Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/10/22 in Posts
-
உங்களுக்கு நீண்ட நாளாக இந்த சந்தேகம் இருக்கு.....சத்தியாமா சொல்லுறன் பாஸ்வேர்ட் தெரிந்த ஐ டி புத்தன் மட்டுமே3 points
-
2 points
-
சமர்க்கள விரிப்புகள் கட்டுரைகள் மூலம்: 'எரிமலை', மே 2000, பக்கம்: 4-6 மூல எழுத்தாளர்: ஜெயராஜ் தமிழீழம் எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022 இலங்கையில் மிகக் கடினமான களமுனையில் புலிகள் பெற்ற மகத்தான வெற்றி கணவாய்கள், கால்வாய்கள், தொடுகடல்கள், துறைமுகங்கள் என்பன சில நாடுகளில் அல்லது பகுதிகளின் நுழைவாயில்களாக இருந்துவருகின்றன. அந்நாட்டையோ அன்றிப் பகுதியையோ கட்டுப்பாட்டில் கொண்டுவரவிளைபவர்கள் அன்றி குறித்த பகுதியை தமது பிடியில் வைத்துக்கொள்ள விரும்புகின்றவர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது தேவையாகிறது. வேறுவிதமாகக் கூறுவதானால் அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவராதவர்கள் அன்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதவர்கள் அப் பகுதியை வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும், அன்றி அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்களாகவுமே இருந்துள்ளனர். இந்திய துணைக் கண்டத்தைப் பொறுத்து அதன் தரைவழி நுழைவாயிலாக கைபர் கணவாய் இருந்தது. இக்கணவாயைக் கடந்து வந்து வெளிநாட்டவர் இந்தியாவைப் பல தடவை வெற்றி கொண்டுள்ளார்கள். இதில் கிரேக்கத்தில் இருந்து வந்த மா அலெக்சாண்டரில் இருந்து பின்னர் ஆப்கான், மத்திய ஆசியாப் பகுதிகளில் இருந்து படையெடுத்து வந்த பலரும் அடங்குவர். இவர்கள் இயற்கை அரணான இமயத்தொடரில் உள்ள கைபர் கணவாயைத் தாண்டியே வெற்றி பெற்றார்கள். இதேசமயம் கடல் வழியாக நுழைந்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் துறைமுகங்களைத் தமது நுழைவாயில்களாகக்கொண்டனர். அவற்றை வெற்றிகொண்டவர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டனர். இது இந்தியாவிற்கு மட்டுமானதொரு எடுத்துக்காட்டல்ல. உலகிற்கும் பொருத்தமான எடுத்துக்காட்டே. இதேவேளை பிரிட்டன் மீது ஆதிக்கம் செலுத்த முயன்ற பிரெஞ்சு பேரரசர் நெப்போலியனும் சரி செருமனிய வல்லாட்சியர் கிட்லரும் சரி ஆங்கிலக் கால்வாயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட பெரும் முயற்சி செய்தனர். ஆங்கிலக் கால்வாய் தமது கட்டுப்பாட்டிற்குள் சில மணிநேரம் இருக்குமானால் பிரிட்டன் தமது வசம் ஆவதை எவருமே தடுத்து நிறுத்த முடியாது என அவர்கள் கருதினர். இதற்காகவே பெரும் கடற்படையை உருவாக்க முனைந்தார்கள். ஆனால் இதில் இவர்கள் இருவராலுமே வெற்றி பெற முடியவில்லை. இதேசமயம், 1453ஆம் ஆண்டில் கொன்சுராந்திநோப்பிள் - அதாவது இன்றைய இசுதான்புல் துருக்கியிடம் வீழ்ச்சி கண்டபோது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தரைவழி வணிகம் முடிவுக்கு வந்தது. அதாவது ஐரோப்பாவின் நுழைவாயில் துருக்கியர்களால் மூடப்பட்டது. இவ்வாரான எடுத்துக்காட்டு இலங்கைக்குக் கூட இல்லாமல் இல்லை. கண்டி தலைநகரை வெற்றி கொள்ளவேண்டுமெனில் அதற்கு மலைநாட்டின் நுழைவாயிலான கடுகண்ணாவைக் கணவாயை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. போத்துக்கேயர், ஒல்லாந்தரினால் அது