருகாமையில் தான் காலிமுகத்திடலும் இருக்கிறது. இதுவும் படைமுகாம்கள், நிர்வாக இயந்திரம் அனைத்தும் அன்றைய கொழும்பு கோட்டைக்குள் தான் இருந்தன. தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் இடமாக அன்று காலிமுகத்திடலை பயன்படுத்திக்கொண்டார் ஆளுனர். அங்கே நிரந்தமாக தூக்குமேடை இருந்தது. தூக்கிடுவதை நிறைவேற்றுகின்ற அலுகோசுமாரும் நிறைந்தமாக அங்கே பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். கசையடி, சுட்டுக் கொல்வது உட்பட பல அங்கே தண்டனைகள் அங்கே நிறைவேற்றப்பட்டன. அதை வேடிக்கை பார்ப்பதற்கு பல மனிதர்கள் காலிமுகத்திடலில் கூடினார்கள். தூக்கிடப்பட்டவர்களின் பிணங்கள் நாய்கள் பிய்த்துத் திண்ணுவதும், அழுகி சிதைந்து சின்னாபின்னமாகி நாற்றமெடுக்கவும் செய்தன. அதுபோல அப்படி கொல்லப்பட்டவர்கள் அதே காலிமுகத் திடலிலேயே அடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் வுயிஸ்டுக்கு முன்னரே நிகழத் தொடங்கிவிட்டன. (2) வுயிஸ்ட் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். அவரின் ஊழலும் துஷ்பிரயோகமும் நீதித்துறையைக் கூட பாதித்தது. ஆளுநரின் பிழையான வழிகாட்டுதலின் மூலம் டச்சு சிவில் அதிகாரிகளும், படையில் அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் சாதாரணர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். டச்சு ஆட்சியில் கொழும்பை மையப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கியபின் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் களமாக காலிமுகத் திடல் இருந்தது. ஆட்சிக்கவிழ்ப்பு பீதியின் விளைவு வுயிஸ்ட் தனக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிமுயற்சி பற்றிய ஒரு வதந்தியை நம்பினார். அதைப் பற்றிய அதீத பீதியாலும் கற்பனைகளாலும் அவர் இந்த சதி முயற்சி குறித்து சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்து அடைத்தார். காலி கோட்டையில் அன்று தளபதியாக இருந்த யொவான் பால் ஷாகென் (Joan paul schaghen) குற்றவியல் விசாரணைக்கு நடத்தப்பட்டு மோசடி குற்றமும் சுமத்தப்பட்டார். அவரை நீக்கி கொழும்பு கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பணியில் இருந்த சில முக்கிய போதகர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு பத்தாவியாவுக்கு அனுப்பப்பட்டனர். அதேவேளை தனது ஆக்கிரமங்களை அவர் மேலும் அதிகரித்தார். 1729 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவலர்களை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார். இரவுக் காவலுக்கு திடீர் என்று எழுப்பப்பட்டு வேலைவாங்குவது வழமைக்கு கொண்டுவரப்பட்டது. அது இரவு நேரக் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று அவரால் அறிவிக்கப்பட்டது. தூக்கமிழந்த இராணுவத்தினர் தமது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி எதிர்த்தவர்கள் அனைவரும் தடியால் தாக்கப்பட்டார்கள் அதன் பின்னர் கொழும்பு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களில் சிறைவைக்கப்பட்டார்கள். அவருக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்புகளை காலப்போக்கில் அவர் தனக்கு எதிரான அரச கவிழ்ப்பு சதியென நம்பத் தொடங்கினார். தான் நம்பிய புனைவுக்கு உருவகம் கொடுத்து காண்பவரையெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனநோய்க்கு ஆட்பட்டார். அவருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் எதிராக சதி செய்வதற்காக உளவு பார்க்கும் ஒரு பரந்த வலையமைப்பு இயங்கியதாக அவர் நம்பினார். அப்படிப்பட்ட சந்தேகநபர்களை வரிசையாக தண்டித்தார். அவர்களை விசாரிப்பதற்காக ஒரு இராணுவ நீதிமன்றத்தை கொழும்பில் அமைத்தார். கிழக்கிந்திய கம்பனியின் எந்த அனுமதியுமின்றி விசேட இராணுவ நீதிமன்றத்தை (Blood council) அமைத்து அங்கே விசாரணைகளை நடத்தினார். அவரே அந்த விசேட நீதிமன்றத்தின் தலைவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். இந்த நீதிமன்றத்தின் மூலம் ஏராளமான டச்சு இராணுவத்தினரும், டச்சு பணியாளர்களும் கூட தண்டிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் அவர் ஒரு மிக மோசமான சித்திரவதைகளை செய்கிற ஒரு சாடிஸ்ட் ஆட்சியாளராக ஆனார். உண்மைகளை வெளிக்கொணர்வது என்கிற பேரில் அவர் மிகவும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை மேற்கொண்டார். நகங்களைப் பிடுங்குதல் மற்றும் சூடான மெழுகை உடலில் ஊற்றுதல், காயச் சிதைவுகளில் அரிப்புகளைப் பயன்படுத்துதல், கால்களின் எலும்புகளையும் உடைத்தல் மட்டுமன்றி சந்தேக நபர்களின் தலைகளைத் துண்டிப்பது வரை அவர் அட்டூழியம் செய்தார். காலிமுகத்திடலை ஒரு கொலைக்களமாகவே ஆக்கினார். சில அழகிய யுவதிகள் காணாமல் போனார்கள். குற்றவாளிகள் மர்மமான முறையில் சாவடைந்தார்கள். இதை பற்றிய கதைகள் நாட்டுக்குள்ளும் அரசல்புரசலாக