முடியாமல்போனது. ஆகையினால்தான் பதினாறாம் நூற்றாண்டின் நடுவில் இலங்கையின் கரையோரங்கள் ஐரோப்பியரின் குடியேற்றங்களாக மாறியபோது கண்டி அரசு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (1815) சுதந்திர அரசாக விளங்கக்கூடியதாக இருந்தது. அதாவது ஆங்கிலேயர்கூட கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி சுமார் இரண்டு பத்தாண்டுகளின் பின்னரே கண்டியைக் கைப்பற்றிக்கொள்ள முடிந்தது. அதிலும் கண்டி அரசில் உருவாகியிருந்த காட்டிக்கொடுப்போரின் துணையுடன். இவ்வாறாக உலக வரலாற்றில் நுழைவாயில்களாகப் பல பகுதிகளும் துறைமுகங்களும் இருந்துள்ளன. இந்த யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரையில் ஆனையிறவானது அத்தனை முக்கியத்துவம் பெறும் பகுதி எனக் கூறின் மிகையாகாது. அதாவது யாழ் குடாநாட்டின் நுழைவாயில் என்று ஆனையிறவுப் பகுதியைக் கூறுவது தவறாகாது. யாழ் குடாநாட்டைப் பொறுத்து அது குடாநாடு என்ற பூதியல்(physical) அமைப்பிற்குள், வரைவிலக்கணத்திற்குள் உள்ளடக்கப்படுவதாக இருப்பினும்கூட அது மாரி காலத்தில் அதாவது ஆனையிறவுக் கடல் நீரேரியில் நீர் நிறைந்து சுண்டிக்குளம் தொடுவாய் உடைப்பெடுத்ததும் அது ஒரு தீவு என்ற வடிவத்தைப் பெற்றுவிடுகின்றது. ஒரு வகையில் பார்க்கப்போனால் நான்கு, ஐந்து மாதங்கள் தீவாகவும் ஏழு, எட்டு மாதங்கள் குடாநாடு என்ற நிலையிலுமே யாழ் கோட்டம் உள்ளது எனலாம். அதிலும் குடாநாடு என்ற பூதியல் வரையாக இருக்கும் நிலையில்கூட இத்தொடுநிலப்பரப்பு ஊடாக தரைவழிப் பாதைக்கான ஓர் பொருத்தமான தரையமைப்பையோ அன்றி பண்பாட்டு அடிப்படையிலான கூறுகளையோ அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களையே கொண்டதாக இருக்கவில்லை. அடுத்ததாக யாழ் குடாநாட்டின் நுழைவாயிலாக் கருதக்கூடிய, ஒருவகையில் போக்குவரத்து இடம்பெற்றதான கேரதீவு - சங்குப்பிட்டி வீதியானது இன்னமும் கடல்வழி போக்குவரத்தின்றி நேரடித் தரைவழிப்பயணம் மேற்கொள்ளத்தக்கதானதொரு நிலையில் இல்லை. அதாவது யாழ் கடல் நீரேரி ஊடான தரைவழிப் பாதை முற்றுப்பெறவில்லை. இந்நிலையில் யாழ் பகுதிற்கான நுழைவாயிலாக ஆனையிறவு ஊடான தரைவழிப்பாதையே ஆண்டு முழுமையும் பயன்பாட்டில் உள்ள பகுதியாக இன்றுள்ளது. இந்த நிலையில் இப்பகுதியின் முக்கியத்துவமானது மிக உயர்ந்ததாகவும் யாழ் குடாநாட்டின் ஆதிக்கத்தை, கட்டுப்பாட்டை தீர்மானம் செய்வதாகவும் உள்ளது. வேறுவிதமாகக் கூறுவதானால் ஆனையிறவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் யாழ் பகுதியில் செல்வாக்குப் பெறுவது தவிர்க்க இயலாததாகிவிடும். இது ஒருபுறம் இருக்க ஆனையிறவுப் பெரும் தளப்பகுதி அமைக்கப்பட்டிருந்த பகுதியானது மிகவும் பாதுகாப்பானதொரு பூதியல் சூழலைக் கொண்டதாகும். சிறப்பாகக் கூறுவதானால், வடபகுதியில் ஆனையிறவைப் போன்று பெரும் தளப் பகுதி ஒன்றை அமைப்பதற்கு ஏற்றதொரு பூதியல் அமைப்பு, தரைத்தோற்றம் எங்கும் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம். முதன்மை நிலப்பரப்பில் இருந்து பெரும்பாலும் வேறுபட்ட அலகுபோன்று இருக்கும் யாழ் குடாநாட்டுப் பகுதியின் வாயிலில் அமைந்துள்ள ஆனையிறவுப் பெரும் தளத்தின் முன்னரங்கப் பகுதிகள் முதன்மை நிலப்பரப்பில் உறுதியான நிலையில் அமைக்கப்பட்டிருந்தது. மிக உறுதியாக அரண் செய்யப்பட்டதாக முதன்மை வீதியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இப்பகுதியானது ஆனையிறவுத் தளத்திற்கு “தீ” தடுப்பு போன்று உருவாகியிருந்தது. இதேவேளை ஆனையிறவுத் தளமானது வங்காள விரிகுடா, யாழ் கடல் நீரேரி, ஆனையிறவுக் கடல் நீரேரி என்பனவற்றுடன் தொடர்புபட்டதாக 77 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இதில் இத்தளத்தின் கிழக்குப் பகுதி வங்காள விரிகுடாவுடனும், மேற்குப்பகுதியின் மையப்பகுதி யாழ் கடல்நீரேரி எனக் கடற்பரப்புடன் தொடர்புபட்டிருந்தமையால் பாதுகாப்பை உறுதிசெய்தல் இலகுவாகும். ஒருபுறம் கடற்படையின் கண்காணிப்பு என்பதும் மறுபுறம் கரையில் இருந்து தடங்கலற்ற கண்காணிப்பு என்ற நிலையில் அது வாய்ப்பானதாக இருந்தது. இதேசமயம் இத் தளப் பகுதியின் பெரும் பகுதி குறிப்பாக கிழக்குப் பாகம் வெட்டையான பரந்த நிலப்பரப்பாக இருந்தமையானது கண்காணிப்பிற்கு ஏற்றதாயினும் விடுதலைப் புலிகளின் தாக்குதலணிகளைத் தொலைவிலேயே தடுத்து நிறுத்தக்கூடியதாக வாய்ப்புப் பெற்றிருந்தது. அத்தோடு ஆனையிறவுப் பெரும் தளம் வடகிழக்கு தொண்டமானாறு கடல் நீரேரியும் தொட்டிருந்தமையானதுகூட படையினருக்கு நற்பயனானதொன்றாகவே இருந்தது. அதாவது யாழ் குடாநாட்டின் தரைத்தோற்றம் பெளதீக அலகுகளாகப் பிரிக்கப்படுவதற்கும், ஒரு அலகில் இருந்து மற்றொரு அலகிற்கான நகர்விற்கு கடல் நீரேரிகளைத் தாண்டவேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கியிருந்தது. இந்நிலையானது படை நகர்தல், வழங்கல் என்பனவற்றிற்கு இடையூறு செய்பவையாகவே இருந்தன. இந்த வகையில் பூதியல் அடிப்படையிலான காப்புக் கொண்ட ஆனையிறவுப் பகுதியில் சிறீலங்கா படைத்துறை அதன் முக்கியத்துவம் கருதி மிக உயர்வலுக்கொண்ட தனது இரண்டு படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தது. சிறீலங்கா படைத்துறையைப் பொறுத்து அது பல படைப்பிரிவுகளை - டிவிசன்கள் கொண்டதாக இருப்பினும் அதன் படைப்பிரிவுகளில் முக்கியமானவையாக 53ஆம், 54ஆம், 55ஆம், 56ஆம் படைப்பிரிவுகளே இருந்து வருகின்றன. மறுவளமாகக் கூறுவதானால் இப்படைப்பிரிவுகளே சிறீலங்கா படைத்துறையை நிலைநிறுத்துபவையாக, அதன் முதுகெலும்பாக இருந்துள்ளன. இதில் ஆனையிறவின் முக்கியத்துவம் கருதி 54ஆம், 53ஆம் படைப்பிரிவுகள் அங்கு நிலைகொள்ளவைக்கப்பட்டன. இதில் 54ஆவது படைப்பிரிவே ஏற்கனவே ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தில் நிலை கொண்டிருந்த படைப்பிரிவாகும். 53ஆவது படைப்பிரிவு ஓயாத அலைகள் - 03 நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டதாகும். இப்படைப்பிரிவு இரண்டுமே சிறீலங்காப் படைப்பிரிவுகளின் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில் 54ஆவது படைப்பிரிவு சிறீலங்காப் படைப்பிரிவுகளின் தெறோச்சி உட்பட்ட கனவகை சேணேவிப் படைப்பிரிவு, தகரி உள்ளடங்கிய கவசவூர்திப் படைப்பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியது. இப்படைப்பிரிவு 541இல் இருந்து 546 வரையிலான ஆறு படைத்தொகுதிகளைக் கொண்டதாகும். இவற்றில் 542, 545, 546 படைத்தொகுதிகளில் சேணேவி மற்றும் கவசப் படைப்பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதிலும் இச் சேணேவிப் பிரிவில் சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட 152 எம். எம். தெறோச்சிகள், 130 எம். எம், 122 எம். எம். தெறோச்சிகள் மற்றும் பாக்கிஸ்தான் தயாரிப்பு 120 எம். எம். கணையெக்கிகள் என்பன இடம் பெற்றிந்தன. இதே சமயம் கவசவூர்திப் படைப்பிரிவுயில் சீனத் தயாரிப்பு தகரிகள் மற்றும் கவசவூர்திகள் முக்கிய இடம் கொண்டவையாக இருந்தன. இந்த வகையில் 54 ஆவது படைப்பிரிவு படையினர் வலிந்த தாக்குதலுக்கும், வலுவெதிர்ப்பிற்கும் என ஏற்றவகையிலான கனவகை ஆயுத தளபாடங்களைக் கொண்டவையாக இருந்தன. இதே சமயம் ஓயாத அலைகள் - 03 படையணிகள் வடபோர்முனையைத் திறந்த பின்னர் ஆனையிறவுப் பெரும் தளப்பகுதிக்கு அனுப்பப்பட்ட 53 ஆவது படைப்பிரிவு நேரடிச் சமர்களுக்கென சிறப்பாகப் பயிற்றப்பட்டவையாகும். இப்படைப்பிரிவு சிறீலங்கா தரைப்படையின் சிறப்புப் படைப்பிரிவு எனப் பெயர் பெற்றது. சிறீலங்கா தரைப்படையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டு வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். இப்படைப்பிரிவு 531, 532, 533 ஆகிய மூன்று படைத்தொகுதிகளையும், அத்தோடு மேலும் சிறப்புப்படை பிரிவு (எஸ். எவ்) சிறப்பு படகுச் சதளம் (எஸ். பி. பிரிவு) என இரண்டு சிறப்புப் பிரிவுகளையும் கொண்டிருந்தது. இதில் 531 ஆவது படைத்தொகுதி வான்-நடமாட்ட படை எனவும், 532 ஆவது படைப்பிரிவு 'அதிரடிப்படை' பிரிவு எனவும், 533 ஆவது படைத்தொகுதி மூன்று சிறப்பு சமரணிகளைக் கொண்ட சிறப்பு அணியாகவும் இருந்தது. இதேசமயம், இப்படைப்பிரிவில் இருந்த சிறப்புப்படை படைத்தொகுதி (எஸ். எப் பிரிகேட்) சிறப்பு சதளம் (எஸ். பி. பிரிவு) என்பன சிறப்புத்தேர்ச்சி பெற்ற சமரணிகளையும், அதிரடிப்படைகளையும் கொண்டவையாக இருந்தன. இவ் 53 ஆவது சிறப்பு பிரிவுகளைக் கொண்ட படைப்பிரிவானது வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு, பரந்தன், உமையாள்புரம் என்பன ஓயாத அலைகள் - 03 படையணிகளிடம் வீழ்ச்சி கண்டபின்னர் ஆனையுறவுப் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக ஓயாத அலைகள் 03 படையணிகளின் தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட இயக்கச்சிப்பகுதியில் இருந்து தாளையடிப் பகுதி வரையான முன்னணி நிலைகளிலேயே அவை நிறுத்தப்பட்டன. இவ்வாறாக ஆனையிறவுப் பெரும்தளமானது உச்ச வலுவெதிர்ப்புக் கொண்டதாக கொழும்பு படைத்துறை ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி உயர் வலுவெதிர்ப்பு தொண்டதாகவும் மிகக்கடினமான சமர்க்களமாக மாற்றப்பட்டிருந்தது. இதனைச் சிறீலங்கா படைதரப்பும் ஒப்புக்கொண்டே இருந்தது. இத்தோடு, விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள படைத்துறை தயாராக இருப்பதாகவும் அது அறிவிப்புச் செய்தும் இருந்தது. இந்த நிலையில் ஆனையிறவை புலிகள் வெற்றி கொண்டமையானது இலங்கையின் மிகக் கடினமானதும், முக்கியத்துவம் மிக்கதுமான சமர் முனையில் புலிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதையே வெளிக்காட்டி நிற்கிறது. இதன் விளைவானது யாழ் குடாநாட்டிற்கான நுழைவாயிலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவியுள்ளது. இது அடுத்த கட்டமாக யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் தமக்குள் கொண்டுவருவதற்கு அடித்தளமாக அமையும் வாய்ப்பைக் கொண்டதாகும். அதாவது யாழ் குடாநாட்டில் புலிகளின் கை மேலோங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் மிகக்கடுமையான களமுனை ஒன்றை வெற்றிகொண்டதன் மூலம் யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையைத் திறந்துள்ளனர். 