கதைகள் உலவின. கேள்வி கேட்ட அதிகாரிகள் பதவியுயர்களால் சலுகைகளாலும் வாயடைக்கபட்டார்கள். இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும், அறிக்கைகளும் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒல்லாந்துக்கு சென்றடைந்தன. 1727 யூன் 7 அன்று இலங்கையில் இருந்த டச்சு அரசியல் சபையால் இரகசிய முறைப்பாடு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாவியா தலைமையகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் அதே மாதம் 30 ஆம் திகதி இன்னொரு முறைப்பாடும் சென்றது. ஆனால் வுயிஸ்ட் தனது ஆட்சியில் உள்ள வளர்ச்சியை அறிக்கையாக அனுப்பினார். குறிப்பாக அவர் சென்றதன் பின்னர் மிளகு உற்பத்தி எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் அறிக்கை எழுதினார். அவரின் காலத்தில் மிளகு உற்பத்தி விவசாயிகளின் நிலங்களில் ஒரு பகுதி டச்சுக் கம்பனியிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் ஓகஸ்ட் மாதமும் விரிவான ஒரு இரகசிய முறைப்பாடு அவருக்கு எதிராக அனுப்பப்பட்டது. அதில் வுயிஸ்ட் நடத்தும் காட்டுத் தர்பார் பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன. தொடரும் உசாத்துணை E.C.Godée Molsbergen, Tijdens de O.-I. compagnie, Amsterdam, Swets, 1932. වජිර ලියනගේ - ඕලන්දයේදී එල්ලා මැරූ ලංකාවේ සිටි ඕලන්ද ආණ්ඩුකාරයා, லங்காதீப – 13.06.2018 (இக்கட்டுரையில் வுயிஸ்ட் ஒல்லாந்தில் மரணதண்டனை அளிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால் அவர் பத்தாவியாவில் தான் மரண தண்டனை அளிக்கப்பட்டார்) நன்றி - தினகரன் 28.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/ColomboDutch.html?fbclid=IwAR143w7JET4seBGxwc7D1O1vyts1xycbaXVOYUD2-xNe1bDFtaDwQrIHCuw
    1 point
  8. ஷீபா இனு, அதன் வரலாற்று resistance ஆனா 0.000052 ஐ தகர்த்து விட்டது. சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.
    1 point
  9. Murali Thiyaga எனக்கு அழுது பழக்கமில்லை ==================== 1983ம் தமிழர் படுகொலையின் போது சிங்களவர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கவிதை.. அந்த ஒரு கார் மட்டும்.... எனக்கு அழுது பழக்கமில்லை.. அந்தளவு எனக்கு உணர்ச்சிகள் இல்லை. அதெல்லாம் மறந்துவிடு என்றது என் அரசாங்கம்.. ஆனால் என் வீட்டில் இருந்து பார்த்த அந்த காரை மட்டும் மறக்க முடியவில்லை. அந்த காரில் நான்கு பேர் இருந்தார்கள். அம்மா அப்பா மகன் மகளாக இருக்கலாம்.. அந்த காரை ஏனைய கார்களை போலத்தான் நிறுத்தினார்கள். ஏனைய கார்களை போல உள்ளே அவர்களை பூட்டி அந்த காரின் மேல் பெட்ரோல் ஊத்தினார்கள், ஏனைய கார்களை போலவே அதனையும் கொளுத்த போனார்கள். திடீரென அந்த கூட்டத்தில் ஒருவன் காரை திறந்து அந்த சின்ன பிள்ளைகளை மட்டும் வெளியே எடுத்து விட்டான்.. பின்னர் கொளுத்தினார்கள்.. எரிந்தது.. பிள்ளைகள் அழுதுகொண்டு வெளியே நின்றார்கள்.. திடீரென கார் கதவு திறந்தது.. அப்பா வெளியே எரிந்துகொண்டு வந்தார்.. தலை பின்புறம் எரிந்து கொண்டு இருந்தது.. மகனையும் மகளையும் தூக்கினார்.. காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்! முற்றாக எரிந்த அந்த காரை அடுத்த நாள் கார்பொரேஷன் வண்டி வந்து அள்ளிக்கொண்டு போனது.. அரசாங்கத்துக்கு நகரை சுத்தமாக வைத்து இருப்பது கடமை அல்லவா? எனக்கு அழுது பழக்கமில்லை...
    1 point
  10. எடியே பரிமளம்....டோன்ட் டச் மீ 😎 நத்தார் கொண்டாட்டம் 🥰
    1 point
  11. ரொம்ப பழசுக்கு போகாம லெட்டஸ்க்கு வருவம் ..👌
    1 point
  12. மனைவியை மடக்க சில யோசனைகள்.... 1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..) 2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்” 3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா ” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும் 4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும். 5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும். 6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் ) 7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல) 8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு. 9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது. 10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..! ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது. இது ஒரு முகநூல் பதிவு🤔
    1 point
  13. உங்கள் கனவுகளைச் சுமந்து என்றும் தடம் மாறாது பயணிப்போமென்று, நீங்கள் அவதரித்த இந்நாளில் உறுதி பூணுகின்றோம் தலைவா! உங்கள் பிறப்பு ஒரு சரித்திரம்! உங்கள் வரலாறு எங்களுக்கு வழிகாட்டி! நீங்கள்தான் என்றும் எங்கள் மேதகு!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.