'ஜயசிக்குறு' நடவடிக்கை மூலம் யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை ஒன்றை திறக்கும் அரசின் முயற்சியை முற்றாகவே முறியடித்து ஓயாத அலைகள் - 03 படையணிகள் அதன் தொடர் நடவடிக்கையாக ஆனையிறவுத் தளத்தைக் கைப்பற்றி குடாநாட்டிற்குள் தமக்கு ஓர் நேர்வழிப்பாதை திறந்துள்ளனர். இது புலிகளின் அடுத்தகட்ட நகர்வை உற்றுநோக்கும் அளவிற்கு படைய ஆய்வாளர்களுக்குப் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ********1 point
-
சமர்க்கள விரிப்புகள் கட்டுரைகள் மூலம்: 'எரிமலை', எப்ரல் 2000, பக்கம்: 8-11 மூல எழுத்தாளர்: சுப்பு எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022 ஆனையிறவு வீழ்ந்ததா? ! நெஞ்சுநெகிழ ஒர் ஆனந்த அவஸ்தை சில மணிநேரத்திற்குள், உலகத்தின் எல்லா மூலைகளுக்கும் அந்த இனிய செய்தி பரவியது. நெஞ்சை நிமிர்த்தி, முகம் மலர்த்தி தெருவில் இறங்கி, இந்த உலகத்தை உரிமையுடன் பார்த்தனர் தமிழர்கள். உலகம் தம்மை வியப்புடன் பார்ப்பதாய் உள்ளுணர்வு கொண்டனர். பெருமிதம் பொங்கும் விழிகளால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். எதிர்ப்பட்ட தமிழர்களை கட்டியணைத்து முத்தம் தந்தனர். வெடி கொழுத்திக் கொண்டாடினர். தேசத்தின் வீரர்கள், வெற்றிகொண்டதாய் மகழ்ச்சி. தேசியத் தலைவரின் படத்தை அச்சடித்து வீதிகளிலும் வீடுகளிலும் கடைகளிலும் ஒட்டி நெகிழ்ந்து போயினர். இது சற்று மிகையான வெளிப்படுத்தல் அல்ல. உண்மை இதுதான். உலகத்தில் இங்குமங்குமாய் சிதறி வாழும் தமிழர்கள் மெய்சிலிர்த்துப் போனது முற்றிலும் உண்மை. எத்துணை பெரும் சாதனை. உலகத்தில் எங்கேனும் இப்பெரும் சாதனை படைக்கப்பட்டிருக்குமா? என்றே ஒவ்வொரு தமிழனின் இதயமும் வரலாற்றைப்புரட்டிப் பார்த்திருக்கும். பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட படையினரைக் கொண்ட பெரும் படைத்தளத்தை நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள், தாக்கி கைப்பற்றியிருப்பது, உலக மாசாதனையன்றி வேறென்ன. கடந்த ஆண்டு இறுதியில், வன்னி மண்ணில் சிங்களப்படை பெற்ற மோசமான அவமானகரமான தோல்விகளுக்கு, ஏழு படைத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கி, அவர்களுக்கு கட்டாய பணிஓய்வை சந்திரிகா அரசு வழங்கியிருக்கின்றது. வன்னித் தோல்வி எப்படி ஏற்பட்டது எனக் கண்டறிய, சிறீலங்கா அதிபர் சந்திரிகாவால் அமைக்கப்பட்ட, மூன்று படைத்துறை அதிகாரிகளைக் கொண்ட உசாவல் குழுவால், ஏழு அதிகாரிகள் தோல்வியின் பொறுப்பாளிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த உசாவல் முடிவின் வழிவகை, அந்த ஏழு அதிகாரிகளுக்கும் சந்திரிகாவால் மார்ச் இறுதியில் கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. இப்படி ஒரு தீர்ப்பை வழங்க, அதற்காக சிலரது தலையை உருட்டி விடுவதன் மூலம் தன் தலையைக் காப்பாற்ற சந்திரிகா முயற்சித்திருப்பது தெளிவானது. இந்த வரலாற்றுத் தோல்விக்கு பதில் சொல்ல வேண்டியவர், முப்படைக்கும் பொறுப்பான சந்திரிகா என்பதன் இசையை மாற்றி, பழி யார்மீது வீழ்த்தப்பட்டிருக்கின்றது. அடுத்து வரும் மாபெரும் தோல்விகளை உணராமல், இத்துடன் தோல்வியால் வந்த தொல்லைகள் தொலைந்தது என சந்திரிகா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், சந்திரிகாவின் நிம்மதியின் ஆயுள் கம்மியாவும், சிலநாட்கள்தான். ஓயாத அலைகள் மூன்றின் அடுத்தகட்டத் தாக்குதல்கள், குடாநாட்டுக்குள் சிங்கள அரசின் வல்வளைப்பு கனவின் மையநிலை அருகே ஆரம்பித்துவிட்டது. வடமராட்சி கிழக்கில் அமைந்திருந்த சிங்களப்படையின் வலு பொருந்திய வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு படைத்தளங்கள், அழிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட குடாநாட்டு மீட்புப்போர், இன்று அதன் முக்கியமான கட்டத்தில் நிற்கின்றது. பொறுமையாகவும் மெதுவாகவும் ஒவ்வொரு அடிகளையும் உறுதியாக வைத்தபடி, ஆனையிறவை முழுமையான முற்றுகைக்குள் கொண்டுவரும் நகர்வை மேற்கொண்டிருந்த விடுதலைப் புலிகள், இன்று, ஆனையிறவு இயக்கச்சிப் பெருந்தளத்தை இரண்டு நாட்கள் நடத்திய உக்கிரமான தாக்குதலின் பின்னர் முற்றுமுழுதாக கைப்பற்றிக்கொண்டனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்ட பெருந்தொகை நவீன ஆயுதங்கள், சேணேவிகள், தகரிகள், கவவூர்திககள் என, ஒரு இறுக்கமான, வலுபொருந்திய படைத்துறை அரக்கன் குந்தியிருப்பது போல் அமைந்திருந்த பெரும் தளமே, விடுதலைப் புலிகளால் வீழ்த்தப்பட்டுள்ளது. பதினெட்டாம் நுற்றாண்டில், ஒல்லாந்தர்களால் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த இத் தடைமுகாம் ஒவ்வொரு வல்வளைப்பாளர்களின் காலகட்டங்களிலும் பத்தாகி நூறாகி ஆயிரமாகி தற்போது பல்லாயிரமாக வலுப்பெற்ற தளமாக இருந்த நிலையிலேயே, தமிழர் சேனையால் அழிக்கப்பட்டிருக்கின்றது. அகற்றப்பட்டிருக்கின்றது. மெதுவாக, அதேவேளை உறுதியாக, சரியாகத் திட்டமிட்டு, உரிய தந்திரவழிவகைகளுடன், தமது இலக்கு நோக்கி நாட்கள், வாரங்கள், மாதங்களாக நகர்ந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படை அணிகள், ஏப்பிரல் இருபதாம் திகதி, பெரும் தளத்தை தமது முழுமையான முற்றுகைக்குள் கொண்டு வந்தனர். மதர்ப்போடு, திமிர்காட்டி நின்ற சிங்களப்படையின் ஆனையிறவுப் பெரும் பூதத்தை, பட்டினி போட்டு பணிய வைக்கின்ற முன்னைய தந்திரவழிவகையை கைவிட்டு, நேரடியாகவே களம் இறங்கினர் விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகளின் ஆயுத வளமும் படைவலுவும், ஒரு மரபுப்போர்ப் பாணியில், படைத்துறை அதிரடித் தாக்குதலை மேற்கொள்ளவும், மழை போன்று சேணேவி எறிகணைத் தாக்குதல்களை நடத்தவும் விடுதலைப் புலிகளுக்கு கைகொடுத்தது. சிங்களப் படையின் வழங்கல் பாதையை முற்றாக துண்டாடி, ஆனையிறவுக்கும் பளைக்கும் இடைப்பட்ட பெரும் பகுதியை மீட்டெடுத்து வலுப்படுத்தி, இறுதிக் கட்டத் தற்போதைய தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படைகள். ஆனையிறவு வீழ்ச்சி, யாழ் குடாநாட்டில் சிங்களப்படை நிலைகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பது தெட்டத்தெளிவானது. ஆனையிறவு வீழ்ச்சியுடன், தெற்கு நோக்கி தமது பெட்டிகளைக் கட்டவேண்டிவரும் என்பது சிங்கள அரசிற்கு நன்கு தெரியும். அதனால்தான் ஆனையிறவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாக வேண்டும் என்று, சிங்களப் படைத் தலைமையும் அரச தலைமையும் படாதபாடுபட்டன. பெருந்தொகைப் படையினரைக் குவித்தும், நவீன ஆயுத தளபாடங்களைக் கொண்டு சேர்த்தும் அது கடும் முயற்சிகளை மேற்கொண்டது. வெளிநாட்டு படைத்துறை வல்லுநர்களின் பயிற்சியைப் பெற்றும், ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தியும் பார்த்தது. ஆனால் யாவும் விழலுக்கிறைத்த நீராயின. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்ரோராம் ஆண்டும், ஆனையிறவுப் பெரும் தளத்தை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டிருந்தனர். முப்பத்தியொரு நாட்களாகத் தொடர்ந்த அந்த முற்றுகைச் சமர், இறுதியில் தன் இலக்கை அடையவில்லை என்ற போதும், விடுதலைப் போராட்டத்தை, அது இன்னுமொரு படிநிலைக்கு முன்னகர்த்தியது. இலங்கைத் தீவில் இரு படைத்துறைகள் இருக்கின்றன என்ற உண்மையை அது உலகிற்கு சொல்லியது. கரந்தடிப்போர் அணிகளாக தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகளை, ஓர் மரபுப்படையணியாக இனங்காட்டிய சமராகவும் அமைந்தது. குறைந்த வளத்துடன், வலுப்பொருந்திய எதிரியை பல நாட்கள் நேருக்குநேர் சந்தித்து, ஒரு படைத்துறை சாதனையையே விடுதலைப் புலிகள் படைத்திருந்தனர். ஆனால், இன்று நிலைமையோ வேறானது. ஒவ்வொரு சமர்க்களங்களிலும், பட்டறிந்து போரியல் கலையில் மெருகேறிப்போயுள்ளது விடுதலைப் புலிகளின் அணிகள். சமர் தந்திரவழிவகைகள், படை நடத்துகைகள், படை நகர்த்துகைகளை நுணுக்கமாகவும் ஒரு நீண்ட களமுனை அனுபவங்களோடு கற்றுத்தேர்ந்த கட்டளையாளர்கள், பட்டை தீட்டிமிளிர்கின்ற போராளிகள், இவற்றிற்கு விடுதலைப் புலிகளின் கைகளை வலுப்படுத்தியுள்ள சிங்களப்படைகளின் நவீன ஆயுதங்கள், சேணேவிகள் என விடுதலைப் புலிகள் முன்னெப்போதையும்விட வலுப்பொருந்திய நிலையில் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விட, எதிரியின் வலு, வலுவீனங்களை துல்லியமாக எடைபோட்டு, நுண்ணியமாக, அதியற்புதமாக படை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, நெறிப்படுத்தும் எமது தேசியத் தலைவரின் உலகம் வியக்கின்ற போராற்றல். தொண்ணூற்ரோராம் ஆண்டு, ஆனையிறவை மீட்க சிங்களப்படை, கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொண்டது. அதனை ஒத்தவகையில், அதேபாதையில் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொண்டே தற்போது விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றியுள்ளனர். ஆனையிறவு வீழ்ச்சியுடன் யாழ் குடாநாட்டு மீட்சியும், உறுதியாகி விட்டது. கட்டளையதிகாரியை மாற்றி, படை நடத்துகைகளை மேற்கொண்ட போதும், முப்படைக் கட்டளையாளர்களை பலாலியில் தங்கவைத்து படையினரைப் சமரிடப் பணித்த போதும் வெற்றி இயலுமைப்படவில்லை . விடுதலைப் புலிகளின் நகர்வை சிங்களப் படையினரின் எந்த முயற்சிகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இறுதிக்கட்டமாக, சந்திரிகாவின் சிறப்புப் பணிப்பின்பேரில், சிங்ககளத்தின் நம்பிக்கை வெள்ளி ஜானக பெரேரா யாழ் சென்ற மறுநாளே, அவர்களின் மோசமான தோல்விச் செய்தியைத்தான் அவரால் கொழும்புக்கு அனுப்ப முடிந்திருக்கின்றது. ஆயிரத்தித் தொளாயிரத்து தொண்ணூற்றைந்தாம் ஆண்டு, யாழ்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் முன்நின்று வெற்றிகளைக் குவித்தவர் என்பதற்கு மாத்திரம், ஜானக பெரேரா யாழ் அனுப்பப்பட்டுள்ளார் எனக் கொள்ளப்பட வாய்ப்பில்லை. மாறாக, படுகொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் பெயர் பெற்றவர் இவர் என்பதே இதன் முதன்மை காரணமாக் இருக்கும். செம்மணிப் புதைகுழிகளின் நாயகன் ஜானக பெரேரா தற்போது யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டிருப்பதன் நோக்கம் மிகப் பயங்கரமானதாகவும் கொடூரமானதாகவும் இருக்கும் என்றே அஞ்சப்படுகின்றது. யாழ் குடாநாட்டை வல்வளைத்த போது மேற்கொண்ட கொடுமையை, யாழ் குடாநாட்டை விட்டுச் செல்லுகையிலும் சிங்களப்படை செய்யப்போகின்றதா? விதைத்தால் எங்கேனும் அறுக்க வேண்டிவரும். ********1 point
-
என் மறைவிற்குப் பின்னர் என் கல்லறை மீது குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வரலாறு எனும் பெரும் சூறைக்காற்று அவற்றைத் துடைத்து எறியும். ஜோசப் ஸ்டாலின்.1 point
-
1 point
-
1 point
-
நானும் ஒருக்கா செக் பண்ணி பார்ப்பம்..ஆ நான் ஸ்டில் இருக்கிறன் யாழில்...சோ என்ன பிரச்சினையாக இருக்கும்.தானியங்கி தள்ளி விட்டுப் போட்டுது போலும் உடையார் அண்ணா ..👋🤔☺️1 point
-
1 point
-
“Manchi Dinamu Nede” (Telugu) Performer: Vanaja Singer: M. L. Vasanthakumari Ragam: Hindolam Choreographer: Dandayuthapani Pillai Composer: Pandit Indra Music Director: E. Shankar Shastri* Production Company: Gemini Studios....! 🙏1 point
-
1 point
-
படித்ததில் பிடித்தது _‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_ *_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_* *_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._* _‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._ _பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._ _‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_ _ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ _அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._ *_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_* *_‘‘இது எதுக்கும்மா?’’_* *_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._* *_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* _அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._ *_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._* *_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._* _பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._ *_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* _படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ *_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._* _பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ *_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._* *_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* *_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._* *_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._* 👍🍬🍬🍬🍬🍬👍 https://www.facebook.com/Giritharasharma/posts/73825099384294781 point